நீட் தேர்வை ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு திமுக அழுத்தம் தரவில்லை: இபிஎஸ் குற்றச்சாட்டு

சென்னை: “தமிழகத்தில் கூட்டணியுடன் கூடிய 38 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள திமுக, இதுவரை ஒருமுறைகூட நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடாளுமன்ற மக்களவையை ஒத்திவைக்கும் அளவுக்கு மத்திய அரசுக்கு அழுத்தம் தரவில்லை” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த செல்வசேகர் என்பவருடைய மகன் ஜெகதீஸ்வரன் (19), நீட் தேர்வு தோல்வியால், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். … Read more

தமிழகத்தில் ஒரு வாரம் மழை எப்படி? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் அடுத்த ஒரு வாரம் மழை நிலவரம் தமிழ்நாட்டிற்கு எப்படி இருக்கும் என்பது குறித்த அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (ஆகஸ்ட் 14 )தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, … Read more

நீட் தேர்வு: ஆளுநர் மாணவர்களின் இறப்பை கொச்சைப்படுத்துகிறார் – உதயநிதி ஸ்டாலின்

ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் விவகாரம் குறித்து அறியாமையில் இருப்பதுடன், மாணவர்களின் இறப்பை கொச்சைப்படுத்துவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.   

60 நோயாளிகளுக்கு ஊசி போட ஒரு செவிலியர்: செங்கை மருத்துவமனையில் உயிர் காக்கும் நர்ஸ்களுக்கு பற்றாக்குறை

செங்கல்பட்டு: நோயாளிகள் எண்ணிக்கை அடிப்படையில், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1,114 செவிலியர்கள் பணியாற்ற வேண்டும். ஆனால், வெறும் 140 பேர் மட்டுமே உள்ளதால், 974 செவிலியர் பற்றாக்குறை உள்ளது. அதிகப்படியான பணிச்சுமையால் செவிலியர்கள் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். இப்பிரச்சினைக்கு அரசு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த 1961-ல் அப்போதைய முதல்வர் காமராஜர் தலைமையில், 150 உள்நோயாளிகள், படுக்கை வசதியுடன் செங்கல்பட்டில் அரசு தலைமை மருத்துவமனை தொடங்கப்பட்டது. பின்னர், 320 … Read more

ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து புறக்கணிப்பு… ஸ்டாலின் எடுத்த முடிவு!

முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குமரிக் கடல் முதல் இமயப் பெருமலை வரை வாழும் மக்கள் ஒன்றுபட்ட சிந்தனையுடன் போராடிப் பெற்றதே இந்திய நாட்டின் விடுதலை ஆகும். அப்போது வாழ்ந்த முப்பது கோடி மக்களும் நாட்டு விடுதலைக்காகப் போராடியதன் விளைவே 1947 ஆகஸ்ட் 15 அன்று கிடைத்த வெற்றிச் செய்தி. இன்று, நாம் இந்தியத் திருநாட்டின் 77-ஆவது விடுதலை நாளைக் கொண்டாடுகிறோம் என்றால், இதற்காகத் தியாகம் செய்த அனைவரது போராட்டத்துக்கும் தலைவணக்கம் செலுத்தவே! போராடிப் பெற்ற விடுதலையை எந்நாளும், … Read more

நாமக்கல்: இளம் பெண்களின் ஆபாச படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்ட இளைஞர்

நாமக்கல்லில் இளம் பெண்கள் உள்ளிட்டோரை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளங்களில் இளைஞர் ஒருவர் வெளியிட்ட புகைப்படங்களால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.   

”ஒரு குடும்பத்தையே காவு வாங்கிய நீட் தேர்வுக்கு உடனடியாக விலக்கு பெற வேண்டும்” – ராமதாஸ்

சென்னை: சென்னையில் மாணவர் ஜெகதீஸ்வரன், அவரது தந்தை செல்வசேகர் தற்கொலையால் உயிரிழந்ததற்கு வருத்தம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், ஒரு குடும்பத்தையே காவு வாங்கிய நீட் தேர்வுக்கு உடனடியாக விலக்கு பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வை இரு முறை எழுதியும், மருத்துவப் படிப்பில் சேர முடியாததால் மன உளைச்சலுக்கு ஆளான சென்னை குரோம்பேட்டை மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து … Read more

காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள்: தமிழக அரசு விருதுகள் அறிவிப்பு!

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலைமைச்சர் தேசிய கொடியேற்ற உள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் காவல் துறையில் பல்வேறு பிரிவுகளில் சாதனை புரிந்தவர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் அறிவிக்கப்படும். அந்த வகையில் 2023ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 5 காவல்துறை அதிகாரிகளுக்கு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்பட உள்ளது. மகளிர் … Read more

சென்னை | நீட் தேர்வு தோல்வியால் மாணவர் தற்கொலை: சோகத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட தந்தை

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நீட் தேர்வு தோல்வி காரணமாக கடந்த சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்ட மாணவர் ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வசேகர் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டார். சென்னை – குரோம்பேட்டை பகுதியில் வசித்து வந்தவர் செல்வசேகர். இவரது மகன் ஜெகதீஸ்வரன் (வயது 19) இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்துள்ளார். அதனால் ஏற்பட்ட விரக்தி காரணமாக நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சூழலில் மகன் உயிரிழந்த சோகத்தை … Read more

நீட் பலி பீடத்தின் இறுதி மரணம்… இனியும் அந்த சிந்தனை வேண்டாம்… முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

தமிழகத்தில் நீட் தேர்வை வேண்டாம் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவு பறிபோகும் எனக் கூறி நீட் விலக்கு பெற குரல் கொடுத்து கொண்டிருக்கின்றனர். தற்போது அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தான் அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அதுவும் இல்லை எனில் மிகவும் சிரமம் ஏற்படக்கூடும். நீட் தேர்வு – எதிர்ப்பு ஏன்? – முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்! நீட் தேர்வு … Read more