வங்கதேசம்: நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்பு!

டாக்கா: வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியேற்றது. வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்த மூன்று நாட்களுக்குப் பிறகு, இந்த பதவியேற்பு இன்று நடைபெற்றது. இந்த புதிய அரசு வங்கதேசத்தில் தேர்தலை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸில் மருத்துவ சிகிச்சையில் இருந்த யூனுஸ், போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று இன்று டாக்கா திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த நாடு மிகவும் … Read more

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சி கலைப்புக்குப் பின்னும் நீடித்த வன்முறைகளில் 232 பேர் பலி

புதுடெல்லி: வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு திங்களன்று (ஆக.5) கவிழ்ந்ததில் இருந்து நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் மட்டும் 232 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இதுவரையிலான போராட்டம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 560 ஆக அதிகரித்துள்ளது. வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம், ஒரு நாட்டையே நிலைகுலையச் செய்தது. இந்தப் போராட்டம் மிகப் பெரிய வன்முறையாக வெடித்தது. இந்தப் போராட்டம் ஜூலை மத்தியில் தொடங்கியது. பின்னர் அமைதி நிலையான சூழல் திரும்பியது. … Read more

“வன்முறை, குழப்பத்தில் இருந்து நாட்டை காப்பீர்” – வங்கதேச மக்களுக்கு முகமது யூனுஸ் வேண்டுகோள்

டாக்கா: குழப்பம், வன்முறையில் இருந்து வங்கதேசத்தை காப்பாற்றுமாறு நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கவுள்ள முகமது யூனுஸ் வலியுறுத்தியுள்ளார். வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் டாக்கா வந்த முகமது யூனுஸ், ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “உங்களுக்கு என் மீது நம்பிக்கை இருந்தால், நாட்டில் எங்கும் தாக்குதல் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதுவே நமது முதல் பொறுப்பு. நாட்டை குழப்பத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும். வன்முறையில் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும். … Read more

ஜப்பானில் 7.1 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது

டோக்கியோ: ஜப்பானின் பல பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக.08) அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவான நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மியாசாகி கடற்கரையில் இருந்து 20 மைல் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம், ஜப்பானின் நிலநடுக்க கண்காணிப்பு நிறுவனமான NERV வெளியிட்டுள்ள தகவலில், இந்த நிலநடுக்கம் ஹியுகா – நாடா கடலில் பதிவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ரிக்டர் அளவில் 7.1 என்று சக்திவாய்ந்த … Read more

“என் அன்னையை பார்க்க முடியாமல் மனம் நொறுங்கியது” – ஷேக் ஹசீனா மகள் உருக்கம்

டாக்கா: “என் அன்னையைப் பார்க்கவோ, அரவணைக்கவோ முடியாமல் மனம் நொறுங்கிவிட்டது” என்று வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகள் சைமா வசேத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “வங்கதேசத்தை நான் மிகவும் விரும்புகிறேன். எனது நாட்டில் ஏற்பட்டிருக்கும் உயிர் இழப்புகளால் மனம் வேதனை அடைந்துள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் என் அன்னையை பார்க்கவோ, அரவணைக்கவோ முடியாத அளவுக்கு மனம் உடைந்துவிட்டது. அதேநேரத்தில், உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியாவின் பிராந்திய இயக்குநர் … Read more

ஏமனில் கனமழை, வெள்ளம் – 30 பேர் பலி

சனா, வளைகுடா நாடுகளில் ஒன்றான ஏமன் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஹூடைடா, ஹஜ்ஹா, டைஸ் ஆகிய நகரங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், பலரது வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது. இந்நிலையில், ஏமனில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 30 உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். அதேவேளை வெள்ளத்தில் சிக்கிய பலரும் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கனமழை மேலும் … Read more

வங்காளதேசத்தில் இடைக்கால அரசு நாளை பதவியேற்பு

டாக்கா, வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி ஆட்சி செய்து வந்தது. இதனிடையே, அந்நாட்டு விடுதலைப் போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் தீவிரமடைந்த நிலையில் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ததையடுத்து அந்நாட்டு நாடாளுமன்றத்தை அதிபர் முகமது சஹாபுதீன் கலைத்து உத்தரவிட்டார். மேலும், இடைக்கால அரசு … Read more

வங்காளதேசத்தில் அதிரடி; ராணுவ ஜெனரல் பதவி நீக்கம், கைது, நாட்டை விட்டு வெளியேற தடை

டாக்கா, வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசு ஆட்சி செய்து வந்த நிலையில், அரசு வேலைகளில் 30 சதவீத இடஒதுக்கீடு விவகாரம் வன்முறையாக வெடித்தது. இதனை எதிர்த்து, மாணவர்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கடந்த ஜூலையில் 300 பேர் பலியானார்கள். இந்நிலையில், கடந்த 5-ந்தேதி போராட்டம் தீவிரமடைந்ததில், ஹசீனா பதவி விலக கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த வன்முறையை தொடர்ந்து, … Read more

வங்கதேசத்தில் மேலும் ஒரு கோயில் மீதான தாக்குதலை முறியடித்த இந்துக்கள்

கொல்கத்தா: வங்கதேசத்தில் இந்து கோயில்கள், இந்துக்களின் வீடுகள், கடைகள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து கொல்கத்தாவில் உள்ள இஸ்கான் கோயில் துணை தலைவர் ராதாராமன் தாஸ்நேற்று கூறும்போது, “வங்கதேசத்தில் உள்ள ஒரு கோயில் மீதுசெவ்வாய்க்கிழமை போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் கோயிலும் அதில் இருந்தசிலைகளும் முற்றிலும் சேதமடைந்தன. மேலும் கோயிலில் இருந்த விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். இதுபோல் மற்றொரு கோயில் மீது தாக்குதல் நடத்த ஒரு கும்பல் முயற்சி செய்தது. ஆனால், … Read more

ஒவ்வொரு முறையும் தாம்பத்ய உறவுக்கு பின் பணம் வசூலித்த மனைவி; கணவன் எடுத்த அதிரடி முடிவு…!!

தைப்பே, நம்மூரில் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என கூறுவார்கள். கணவன் பெயரை கூறுவதற்கு கூட, மனைவி தயங்கிய காலங்களும் இருந்துள்ளன. ஆனால், நிலைமை தற்போது முற்றிலும் மாறியிருக்கிறது. அன்புடன் போடா, வாடா என கூறும் மனைவியரும் உள்ளனர். நம்முடைய நாட்டில் நிலைமை இப்படி என்றால், வெளிநாட்டில் வேறு விதத்தில் நடந்து கொள்ளும் மனைவிகளும் உள்ளனர். விசித்திரம் நிறைந்த தம்பதிகளும் காணப்படுகின்றனர். தைவான் நாட்டில் வசித்து வருபவர் ஹாவோ. இவருடைய மனைவி ஜுவான். 2014-ம் ஆண்டில் … Read more