கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாதவர்களின் கோழைத்தனமான செயல் – மக்கள் நீதி மய்யம் கண்டனம்.!

அதிகாரம் மிக்கவர்கள், அதைத் தவறாகப் பயன்படுத்துவதை இனியாவது கைவிட வேண்டும் என்று, மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில்,  “மாற்றுக் கருத்துகொண்ட அரசியல் கட்சிகளின் ஏராளமான ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டுமென்றும், சில கருத்துப் பதிவுகளை நீக்குமாறும் மத்திய அரசு வற்புறுத்துவதாக சமூகவலைதளமான ட்விட்டர் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டங்களைக்கூட பின்பற்றாமல், கணக்குகளையும், பதிவுகளையும் நீக்குமாறு அதிகாரிகள் நிர்ப்பந்திப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ட்விட்டர் நிறுவனம் … Read more

மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகளுடன் இணைந்து புத்தகம் வாசித்த ஆட்சியர்.!

புதுக்கோட்டையில் நடைபெற உள்ள 5-வது புத்தகத்திருவிழா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற பெயரில் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. புதுக்கோட்டை அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியர் கவிதா ராமு, மாணவிகளுடன் இணைந்து புத்தகம் வாசித்தார். இதே போல மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளிலும், ஆட்சியர் அலுவலகத்திலும் புதுச்சேரி வாசிக்கிறது நிகழ்ச்சி காலை 11.30 மணி முதல் மதியம் 12.30 … Read more

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: தொழிலதிபரிடம் தனிப்படை போலீஸார் விசாரணை

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரம் தொடர்பாக, தொழிலதிபரிடம் தனிப்படை போலீஸார் இன்று விசாரணை நடத்தினர். நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக நீலகிரி மாவட்ட போலீஸார் விசாரித்து சயான் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ஓட்டுநர் கனகராஜ் சம்பவம் நடந்த சில நாட்களில் நிகழ்ந்த … Read more

அதிமுக பொதுக்குழு விவகாரம்: ஈபிஎஸ் தரப்புக்கு சரமாரி கேள்வி – விசாரணை நாளை ஒத்திவைப்பு

ஜூலை 11-ம் தேதி நடக்கவுள்ள அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. … Read more

மகர ராசியில் பிரவேசிக்கும் சனி பகவான்: ஏழரை சனியின் தாக்கம் எந்த ராசிக் காரர்களுக்கு?

சனி பகவான் ஜூலை 12 ஆம் தேதி மகர ராசியில் பிரவேசிக்கிறார். மகர ராசிக்கு செல்லும் சனி பகவான், தனது சொந்த வீடான மகர ராசிக்கு சென்ற பிறகு, ஜனவரி 17, 2023 வரை அங்கே தங்கியிருப்பார். இதனால், சனி பகவனால், சில ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் தாக்கம் இருக்கும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் தாக்கம் இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். ஜோதிடத்தில், சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி முக்கியமாந்தாகப் பார்க்கப்படுகிறது. சனி பெயர்ச்சி ஒருவரின் வாழ்க்கையை … Read more

வேலை தேடுபவரா நீங்கள்… நாளை சென்னையில் மாபெறும் வேலைவாய்ப்பு முகாம்..பயன்படுத்தி கொள்ளுங்கள்..!

வாரத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளி வேலைவாய்ப்பு வெள்ளியாக அனுசரிக்கபடுகிறது. சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (08/07/2022) நடைபெற உள்ளது.  இந்த முகாமில் 30- வயதிற்கு உட்பட்ட 8- ஆம் வகுப்பு, 10- ஆம் வகுப்பு, 12- ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ டிப்ளமோ,  கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் எதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் … Read more

ஓசூரில் பைக் மீது பின்னால் வந்த லாரி மோதியதில் கணவன், மனைவி.. 4 மாத குழந்தை மருத்துவமனையில் அனுமதி.!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே திடீரென சாலையை கடக்க முயன்ற லாரியால், இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் கணவன் மனைவி உயிரிழந்த விபத்தின் சிசிடிவிக் காட்சி வெளியாகியுள்ளது. அன்பு என்பவர் தனது மனைவி மற்றும் 4 மாத குழந்தையுடன் ஐங்குந்தம் பகுதிக்கு பைக்கில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது சாமல்பள்ளம் பகுதியில் திடீரென ஒரு லாரி சாலையை கடக்க முயன்றதால், அன்புவின் பைக் மீது பின்னால் வந்த லாரி பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே … Read more

‘பிரதமர் மோடி, அண்ணாமலைக்கு திமுக பிரமுகர் கொலை மிரட்டல்’ – மதுரை காவல் துறையிடம் பாஜகவினர் புகார்

மதுரை: பிரதமர் மோடி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் மதுரை பாஜக வழக்கறிஞர் பிரிவினர் புகார் அளித்துள்ளனர். மதுரை மாநகர் மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் அமிழ்தன், மாவட்ட நிர்வாகிகள் அய்யப்பராஜ், வெங்கசேடஷ், அருண் தமிழன், ஜெயமுருகன், அர்ச்சனா எச்.ராஜா உள்ளிட்டோர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் துணை ஆணையர் மோகன்ராஜை சந்தித்து … Read more

ஒரே நேரத்தில் 10,000 பேர் வர முடியும்: பஞ்சபூர் பஸ் நிலைய வசதிகள் பற்றி கே.என் நேரு பேட்டி

திருச்சியில் ரூ.350 கோடி மதிப்பில் அமைக்கப்படும் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் முதல் கட்டமாக ரூ.20.10 கோடி மதிப்பிலான கிராவல் மண் நிரப்பும் பணியினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில், மக்கள் சேவை பயன்பாட்டிற்கான பேட்டரி வாகனங்கள் உள்ளிட்டவற்றைத் தொடங்கி வைத்தார். பின்னர் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பேசுகையில்;  திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய திட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.390 … Read more

பொன்னியின் செல்வன் -1 டீசர் நாளை வெளியீடு.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

பொன்னியின் செல்வன் டீசர் நாளை வெளீடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா சரத்குமார், ஜெயராம் , பிரபு உள்ளிட்ட முக்கிய திரைபிரபலங்கள் நடிப்பில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ளது கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு இரண்டு பாகங்கலாக உருவாக உள்ளது பொன்னியின் செல்வன் திரைப்படம்.  இந்த படத்திற்கு இசை புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் விக்ரம், திரிஷா, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோரின் கதாப்பாத்திரம் … Read more