எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு: மத்திய அரசு அறிவிப்பு

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக எடப்பாடி பழனிசாமிக்கு Y+ பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அவருக்கான பாதுகாப்பு Z+ ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் வரும் … Read more

சென்னை அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து – 4 பேர் நீந்தி கரை சேர்ந்தனர்; 2 பேர் காயம்

சென்னை: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஸ்ரீதர் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் காசிமேடு காசிமாநகர் 3-வது தெருவைச் சேர்ந்த ராஜா(61), அதே பகுதியைச் சேர்ந்த மாசிலாமணி(60), சேகர், ஜெகன், விஜயமூர்த்தி, சுதாகர் ஆகியோர் கடலுக்கு மீன்பிடிக்க கடந்த 30-ம் தேதி சென்றனர். சென்னை கடற்கரையிலிருந்து சுமார் 58 கடல் மைல் தொலைவில் கடந்த 1-ம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது காற்று வேகமாக வீசியுள்ளது. கடலடி நீரோட்டமும் வேகமாக இருந்துள்ளது. இதனால், படகில் இருந்து வலையோடு கடலுக்குள் … Read more

ரூ.1,20,000 பரிசு! சென்னையில் அரசு நடத்தும் மாரத்தான் – கலந்து கொள்ள விருப்பமா?

Tamilnadu Government Chennai Mini Marathon : தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் மினி மாரத்தான் போட்டி நடக்க உள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு அரசு சார்பில் ரூ.1,20,000 பரிசு கொடுக்கப்பட உள்ளது.

மதுரையில் எய்ம்ஸ் கல்லூரி ஜனவரி முதல் செயல்படும்: தலைமை நிர்வாக அதிகாரி தகவல்

மதுரை: மதுரை எய்ம்ஸ் தலை​வர் பிர​சாந்த் லவானியா தலை​மையி​லான ஆலோ​சனைக் கூட்​டம் தோப்​பூர் எய்ம்ஸ் வளாகத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில், எய்ம்ஸ் நிர்​வாக அதி​காரி ஹனு​மந்​த​ராவ், எம்​.பி.க்​கள் மாணிக்​கம் தாகூர், ராணி கு​மார், சந்​திரசேகரன் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர். பின்​னர் எய்ம்ஸ் நிர்​வாக அதி​காரி ஹனு​மந்​த​ராவ் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: எய்ம்ஸ் 4-வது ஆண்டு மாணவர் சேர்க்கை நிறைவு பெற்​று, ராம​நாத​புரத்​தில் மாணவர்​கள் படித்து வரு​கின்​றனர். தோப்​பூரில் எய்ம்ஸ் மருத்​து​வ​மனை கட்​டிடப் பணி தொடங்​கப்​பட்​டு, பணி​கள் இரவு பகலாக நடை​பெற்று … Read more

மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு: 30,000 கன அடியாக அதிகரிப்பு

மேட்​டூர் / தரு​மபுரி: மேட்​டூர் அணையி​லிருந்து திறக்​கப்​படும் நீரின் அளவு விநாடிக்கு 30,000 கன அடி​யாக அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் மாலை விநாடிக்கு 18,615 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று காலை 19,286 கனஅடி​யாக​வும், மதி​யம் 24,735 கன அடி​யாக​வும், மாலை 29,423 கனஅடி​யாக​வும் அதி​கரித்​தது. இந்​நிலை​யில் மேட்​டூர் அணையி​லிருந்து நீர்​திறப்பு நேற்று காலை 10 மணி முதல் விநாடிக்கு 24,000 கனஅடியி​லிருந்து 30,000 கனஅடி​யாக அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. அணை மற்​றும் சுரங்க மின் நிலை​யம் … Read more

அஜித்குமார் சகோதரருக்கு அரசு வேலை வழங்கியது கண்துடைப்பு:​ நயினார் நாகேந்திரன் விமர்சனம்

