அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354-ன் படி ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும்: பெ.சண்முகம்

சென்னை: “அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354-ன் படி ஊதிய மாற்றத்தை அமலாக்குவதென்பது ஏற்கெனவே தமிழக அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கோரிக்கை ஆகும். எனவே காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஊதிய உயர்வை அமலாக்க வேண்டுமென்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 1-ம் தேதி மருத்துவர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. நாட்டின் பொதுசுகாதாரம் மற்றும் மருத்துவத்தை மேம்படுத்துவது, மக்களுக்கான ஆரோக்யமான … Read more

நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு!

Nellai local holiday: நெல்லையப்பர் கோவில் தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அஜித்குமார் என்ன தீவிரவாதியா? – காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

மதுரை: ‘மடப்புரம் கோயில் காவலரை சாதாரண சந்தேக வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியது ஏன்? அவர் என்ன தீவிரவாதியா?’ என உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் முன்பு அதிமுக வழக்கறிஞர்கள் மாரீஸ்குமார், ராஜராஜன், பாஜக வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் ஆகியோர் இன்று (ஜூன் 30) காலை நேரில் ஆஜராகி, மடப்புரம் காளி கோயில் காவலர் அஜித்குமார் போலீஸ் காவலில் இறந்த விவகாரம் தொடர்பாக … Read more

விழுப்புரம் திமுக எம்எல்ஏ மீதான பணமோசடி வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி

சென்னை: விழுப்புரம் தொகுதி திமுக எம்எல்ஏ லட்சுமணன் மீதான பணமோசடி வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற போதுமான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், விழுப்புரத்தை சேர்ந்த மருத்துவர் ரங்கநாதன் தாக்கல் செய்த மனுவில், “கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் திமுக சார்பில் டாக்டர் லட்சுமணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, நண்பர் என்ற முறையில் தேர்தல் செலவுக்காக 2 கோடியே … Read more

அஜித் குமார் லாக்கப் மரணம்: முதல்வர் ஸ்டாலினுக்கு 9 கேள்விகள்… நயினார் நாகேந்திரன் கிடுக்குப்பிடி

Ajithkumar Lockup Death: சிவகங்கையில் காவல்துறையின் விசாரணையின்போது உயிரிழந்த அஜித்குமாரின் மரணம் தொடர்பாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முதலமைச்சர் ஸ்டாலினை நோக்கி 9 கேள்விகளை எழுப்பி உள்ளார். 

ஜூலை 1-ம் தேதி மருத்துவர்கள் தினத்தில் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுகோள்

சென்னை: ஜூலை 1-ல் மருத்​து​வர்​கள் தினத்​தில் கோரிக்​கைகளை நிறைவேற்​று​மாறு தமிழக அரசுக்கு அரசு மருத்​து​வர்​கள் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளனர். இது தொடர்​பாக அரசு மருத்​து​வர்​களுக்​கான சட்​டப் போராட்​டக் குழு தலை​வர் மருத்​து​வர் எஸ்​.பெரு​மாள் பிள்ளை வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: மருத்​து​வக் கட்​டமைப்​பிலும், சுகா​தா​ரத் துறை செயல்​பாடு​களி​லும் தமிழகம் முன்​மா​திரி மாநில​மாக உள்​ளது. ஆனால் அதற்​கான பங்​களிப்​பைத் தரும் அரசு மருத்​து​வர்​களுக்கு நாட்​டிலேயே குறை​வான ஊதி​யம் தரப்​படு​கிறது. தகு​திக்​கேற்ற ஊதி​யம் வேண்டி அரசு மருத்​து​வர்​கள் நீண்ட கால​மாகவே போராடி வரு​கிறோம். அது​வும் … Read more

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் இடஒதுக்கீட்டின்படி நிரந்தரப் பணியாளர்களை நியமிக்கவும்: அன்புமணி

சென்னை: “மெட்ரோ ரயில் பணிகளுக்கு இட ஒதுக்கீட்டை பின்பற்றி , நிரந்தரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு தமிழக மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள்.” என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று (ஜூன் 30) வெளியிட்ட அறிக்கையில், “சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் முடிவடைந்து அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் படிப்படியாக போக்குவரத்து தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கான … Read more

திமுக ஆட்சியில் 25 உயிரிழப்புகள்… லாக்கப் மரணம் முதலிடத்தில் தமிழ்நாடு – ஆர்.பி. உதயகுமார்

Tamil Nadu Custodial Death: லாக் அப் மரணத்தில் தென் மாநிலங்களில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது என தேசிய மனித உரிமை ஆணையம் தகவல் வெளியிட்டதாக ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

வியாசர்பாடி கணேசபுரம் மேம்பால பணி 40 சதவீதம் நிறைவு: மாநகராட்சி நிர்வாகம் பதில்

சென்னை: வட சென்னை வியாசர்​பாடி பகு​தி​யில் கணேசபுரம் ரயில்வே மேம்​பாலப் பணி 40 சதவீதம் மட்​டுமே நிறைவடைந் திருப்பதாக மாநக​ராட்சி நிர்​வாகம் பதில் அளித்​துள்​ளது. வியாசர்​பாடி கணேசபுரம் ரயில்வே மேம்​பாலப் பணி நீண்ட கால​மாக முடிக்​கப்​ப​டா​மல் உள்​ளது. இதனால் வாகன ஓட்​டிகள் சிரமத்​துக்​குள்​ளாகிறார்​கள். எனவே பணி​களை விரைந்து முடிக்க வேண்​டும் என்று வட சென்னை குடி​யிருப்​போர் நலச்​சங்​கங்​களின் கூட்​டமைப்பு தலை​வர் டி.கே.சண்​முகம், சென்னை மாநக​ராட்சி மேயரிடம் அண்​மை​யில் மனு அளித்​திருந்​தார். இதற்கு பதில் அளித்து சென்னை மாநக​ராட்சி … Read more

இதுவரை பார்த்த பழனிசாமி வேற; இனிமே பார்க்கப்போற பழனிசாமி வேற!

இதுவரை பார்த்த பழனிசாமி வேற; இனிமே பார்க்கப்போற பழனிசாமி வேற…2026 ல் திமுக என்கிற கட்சியை அழிக்க வேண்டும் என உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.