திருவண்ணாமலைக்கு 2,700 சிறப்பு பேருந்துகள்: போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: தீபத்திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 2,700 சிறப்புபேருந்துகள் இயக்கப்படும் என்றும்கிரிவலப் பாதையில் இலவச சிற்றுந்து வசதி ஏற்படுத்தப்படும் என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் பிரசித்திபெற்ற கார்த்திகை தீபத்திருநாள் வரும்26-ம் தேதி, மற்றும் 27-ம் தேதி பவுர்ணமிகிரிவலத்தை முன்னிட்டு 25, 26, 27-ம்தேதிகளில் முதல்வர் உத்தரவுப்படி அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதன்படி, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற முக்கிய … Read more

கோவை | மூழ்கும் பாலங்கள்… முடிவே கிடையாதா?

கோவை: கோவையில் மழைக் காலத்தில் பாலங்களின் கீழ்பகுதியில் தேங்கும் மழை நீரை அகற்ற அதிக திறன் கொண்ட மோட்டார்களை பயன்படுத்துவது மட்டுமின்றி, நிரந்தர தீர்வு காண வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். கோவை மாநகரில் கனமழை பெய்தால் அவிநாசி சாலை மேம்பாலத்தின் சுரங்கப் பாதை, பெரிய கடைவீதி லங்கா கார்னர் ரயில்வே பாலம், காட்டூர் காளீஸ்வரா மில் ரயில்வே பாலம், ஆர்.எஸ்.புரம் கிக்கானி பள்ளி ரயில்வே பாலம் ஆகியவற்றின் கீழ் பகுதிகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து தடைபடுகிறது. … Read more

காஞ்சிபுரம் அருகே பள்ளி குடிநீர் தொட்டியில் துர்நாற்றம்: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

காஞ்சிபுரம்: உத்திமேரூரை அடுத்த திருவந்தவார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் குடிநீர் தொட்டியில் பிடிக்கப்பட்ட குடிநீரில், கடும் துர்நாற்றம் வீசியதாக புகார் எழுந்ததையடுத்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, எஸ்.பி. சுதாகர் ஆகியோர் குடிநீர் தொட்டியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாலவாக்கத்தை அடுத்த திருவந்தவார் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில், அப்பகுதியை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும், … Read more

“நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த இந்தியாவும் பாஜகவுக்கு ரெய்டு விடும்” – அமைச்சர் உதயநிதி @ நாமக்கல்

நாமக்கல்: “பிரதமர் அவர்களே எவ்வளவு ரெய்டுகள் வேண்டுமானாலும் விடுங்க. ஆனால் வரும் பாராளுமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த இந்தியாவும் பாஜகவுக்கு ரெய்டு விட போவது நிச்சயம்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நாமக்கல் பொம்மைக்குட்டை மேட்டில் நடைபெற்றது. திமுக மாநில இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது. சேலத்தில் டிசம்பர் 17-ம் … Read more

டாஸ்மாக் வருவாய் இழப்பு | ஜி.கே மணி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: டாஸ்மாக் மதுபான கடை மூடப்பட்டது, பேருந்துகள் ஓடாதது ஆகியவற்றால் ஏற்பட்ட வருவாய் இழப்பை பொது சொத்துக்கு ஏற்பட்ட சேதத்துக்கான இழப்பாக கருதி இழப்பீடு கோர முடியுமா என்பது குறித்து பரிசீலிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மாமல்லபுரத்தில், கடந்த 2013ல் வன்னியர் சங்கத்தினர் நடத்திய சித்திரை திருவிழாவின்போது, மரக்காணத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன. பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் தீவைக்கப்பட்டன. பா.ம.க-வினர் போராட்டம் காரணமாக, … Read more

“நீட் தேர்வு ரத்தை நோக்கி திமுக செயல்படுகிறது” – உதயநிதி ஸ்டாலின்

நாமக்கல்: “நீட் தேர்வு இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் அதிகமான ஏழை மாணவர்களால் மருத்துவக் கல்வி பெற முடியும். அதை நோக்கி தான் திமுக அரசு செயல்பட்டு வருகிறது” என விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துச் சேவை தொடக்க விழா நடைபெற்றது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி … Read more

புதைக்கப்பட்ட மண்டை ஓடு, உடல் உறுப்புகள்! ஓரினச்சேர்க்கை வெறியால் நடந்த கொலை?

Crime News in Tamil Nadu: ஆண்மை பலம் அதிகரிக்க மருந்து. ஓரினச் சேர்க்கைக்கு அழைத்த நபர். மறுத்ததால் கொலை. சோழபுரம் மணல்மேடு கிராமத்தில் என்ன நடந்தது? வாருங்கள் பார்ப்போம்.

தனியார் நிறுவனம் மூலம் ஓட்டுநர், நடத்துனர் நியமனம் – டெண்டரை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தனியார் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநர், நடத்துனர்களை நியமிப்பது அபாயகரமான சோதனை எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இது சம்பந்தமான டெண்டரை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தனியார் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநர், நடத்துனர்களை நியமிப்பது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் டெண்டர் கோரப்பட்டது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த … Read more

மயிலாப்பூர் கோயிலில் வழிபாட்டில் ஈடுபட்டவர்கள் கைது – காவல்துறைக்கு இந்து முன்னணி கண்டனம்

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வழிபாட்டில் ஈடுபட்ட இந்து முன்னணி பொறுப்பாளர்களை, அத்துமீறி ஆலயத்துக்குள் நுழைந்து வலுக்கட்டாயமாக கைது செய்துள்ள மயிலாப்பூர் சரக காவல் அதிகாரியின் செயல் கண்டிக்கத்தக்கது என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சில தினங்களுக்கு முன்பு டாக்டர் தேவநாதன் யாதவ் அலுவலக வாசலில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை நள்ளிரவில் காவல்துறை அதிகாரிகள் துணைக் கொண்டு மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். இதற்கு கண்டனம் … Read more

''பேரியம் நைட்ரேட் கொண்டு பட்டாசு தயாரிக்க அனுமதிக்க வேண்டும்'' – மத்திய நிதியமைச்சரிடம் பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை

சிவகாசி: 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க பட்டாசு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர். தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கம் (டான்பமா) தலைவர் கணேசன் அளித்த மனுவில், “பட்டாசுக்கான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைத்ததற்காகவும், சட்ட விரோத பட்டாசு இறக்குமதியை தடை செய்ய நடவடிக்கை எடுத்ததற்காகவும் நன்றி. கடந்த செப்டம்பர் 22-ம் … Read more