தமிழக செய்திகள்
விதிமீறிய வாகனங்களிடம் ஒரேநாளில் ரூ.2.39 கோடி வசூல்
சென்னை: தமிழகம் முழுவதும் ஒரே நாளில் நடத்தப்பட்ட தீவிர சோதனையில் விதிமீறி இயக்கப்பட்ட வாகன உரிமையாளர்களிடம் இருந்து ரூ.2.39 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டதாக போக்குவரத்து ஆணையர் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் துறையின் கீழ் செயல்படும் 12 மண்டலங்களைச் சேர்ந்தவட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் 11,023 வாகனங்களை சோதனை செய்தனர். அதிக பாரம் ஏற்றுதல், … Read more
தமிழக காவல் துறையில் புதிதாக தொடங்கப்பட்ட தீவிரவாத தடுப்பு பிரிவுக்கான போலீஸாரை தேர்வு செய்யும் பணி தீவிரம்
சென்னை: தமிழக காவல் துறையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தீவிரவாத தடுப்புப் பிரிவுக்கான அதிகாரிகள் உள்ளிட்ட போலீஸாரை தேர்வு செய்யும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. கோவையில் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் கார் சிலிண்டர் வெடிப்பு ஏற்பட்டது. இச் சம்பவத்தில், ஜமேஷா முபீன் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுதொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நடத்திய விசாரணையில் ஜமேஷா முபீன், தற்கொலைப் படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரது கூட்டாளிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு … Read more
தொடர் மழை எதிரொலி – வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றம்
கடலூர்: வீராணம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்மழை பெய்வதால் பிரதான வடிகால் மதகுகளில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி ஆகும். இதன் முழு கொள்ளவு 47.50 அடி ஆகும். இதன் மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளாக காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி வட்டப்குதிகளில் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலம் பாசனம் பெறுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள், விவசாயத் … Read more
தென் மாவட்ட அமமுக கூடாரத்தை அசைத்துப் பார்க்கும் அதிமுக – என்ன செய்யப்போகிறார் டிடிவி.தினகரன்?
மதுரை: மதுரை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த அமமுக முக்கிய நிர்வாகிகள் ஒருவர் பின் ஒருவராக அதிமுகவில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். அமுமுக கூடாரத்தை அதிமுக அசைத்துப்பார்த்து வருவதால் டிடிவி.தினகரன், இதற்கு என்ன எதிர்வினை ஆற்றப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அதிமுகவில் சசிகலா, டிடிவி.தினகரன் இருவரும் கட்சியையும், ஆட்சியையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் உடனடியாக கொண்டு வந்தனர். அதன்பிறகு அவர்கள் முதலமைச்சராக நியமித்த கே.பழனிசாமிக்கும், அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படவே … Read more
திருடுபோன 26 பவுன் நகை ஊர் வழக்கப்படி தண்டோரா மூலம் மீட்பு: மதுரையில் போலீஸை வியப்படைய வைத்த கிராமம்
மதுரை: மதுரை திருமங்கலம் அருகே கிராம வழக்கப்படி, திருடுபோன 26 பவுன் நகை மற்றும் ரூ. 20 ஆயிரம் தண்டோரோ மூலம் மீட்டு, உரியவரிடம் ஒப்படைக்கப்பட்ட நிகழ்வை கண்டு காவல்துறையினர் வியந்தனர். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகிலுள்ளது பெரிய பொக்கம்பட்டி. இவ்வூரைச் சேர்ந்தவர் ராகவன் (51). இவரது மனைவி பாண்டியம்மாள் (45). இருவரும் 2 நாளுக்கு முன்பு வழக்கம்போல் வேலைக்குச் சென்றனர். மதியம் வீடு திரும்பிய போது, வீட்டுக் கதவு திறக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். … Read more
கடலுார், மயிலாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
சென்னை: கடலுார், மயிலாடுதுறை நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கை: “கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான … Read more
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்ச தீபம்: விளக்கு ஒளியில் ஜொலித்த பொற்றாமரைக்குளம்
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு இன்று லட்ச தீபம் ஏற்றப்பட்டது. இதில் பொற்றாமரைக்குளம் உள்பட கோயில் வளாகம் முழுவதும் விளக்கு ஒளியில் ஜொலித்தது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா நவ. 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலையில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், பஞ்சமூர்த்திகளுடன் ஆடி வீதிகளில் எழுந்தருளினர். திருக்கார்த்திகையின் ஆறாம் நாளான்று கோயில் பொற்றாமரைக்குளம், அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, உள்பிரகாரங்கள் … Read more
''தமிழக அரசியல் களத்தில் தேடும் நிலையில் அதிமுக உள்ளது'': பாஜக விமர்சனம்
சென்னை: தமிழக அரசியல் களத்தில் தேடும் நிலையில் அதிமுக இருப்பதாக பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் விமர்சித்துள்ளார். மதுரை மாநகர் மாவட்ட பாஜக சார்பில், பாஜக அலுவலகத்தில் சக்தி கேந்திரா, பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் மகா. சுசீந்திரன் தலைமை வகித்தார். இதில், மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் பங்கேற்று ஆலோசனை வழங்கி பேசியதாவது: ”தமிழ்நாட்டில் எதிர்கட்சிகள் மிரளும் வகையில் பாஜக அசுர வளர்ச்சியடைந்துள்ளது. திமுக … Read more