மீண்டும் பழைய பாரம்பரிய கல் கட்டிடத்துக்கு மாறும் மதுரை ஆட்சியர் அலுவலகம்: புதுப்பிக்கும் பணிகள் மும்முரம்

மதுரை. தமிழகத்தின் பழமையான நகரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தமிழகத்தை ஆட்சி செய்ய வந்த பிரிட்டிஷார் மீனாட்சிம்மன் கோயிலை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட மதுரை நகரின் அழகை கண்டு வியந்தனர். அதனாலேயே, மதுரையை மையமாக கொண்டு தென் பகுதிகளை பிரிட்டிஷார் 1750ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆட்சி செய்யத் தொடங்கினர். அதற்காக தற்போது உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை 1916ஆம் ஆண்டு பிரம்மாண்ட கல்கட்டிடத்தை கட்டினர். விசாலமான அறைகள், மாடங்கள், நடைபாதைகளுடன் அரண்மனைபோல் இந்த கட்டிடத்தைக் கட்டினர். தற்போது இந்தக் … Read more

காவிரி விவகாரம் | சட்டம், அரசியல் ரீதியில் தைரியமான நடவடிக்கை தேவை – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தருமபுரி: காவிரி விவகாரத்தில் சட்டம் மற்றும் அரசியல் ரீதியாக தைரியமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தருமபுரியில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் கம்பைநல்லூர் பேரூராட்சி பகுதியில் மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் இரு இடங்களில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. இவற்றை பயன்பாட்டுக்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி இன்று (அக்.20) நடந்தது. இந்நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினரும், பாமக தலைவருமான அன்புமணி … Read more

“எங்களுக்கு நாங்களே போட்டி; வேறு யாரும் போட்டியில்லை” – சீமான்

தருமபுரி: “சிறு உயிரினங்களுக்கு இரையாகட்டும் என்று அரிசி மாவில் கோலமிட்ட பெருமை கொண்ட தமிழனத்தை 60 ஆண்டுகால ஆட்சி இலவச அரிசிக்கு கையேந்த விட்டுள்ளது” என தருமபுரியில் நாம் தமிழர் கட்சி சீமான் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் பொதுக்கூட்டம் ஆகியவற்றில் பங்கேற்க அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று(அக்.20) தருமபுரி வந்தார். நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியது, “மக்கள் மத்தியில் நாம் தமிழர் கட்சியின்மீது பெரும் எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் உள்ளது. … Read more

“விவசாயம் செய்ய முடியாவிட்டால் பிச்சைதான் எடுக்க வேண்டும்” – மதுரை ஆட்சியரிடம் ஆதங்கப்பட்ட விவசாயிகள்

மதுரை: ஆட்சியர் முன்னிலையில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஒரு போக விவசாயிகள், இரு போக விவசாயிகள் கடும் வார்த்தை மோதலில் ஈடுபட்டதால் கூச்சல் ஏற்பட்டது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது. மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி, விக்கிரமங்கலம், கள்ளிக்குடி, வாடிப்பட்டி, கள்ளந்திரி , புளியங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் விவசாயிகளின் மனுக்கள் மற்றும் கடிதங்களுக்கு வேளாண்துறை, கூட்டுறவுத்துறை, தோட்டக்கலைத்துறை … Read more

மதுரை மாநகராட்சியின் மிக இளம் வயது ஆணையாளர்: அரசியல் நெருக்கடிகளை சமாளித்து மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரா?

மதுரை: மதுரை மாநகராட்சி வரலாற்றிலேயே மிக இளம் வயது ஆணையாளராக 28 வயது லி.மதுபாலன் பொறுப்பேற்றுள்ளதால், அவர் மீது பொதுமக்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி ஆரம்ப காலத்தில் நகராட்சியாக செயல்பட்டது. நகராட்சியாக செயல்பட்ட மதுரையின் முதல் மாநகராட்சி ஆணையாளராக 1933-ம் ஆண்டு எஸ்.சாமுவேல் பிள்ளை இருந்துள்ளார். அவருக்கு பிறகு 1971-ம் ஆண்டு வரை மொத்தம் 17 பேர் மதுரை நகராட்சியின் ஆணையாளராக இருந்துள்ளனர். அதன்பிறகு 1971-ம் ஆண்டு வெ.லெட்சுமிரதன் மதுரை மாநகராட்சியின் முதல் ஆணையாளராக … Read more

தியாகி சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க மறுப்பு: ஆளுநருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்

சென்னை: “அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், சங்கரய்யாவின் மகத்தான தியாக வாழ்வை அங்கீகரிக்க மறுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது நடவடிக்கை மூலம் ஆளுநர் பொறுப்பை மென்மேலும் சிறுமைப்படுத்தியே வருகிறார். ஆளுநரின் இந்த தரக்குறைவான நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக” மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் தலைசிறந்த விடுதலைப் போராட்ட வீரரான என்.சங்கரய்யா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்து கொண்டிருக்கும்போது விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். படிப்பை தொடர்வதா, விடுதலைப் போராட்டத்தில் சிறைக்கு … Read more

சிவகங்கை அருகே தன்னிறைவு பெற்ற ஊராட்சி: பெண் தலைவரை கவுரவித்த மத்திய அரசு

சிவகங்கை: சிவகங்கை அருகே உள்ள ஊராட்சி அரசனூர். இந்த ஊராட்சியின் தலைவர் செல்வராணி, மக்கள், அதிகாரிகள் ஒத்துழைப்போடு ஊராட்சியை தன்னிறைவு பெற்ற பகுதியாக மாற்றி சாதித்துள்ளார். இதற்காக மத்திய அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது. சிவகங்கை ஒன்றியம், அரசனூர் ஊராட்சியில் அரசனூர், திருமாஞ்சோலை உள்ளிட்ட 9 குக்கிராமங்கள் உள்ளன. இங்கு 5,309 பேர் வசிக்கின்றனர். இதன் ஊராட்சித் தலைவராக செல்வராணி (33) உள்ளார். எம்.எஸ்.சி., பி.எட். பட்டதாரியான இவர் 4 ஆண்டுகளில் ஊராட்சியை சாலை, தெரு விளக்கு, … Read more

Weather: அடுத்த 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம்.. மக்களே எச்சரிக்கை!

North East Monsoon: தமிழகத்தில் அதிக மழை பெய்யும் வடகிழக்கு பருவமழை காலம் இன்னும் 2 நாட்களில் வரலாம். பருவமழை துவக்க நிலையில் வலு குறைந்து காணப்படும் என துணை இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மதவாத கொள்கைகளைக் கண்டித்து பிரச்சார பயணம்: உள்ளூர் காவல் துறையை அணுக மா.கம்யூ.க்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மத்திய அரசின் மதவாத கொள்கைகளைக் கண்டித்து பிரச்சார பயணம் மற்றும் பேரணி நடத்த அனுமதி கோரி உள்ளூர் காவல் துறையை அணுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், அதன்மீது 7 நாட்களில் காவல் துறை முடிவெடுக்க உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 60-வது ஆண்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு மத்திய … Read more

சதுரகிரி மலை கோயிலில் பக்தர்கள் தங்க அனுமதிக்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: சதுரகிரி மலையிலுள்ள ஆனந்த வள்ளியம்மன் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதிக்க முடியாது. பக்தர்களுக்கு காலை மற்றும் மாலையில் ஒரு மணி நேரம் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்குவது குறித்து வனத்துறை முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகரைச் சேர்ந்த சடையாண்டி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி மலையில் ஆனந்த வள்ளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நவராத்திரி திருவிழா நடைபெறும். இவ்விழாவை ஒட்டி … Read more