திருப்புவனம் / மதுரை: அஜித்​கு​மாரின் சகோ​தரருக்கு அரசு வேலை அளித்​துள்​ளது கண்​துடைப்​பாகும். அவர் இருக்​குமிடத்​திலிருந்து 80 கி.மீ. தொலை​வில் காரைக்​குடி​யில் வேலை கொடுத்​துள்​ளனர் என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறி​னார். திருப்​புவனம் அருகே மடப்​புரத்​தில் போலீ​ஸார் தாக்​குதலில் உயி​ரிழந்த கோயில் காவலாளி அஜித்​கு​மார் குடும்​பத்​தினரை நேற்று சந்​தித்து ஆறு​தல் கூறிய நயி​னார் நாகேந்​திரன், ரூ.5 லட்​சம் நிதி​ உதவி அளித்​தார். பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறியதாவது: திமுக ஆட்​சி​யில் கடந்த 4 ஆண்​டு​களில் 24 விசா​ரணை … Read more

மத்திய அரசு வழங்கிய ரூ.5,886 கோடியில் இதுவரை அமைக்கப்பட்ட சாலைகள் எத்தனை? – தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி

சென்னை: பிரதமரின் கிராம சாலைகள் திட்​டத்​தின் கீழ் மத்​திய அரசு கடந்த ஆண்டு வரை வழங்​கிய ரூ.5,886 கோடி​யில் இது​வரை அமைத்த சாலைகள் எத்​தனை என தமிழக அரசுக்கு பாஜக முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை கேள்வி எழுப்பி உள்​ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: ஈரோடு மாவட்​டம் கோபிசெட்​டி​பாளை​யம் அருகே உள்ள அம்​மா​பாளை​யம் கிராம ஊராட்​சி, இரண்டு பக்​க​மும் பவானி ஆற்​றால் சூழப்​பட்​டுள்​ளது. வெள்​ளப் பெருக்கு காலங்​களில், பரிசல் போக்​கு​வரத்து தடைபடு​வ​தால், சுமார் … Read more

திருமாவளவனுக்கு எதிராக செல்வப்பெருந்தகை செயல்படுகிறார் – விசிக குற்றச்சாட்டால் திமுக கூட்டணியில் சலசலப்பு

சென்னை: ​திரு​மாவளவனுக்கு எதி​ராக செல்​வப்​பெருந்​தகை செயல்​படு​வ​தாக விசிக குற்​றம்​சாட்​டி​யுள்​ளது. மேலும், காங்​கிரஸ் குறித்த விசிக நிர்​வாகி​யின் கருத்து திமுக கூட்​ட​ணி​யில் சலசலப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. திமுக கூட்​ட​ணி​யில் இருந்து சில கட்​சிகள் வெளி​யேறி​னாலும், அதற்கு ஈடாக பாமகவை கூட்​ட​ணி​யில் இணைப்​ப​தற்​கான நடவடிக்​கையை தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை மூலம் திமுக செய்து வரு​வ​தாக கூறப்​படு​கிறது. இதையொட்​டி, பாமக நிறு​வனர் ராம​தாஸை சந்​தித்த பிறகு , “2011-ம் ஆண்டு போல் விசிக​வும், பாமக​வும் ஒரே கூட்​ட​ணி​யில் இருக்க வேண்​டும்” என … Read more

பொன்முடியின் வெறுப்பு பேச்சு குறித்து விசாரிக்க தயங்கினால் சிபிஐக்கு மாற்ற நேரிடும்: போலீஸாருக்கு கோர்ட் எச்சரிக்கை

சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக போலீஸார் புலன் விசாரணை செய்ய தயங்கினால், வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. பெண்கள் குறித்தும், சைவம் – வைணவம் குறித்தும் முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், அமைச்சர் பதவியையும் இழந்தார். இதையடுத்து, பொன்முடிக்கு எதிராக உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுக்க பதிவுத் துறைக்கு பரிந்துரை செய்தார். அதன்படி, … Read more

“அஜித்குமார் கொலையில் அழுத்தம் கொடுத்த அதிகாரி பெயரை முதல்வர் வெளியிட வேண்டும்” – நயினார் நாகேந்திரன்

திருப்புவனம்: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலையில் தலைமைச் செயலகத்தில் இருந்து அழுத்தம் கொடுத்த அதிகாரி பெயரை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட வேண்டும் என தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸார் தாக்குதலில் கொலையான அஜித்குமார் குடும்பத்தினரை இன்று (வெள்ளிக்கிழமை) தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: … Read more