நடப்பாண்டில் ஹஜ் யாத்திரை மேற்கொண்டோரில் 1,300+ பேர் வெப்பத்தால் உயிரிழப்பு: சவுதி அரசு

ரியாத்: சவுதி அரேபியாவில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக ஹஜ் யாத்திரை மேற்கொண்டவர்களில் சுமார் 1,300-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 83 சதவீதம் பேர் யாத்திரை மேற்கொள்ள முறைப்படி பதிவு செய்யாதவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த தகவலை சவுதி அதிகாரபூர்வமாக உறுதி செய்தது. யாத்திரை மேற்கொண்டவர்கள் நீண்ட நேரம் சூரிய ஒளியின் கீழ் வெகு தூரம் நடந்து வந்ததும், தங்கும் வசதி இல்லாததும் இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

ரஷ்யாவில் தேவாலயம், யூத வழிபாட்டுத் தலத்தில் தாக்குதல்: 15 காவலர்கள் உள்பட பலர் பலி

மாஸ்கோ: ரஷ்யாவின் வடக்கு காக்கஸ் பிராந்தியத்தில் டகேஸ்டான் மாகாணத்தில் இரு நகரங்களில் தேவாலயம், மற்றும் யூத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் ஒரு காவல் சோதனைச் சாவடியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் ஒரு மத குரு, 15 போலீஸார், பொதுமக்கள் உள்பட பலர் உயிரிழந்ததாக அப்பிராந்திய ஆளுநர் செர்கய் மெலிகோவ் தெரிவித்துள்ளார். டகேஸ்டான் மாகாணத்தில் மிகப் பெரிய நகரான மகாச்கலா மற்றும் கடற்கரை நகரான டெர்பன்ட்டில் நடந்த இத்தாக்குதலை தீவிரவாத சதி … Read more

மேற்கு கரையில் காயமடைந்த பாலஸ்தீனரை ஜீப்பில் கட்டி இழுத்துச் சென்ற இஸ்ரேல் ராணுவம்

ஜெருசலேம்: மேற்கு கரையில் தேடுதல் வேட்டையின்போது காயமடைந்த பாலஸ்தீனரை இஸ்ரேலிய ராணுவம் ஜீப்பில் கட்டி இழுத்துச் சென்றசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மனித உரிமை மீறல் என சர்வதேச அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. ஹமாஸ் ஆயுதக் குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், பலர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் விதமாக ஹமாஸ் ஆயுதக் குழுக்கள் மீது போர் அறிவித்த இஸ்ரேல் … Read more

பிரான்ஸில் 20 ஆண்டாக வேலை தராமலேயே சம்பளம் தரும் நிறுவனம் மீது பெண் ஊழியர் வழக்கு

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லாரன்ஸ் வான் என்ற பெண் கடந்த1993-ம் ஆண்டு டெலிகாம் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.பகுதி பக்கவாதம் மற்றும் வலிப்புநோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு ஏற்ற பணி தொடக்கத்தில் வழங்கப்பட்டது. கடந்த 2002-ம் ஆண்டு, வேறுபகுதிக்கு பணியிடம் மாற்றம் பெற்று சென்றார். அங்கு அவருக்குஏற்ப வேலை வழங்கவில்லை. இதனிடையே 2013-ல் இந்நிறுவனம் ஆரஞ்ச் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. லாரன்ஸ்வானுக்கு எந்த பணியையும் வழங்கவில்லை. இது தொடர்பாக வாசன்ஹோவ் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். … Read more

பாகிஸ்தான் தலைமை தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்ய வேண்டும்- இம்ரான் கான் கட்சி வலியுறுத்தல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சியின் (பி.டி.ஐ.) சின்னமான பேட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்திருந்தது. இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சியின் வேட்பாளர்கள் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்டனர். சின்னம் இல்லாத நிலையிலும், சுயேட்சையாக போட்டியிட்ட பி.டி.ஐ. கட்சி வேட்பாளர்கள் 93 இடங்களில் வெற்றி பெற்றனர். ஆனால், அவர்களை விட குறைந்த இடங்களில் வென்ற பாகிஸ்தான் … Read more

