பாஜக தலைவர்கள் புளூபிலிம் பார்த்தாங்களே அது… ராகுல் ஃபிளையிங் கிஸ்… வரிந்து கட்டிய காயத்ரி ரகுராம்!

நாடாளுமன்ற மக்களவையில் இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்கட்சிகள் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தன. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம்ட நடைபெற்று வருகிறது. நேற்றைய விவாதத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி மணிப்பூர் விவகாரத்தில் பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசி முடித்த பின்னர் ராகுல் காந்தி அவை உறுப்பினர்களுக்கு ‘பறக்கும் முத்தம்’ கொடுத்தார். இந்த … Read more

மேய்ச்சல் நிலம், காடழிப்பு பிரச்சினைகள் மிகத் தீவிரமானவை: விவசாயிகள் மத்தியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

திருவண்ணாமலை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, திருவண்ணாமலையில் இயற்கை விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்களின் உறுப்பினர்களுடன் இன்று கலந்துரையாடினார். அவரது உரையின் முழு விவரம்: நமக்கெல்லாம் உணவளிப்பவர்கள் உழவர்களே. ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே விவசாயிகள் உயர்நிலையில் இருந்தனர். அவர்கள் எப்போதும் சமுதாயத்தில் ஒரு உன்னதமான தொழிலைச் செய்கிறார்கள். பழங்காலத்திலிருந்தே மிகவும் விலையுயர்ந்த செல்வம் ‘உணவு’ என்றும், மோசமான எதிரி ‘பசி’ என்றும் கூறப்பட்டுள்ளது. மக்களின் பசியை போக்க உணவு வழங்கும் உன்னதமான தொழிலை செய்பவர்கள் நீங்கள். ஆங்கிலேயர்கள் … Read more

ஓணம் பண்டிகை… தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை!

மலையாள மொழி பேசும் மக்களின் முக்கிய பண்டிகையாக ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. மகாபலி சக்கரவர்த்தியின் அகங்காரத்தை அடக்கிட, திருமால் வாமனராக அவதரித்து, அவரை அழிக்க முயன்றபோது மகாபலி சக்கரவர்த்தி திருமாலிடம் ஒவ்வொரு ஆண்டும் தனது மக்களை காண ஒரு வரம் கேட்டதாகவும் அதனை ஏற்று திருமாள் அருள் புரிந்ததாகவும் நம்பிக்கை. அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோண நட்சத்திர நாளில் மகாபலி சக்கரவர்த்தி மக்களை காண வருவதாகவும் அவரை வரவேற்கும் வகையில் அத்தப்பூ … Read more

சேலம் | மனைவியின் உடலை நல்லடக்கம் செய்ய முடியாமல் தவித்த கணவர் – உதவிய மாமன்ற உறுப்பினர் 

சேலம்: மனைவியின் உடலை நல்லடக்கம் செய்ய வழியின்றி கணவர் தவித்த நிலையில், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் முன்வந்து உதவியது கவனம் பெற்றுள்ளது. சேலம், பொன்னம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சந்திரையர். இவரது மனைவி லீலா( 68) உடல்நிலை சரியாமல் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சந்திரையர் மனைவி லீலாவுக்கு ஈமகாரியம் செய்து, உடலை நல்லடக்கம் செய்ய வழியின்றி பரிதவித்தார். இதுகுறித்து அப்பகுதியின் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கத்திடம், மனைவி … Read more

தமிழ்நாடு முழுக்கவுமே சம்பவம் இருக்காம்… நல்ல சேதி சொன்ன வெதர்மேன்!

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. இருப்பினும் தமிழகத்தின் சில இடங்களில் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து. குறிப்பாக டெல்டா மாவட்டங்களான திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. இந்நிலையில் இன்று மாலை சென்னையின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் பிற்பகலில் வெளுத்து வாங்கிய மழையால் வெப்பம் … Read more

திருச்சி என்ஐடி நேரடி நியமனம் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: திருச்சி என்ஐடியில் நேரடி பணி நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. திருச்சி என்ஐடி ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் மற்றும் ஆசிரியர் மோகன் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: மத்திய அரசின் கல்வி மற்றும் உயர்கல்வித் துறையின் கீழ் நாடு முழுவதும் 31 என்ஐடிக்கள் (தேசிய தொழில்நுட்ப கழகம்) செயல்படுகின்றன. இதில் திருச்சி என்ஐடி முதலிடத்தில் உள்ளது. இங்கு இயக்குநர், துணை இயக்குநர், பேராசிரியர், … Read more

'கச்சத்தீவை தாரைவார்த்ததே திமுகதான்.. தமிழக முதல்வர் எனக்கு கடிதம் எழுதுகிறார்'.. ஸ்டாலினை சாடிய மோடி!

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பிரதமர் மோடி இன்று பதில் அளித்தார். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நின்றப்படியே பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளை சரமாரியாக விளாசினார். குறிப்பாக தமிழகம் குறித்தும் திமுக குறித்தும் பேசினார் பிரதமர் மோடி. அமைச்சர் எவ வேலு, இந்தியா என்றால் வட நாடு என்று பேசியதை குறிப்பிட்ட மோடி, திமுகவை பொறுத்தவரை தமிழ்நாடு இந்தியாவில் இல்லை போல என விமர்சித்தார். மேலும் கச்சத்தீவு விவகாரம் குறித்தும் … Read more

விசாரணை, தீர்ப்பெல்லாம் விநோதமா இருக்கு – பொன்முடி வழக்கில் நீதிபதி விளக்கம்

அமைச்சர் பொன்முடி மீதான வழக்கின் தீர்ப்பை தாமாக முன்வந்து மறு ஆய்வு செய்வது ஏன் என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்  17 பக்க உத்தரவில் விளக்கம் அளித்துள்ளார். 

ஆடி அமாவாசை நாளில் சதுரகிரி கோயிலில் அன்னதானம் வழங்க உயர் நீதிமன்றம் அனுமதி

மதுரை: ஆடி அமாவாசை நாளான ஆகஸ்ட் 16-ல் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மலைப்பகுதியில் அன்னாதானம் வழங்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. விருதுநகர் பெரியசாமி தெருவைச் சேர்ந்த ஜனார்த்தனன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இங்கு அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் அதிகளவில் வருவது வழக்கம். ஆடி அமாவாசையின் போது லட்சணக்கான மக்கள் வருகை தருவர். … Read more

கல்லூரிகளில் ஒரே பாடத் திட்டமா? தமிழக அரசு அறிவித்துள்ள சூப்பர் சலுகை!

தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகளில் ஒரே பாடத் திட்டம் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார் அதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் ஒரு சேர வந்தன. அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் தன்னாட்சிக் கல்லூரிகள் பக்கமிருந்து எழுந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பில், “உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி சட்டமன்றத்தில் அறிவித்தபடி, மாணாக்கர்களின் அறிவு, திறன், கற்றல் மற்றும் … Read more