தமிழகத்தில் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 4 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானாது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று (செப்.3), கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், … Read more

அதிமுக கொடி : உங்களுக்கு யாரு சொன்ன அப்டி.. கடுப்பான ஓபிஎஸ்..

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக கிளம்பிய நிலையில், பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்தனர். அதனைத் தொடர்ந்து கூட்டப்பட்ட பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அவரை நோக்கி குடிநீர் பாட்டில்களும் வீசப்பட்டன. இந்த பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கால் மற்றொரு பொதுக்குழு ஜூலை 11ஆம் தேதி கூட்டப்பட்டது. அதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். அதன்பிறகு நடந்த உட்கட்சித் தேர்தலில் வென்று பொதுச் … Read more

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றத்தை தடுக்க புகார் அதிகரிக்க வேண்டும்: தென்மண்டல அமலாக்கத்துறை எஸ்பி

மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பெண்ணிய கல்வி மையம், ரூசா திட்டம் சார்பில், பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுத்தல் குறித்த கருத்தரங்கம் நடந்தது. பல்கலை பதிவாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். தென்மண்டல அமலாக்கத்துறை எஸ்பி சுஜித்குமார் பங்கேற்று பேசியதாவது. பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆணாதிக்க மனநிலையே காரணம் என, கூறலாம். பெண்கள் வளர்ச்சியை ஆண்கள் பெரும்பாலும் ஏற்பதில்லை. பெண்களை சமத்துவ மனபான்மையோடு அணுகினால் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்கலாம். பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் … Read more

"சனாதனம் பற்றி நான் பேசியது சரியானதே".. பீஸ்ட் மோடுக்கு மாறிய உதயநிதி.. அந்த வார்த்தை தான் முக்கியம்

சென்னை: சனாதனம் பற்றி தான் பேசியது அனைத்தும் சரியானது தான் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று உதயநிதி பேசியதற்கு தமிழக பாஜகவினர் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள வலதுசாரி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தான் பேசியதில் எந்த தவறும் கிடையாது என அவர் கூறியுள்ளார். சென்னையில் நேற்று நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “சனாதன தர்மத்தை எதிர்க்கக் … Read more

ஒரே நாடு ஒரே தேர்தல் | குழுவின் பரிந்துரைக்கு பின்னர் பாமகவின் நிலைப்பாடு தெரிவிக்கப்படும்: அன்புமணி

மேட்டூர்: ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் அரசு நியமித்துள்ள குழு, பரிந்துரையை பதிவு செய்த பிறகு, பாமகவின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்படும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் எடப்பாடி சட்டமன்ற தொகுதி வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது. இதில் பாமக தலைவரும், எம்பியுமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக, அவருக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த கூட்டத்தில் … Read more

யாரு அண்ணாமலையா.. அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க.. அசால்ட்டாக சொன்ன உதயநிதி

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்பாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அலட்சியமாக கூறியது பாஜகவினரை கோபம் அடையச் செய்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் அண்ணாமலையை புறக்கணிப்பது இது முதன்முறை அல்ல.. பல முறை இப்படி செய்திருக்கிறார். சனாதனம் பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து பெரும் சர்ச்சையாகி உள்ளது. சனாதனம் எதிர்க்க வேண்டிய விஷயம் அல்ல; ஒழிக்க வேண்டிய விஷயம் என்று உதயநிதி பேசியிருந்தார். … Read more

20 நாளுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்: எட்டயபுரத்தில் தாகம் தீர்க்க தவிக்கும் மக்கள்

கோவில்பட்டி: எட்டயபுரம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் சுமார் 15 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சீவலப்பேரி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தற்போது 20 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் போதுமானதாக இல்லாததால், எட்டயபுரம் பேரூராட்சி பகுதி மக்கள் டேங்கர் மூலம் குடிநீர் விற்பனை செய்யும் வாகனங்களை நம்பியே உள்ளனர். எனவே, எட்டயபுரம் பேரூராட்சிக்கு என தனியாக குடிநீர் … Read more

"பாகிஸ்தானை இந்தியா பகைத்திருக்கக் கூடாது".. சீமான் திடீர் பேச்சு

நீலகிரி: பாகிஸ்தானுடன் இந்தியா பகையாக மாறி இருக்கக் கூடாது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல், பாகிஸ்தானுக்கு இந்தியா பிரசவம் பார்த்ததாகவும் சீமான் கூறியுள்ளார். நடிகை விஜயலட்சுமி கொடுத்துள்ள புகாரின் பேரில் சீமான் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இதனிடையே, நேற்று இரவே அவர் கைது செய்யப்படுவார் எனக் கூறப்பட்டது. ஆனால், சீமான் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், நீலகிரியில் செய்தியாளர்களை சந்தித்த … Read more

மதுரை | விலை குறைவால் குப்பைக்கு செல்லும் பூக்கள் – நறுமண தொழிற்சாலை அமைக்க விவசாயிகள் கோரிக்கை

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் உரிய விலை கிடைக்காததால் செவ்வந்தி, செண்டுமல்லி பூக்களை விற்க கொண்டு வந்த வியாபாரிகள் மூட்டை முட்டையாக குப்பையில் கொட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென் தமிழகத்தில் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தை முக்கியமானது. மதுரை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கூட பூக்கள் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த சந்தையில் 100 க்கும் மேற்பட்ட பூக்கடைகள் செயல்படுகின்றன. … Read more

ஒரே நாடு ஒரே தேர்தல்.. "இப்போ நாங்க சொல்ல மாட்டோம்".. அப்புறம்தான் சொல்வோம்.. அன்புமணி ராமதாஸ்

சென்னை: ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ நடைமுறை குறித்து இப்போதைக்கு எங்களால் எதுவும் சொல்ல முடியாது என்றும், சிறிது காலம் கழித்துதான் சொல்ல முடியும் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து சட்டமன்றத் தேர்தல்களையும் நடத்தும் வகையில் ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ முறையை மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதனை செயல்படுத்தும் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் கமிட்டி ஒன்றையும் மத்திய … Read more