“மேட்டூர் நகராட்சித் தலைவருக்கு புதிதாக கார் வாங்கக் கூடாது” – கூட்டத்தில் கவுன்சிலர்கள் வாக்குவாதம்

மேட்டூர்: மேட்டூர் நகராட்சித் தலைவருக்கு புதிதாக கார் வாங்க, கூடாது என கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் நகராட்சி அவசரக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேட்டூர் நகராட்சி அவசரக் கூட்டம் தலைவர் சந்திரா தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் காசி விஸ்வநாதன், நகராட்சி ஆணையர் நித்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 17 தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டன. அப்போது, கவுன்சிலர்கள் பேசியது: “நகராட்சி ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள கடைகளை அகற்றாமல் வரி விதிக்க வேண்டும். இதன் மூலம் … Read more

கண்காணிப்பு கேமராக்களை அடிக்கடி கண்காணிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினால் மட்டும் போதாது, அவை முறையாக செயல்படுகிறதா என அடிக்கடி கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்தது. கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம், சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற மென்பொறியாளர் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தை அடுத்து, தமிழகம் முழுவதும் பொது இடங்களில் மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக, சென்னை உயர் … Read more

போலி 'தமிழ் வழி கல்வி சான்றிதழ்' – பல்கலை.களில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுமதி

மதுரை: குரூப் 1 தேர்வில் போலி தமிழ் வழிக் கல்வி சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்திராவ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2019-ல் நடத்திய குரூப் 1 தேர்வில் தொலை நிலைக் கல்வியில் பயின்றவர்களுக்கு தமிழ் வழிக்கல்வி பயின்றவர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டு சலுகை வழங்கப்பட்டது. தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கான … Read more

“பிரச்சினை உள்ளவர்களை தாய்மடி போல புதுச்சேரி அரவணைக்கும்” – ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் தமிழகம், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்கள் உதய நாள் மற்றும் புதுச்சேரி விடுதலை நாள் விழா இன்று இரவு நடைபெற்றது. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் ஆளுநர் தமிழிசை பேசியதாவது: புதுச்சேரி விடுதலை நாள் இன்று கொண்டாடப்படுகிறது. புதுச்சேரிக்கு என தனித்த சரித்திரம் உள்ளது. பொதுவாக மாநிலங்கள் போராட்டத்தில் உதயமாகின. ஆனால், புதுச்சேரி மட்டும் ஜனநாயக முறைப்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு … Read more

“சிலை கடத்தல் தடுப்பு பிரிவு 3 ஆண்டுகளாக செயல்படவில்லை” – பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு

தஞ்சாவூர்: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு 3 ஆண்டுகளாக செயல்படவில்லை என்று முன்னாள் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் குற்றம்சாட்டியுள்ளார். தஞ்சாவூர் பெரிய கோயிலில் தரிசனம் மேற்கொண்ட அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “சர்வதேச சிலை கடத்தல்காரர் சுபாஷ் சந்திரகபூரை 2011-ம் ஆண்டில் ஜெர்மனியில் கைது செய்து, இந்தியாவுக்கு 2012-ம் ஆண்டு கொண்டு வந்து தமிழக சிறையில் அடைத்தோம். அதன்பிறகு நாங்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில், நியூயார்க்கில் உள்ள நுண்ணறிவு பிரிவினர் நீதிமன்றத்தில் ஏராளமான ஆணைகளைப் பெற்று, சுபாஷ் சந்திரகபூரின் … Read more

சென்னையில் வாகனங்களுக்கான வேக வரம்பு நிர்ணயம் – நவ.4 முதல் அமல்

சென்னை: சென்னையில் வாகனங்களுக்கான வேக வரம்புகளை நிர்ணயித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இரவு 10 மணி முதல் காலை 7 மணிவரை ஆட்டோக்கள் 35 கி.மீ வேகத்திலும், காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 25 கி.மீ வேகத்திலும் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: சென்னை பெருநகரத்தில் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு வாகன … Read more

திமுக பிரமுகர் கொலை வழக்கில் கடலூரில் சரண்டரான குற்றவாளிகள்..!

சென்னை திருவொற்றியூர் அருகே திமுக பிரமுகர் காமராஜை வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில் 6 பேர் கடலூர் நீதிமன்றத்தில் சரண்டைந்துள்ளனர்.    

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை ஆணையம் செலவு ரூ.5.60 கோடி: பரிந்துரைகளை அரசு நிறைவேற்றுமா?

மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை ஆணையத்துக்கு ரூ.5.60 கோடி செலவாகியுள்ள நிலையில், அந்த ஆணையம் அளித்த பரிந்துரைகளை தமிழக அரசு நிறைவேற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்துக்கு தமிழக அரசால் ரூ.5 கோடியே 60 லட்சம் செலவிடப்பட்ட நிலையில், அந்த ஆணையத்தின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. தேசிய அளவிலோ அல்லது மாநில அளவிலோ பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் நடந்தால், … Read more

திருநெல்வேலி: பட்டியலின மாணவர்கள் மீது சிறுநீர் கழித்த போதை ஆசாமிகள் கைது

திருநெல்வேலியில் குளிக்கச் சென்ற இரண்டு பட்டியலின இளைஞர்களை நிர்வாணப்படுத்தி கஞ்சா போதையில் சித்தரவதை செய்த 6 பேர் கொண்ட கும்பலை காவல்துறை கைது செய்துள்ளது.  

கொடகரை மலைக் கிராமத்தில் வலுவிழந்த தொகுப்பு வீடுகளில் அச்சத்துடன் வாழும் பழங்குடி மக்கள்

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே கொடகரை மலைக் கிராமத்தில் வலுவிழந்த தொகுப்பு வீடுகளை அகற்றி விட்டு, புதிய வீடுகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும் என பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேன்கனிக்கோட்டை அருகே தொட்டமஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட மலைக் கிராமம் கொடகரை. அடந்த வனப்பகுதிக்கு நடுவில் உள்ள இக்கிராமத்தில் பழங்குடியின மக்கள் 150 பேர் வசித்து வருகின்றனர். பேருந்து வசதியில்லை: இவர்கள் வனத்தில் தேன் எடுத்தல், விறகுகளைச் சேகரித்தல், பழங்களைப் பறித்து விற்பனை செய்வது, கால்நடை வளர்ப்பு ஆகிய … Read more