“2024 தேர்தலில் திமுக – பாஜக இடையேதான் போட்டி” – ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் அண்ணாமலை உறுதி

சென்னை: “திமுகவா, பாஜகவா என்பதுதான் சவால். திமுக தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கிறது. பாஜக மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கிறது. போட்டி எங்கள் இருவருக்கும்தான். 2024 தேர்தலில் அதை பார்த்துவிடலாம்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில், வியாழக்கிழமை தமிழக பாஜகவின் மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாநிலத் தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், கேசவ விநாயகம் மற்றும் … Read more

“பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுக குறித்து விவாதிக்கவில்லை” – பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம்

சென்னை: “பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுக கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. பாஜகவை பலப்படுத்துவது குறித்து பேசப்பட்டது. பாஜக என்னென்ன விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். எப்படியெல்லாம் கூட்டணியை முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது” என்று அக்கட்சியின் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில், வியாழக்கிழமை தமிழக பாஜகவின் மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாநிலத் தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், … Read more

அண்ணாமலை வருவதற்கு லேட்… நேரு புகைப்படம்…சீனியர்கள் அப்செட்

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருவதற்கு முன்பே சென்னையில் அக்கட்சியின் மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. மேடையில் முன்னாள் பிரதமர் நேருவின் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது.  

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஆசிரியர்கள் கைதுக்கு இபிஎஸ் கண்டனம்

சென்னை: “ஆசிரியர்கள் போராட்டத்தில் வைக்கப்பபட்ட நியாயமான கோரிக்கையைக்கூட முழுமையாக பரிசீலிக்காமல் வலுக்கட்டாயமாக குடும்பத்தோடும் குழந்தைகளோடும் கைதுசெய்ததையும், அடிப்படைவசதிகள் கூட இல்லாமல் ஆசிரியர் குடும்பங்களை அடைத்து வைத்திருப்பதையும் , வன்மையாக கண்டிக்கிறேன்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எதிர்கட்சியாக இருக்கும்பொழுது ஒரு பேச்சு, ஆளும் கட்சியான பிறகு மற்றொரு பேச்சு என்ற கொள்கையை கொண்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி … Read more

டிடிஎப் வாசன் யூடியூப்புக்கு தடை… பைக்கை எரிக்க வேண்டும் – உயர்நீதிமன்றம் காட்டம்

டிடிஎப் வாசன் ஜாமீன் வழக்கு: நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் டி.டி.எப்.வாசனுக்கு ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.   

முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை வேறு நபருக்கு மாற்றும் வசதி: சேலம் கோட்டத்தில் 6 மாதங்களில் 126 பேர் பயன்

கோவை: ஒருவரது பெயரில் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை மற்றொருவர் பெயருக்கு எப்படி மாற்றுவது? அதற்கான வழிமுறை என்ன? என்பது குறித்து பெரும்பாலானோருக்கு விழிப்புணர்வு இல்லை. இதனால், பலர் டிக்கெட்டை ரத்து செய்துவிடுகின்றனர். ஆனால், தவிர்க்க முடியாத காரணத்தால் பயணத்தை ரத்து செய்ய வேண்டி வந்தால், முன்பதிவு செய்த டிக்கெட்டை வேறு நபரின் பெயருக்கு மாற்றித்தரும் வசதி ரயில்வேயில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மட்டும் அதிகபட்சமாக ஈரோட்டில் 42 பேர், … Read more

புதுச்சேரி | திமுக எம்.பி. ஜெகரட்சகனின் மருத்துவக் கல்லூரியில் வருமான வரித் துறை சோதனை

புதுச்சேரி: வரி ஏய்ப்புப் புகாரின் பேரில் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனின் சென்னை வீடு, சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறும் சூழலில் புதுச்சேரியிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி அகரம் கிராமத்தில் உள்ள அவருக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை நடைபெறுவதால் கல்லூரிக்கு மாணவர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மருத்துவமனைக்கும் அவசர சிகிச்சைக்காக வருபவர்கள், ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே சிகிச்சை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. … Read more

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறை சோதனை!

திமுக முக்கிய தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது.