கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு – வனத்துறை முக்கிய அறிவிப்பு!

கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலமாக மோயர் சதுக்கம், பைன் மர சோலை, பில்லர் ராக், குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த சுற்றுலா தலங்கள் அனைத்தும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இதயத்தில் அடைப்பு: நிதி துறை செயலர் உதயச்சந்திரனுக்கு ‘ஸ்டென்ட்’ பொருத்தம்

சென்னை: நிதித் துறை செயலர் உதயச்சந்திரனுக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டதால், அறுவை சிகிச்சை செய்து ‘ஸ்டென்ட்’ பொருத்தப்பட்டது. தமிழக நிதித் துறை செயலர் உதயச்சந்திரனுக்கு லேசான நெஞ்சுவலி இருந்ததால், சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த வாரம் ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அவர் கடந்த 26-ம் தேதி அனுமதியானார். இதய அடைப்பை நீக்கும் வகையில் அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு ‘ஸ்டென்ட்’ பொருத்தப்பட்டது. இதுகுறித்து மருத்துவர்களிடம் … Read more

தொழில் தொடங்க தாட்கோ மூலம் கடன் பெற விண்ணப்பிக்கலாம் – ரூ.10 லட்சம் கடன், 35 விழுக்காடு மானியம்..!!

tamil nadu tahdco business loan scheme : புதிதாக தொழில் தொடங்க நினைக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் தாட்கோ மூலம் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.

கூட்டணி ஆட்சி சாத்தியம்தான்: டிடிவி.தினகரன் கருத்து

திருச்சி: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் திருச்சியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: திமுக அமைச்சர்கள் மக்களை அவமதிக்கும் வகையில் பேசி வருகிறார்கள். இதற்கெல்லாம் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள். தமிழகத்தில் திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர அமித்ஷா பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியை பலப்படுத்தி வருகிறார். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது சாத்தியம்தான். கொள்கை வேறாக இருந்தாலும், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளோம். … Read more

அருப்புக்கோட்டை கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட இயந்திர யானை ‘கஜா' – நடிகை திரிஷா வழங்கினார்

அருப்புக்கோட்டை: தமிழகத்திலேயே முதல்முறையாக அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு கோயிலுக்கு “கஜா” என்ற இயந்திர யானையை நடிகை திரிஷா வழங்கியுள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அஷ்டலிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் மற்றும் அஷ்டபுஜ ஆதிசேஷ வராகி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இதன் கும்பாபிஷேக விழா ஜூலை 2-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இக்கோயிலுக்கு இயந்திர யானை ஒன்றை நடிகை திரிஷா மற்றும் சென்னையைச் சேர்ந்த பீப்புல் ஃபார் கேட்டில் இன் இந்தியா என்ற தன்னார்வ … Read more

பேருந்துகளில் சாகசத்துக்காக படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள் மீது வழக்கு: போலீஸாருக்கு கோர்ட் உத்தரவு

மதுரை: பேருந்துகளில் சாகசத்துக்காக படிக்கட்டில் நின்றும், தொங்கியபடியும் பயணம் செய்யும் மாணவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், அரசு ஐடிஐ, பாலிடெக்னிக் மற்றும் அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம். இதற்காக … Read more

அரக்கோணம் அருகே தண்டவாளம் உடைந்ததால் தடம் புரண்ட மின்சார ரயில் 

ராணிப்பேட்டை: சென்னையில் இருந்து காட்பாடி சென்ற மின்சார ரயில் அரக்கோணம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 9 பெட்டிகள் கொண்ட அந்த ரயில் சித்தேரி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட நிலையில் மூன்றாவது பெட்டி தண்டவாளத்தை விட்டு இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. தண்டவாளம் உடைந்திருப்பதை கண்டு ரயிலை சாமர்த்தியமாக நிறுத்திய ஓட்டுநரால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஓட்டுநர் அளித்த தகவலின் … Read more

அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக எப்போது உத்தரவு? – தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் அறிவுறுத்தல்

அதிமுக உள்கட்சி விவகாரம் மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக விசாரணை நடத்தி, எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது உள்ளிட்ட பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்கக்கூடாது என்றும், அதிமுக உள்கட்சி விவகாரம் முடிவுக்கு வரும்வரை கட்சிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்றும் கோரி, தேர்தல் ஆணையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சூரியமூர்த்தி, வா.புகழேந்தி, ராம்குமார் … Read more

ஒற்றை உள்நுழைவு மூலம் 9 வலைதளங்கள் ஒருங்கிணைப்பு: அமைச்சர் பிடிஆர் தகவல்

பொதுமக்களுக்கு பாதுகாப்பான, ஒருங்கிணைந்த சேவைகளை வழங்க ஒற்றை உள்நுழைவு தளம் மூலம் 9 அரசு வலைதளங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநில அரசு துறைகளில் மென்பொருள் பயன்பாட்டை முறைப்படுத்தி, ஒருங்கிணைந்த அங்கீகாரத்தை வழங்குவதற்காக, தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் கீழ் தமிழ்நாடு ஒற்றை உள்நுழைவு தளம் (சிங்கிள் சைன்-ஆன்) கடந்த 2023-24 நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தளமானது பல பயனாளிகள் தங்களது … Read more

புதுச்சேரியில் 3 பாஜக நியமன எம்எல்ஏக்களின் ராஜினாமா ஏற்பு: பேரவைத் தலைவர் தகவல்

புதுச்சேரி: புதுச்சேரியில் 3 பாஜக நியமன எம்எல்ஏக்களின் ராஜினாமா ஏற்கப்பட்டது என்று சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (ஜூன் 28) மாலை செய்தியாளர்களிடம் கூறியது: “சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் காரணத்தால் தேசிய தலைமையின் அறிவுறுத்தலை ஏற்று ராமலிங்கம், அசோக்பாபு, வெங்கடேசன் ஆகிய 3 பேரும் தங்களின் நியமன எம்எல்ஏ பதவியை ராஜினமா செய்வதாக கடிதம் அளித்துள்ளனர். அந்தக் கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநரிடம் அனுப்பப்பட்டது. அவர்களின் … Read more