சீனாவில் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த ராக்கெட் பாகம் : பதறி ஓடிய மக்கள்

பெய்ஜிங், சீனாவும், பிரான்சும் இணைந்து லாங் மார்ச் 2சி என்ற ராக்கெட்டை நேற்று விண்ணில் ஏவியது. நைட்ரஜன் டெட்ராக்சைடு மற்றும் அன்சிமெட்ரிகல் டைமெத்தில் ஹைட்ரஜின் கலவை இந்த ராக்கெட்டில் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டுள்ளது. சீனாவின் சிச்சாங் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.விண்ணில் ஏவப்பட்ட சிறிது நேரத்தில் இந்த ராக்கெட்டில் கோளாறு ஏற்பட்டது. ராக்கெட்டில் இருந்த பூஸ்டர் எனப்படும் கருவி கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து வெடித்தது. முன்னதாக பூஸ்டர் கருவி பூமியை நோக்கி … Read more

பூமி மீது இந்த நாளில் குறுங்கோள் மோதும்… ஆய்வில் அதிர்ச்சி தகவல்

வாஷிங்டன், அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், பூமி மீது மோத கூடிய குறுங்கோள் பற்றிய ஆய்வை கடந்த ஏப்ரலில் மேற்கொண்டது. இந்த ஆய்வு முடிவை கடந்த 20-ந்தேதி வெளியிட்டது. அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் லாரெல் நகரில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் இயற்பியல் ஆய்வகத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவில், சக்தி வாய்ந்த குறுங்கோள் ஒன்று பூமியை 72 சதவீதம் தாக்க கூடிய சாத்தியக்கூறு உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் பல்வேறு அரசு … Read more

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆந்திராவைச் சேர்ந்தவர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவின் அர்கான்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் கடந்த 21-ந்தேதி மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில் ஒரு இந்தியர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். இதில் உயிரிழந்த இந்தியரின் பெயர் தசாரி கோபிகிருஷ்ணா(32) என்பதும், அவர் ஆந்திர பிரதேச மாநிலம் பபாட்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. கோபிகிருஷ்ணாவுக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்ற கோபிகிருஷ்ணா, அர்கான்சாஸ் மாகாணத்தில் உள்ள … Read more

தஜிகிஸ்தானில் ஹிஜாப் அணிய தடை: மீறினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை

துசான்பே, மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. 1991ஆம் ஆண்டு சோவியத் யூனியன் உடைந்தபோது தஜிகிஸ்தான் நாடு உருவானது. இந்த நாட்டில் 1 கோடிப் பேர் வசிக்கும் மக்களில், 96 சதவீதம் பேர் இஸ்லாமியர்களாக உள்ளனர். இந்த நிலையில், தஜிகிஸ்தான் அரசு கல்வித் துறை, கடந்த 2007ஆம் ஆண்டு இஸ்லாமிய மற்றும் மேற்கத்திய உடைகள் ஆகியவற்றை மாணவர்கள் அணிவதற்கு தடை விதித்தது. அப்போதுமுதலே ஹிஜாப் மீதும் நடவடிக்கை … Read more

ஊழியர்களை துன்புறுத்திய வழக்கு; இந்துஜா குடும்ப உறுப்பினர்களுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை

ஜெனீவா, இங்கிலாந்தில் உள்ள பணக்கார குடும்பம் என்ற பெருமையை பெற்றது இந்துஜா குடும்பம். இவர்களுடைய குடியிருப்பு ஒன்று சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமைந்துள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த சிலர் ஊழியர்களாக பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில், ஊழியர்களை அவர்கள் கொடுமைப்படுத்தி உள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்தது. இதுதவிர, மனித கடத்தலிலும் ஈடுபட்டனர் என குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதுபற்றிய வழக்கு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள கோர்ட்டு ஒன்றில் விசாரணைக்கு வந்தது. ஊழியர்களுக்கு சொற்ப அளவிலான ஊதியம் அளித்ததுடன், … Read more