சென்னை – திருநெல்வேலி ‘வந்தே பாரத்’ ரயிலில் ‘எகனாமிக்’ வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படுமா? – எதிர்பார்ப்பில் சாமானிய ரயில் பயணிகள்

சென்னை: சென்னை – திருநெல்வேலி இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயிலில் சாமானிய மக்களும்பயணிக்கும் வகையில், ‘எகனாமிக்’வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நாடு முழுவதும் தற்போது நவீன வசதிகளுடன் அதிவிரைவு ரயிலாக ‘வந்தே பாரத்’ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் தற்போது, 34 ‘வந்தே பாரத்’ ரயில்கள்இயக்கப்படுகின்றன. இவற்றில், சென்னை எழும்பூர் – திருநெல்வேலி, விஜயவாடா – சென்னை சென்ட்ரல் இடையே ‘வந்தே பாரத்’ ரயில் சேவை அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது. வழக்கமான … Read more

அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்து | தலைவர்கள் இரங்கல்

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக – கர்நாடக எல்லைப் பகுதியான அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அவர்களுக்கான நிவாரணத் தொகையை அரசு உடனடியாக வழங்க வலியுறுத்தியுள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி: “கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக கர்நாடகா எல்லையான அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தினால் 14 பேர் வரை உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து … Read more

மல்லப்புரம் மலைச்சாலை அகலப்படுத்தப்படுமா? – 70 கி.மீ. சுற்றிச் செல்லும் கிராம மக்கள்

கடமலைக்குண்டு: தேனி மாவட்டம், மயிலாடும்பாறையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் மதுரை மாவட்டத்துக்குச் செல்ல மலைச்சாலை உள்ளது. ஆனால் குறுகிய சாலையாக உள்ளதால், இப்பகுதி கிராம மக்கள் 70 கி.மீ. தொலைவு சுற்றிச் செல்லும் நிலை நீடிக்கிறது. தேனி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையடி வாரத்தில் கடமலை – மயிலை ஒன்றியம் உள்ளது. இங்கு, ஆத்தங்கரைப்பட்டி, துரைச்சாமிபுரம், எட்டப்பராஜபுரம், மயிலாடும்பாறை, குமணந்தொழு, மந்திச்சுனை, மூலக்கடை, முருக்கோடை, முத்தாலம் பாறை, நரியூத்து, பாலூத்து, பொன்னன் படுகை, சிங்கராஜபுரம், தங்கம்மாள்புரம், தும்மக்குண்டு … Read more

மலைவாழ் மக்களால் பயணிக்க முடியாத சாலை – 75 ஆண்டுகளாக மனமிறங்காத அதிகாரிகள் @ திருப்பத்தூர்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே தார்ச்சாலை அமைத்து தரக்கோரி கடந்த 75 ஆண்டுகளாக மனு அளித்து வரும் மலைவாழ் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவது எப்போது ? என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலையில் புதூர்நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு என 3 ஊராட்சிகள் உள்ளன. இந்த 3 ஊராட்சிகளிலும் 36 குக்கிராமங்கள் உள்ளன. இங்கு, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மலைவாழ் மக்களின் பிரதான தொழிலாக விவசாயமும், கால்நடை வளர்ப்பும் … Read more

“விருதுநகர், கன்னியாகுமரியில் காங்கிரஸ் போட்டியிட விருப்பம்” – கே.எஸ்.அழகிரி

சிவகாசி: விருதுநகர், தென்காசி மக்களவைத் தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு மற்றும் பயிற்சி பாசறை கூட்டம் ஞாயிறு அன்று நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். சிவகாசி எம்எல்ஏ அசோகன் வரவேற்றார். எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த், மாநில சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், எம்எல்ஏக்கள் பிரின்ஸ், ராஜேஷ் குமார், பழனி நாடார், ராதாகிருஷ்ணன் மற்றும் விருதுநகர், தென்காசி மாவட்ட நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, காங்கிரஸ் மாநில … Read more

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து | அனைத்து எம்எல்ஏக்களுடன் டெல்லியில் பிரதமரை சந்திப்பேன்: ரங்கசாமி உறுதி   

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு அனைத்து கட்சி எம்எல்ஏக்களுடன் டெல்லி சென்று பிரதமரை சந்திப்பேன். மாநில அந்தஸ்து கேட்பது நம்முடைய உரிமை என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரி யூனியன் பிரதேசமாக தொடரும் என மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. இது புதுச்சேரி ஆளும் கட்சி இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மாநில அந்தஸக்காக அனைத்து … Read more

அத்திப்பள்ளி பட்டாசு கடை தீ விபத்து | உயிரிழந்த 14 தொழிலாளர்களின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைப்பு

ஓசூர்: கர்நாடக மாநில எல்லை அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 14 தொழிலாளர்களின் உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அத்திப்பள்ளி போலீஸார் இருவரை கைது செய்துள்ளனர். தீபாவளி பட்டாசு விற்பனை: கர்நாடக மாநில எல்லை அத்திப்பள்ளி முதல் தமிழக எல்லை ஜூஜூவாடி முதல் தேசிய நெடுஞ்சாலையோரங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் உள்ளன. தீபாவளி சீசன் பண்டிகை நெறுங்கும்போது, இப்பகுதியில் உள்ள … Read more

மதுரை | வித்தியாசமான ஹேர்ஸ்டைல், அன்னநடை: பார்வையாளர்களைக் கவர்ந்த நாய்கள் கண்காட்சி

மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் 55 வகையான 500க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்துகொண்ட தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சியில் பொம்மைகள் போல காட்சியளித்த சிச்சு, பொம்மேரியன் நாய்கள் முதல், வித்தியாசமான ஹேர்ஸ்டைல்களுடன் அன்னநடை போட்டு வந்த நாய்கள் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை ரசிக்க வைத்தன. மதுரை தமுக்கம் மைதானத்தில் தேசிய அளவிலான 37வது நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் பங்கேற்க ஆன்லைன் முறையில் நாய்கள் பதிவு செய்யப்பட்டன. தமிழகம் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா … Read more

அத்திப்பள்ளி பட்டாசு கடை தீ விபத்து வழக்கு சிஐடியிடம் ஒப்படைக்கப்படும்: கர்நாடக முதல்வர் தகவல்

ஓசூர்: அத்திப்பள்ளியில் நடந்த பட்டாசு கடை தீ விபத்து குறித்து விசாரணையை சிஐடியிடம் ஒப்படைக்க உள்ளதாக கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தில் இன்று கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா,துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் விபத்து குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதனையடுத்து சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறும்போது,”அத்திப்பள்ளியில் ஜெயம்மா என்பவருக்கு சொந்தமான … Read more