திண்டுக்கல் | ஆபத்து மிகுந்த புல்லாவெளி அருவி: 6 ஆண்டுகளில் 14 பேர் உயிரிழப்பு

திண்டுக்கல்: தாண்டிக்குடி மலைப்பகுதியில் உள்ள புல்லாவெளி அருவி ஆபத்து மிகுந்ததாக உள்ளது, இதுவரை 14 உயிர்களை காவு வாங்கிய நிலையில் புல்லாவெளி அருவியில் தவறி விழுந்து பரமக்குடியை சேர்ந்த இளைஞரை தேடும் பணி ஐந்தாவது நாளாக நடைபெற்று வருகிறது. தாண்டிக்குடி மலைப்பகுதியில் உள்ள ஆபத்து மிகுந்த புல்லாவெளி அருவியில் இதுவரை 14 பேர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர். இவர்களில் 13 பேரை மீட்டுள்ள தீயணைப்புத் துறையினர் இருவர் உடலை மீட்கமுடியாத நிலையும் ஏற்பட்டது. இந்நிலையில் புல்லாவெளி அருவியில் … Read more

மின் இணைப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் ரத்தானால் கட்டணத்தை திருப்பி அளிக்க உத்தரவு

கோவை: மின் இணைப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, அந்த விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டால், விண்ணப்பதாரரின் வங்கிக் கணக்கு விவரம் பெறப்பட்ட 3 நாட்களுக்குள் கட்டணத்தை திருப்பி அளிக்க வேண்டுமென மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் புதிய மின் இணைப்பு மற்றும் கூடுதல் மின்பளு வேண்டி ஆன்லைன் மூலமாக ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கும் நடைமுறையை மின்வாரியம் செயல்படுத்தி வருகிறது. அவ்வாறு விண்ணப்பிக்கும்போது இணையதளம் மூலமாகவே கட்டணத்தையும் நுகர்வோர் செலுத்துகின்றனர். இவ்வாறு கட்டணத்தை செலுத்தியபின், மின்வாரிய அலுவலர்கள் ஆவணங்களை … Read more

புதுச்சேரி | மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் ரூ.11,000 கோடி பட்ஜெட்

புதுச்சேரி: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 10ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், நடப்பாண்டு ரூ. 11 ஆயிரம் கோடிக்கான முழு பட்ஜெட்டுக்கு மத்திய அரசின் அனுமதிக்காக புதுச்சேரி அரசு காத்துள்ளது. சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 10ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் ஆளுநர் தமிழிசை உரையாற்றி பட்ஜெட் கூட்டத்தொடரை தொடங்கி வைக்கிறார். சட்டப்பேரவை நிகழ்வு தொடங்கும் போது பூஜ்ஜிய நேரத்தில் அரசு செயலர்கள், துறை தலைவர்கள் பேரவையில் இருக்க வேண்டும் என்ற சுற்றறிக்கையை தலைமைச்செயலர் … Read more

தமிழகத்தில் இந்த 12 மாவட்டங்களில் ஆக. 11 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வரும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 11) வரை 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, கரூர், மதுரை உள்ளிட்ட ஏனைய வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையும் படிக்க: காற்றாலை … Read more

ஒன்றிய பிரதமர் என்று கூறிய முதல்வர் இந்திய பிரதமர் என்கிறார், எல்லாம் பயம்தான் காரணம்: செல்லூர் ராஜூ

மதுரை: ”அன்று ஒன்றிய அரசு, ஒன்றிய பிரதமர் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின் இன்று இந்திய பிரதமர் என்கிறார். எல்லாம் பயம், பயம், என்று முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார். திமுக, பாஜக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் நேற்று முன்னாள் அமைச்சரும், மாநகர செயலாளருமான செல்லூர் கே.ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அவர்களை வரவேற்று செல்லூர் கே.ராஜூ பொன்னாடை போர்த்தினார். அதன்பின், செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாற்று … Read more

கத்திபாரா: வழிகாட்டி பலகை விழுந்ததில் இருவருக்கு பலத்த காயம்! அரசு பேருந்து பலத்த சேதம்!

சென்னை கத்திப்பாரா அருகே சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது வழிகாட்டிப்பாதை பலகை விழுந்ததில் இருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை கத்திப்பாரா பாலம் அருகே வைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய வழிகாட்டுப்பலகை இரு புறமும் உள்ள கம்பங்களோடு பெயர்ந்து விழுந்தது. யாரும் எதிர்பாராத தருணத்தில் நிகழ்ந்த இந்த விபத்தால் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இருவர் படுகாயம் அடைந்தனர். இருவரும் சிகிச்சைக்காக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை … Read more

காவிரி ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கு: மேட்டூர் அணையில் இருந்து 1.20 லட்சம் கனஅடி நீர் திறப்பு

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 1.20 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால், கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு … Read more

'ஆதாயம் தேடி வருபவர்கள் அது கிடைக்காத போது விலகுவது இயல்புதான்' – கவிஞர் சினேகன்

ஆதாயத்தை மட்டுமே எதிர்நோக்கி வரும் நபர்கள் ஆதாயம் கிடைக்காத போது கட்சியில் இருந்து விலகுவது இயல்புதான் என்று மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயலாளர் சினேகன் தெரிவித்துள்ளார். சேலம் மூன்று ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு கடந்த 5ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதன் நிறைவு நாளான இன்று மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் கவிஞர் சினேகன் பங்கேற்றார். இதில், … Read more

அரிசி மீதான 5 சதவீத வரி ரத்தாகும் என எதிர்பார்க்கிறோம்: தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம்

மதுரை: தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் மாநில பொதுக்குழு கூட்டம் மதுரை வேலம்மாள் ஐடாஸ்கட்டர் அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் அச்சங்கத்தின் மாநில தலைவர் டி.துளசிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “இந்தியாவிலுள்ள மாநிலங்களில் அதிகமாக அரிசியை உணவாக உண்ணும் மாநிலம் தமிழகம்தான். விலையில்லா அரிசி வழங்கி பெருமை சேர்த்ததும் தமிழகம்தான். ஜிஎஸ்டியின் 47வது கவுன்சில் கூட்டத்தில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு 5 … Read more

குப்பை வண்டியில் கொண்டுவரப்பட்ட உணவு.. முகாமில் தங்கியிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் வெள்ள பாதிப்பு காரணமாக முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு வழங்குவதற்காக உணவுப் பொருட்கள் நகராட்சி குப்பை சேகரிக்கும் வண்டியில் கொண்டுவரப்பட்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து காவிரியில் 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி வரை நீர் திறந்து விடப்பட்டது. இதனை அடுத்து குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையததைச் சுற்றியுள்ள காவேரி ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் … Read more