விழுப்புரம் பாமக நிர்வாகி என்.எம்.கருணாநிதி அதிரடி நீக்கம் – காரணம் என்ன?

விழுப்புரம்: திண்டிவனம் தொகுதியில் 2006 சட்டமன்ற தேர்தலில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை எதிர்த்து போட்டியிட்டு 2,208 வாக்குகளில் தோற்ற என்.எம்.கருணாநிதி, பாமகவிலிருந்தும், வன்னியர் சங்கத்திலிருந்தும் இன்று அதிரடியாக நீக்கப்பட்டார். இது தொடர்பாக பாமக தலைமை நிலையம் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘விழுப்புரம் கிழக்கு மாவட்டம் நல்லாவூரைச் சேர்ந்த வன்னியர் சங்க செயலாளர் ந.ம.கருணாநிதி, சங்கம் மற்றும் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வருவதால், 26.07.2024-ம் தேதி முதல் சங்கம் … Read more

அரசு போக்குவரத்து கழகம் எப்போதும் தனியார் மயம் ஆகாது: அமைச்சர் சிவசங்கர் உறுதி

திருப்பத்தூர்: அரசு போக்குவரத்துக் கழகம் எப்போதும் தனியார் மயமாகாது என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார். திருப்பத்தூர் மாவட்டத்தில், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 5 புதிய பேருந்துகள் தொடக்க விழா திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 5 புதிய பேருந்துகளை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியது: ”தமிழகதத்தில் பழைய பேருந்துகளுக்கு பதிலாக … Read more

காங்கிரஸ் கருத்து உரிமைகளில் நாம் தலையிடுவதில்லை – அமைச்சர் ஐ பெரியசாமி!

காங்கிரஸ் கருத்து உரிமைகளில் நாம் தலையிடுவதில்லை. திமுக கருத்து வாதங்களை எடுத்து வைத்தும், வாதங்களுக்கு வாதம் எதுவாக இருந்தாலும், அரசியலுக்கு அரசியல்  என எல்லா வற்றையும் சந்தித்து வந்த இயக்கம் திமுக – அமைச்சர் ஐ. பெரியசாமி.  

அதிமுக பொதுச் செயலாளர் பதவி: பழனிசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு எப்படி மனு தாக்கல் செய்ய முடியும்? என எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக கே.பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் ஓ.பன்னீர் செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிராபகர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பாக இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் … Read more

நீலகிரி கனமழை பாதிப்பு: ராட்சத மரம் விழுந்து காவல் நிலையம் சேதம்

உதகை: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காற்றுடன் கூடிய தொடர் கனமழை பெய்து வருகிறது. நேற்று கேத்தி காவல் நிலையம் மீது ராட்சத மரம் விழுந்தது. நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வறண்டிருந்த அணைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளில் மழைப்பொழிவு தொடர்ந்து வருகிறது. காற்று மற்றும் மழை காரணமாக மாவட்டத்தில் நூற்றுக்கும் அதிகமான குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் … Read more

பட்ஜெட்டில் பாரபட்சம்: மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு

சென்னை: மத்திய அரசின் நிதியை பாரபட்சமாக சில மாநிலங்களுக்கு வழங்கி, தமிழகத்தை வஞ்சிப்பதை கண்டித்து நாளை (27.7.2024) சனிக்கிழமை சென்னையில் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தொகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சியமைந்து நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த முதல் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீட்டில் அப்பட்டமான அரசியல் பாகுபாடு காட்டப்பட்டதாக கடும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக தமிழகம் வஞ்சிக்கப்பட்டதால் வருகிற … Read more

இந்திய அணியில் எனக்கு இடமில்லையா? பளீச்சென்று பேசிய நடராஜன்!

Natarajan On Team India: போதிய அளவில் இந்திய அணியில் விளையாடாததற்கான காரணம் குறித்து நடராஜன் தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் கட்டபொம்மன் சிலை: இந்து முன்னணி வலியுறுத்தல்

சென்னை: நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட கட்டபொம்மன் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ‘பூலித்தேவன் மாளிகை’ என்றும், அந்த வளாகத்துக்கு ‘சுந்தரலிங்கனார் வளாகம்’ என்ற பெயரையும் மீண்டு சூட்ட வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்து முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்ப்பு மன்ற கூட்ட அரங்கில் சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலை … Read more

பள்ளி குழந்தைகளை காப்பாற்றிய ஓட்டுனருக்கு முக ஸ்டாலின் நிதியுதவி! எவ்வளவு தெரியுமா?

பள்ளி வாகனத்தை ஒட்டி சென்றபோது நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்த ஓட்டுநர் சேமலையப்பன் என்பவருக்கு முதல்வர் முக ஸ்டாலின் 5 லட்சம் நிதிஉதவி வழங்கி உள்ளார்.  

தென் மண்டலத்தில் சிறந்த 10 காவல் நிலையத்துக்கு கேடயம்: டிஜிபி சங்கர் ஜிவால் வழங்கினார்

சென்னை: தெற்கு மண்டலத்தில் சிறந்த காவல் நிலையங்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 10 காவல் நிலையங்களுக்கு கேடயங்களை டிஜிபி சங்கர் ஜிவால் வழங்கினார். தமிழக காவல்துறை சேவையை மேம்படுத்தும் வகையில் திறன்மேம்பாடு, சேவை உள்ளிட்ட பல்வேறு அளவீடுகளின் அடிப்படையில் மாநில அளவிலும், மாநகர, மாவட்ட அளவிலும் சிறந்த காவல் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆண்டுதோறும் தமிழக முதல்வரின் கேடயம் வழங்கப்படுகிறது. அதன்படி, மாநில அளவிலான சிறந்த 3 காவல் நிலையங்களுக்கு கடந்த குடியரசு தின கொண்டாட்டத்தின்போது, கேடயங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். … Read more