திட்டக்குடியில் ரூ.33 கோடியில் கால்நடை தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை: அரசாணை வெளியீடு

சென்னை: கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் நாளொன்றுக்கு 300 மெட்ரிக் டன் உற்பத்தி திறனில் கால்நடை தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை ரூ.33 கோடி மொத்த திட்ட மதிப்பீட்டில் நபார்டு திட்டத்தின் கடனுதவியுடன் நிறுவுவதற்கு நிர்வாக ஒப்புதல் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் நாளொன்றுக்கு 300 மெட்ரிக் டன் உற்பத்தி திறனில் கால்நடை தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை ரூ.33 கோடி மொத்த திட்ட மதிப்பீட்டில் … Read more

“உச்ச நீதிமன்ற தீர்ப்பை அறிந்துகொண்டு செயல்பட ஆளுநர் ரவி முன்வர வேண்டும்” – கே.எஸ்.அழகிரி

சென்னை: “உச்ச நீதிமன்றத் தீர்ப்பை தனக்கு உகந்த வழக்கறிஞரை அழைத்து, அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிந்துகொள்ள வேண்டும். அப்படி அறிந்து கொண்டு அரசமைப்புச் சட்டப்படி அவர் செயல்பட முன்வர வேண்டும்” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய பாஜக ஆட்சியில் மாநிலங்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநிலங்களின் ஆளுநர்களை பயன்படுத்துவது தொடர் நிகழ்வாக நடைபெற்று … Read more

பரந்தூர் விமான நிலையத்துக்காக 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அரசு அனுமதி: வேல்முருகன் அதிர்ச்சி

சென்னை: “பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக 20 கிராமங்களில் 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அனுமதி வழங்கியுள்ள தமிழக அரசின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கூறியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். அதேபோன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், விவசாய … Read more

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

சென்னை: தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மக்களுடன் முதல்வர் திட்டத்துக்கான சிறப்பு அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி மதுசூதன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ள உத்தரவு: தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண் இயக்குநரான ஐஏஎஸ் அதிகாரி பி.சங்கர், வேளாண்மை-உழவர் நலன்துறை சிறப்பு செயலாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு சாலை திட்ட இயக்குநரான ஐஏஎஸ் அதிகாரி எஸ்.பிரபாகர், தமிழ்நாடு நகர்ப்புர … Read more

கோட்டை ரயில் நிலையத்தில் குவிக்கப்பட்ட கட்டுமான கழிவுகள்: தலைமைச் செயலகம் செல்ல பாதை இல்லாமல் மக்கள் அவதி

சென்னை: சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து தலைமைச் செயலகம் செல்ல போதிய பாதை இல்லாததால் பயணிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். ஒருபுறம்நச்சு பாம்புகள், மறுபுறம் குவிக்கப்பட்டுள்ள கட்டுமானக் கழிவுப் பொருட்கள் மத்தியில் நடந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக, மாற்றுப்பாதையை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சென்னை கடற்கரை-தாம்பரம் மின்சார ரயில் வழித்தடத்தில் நாள்தோறும்ஆயிரக்கணக்கானோர் பயணிக்கின்றனர். இவர்களில் ஒரு பகுதியினர் தலைமைச்செயலக ஊழியர்கள் ஆவர். இவர்கள், கோட்டை ரயில் நிலையத்தில் இறங்கி தலைமைச் செயலகம் … Read more

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில்  திருக்கோயில்கள் சார்பில் 1,100 திருமணங்கள் நிறைவு: தமிழக அரசு

சென்னை: திருக்கோயில்கள் சார்பில் 1,100 மணமக்களுக்கு திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்வை நிறைவு செய்திடும் விதமாக, இரண்டு மணமக்களுக்கான திருமணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று இன்று நடத்தி வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.24) சென்னை, மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார்பில் 1,100 மணமக்களுக்கு திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்வை நிறைவு செய்திடும் விதமாக, இரண்டு … Read more

அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன் – நவ.30-ல் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

சென்னை: தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வரும் 30-ம் தேதி, மீண்டும் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 2006 முதல் 2011 வரையிலான காலக்கட்டத்தில் நடந்த திமுக ஆட்சியில், தமிழக அமைச்சரவையில், தற்போதைய உயர் கல்வித் துறை அமைச்சரான பொன்முடி கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக இருந்தார். அமைச்சர் பொன்முடி கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறையை கவனித்து வந்ததால், அவருடைய மகன் கவுதம சிகாமணி, மற்றும் அவரது உறவினர்கள் அந்தப் பகுதியில் … Read more

பதவி உயர்வுக்கு பிறகும் கணக்கீட்டு பணி: மின்வாரியத்துக்கு தொழிற்சங்கங்கள் கண்டனம்

சென்னை: மின்வாரியத்தில், வருவாய் மேற் பார்வையாளராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்ட பிறகும், மின் கணக்கீட்டுப் பணிகளை மேற்கொள்ளுமாறு அவர்களை அறிவுறுத்திய நிர்வாகத்துக்கு தொழிற்சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக வாரிய தலைமைக்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன், தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் பொதுச்செயலாளர் ஏ.சேக்கிழார் ஆகியோர் தனித்தனியே கடிதங்கள் அனுப்பியுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: மின்வாரிய கணக்கீட்டு ஆய்வாளர்கள் 200 பேருக்கு வருவாய் மேற்பார்வையாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. … Read more

சென்னையில் `சிட்டிஸ்' திட்டத்தின் கீழ் 11 மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்த திட்டம்

சென்னை: பிரான்ஸ் மேம்பாட்டு முகமை (AFD) நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் சிட்டிஸ் (CITIIS) திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சி, சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஆகியவை இணைந்து சென்னை மாநகராட்சி பள்ளிகளை நவீன வசதியுடன் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அது தொடர்பான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தலைமையில் பிரான்ஸ் மேம்பாட்டு முகமை மற்றும் தேசிய நகர்ப்புற விவகாரங்கள் நிறுவனம் (National Institute of Urban Affairs) … Read more