“மக்கள் நலனுக்கு எதிரான ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழக அரசு ஏற்கக் கூடாது” – முத்தரசன்

சென்னை: “மக்கள் நலனுக்கு எதிரான ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழக அரசு ஏற்கக் கூடாது. அதற்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்” என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பாஜக ஒன்றிய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து வருகிறது. குறிப்பாக மின்சாரம், துறைமுகம், விமான நிலையம், பொருள் போக்குவரத்து போன்ற முக்கியத் துறைகளில் அதானி குழும நிறுவனங்களின் அதிகார எல்லைக்கு … Read more

“நாடாளுமன்றத்தில் மநீம குரல் ஒலிக்க வேண்டும்” – கட்சியினரிடம் கமல்ஹாசன் விருப்பம்

சென்னை: “நாடாளுமன்றத்தில் மக்களின் குரல் கேட்க வேண்டும். அது மக்கள் நீதி மய்யத்தின் குரலாக இருக்க வேண்டும்” என பிறந்தநாள் விழாவில் கட்சியினரிடையே கமல்ஹாசன் பேசியுள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கமல்ஹாசனின் பிறந்த நாள் சென்னையில் இன்று கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்று கட்சியினரிடையே உரையாற்றிய கமல்ஹாசன், “நாடாளுமன்றத்தில் மக்களின் குரல் கேட்க வேண்டும். அது மக்கள் நீதி மய்யத்தின் குரலாக இருக்க வேண்டும். அதை நோக்கி நகரந்துகொண்டிருக்கிறோம். அதற்கான எல்லா முனைப்பையும் மேற்கொள்ள வேண்டும். இன்னும் … Read more

கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு 10% தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களுக்கு 10 சதவீதம் தீபாவளி போனஸ் அறிவித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2022-2023 ஆண்டுக்கான மிகை ஊதியம் (Bonus) மற்றும் கருணைத் தொகை (Ex-gratia) வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, போனஸ் சட்டத்தின் கீழ் வரும் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சென்ற ஆண்டைப் போலவே அவர்களுடைய சம்பளத்தில் 10 சதவீதம் … Read more

“மீண்டும், மீண்டும் சொல்கிறேன்…” – தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: “தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள்தொகை 69%-க்கும் அதிகமாக உள்ள நிலையில், அதை சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் உறுதிசெய்து, அதற்கேற்ற விகிதத்தில் அவர்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பிஹார் மாநிலத்தில் தற்போது உள்ள 50 சதவீத இடஒதுக்கீடு, 65 சதவீதமாக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது என்று சட்டப்பேரவையில் அறிவித்த அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார், ‘நாடு தழுவிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு முன்வர … Read more

விருதுநகரில் தொடர் மழை: நிரம்பி வழியும் குல்லூர்சந்தை அணை – மூழ்கியது தரைப்பாலம்

விருதுநகர்: கடந்த ஒரு வாரமாக பரவலாக பெய்துவரும் மழையால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. குல்லூர்சந்தை அணை நிரம்பி வழிவதால் தரைப்பாலம் மூழ்கியது. சுட்டெறிக்கும் வெயிலுக்கு இடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலான மழை பெய்து வருகிறது. இதனால், வேளாண் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன. தொடர் மழைப்பொழிவு காரணமாக வேளாண் பணிகளுக்கு போதிய அளவு குளங்களிலும் கண்மாய்களிலும் நீர் நிறைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேற்குத் … Read more

மத்திய, மாநில அரசு ஓய்வூதியதாரர்களுக்கு தபால்காரர்கள் மூலம் வீடு தேடி வரும் டிஜிட்டல் வாழ்நாள் சான்று

சென்னை: மத்திய மற்றும் மாநில அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் வீட்டுக்கே சென்று இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி மூலமாக டிஜிட்டல் முறையில் வாழ்நாள் சான்றிதழைச் சமர்ப்பிக்கும் சேவையை இந்திய அஞ்சல் துறை தபால்காரர்கள் மூலம் வழங்கி வருகிறது. இது தொடர்பாக அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு விவரம்: ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற தங்கள் வருடாந்திர வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்நிலையில், நேரில் சென்று வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் … Read more

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கு: திமுக எம்.பி. கவுதம சிகாமணி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி திமுக எம்.பி.யுமான கவுதம சிகாமணி நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006- 2011 திமுக ஆட்சி காலத்தில் கனிமவளத்துறை அமைச்சராக பதவி வகித்த, தற்போதைய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவரது மகனும், தற்போதைய கள்ளக்குறிச்சி திமுக எம்.பி.,யுமான கவுதமசிகாமணி மற்றும் உறவினர் ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், கோபிநாத், கோதகுமார், சதானந்தன், லோகநாதன் உள்ளிட்டோர் … Read more

அதிமுக பெயர், கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அதிமுகவின் பெயர், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி, அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவதுமாக செயல்பட்டு வருகிறார்.இது தொடர்பாக தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்கில் பொது செயலாளர் … Read more

அதிமுக கட்சி பெயர், கொடியை பயன்படுத்த தடை – சென்னை உயர் நீதிமன்றம்!

அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

எழுப்பூர் மருத்துவமனைக்கு சென்னை ஐஐடியில் உருவான குடிநீர் கருவியைப் பரிசாக வழங்கிய கமல்ஹாசன்

சென்னை: மநீம தலைவர் கமல்ஹாசன் தனது பிறந்தநாளையொட்டி, எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு காற்றின் ஈரப்பதம் மூலம் சுத்தமான குடிநீர் இயந்திரத்தை வழங்கினார். இந்தக் கருவியை அரசுக்கு பரிந்துரைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது பிறந்தநாளையொட்டி, “வாயு ஜல்” என்ற குடிநீர் இயந்திரத்தை வழங்கினார். இது காற்றின் ஈரப்பதம் மூலம் சுத்தமான குடிநீர் தரும் RO இயந்திரம் … Read more