நடிகர் ரஜினிகாந்துடன் ஓ.பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ்கார்டன் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ பட வெற்றிக்கொண்டாட்டத்தில் திளைத்திருக்கிறார். படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்துக்கு செக் ஒன்றில் குறிப்பிட்ட தொகையை பரிசளித்தார். அத்துடன் BMW X7 கார் ஒன்றையும் பரிசாக கொடுத்துள்ளார். அதேபோல இயக்குநர் நெல்சனுக்கு செக் மற்றும் … Read more

உதயநிதியை விடுங்க.. இன்பநிதிக்கு உருவான தனி பாசறை.. "எதிர்காலமே".. குதூகலிக்கும் உடன்பிறப்புகள்

புதுக்கோட்டை: உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் ஆக்கியதற்கே ‘குடும்ப அரசியல்’ என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், தற்போது அவரது மகனான இன்பநிதிக்கு என்று தனியாக பாசறை உருவாக்கப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும், இதுதொடர்பாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதி மீது படிந்த விமர்சனங்களிலேயே மிகவும் முதன்மையானது ‘குடும்ப அரசியல்’ என்பது தான். தமிழகத்தின் இன்றைய வளர்ச்சிக்கு கருணாநிதி எத்தனையோ பங்களிப்பை செய்த போதிலும், அவர் தனது மகன்கள், … Read more

இலங்கையில் கராத்தே போட்டி-இந்தியா சார்பில் பதக்கங்களை அள்ளிய தமிழக வீரர்கள்!

இலங்கையில் நடைபெற்ற சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர்கள் இந்தியா சார்பாக பதக்கங்களை வென்றுள்ளனர்   

பணி நியமனம் வழங்காவிட்டால் தமிழகம் முழுவதும் செப்.11-ல் போராட்டம்: கோவிட் செவிலியர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: நீதிமன்ற உத்தரவுப்படி பணி நியமனம் வழங்காவிட்டால், தமிழகம் முழுவதும் செப்.11-ம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக எம்ஆர்பி கோவிட் செவிலியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் எம்ஆர்பி கோவிட் செவிலியர்கள் சங்க துணைத் தலைவர் உதயகுமார் நேற்று கூறியதாவது: கடந்த 2020-ம் ஆண்டு கரோனா பேரிடர் காலத்தில் எம்ஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்ற 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் தற்காலிக முறையில் பணியமர்த்தப்பட்டனர். இதில் 3 ஆயிரம் பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். எஞ்சியுள்ள 3,290 பேரையும் … Read more

தமிழக அரசு அசத்தல் பிளான்: 1500 குடும்பங்களுக்கு வீடு – நிதி ஒதுக்கீடு.. பணிகள் தொடக்கம்!

தமிழ்நாடு அரசின் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் தகுதியின் அடிப்படையில் 1500 பழங்குடியின குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித்தர நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. 2023-2024 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் மீது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அப்போது, “பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடற்ற 1000 பழங்குடியினர் குடும்பங்கள் மற்றும் தற்போது பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 500 நரிக்குறவர் குடும்பங்கள் என மொத்தம் 1500 குடும்பங்களுக்கு … Read more

மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ கொள்கை முடிவுக்கு ஓபிஎஸ் வரவேற்பு

சென்னை: மத்திய அரசின் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற கொள்கை முடிவினை முழு மனதோடு பாராட்டுவதாகவும் வரவேற்பதாகவும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள், சில விதிவிலக்குகளைத் தவிர, 1967-ஆம் ஆண்டு வரை ஒரே சமயத்தில் நடத்தப்பட்டு வந்தன என்பதை நாம் அனைவரும் அறிவோம். இதற்குப் பிறகு மத்திய அரசால் பல மாநில அரசுகள் அவ்வப்போது கலைக்கப்பட்டதன் காரணமாகவும், முன்கூட்டியே சில … Read more

எதேச்சதிகார ஆட்சி நடத்துகிறது பாஜக.. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்.. கொதிக்கும் வைகோ!

மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடை முறைகப்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இதுதொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமைலையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. த்திய அரசின் இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு … Read more

பி.லிட் படிப்புக்கான பாடத் திட்டத்தை மாற்றாமல் தொடர அனுமதிக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை: பி.லிட் படிப்புக்கான பாடத் திட்டத்தை சிதைக்காமல், இப்போதுள்ள நிலையிலேயே தொடர அனுமதிக்க வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் இலக்கியங்களை கசடற கற்கும் நோக்கத்துடன் தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் பி.லிட் எனப்படும் இளங்கலை இலக்கியப் படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்கள், அந்தப் படிப்புக்கான பாடத்திட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மாணவர்களின் தமிழ் இலக்கியப் படிப்புக்கு தடை போடும் இத்தகைய செயல்கள் ஏற்க முடியாதவை. … Read more

ஆதித்யா எல்1 திட்டம் எதற்கு…? – ஈஸியாக விளக்கிய மயில்சாமி அண்ணாதுரை

Aditya L1 Mission: சந்திரயான், மங்கள்யான் திட்டத்தை விட ஆதித்யா எல்-1 திட்டம் மிகவும் சவால் ஆனது என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். 

அனைத்து மாவட்டங்களிலும் தேமுதிக தொடக்க நாளையொட்டி செப்.14-ம் தேதி பொதுக்கூட்டம்

சென்னை: தேமுதிக தொடக்க நாளை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் செப்.14-ம் தேதி பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. மதுரையில் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்கிறார். இது தொடர்பாக தேமுதிக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தேமுதிக 19-ம் ஆண்டு தொடக்க விழா வரும் 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கட்சியின் தொடக்க நாள், கட்சியின் கொள்கை விளக்கம் மற்றும் விஜயகாந்த் பிறந்தநாள் விழா ஆகியவற்றை சிறப்பாககொண்டாடுமாறு கட்சி நிர்வாகிகள்,தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, … Read more