ஜெயலலிதா தாக்கப்பட்ட போது.. வேட்டியை மடித்துக் கட்டி ஓடியவர் எடப்பாடி பழனிசாமி.. ராஜன் செல்லப்பா பேட்டி

மதுரை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் வைத்து தாக்கப்படும் போது, வேட்டியை மடித்துக் கட்டி ஓடி வந்தவர் என்று அதிமுக மூத்த தலைவர் ராஜன் செல்லப்பா கூறியுள்ளார். 1989-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது ஜெயலலிதாவை சேலையை பிடித்து இழுத்து திமுகவினர் தாக்கியதாக, நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்தான் கூறியது பெரும் விவாதத்தையே ஏற்படுத்தியுள்ளது. அப்படி ஒரு தாக்குதலே நடக்கவில்லை என திமுகவினரும், தாக்குதல் நடந்தது என அதிமுகவினரும் … Read more

தமிழக அரசின் இளைஞர் விருதுக்கு மதுரை எழுமலையைச் சேர்ந்த 22 வயது சமூக சேவகி தேர்வு

மதுரை: தமிழக அரசின் சமூக சேவைக்காக வழங்கப்படும் மாநில இளைஞர் விருதுக்கு எழுமலையைச் சேர்ந்த கல்லூரி மாணவி செ.சந்திரலேகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் எழுமலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மு.செல்வராஜன்-பசுபதி ஆகியோரின் மகள் சந்திரலேகா (22). முதல் பட்டதாரியான இவர் சமூக சேவைக்காக தமிழக அரசின் மாநில இளைஞர் விருதினை தமிழக முதல்வரிடம் நாளை (ஆக.15) பெறுகிறார். இயற்கை வளம், சுற்றுச்சூழல் மேம்பாடு, ஆதரவற்றோருக்கு சேவை, பெண் சிசுக்கொலை தடுப்பு விழிப்புணர்வு என பல்வேறு சமூக சேவைகளில் … Read more

நீட் தேர்வு மரணங்கள் – திமுக அளித்த போலி வாக்குறுதி: எடப்பாடி குற்றச்சாட்டு!

நீட் தேர்வு கொடுமையால் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து வரும் நிலையில் தமிழக அரசை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார். மகன் உயிரிழந்த சோகத்தில் தந்தை செல்வகுமாரும் தற்கொலை செய்து கொண்டார். தமிழகம் முழுவதும் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்த சம்பவம். நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதும் ஆளுநர் அதற்கு அனுமதி அளிக்கவே மாட்டேன் என்று … Read more

நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவருக்கு சென்னை மருத்துவர்கள் மூலம் 3 மணிநேர அறுவை சிகிச்சை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவரின் 2 கைகளிலும் பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை 3 மணிநேரம் மேற்கொள்ளப்பட்டது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலிருந்து வந்திருந்த சிறப்பு மருத்துவ குழுவினர் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்த பள்ளி மாணவர் சக மாணவர்களால் கடந்த 9-ம் தேதி இரவில் வீடு புகுந்து அரிவாளால் கொடூரமாக தாக்கப்பட்டார். இதை தடுத்த அவரது தங்கைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. அவர்கள் இருவரும் … Read more

1989 சட்டமன்றத்தில் என்ன நடந்தது? திருநாவுக்கரசர் கருத்துக்கு ஜெயக்குமார் எதிர்ப்பு!

மக்களவையில் மணிப்பூர் விவகாரம் பற்றி திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 1989ஆம் ஆண்டு ஜெயலலிதாவை சட்டசபையில் தாக்கிய திமுகவுக்கு மணிப்பூர் பற்றி பேச தார்மீக உரிமையில்லை என்று பேசினார். அதைத் தொடர்ந்து 1989இல் சட்ட சபையில் என்ன நடந்தது என்பது குறித்த விவாதம் சமூக வலைதளங்களில் கிளம்பியது. 13 ஆண்டுகளுக்குப் பின்னர் திமுக ஆட்சிக்கு வந்த போது முதலமைச்சரும் நிதியமைச்சருமான கலைஞர் கருணாநிதி பட்ஜெட் தாக்கல் செய்ய வந்த போது … Read more

நாங்குநேரி சம்பவத்தைக் கண்டித்து சேலம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலி போராட்டம்

சேலம்: நாங்குநேரியில் மாணவரும், அவரது தங்கையும் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், மாணவர்களிடையே சாதிய வேறுபாட்டினை கலைந்து ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தும் வகையில், சேலத்தில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பள்ளி மாணவரையும், அவரது தங்கையும், மாணவரின் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் தாக்கியதில் அவர்கள் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சேலம் குமாரசாமிப்பட்டி அருகே செயல்படும் அரசு கலைக்கல்லூரி நுழைவு வாயில் … Read more

ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து திடீர் ரத்து.. காரணம்தான் 'ஹைலைட்'

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் நாளை நடைபெறவிருந்த தேநீர் விருந்து திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. கனமழை காரணமாக இந்த தேநீர் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை ஒட்டி தமிழக ஆளுநர் மாளிகையில் ஒவ்வொரு ஆண்டும் தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம். முதல்வர் உட்பட அனைத்து கட்சிகளையும் சேர்ந்த தலைவர்களுக்கும் இந்த தேநீர் விருந்தில் அழைப்பு விடுக்கப்படும். அவர்களும் அந்த விருந்தில் கலந்துகொள்வார்கள். அந்த வகையில், நாளை சுதந்திர தினத்தை … Read more

கருவை கலைக்க சொல்லும் தமிழக கிரிக்கெட் வீரர் – பெண் புகார்

Allegation On Rajagopal Sathish: தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் ராஜகோபால் சதீஷால் நான்கு மாதம் கர்ப்பமாக உள்ளதாக தெரிவிக்கும் பெண் ஒருவர், தற்போது கரு கலைப்பு செய்ய சொல்லி அவர் மிரட்டுவதாக புகார் அளித்துள்ளார்.

நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்குக: குடியரசுத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: ‘தமிழக சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு மசோதா, தமிழக மக்களின் ஒட்டுமொத்த கருத்தின் பிரதிபலிப்பு. அதனைச் செயல்படுத்துவதில் ஏற்படும் ஒவ்வொரு நாள் தாமதமும், தகுதியான மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கை கிடைப்பதில் பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு மட்டுமல்ல, சமுதாயத்தில் விலைமதிப்பற்ற மனித உயிரிழப்புகள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைகிறது, எனவே நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்’ என்று கோரி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு இளநிலை … Read more

நீட் விலக்கு மசோதா.. குடியரசுத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்.. அந்த வார்த்தையை கவனிங்க!

சென்னை: விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்கக் கோரி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் சென்னையை சேர்ந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், ஸ்டாலின் இவ்வாறு கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வி அடைந்ததால் விரத்தியடைந்த சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவன் ஜெகதீஸ்வரன் (19)நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். மகன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் … Read more