புதுச்சேரி மருந்து ஆலை விபத்தில் காயமடைந்த இளைஞர் மரணம்: கைக்குழந்தையுடன் மனைவி கதறல்

புதுச்சேரி: புதுச்சேரியை அடுத்த சொலாரா மாத்திரை தொழிற்சாலை விபத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் மரணமடைந்தார். இதையடுத்து, பூட்டிய ஆட்சியர் அலுவலகம் முன்பு நீதி கேட்டு கைக்குழந்தையுடன் மனைவி கதறி அழுதார். தொழிற்சாலையை மூட வேண்டும், உரிய நீதி கிடைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து உடலை வாங்க மாட்டோம் என்று இறந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை காலாப்பட்டு பகுதியில் சாசன் என்ற பெயரில் இயங்கிய மாத்திரை தயாரிக்கும் தொழிற்சாலை சில ஆண்டுகளுக்கு … Read more

ராணிப்பேட்டை பட்டாசு விபத்தில் உயிரிழந்த சிறுமி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி – முதல்வர் உத்தரவு

சென்னை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிவிப்பில், “ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டமன்ற தொகுதி, திமிரி ஒன்றியம், மாம்பாக்கம் ஊராட்சியில் தீபாவளியன்று பட்டாசு வெடித்தபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் சிறுமி நவிஷ்கா (வயது 4) த/பெ. ரமேஷ் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கும் அவருடைய உறவினர்களுக்கும் … Read more

தியாகி சங்கரய்யாவுக்கு உடல்நலக்குறைவு – அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

சென்னை: கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சளி மற்றும் காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று சங்கரய்யாவை பார்த்ததுடன், மருத்துவர்களையும் சந்தித்து சிகிச்சை தொடர்பாக பேசினர். சங்கரய்யாவின் மகன் நரசிம்மன் அவருடன் இருந்து சிகிச்சைகளை கவனித்து வருகிறார். அவருடைய உடல்நலம் தேறி … Read more

மதுபோதையில் போலீஸ் மாமியார், மச்சானை கல்லால் அடித்த வாலிபர்கள் – முன்விரோதத்தில் வெறிச்செயல்

சென்னை தாம்பரத்தில் முன் விரோதம் காரணமாக குடித்து விட்டு மதுபோதையில் போலீஸ்காரரின் மாமியார், மச்சான் உள்ளிட்டோரை கல்லால் அடித்து தாக்கிய இரண்டு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் .  

மதுரையில் தீபாவளி நாளில் குவிந்த 1,000 மெட்ரிக் டன் குப்பை – தூய்மைப் பணியில் 3,830 பேர் தீவிரம்

மதுரை: மதுரை மாநகராட்சியில் தீபாவளி முடிந்த மறுநாளான இன்று ஒரே நாளில் 1,000 மெட்ரிக் டன் குப்பைகள் உருவானது. இந்தக் குப்பைகளை அகற்றும் பணியில் 3,830 தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். மதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்கள், 100 வார்டுகள் உள்ளன. 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். சுற்றுலா, ஆன்மிகம், மருத்துவம் மற்றும் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த நகராக மதுரை திகழ்வதால் தினமும் பல ஆயிரம் பேர் நகர்பகுதியில் வந்து செல்கிறார்கள். அதனால், ஒரு நாளைக்கு … Read more

பழனி முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுடன் தொடங்கியது..!

பழனி முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுடன் தொடங்கியது. வரும் நவம்பர் 18ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது  

இது மதுரை தீபாவளி | வாணவேடிக்கையில் ஜொலித்த தூங்கா நகரம்

மதுரை: தீபாவளி பண்டிகை நாளில் சற்று வித்தியாசமாக வானில் வாண வேடிக்கை சத்தங்களுடனும், பட்டாசு வெடிகளாலும் ஜொலித்தது தூங்கா நகரமான மதுரை. நாடு முழுவதும் இனம், மொழி, மதம், பண்பாடு, கலாச்சாரத்தை தாண்டி அனைத்து தரப்பு மக்களும் தீபாவளி பண்டிகையை விரும்பி கொண்டாடி வருகிறார்கள். ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் கொண்டாடப்படும் ஆன்மிக நகரான மதுரையில் தீபாவளி பண்டியையையும் மக்கள் பெரும் உற்சாகத்துடன் வாணவேடிக்கைளை நிகழ்த்தி, விதவிதமான பலகாரங்கள் தயார் செய்தும் புத்தாடைகள் அணிந்தும் கொண்டாடி தீர்த்தனர். வேலை, … Read more

திருக்கார்த்திகை தீபத் திருவிழா: மின்னொளியில் அருணாசலேஸ்வரர் திருக்கோவில்..!

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 9 நவ கோபுரங்களும் மின்னொளியில் ஜொலிக்கிறது.   

சங்கரதாஸ் சுவாமிகள் நாடகங்களை மீண்டும் மேடை ஏற்ற முயற்சி: நடிகர் நாசர் அறிவிப்பு

புதுச்சேரி: சங்கரதாஸ் சுவாமிகள் எழுதி தந்த நாடகங்களை மீண்டும் மேடை ஏற்றும் முயற்சியை செய்து வருகிறோம். இவ்வாண்டு அவரது நாடக விழா சிறப்பாக நடக்கும் என்று நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவருமான நாசர் கூறியுள்ளார். நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் 101வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்ட்டது. புதுச்சேரி கலை, இலக்கிய பெருமன்றம் சார்பில் ஈஸ்வரன் கோவிலில் இருந்து கருவடிக் குப்பம் மயானத்திலுள்ள அவரது நினைவிடம் வரை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சங்கரதாஸ் சுவாமிகளின் படத்தை ஏந்தி … Read more

குன்னூரில் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை: ஒரு நாள் முழுவதும் பதுங்கியிருந்து நள்ளிரவில் வெளியேறியது

குன்னூர்: குன்னூரில் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை, ஒரு நாள் முழுவதும் வீட்டினுள் பதுங்கியிருந்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். நள்ளிரவில் வீட்டிலிருந்து சிறுத்தை வெளியேறியதாக வனத்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள புரூக்லாண்ட் பகுதியில் உள்ள வீட்டில் வளர்க்கும் நாயை துரத்திக்கொண்டு வந்த சிறுத்தை அப்பகுதியில் உள்ள வீட்டினுள் புகுந்தது.உடனடியாக குன்னூர் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு குழுவினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். வீட்டில் இருந்தவரை காப்பாற்ற சென்ற, மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் உட்பட 6 … Read more