“காசு கொடுத்தால்தான் தண்ணீர் திறக்கிறார்கள்” – மதுரை மாநகராட்சி கூட்டத்தில் திமுக மண்டலத் தலைவரே புகார்

மதுரை: ‘‘காசு கொடுத்தால்தான் வால்வு ஆப்ரேட்டர்கள் தண்ணீர் திறந்துவிடுகிறார்கள்’’ என்று திமுக மண்டலத்தலைவரே மாநகராட்சி கூட்டத்தில் குற்றம்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமார், துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தார். இதில் மேயர் இந்திராணி பேசுகையில், ‘‘பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டங்கள், 2021-2022-ம் ஆண்டில் முடிக்க வேண்டியவை. கடந்த காலத்தில் இப்பணிகள் விரைந்து முடிக்காததால் தற்போதுதான் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன. மாநகராட்சியில் மொத்தம் ரூ.2 ஆயிரம் கோடிக்கு பணிகள் … Read more

உதயநிதி சொன்ன "விஷப்பாம்பு" கதை.. கண் சிவந்து நிற்கும் பாஜக – அதிமுக.. இப்படி ஓபனா சொல்லிட்டாரே

சென்னை: பாஜகவையும், அதிமுகவையும் குறிப்பிட்டு அமைச்சர் சொன்ன குட்டிக்கதை சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. சமீபகாலமாக பாஜகவினரும், உதயநிதி ஸ்டாலினும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, நீட் தேர்வு விவகாரத்தில் இந்த மோதல் மேலும் அதிகரித்துள்ளது. நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு கையெழுத்து போட மாட்டேன் என ஆளுநர் ஆர்.என். ரவி கூறியிருந்த நிலையில் அதற்கு உதயநிதி ஸ்டாலின் கடுமையாக எதிர்வினையாற்றி இருந்தார். “அவர் ஆர்.என். ரவி அல்ல.. ஆர்எஸ்எஸ் ரவி. நீங்கள் யார் … Read more

“மத்தியில் மீண்டும் காங். ஆட்சிக்கு வந்தால் நீட் ரத்தாகும்” – மாணிக்கம் தாகூர் எம்.பி நம்பிக்கை

சென்னை: “மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்” என விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் நம்பிக்கை தெரிவித்தார். திருப்பரங்குன்றம் அருகே சூரக்குளம் கிராமத்தில் முதல்வரின் காலை உணவு விரிவாக்கத் திட்டம் தொடக்க விழா நடந்தது. ஊராட்சி ஒன்றியத் தலைவர் வேட்டையன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ,மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டத்தை தொடங்கி … Read more

நான் பாஜகவின் பி டீமா.. நேருக்கு நேர் மோத துணிவு இருக்கிறதா..? திமுகவை தெறிக்கவிட்ட சீமான்

சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் நேருக்கு நேர் மோத திமுகவுக்கு துணிச்சல் இருக்கிறதா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கேள்வியெழுப்பி இருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் சாத்தானின் பிள்ளைகள் என்று கூறி பெரும் சர்ச்சையில் சிக்கினார் சீமான். மேலும், முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் சிறுபான்மையினர் கிடையாது என பேசி மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார். ஏற்கனவே நாம் தமிழர் கட்சியை பாஜகவின் ‘பி டீம்’ என பல கட்சிகள் விமர்சித்து வரும் … Read more

“எளிய மக்கள் மீது பேரன்பு கொண்ட பண்பாளர்” – விஜயகாந்த் பிறந்தநாளுக்கு தலைவர்கள் வாழ்த்து

சென்னை: விஜயகாந்தின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் தனது 71-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் அவரது பிறந்தநாள் நிகழ்ச்சிகளை அவரது தொண்டர்கள் நடத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் அரசியல், சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின்: தேமுதிக நிறுவனத் தலைவரும், எனது தோழருமான விஜய்காந்த்துக்கு உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள். முழு … Read more

காவிரியில் கர்நாடகா திறந்துவிட்ட தண்ணீர் எவ்வளவு? மேலாண்மை ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழகம், கர்நாடகா இடையில் சட்டப் போராட்டம் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் விவசாயம் வறட்சியை சந்தித்து வருகிறது. இந்த சூழலில் உரிய நீரை திறந்துவிடவில்லை என்று தமிழக அரசு முறையிட்டது. அதற்கு, பருவமழை ஏமாற்றி வருகிறது. எனவே போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் தண்ணீர் திறந்துவிட முடியவில்லை என்று கர்நாடகா அரசு விளக்கம் அளித்திருந்தது. உச்ச நீதிமன்றத்தில் இன்றைய தினம் நடைபெற்ற வழக்கு விசாரணையில், திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது முறையாக விவசாயிகள் காவிரி … Read more

கட்டுச் சோற்றை முழுங்கும் பெருசாலிகள் போல ஊழல் செய்யாதீர்கள் – துரைமுருகன் ஆவேசம்

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பல ஊழல்கள் நடந்துள்ளது அவைகள் குறித்து விசாரணைக்காக குழு அமைக்கப்பட்டு குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும்  கைது செய்யப்படுவார்கள் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.,  

பள்ளிக் கல்வியில் ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு ஆபத்தானது: முத்தரசன் 

சென்னை: பள்ளிக் கல்வியில் ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு நடத்துவது ஆபத்தானது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கை 2020 வழக்கொழிந்து போக வேண்டிய வருணாசிரம, சனாதான கருத்தியலின் நவீன வடிவமைப்பு என்பதால் நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதனை நிறுத்தி வைத்து, அது தொடர்பான வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இப்போது அந்த … Read more

காலை உணவுத் திட்டம்.. ஆசையோடு சாப்பிட அமர்ந்த மாணவர்கள்.. சட்டென தட்டுகளை பறித்த அதிகாரிகள்!

கடலூர்: தமிழக அரசு சார்பில் இன்று தொடங்கி வைக்கப்பட்ட காலை உணவுத் திட்டத்தின் கீழ் சாப்பிடுவதற்காக பசியோடு அமர்ந்திருந்த பள்ளி மாணவர்களிடம் இருந்து சட்டென அதிகாரிகள் தட்டுகளை பறித்த சம்பவம் காண்போரை வேதனையில் ஆழ்த்தியது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படுவதை போல காலை உணவு வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால் தொடக்கப்பள்ளிகளில் மட்டுமே இந்தத் திட்டம் முதலில் செயல்படுத்தப்பட்டது. இதனிடையே, இந்த திட்டத்தால் மாணவர்களின் கற்றல் … Read more

”கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை என்பது போல திமுகவிற்கு கட்டம் சரியில்லை” செல்லூர் ராஜு

வடிவேலு பாணியில் கட்டத்துரைக்கு கட்டம் சரியில்லை என்பது போல திமுகவிற்கு கட்டம் சரியில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி கொடுத்துள்ளார்.