கடலூர் | சிப்காட் தனியார் ரசாயன தொழிற்சாலையில் விபத்து

கடலூர்: கடலூர் மாவட்டம் சிப்காட் பகுதியில் அமைந்துள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் விபத்து. இந்த விபத்து காரணமாக காற்றில் துர்நாற்றம் வீசுவதாக தகவல். தனியார் ரசாயன தொழிற்சாலையின் பாய்லருக்கு செல்லும் குழாய் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. அதனால் அதிலிருந்து வெளியேறிய புகையினால் அப்பகுதி புகை மூட்டமாக காட்சி அளித்தது. துர்நாற்றம் வீசும் நிலையில் கண் எரிச்சல் மற்றும் தலை சுற்றல் ஏற்பட்டதாக சொல்லி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட தனியார் ரசாயன தொழிற்சாலையில் இருந்து வேளாண் … Read more

“எழுத்தும் கருத்தும்…” – மதுரை புத்தகத் திருவிழாவில் பழனிவேல் தியாகராஜன் பேச்சு

மதுரை: ‘‘எழுத்தும், கருத்தும்தான் சமூகத்தில் புதியனவற்றை உருவாக்கும் கருவிகள்’’ என்று புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகத்திருவிழா இன்று தொடங்கியது. இந்த புத்தகத்திருவிழா வரும் 22ஆம் தேதி வரை நடக்கிறது. தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புத்தகத்திருவிழாவை தொடங்கி வைத்து பேசினார். எம்பி.சு.வெங்கடேசன், ஆட்சியர் சங்கீதா, மேயர் இந்திராணி, … Read more

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 18,974 கன அடியாக உயர்வு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 18,974 கன அடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பருவமழை பெய்யாததாலும், கர்நாடக மாதாந்திர நீர் பங்கீட்டை வழங்காததாலும், அணைக்கு நீர்வரத்து சரிந்து காணப்பட்டது. இதன் காரணமாக, அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது கடந்த 10ம் தேதி முதல் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக 500 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக – கர்நாடக எல்லையில் காவிரியின் துணை நதியான பாலாறு அமைந்துள்ளது. மேற்குத் … Read more

மகப்பேறு மருத்துவர்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உறுதி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்

மதுரை: தலைமைச் செயலகத்தில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு ஏற்பட்டதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். மதுரை மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படும் கர்ப்பணி பெண்கள், அடிக்கடி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழப்பதாக சர்ச்சை எழுந்தது. கடைசியாக மூன்று கர்ப்பணி பெண்கள் உயிரிழந்ததாக நகர்புற ஆரம்ப சுகாதாரநிலையங்களில் பணிபுரிந்த மருத்துவர்கள், மாநகராட்சி நகர்நல அலுவலர் வினோத்துக்கு … Read more

தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் ரத்து: அமைச்சர் உடனான பேச்சுக்குப் பின் அறிவிப்பு

சென்னை: தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை நடத்தவிருந்த போராட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உடன் பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டம் ரத்து செய்யப்படுவதாக தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பான டிட்டோஜாக் அறிவித்துள்ளது. முன்னதாக, பள்ளிக் கல்வித் துறையுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் டிபிஐ வளாகத்தில் திட்டமிட்டபடி நாளை (அக்.13) போராட்டம் நடைபெறும் என்று டிட்டோஜாக் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. பின்னணி: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், எண்ணும் … Read more

தமிழகம் முழுவதும் பால குருகுலங்களை தொடர்ந்து கண்காணிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் செயல்படும் பால குருகுலங்கள், ஆதரவற்றோர் இல்லங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மாற்றம் இந்தியா அமைப்பின் சார்பில் கடந்த 2017ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூரை அடுத்த கள்ளிக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வந்த பால குருகுலத்தில் தங்கியுள்ள 26 சிறுமிகள் உள்பட 38 குழந்தைகளுக்கு முறையான கல்வி வழங்கப்படவில்லை. குருகுலத்தில் மாற்றுத் திறனாளித் குழந்தைகள் உள்ளனர். … Read more

“கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு மத்திய அரசிடம் ரூ.1600 கோடி கேட்டுள்ளோம்” – புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரி: “கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்காக ரூ.1600 கோடி மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். நல்ல குடிநீர் தொடர்ந்து கிடைக்க இம்முடிவு எடுக்கப்பட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்” என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில் காலாப்பட்டு தொகுதியைச் சேர்ந்த எத்திட்டத்திலும் பயன் பெறாத குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் விழா கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. துறை இயக்குநர் முத்துமீனா வரவேற்றார். அமைச்சர் … Read more

“சந்திர பிரியங்கா கூறும் காரணங்கள் ஒருபோதும் ஏற்க முடியாதவை” – புதுச்சேரி பேரவைத் தலைவர் செல்வம்

புதுச்சேரி: “அமைச்சர் பதவியை சந்திர பிரியங்கா ராஜினாமா செய்ததற்கு, அவர் கூறியுள்ள காரணங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்று புதுச்சேரி பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார். ‘என் மண் என் தேசம்’ என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் வட்டாரத்துக்கு உட்பட்ட 39 கிராம பஞ்சாயத்துக்களில் இருந்து சேகரிக்கப்பட்ட புனித அரிசி கலசமானது ஊர்வலமாக பாரதியார் பல்கலைக்கூடம் எடுத்து வரப்பட்டது. இதனை நேரு யுவகேந்திரா மூலம் தேசத்துக்கு வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. சட்டப் … Read more

சோட்டா வினோத் முதல் முத்து சரவணன் வரை! 3 மாதங்களில் 5 பேர் என்கவுண்டரில் கொலை! முழு விவரம்!

கடந்த 3 மாதங்களில் 5 ரவுடிகள் என்கவுண்டரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அதுவும் ஒரே சமயத்தில் இரண்டு ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

தமிழக இளைஞர்களுக்கு கட்டணமில்லா கோடிங் பயிற்சி – சென்னை ஐஐடி தொடக்கம்

சென்னை: தமிழக இளைஞர்களுக்கு கட்டணமின்றி கோடிங் பயிற்சி அளிக்கும் வகையில் சென்னை ஐஐடி-ன் தொழில் ஊக்குவிப்பு நிறுவனமான குவி, ‘நான் முதல்வன்-தமிழ்நாடு கோடர்ஸ் பிரீமியர் லீக்’கைத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: “சென்னை ஐஐடி, ஐஐஎம் அகமதாபாத் ஆகியவற்றின் தொழில் ஊக்குவிப்பு நிறுவனமான குவி (GUVI) தமிழ்நாட்டில் ஒரு லட்சம் பொறியியல் மாணவர்களுக்கு தொடர்ச்சியாக ஹேக்கத்தான்கள் மூலம் பயிற்சி அளிக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. ‘நான் முதல்வன்- தமிழ்நாடு கோடர்ஸ் பிரீமியர் லீக் (NM-TNcpl) … Read more