வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பெங்களூரு, திருப்பத்தூர், சேலம் ஆந்திராவுக்கு பஸ்கள் இயக்கம்

வேலூர்: வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பெங்களூரு, திருப்பத்தூர், சேலம், ஆந்திர மார்க்கமாக செல்லும் பஸ்கள் இன்று முதல் இயக்கப்பட்டன. இதனால் வேலூர் புதிய பஸ் நிலையம் முழுமையான பயன்பாட்டுக்கு வந்துள்ளது. வேலூர் மாநகரின் மத்தியில் கோட்டையின் எதிரே தியாகி உபைதுல்லா வேலூர் பழைய பஸ் நிலையம் இயங்கி வந்தது. தற்போது பெருகி வரும் மக்கள் தொகைக்கும், வாகன நெரிசலுக்கும் இந்த  இடம் ஏற்றதாக இல்லை என்பதால் புதிய பஸ் நிலையம் அமைக்க செல்லியம்மன் கோயில் … Read more

“நாங்கள் இதை குடிச்சிட்டு சாகணுமா”.. மது பாட்டிலில் மிதந்த பொருளால் கொந்தளித்த குடிமகன்!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் “குவாட்டர் பாட்டிலில் தூசியா? தீப்பற்றி எரியும் பார்” என ஆவேசமாக வாலிபர் போதையில் பேசி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் இரும்பிலி பகுதியில் அரசு மதுபான கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மதுபான கடையில் அந்த பகுதியை சேர்ந்த சில வாலிபர்கள் குடிப்பதற்காக மது வாங்கியுள்ளனர். இரண்டு குவாட்டர் பாட்டில்களை அவர்கள் வாங்கிய நிலையில் அதில் ஒரு குவாட்டர் பாட்டிலுக்குள் பெரிய அளவிலான துகள் … Read more

பேக் டூ தி அதிமுக அலுவலகம்: 72 நாட்களுக்குப் பின் செல்லும் இபிஎஸ்

சென்னை: 72 நாட்களுக்குப் பின்னர், நாளை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்லவிருக்கிறார், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. கட்சி அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதுதொடர்பாக அக்கட்சியின் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி நாளை (செப்.8) வியாழக்கிழமை காலை 10 மணியளவில், தலைமைக் கழகம் எம்ஜிஆர் மாளிகைக்கு வருகை … Read more

திருமாவுடன் இணையும் பா.ரஞ்சித்?; விசிக வட்டாரத்தில் திடீர் பரபரப்பு!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பா.ரஞ்சித். மெட்ராஸ், அட்டக்கத்தி, காலா, கபாலி என்று தரமான படங்களை இயக்கி தமிழ் சினிமா வட்டாரத்தை குறுகியக் காலத்திலேயே திரும்பி பார்க்க வைத்தார். இவர், இயக்கும் படங்கள் பெரும்பாலும் சாதி கொடுமைகளை தோலுரித்து காட்டும் விதமாக உள்ளதால் விளிம்பு நிலை மக்களின் விருப்ப பட்டியலில் பா.ரஞ்சித்துக்கு முதல் இடம் உள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித் மனதில் தோன்றும் கருத்துக்களை இடம், பொருள் பாராமல் துணிச்சலுடன் வெளிப்படுத்தும் குணம் கொண்டவர் எனவும் திரை … Read more

மலையோர பகுதிகளில் பலத்த மழை நீடிப்பு: பேச்சிப்பாறை அணையில் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றம்

நாகர்கோவில்: மலையோர பகுதிகளில் பலத்த மழை நீடித்து வரும் நிலையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்படுகிறது. இன்றும் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை பெய்தது. இன்று காலை வரை அதிகபட்சமாக சிற்றார்-2, முள்ளங்கினாவிளை ஆகிய இடங்களில் 13 … Read more

'பாரத் சோடோ யாத்திரை'தான் நீங்கள் நடத்த வேண்டும்: ராகுலை கிண்டல் செய்த அண்ணாமலை

சென்னை: ‘பாரத் ஜோடோ யாத்திரை’ என்ற இந்திய ஒற்றுமைப் பயணத்தை இன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடங்கும் நிலையில், அவரைக் கடுமையாக விமர்சித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், “இது சுதந்திர இந்தியா. இங்கு யார் வேண்டுமானாலும் யாத்திரை செல்லலாம். அது அவர்களின் ஜனநாயக உரிமை. அந்த வகையில் ராகுல் காந்திக்கும் உரிமை உண்டு. அதனால்தான் நான் அவரது யாத்திரைக்கு வாழ்த்தும் கூட சொல்லியிருக்கிறேன். ஆனால், அவர் … Read more

இலங்கை அரசின் வசம் பிடிபட்ட மீனவர்கள் மற்றும் படகுகள் விவகாரம்..! – வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!

இலங்கை அரசின் வசம் பிடிபட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ,மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 9 மாதங்களில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 150 தமிழக மீனவர்களை தூதரக நடவடிக்கைகள் மூலம் விடுவிக்க உதவியமைக்காக தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதோடு, கடந்த 6-9-2022 அன்று புதுச்சேரியைச் … Read more

உணவகங்களில் வாழை இலை பயன்படுத்த கோரிக்கை

பழநி: பழநி செம்மொழி தமிழ்ச்சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது: பழநி கோயிலின் சார்பில் மருத்துவக்கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும். பழநி பஸ் நிலையத்தில் பஸ்கள் நுழையும் வழிகளை வழித்தடத்திற்கேற்ப மாற்றி அமைக்க வேண்டும். பழநி பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும். பழநி நகரில் உள்ள உணவகங்களில் வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்கவும், பார்சல் கட்டுவதற்கும் வாழை இலைகளை மட்டுமே … Read more

‘கடன் தராம அலையவிடுறாங்க’ – நரிக்குறவர் சமுதாய பெண்ணின் மனக்குமுறல்

பூவிருந்தவல்லியில் சாலையோரம் கடை நடத்தி வரும் நரிக்குறவர் சமுதாயத்திற்கு நகராட்சி மூலம் வழங்கப்படும் கடன் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பூவிருந்தவல்லி நகராட்சிக்கு வந்த இரண்டு நரிக்குறவர் சமுதாய பெண்கள் தாங்கள் சுய தொழில் செய்து பிழைக்க கடன் வசதி தரவில்லை என கண்ணீருடன் புலம்பிச் சென்றுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில், தாங்கள் 6 மாதத்தில் இருந்து 1 வருடம் வரை அலைக்கழிக்கப்பட்டு வருகிறோம். தங்களிடம் அனைத்து ஆவணங்கள் இருந்தும் கடன் வழங்கப்படவில்லை … Read more

ராகுல் காந்தி நடந்தாலும், ஓடினாலும் காங்கிரசை காப்பாற்ற முடியாது: வானதி சீனிவாசன்

இறந்து போன காங்கிரஸ் கட்சிக்கு ,ராகுல் காந்தியின் நடைபயணத்தின் மூலம்  உயிரோட்ட முடியுமா, என்று முயற்சி செய்து பார்க்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கிய கப்பல்,ராகுல் காந்தி நடந்தாலும் சரி ,ஓடிபோனாலும் சரி ,மாரத்தான் செய்தாலும் சரி அது எந்த பயனையும் தராது என பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்தார். தேசிய கைத்தறி நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, கோவை மக்கள் சேவை மையத்தின் சார்பாக, கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் … Read more