சோமாலியா அருகே 15 இந்தியர்களுடன் சரக்கு கப்பல் கடத்தல்

புதுடெல்லி: சோமாலியா அருகே 15 இந்தியர்களுடன் சரக்கு கப்பல் ஒன்று கடத்தப்பட்டுள்ளது. மத்திய ஆப்ரிக்காவைச் சேர்ந்த சோமாலியாவின் கடற் பகுதியில் MV LILA NORFOLK என்ற சரக்கு கப்பல் நேற்று மாலை கடத்தப்பட்டுள்ளது. இந்த கப்பலில் 15 இந்தியர்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய ஆப்ரிக்காவைச் சேர்ந்த சோமாலியாவின் கடற் பகுதியில் MV LILA NORFOLK என்ற சரக்கு கப்பல் நேற்று மாலை கடத்தப்பட்டுள்ளது. இந்த கப்பலில் 15 இந்தியர்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. … Read more

நேபாளத்துக்கு இந்தியா 75 மில்லியன் டாலர் நிதி உதவி: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அறிவிப்பு

காத்மாண்டு: கடந்த ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க நேபாளத்துக்கு இந்தியா அந்நாட்டு மதிப்புப்படி ஆயிரம் கோடி ரூபாய் (75 மில்லியன் டாலர்) வழங்கும் என்று வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார். இரண்டு நாள் பயணமாக நேற்று நேபாள தலைநகர் காத்மாண்டு சென்ற இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அங்கு இந்திய நிதி உதவியுடன் கட்டப்பட்டுள்ள திரிபுவன் பல்கலைக்கழக மைய நூலகத்தை இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “திரிபுவன் பல்கலைக்கழக … Read more

கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம்: தென் கொரியா மீது திடீர் தாக்குதல் நடத்திய வட கொரியா

பியாங்யாங்: தென் கொரியாவுக்கு சொந்தமான யோன்பியோங் தீவு பகுதியில் வட கொரியா திடீர் பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தீவு தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே நீண்ட ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வரும் நிலையில், வட கொரியாவின் ராணுவ நடவடிக்கையால் கொரிய தீபகற்பம் பகுதியில் போர் பதற்றம் உருவாகியுள்ளது. 200-க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகளை வீசி வட கொரியா தாக்குதல் நடத்தியுள்ளதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. எதிர்பாராத இந்த தாக்குதலால் யோன்பியோங் தீவில் உள்ள … Read more

அமெரிக்கா | அயோவா மாநிலப் பள்ளி துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி; 5 பேர் காயம்

பெர்ரி: அமெரிக்காவின் மத்திய மேற்கு மாநிலமான அயோவாவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சக மாணவர் ஒரு கொல்லப்பட்டதாகவும் 5 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடத்ததைத் தொடர்ந்து அங்கு போலீஸார் அவசர உதவி வாகனங்களுடன் பெர்ரி உயர்நிலைப் பள்ளிக்கு விரைந்து சென்றனர். இதுகுறித்து அயோவா பிரிவு குற்றப்புலனாய்வு உதவி இயக்குநர் மிட்ச் மோர்ட் வெடிட் கூறுகையில், ” 17 வயது … Read more

76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 10,000 கைதிகளுக்கு பொது மன்னிப்பு: மியான்மர் ராணுவ அரசு நடவடிக்கை

பாங்காக்: மியான்மரில் சுதந்திர தினத்தை யொட்டி 10,000 கைதிகளை விடுவிக்க அந்நாட்டு ராணுவ அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மியான்மர் அரசு தொலைக்காட்சியான எம்ஆர்டிவி தெரிவித்துள்ளதாவது: பிரிட்டனிடமிருந்து மியான்மர் சுதந்திரம் பெற்ற 76-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 9,652 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக மியான்மர் ராணுவக் குழுவின் தலைவரும், மூத்த தளபதியுமான மின் ஆங் ஹலைங் அறிவித்துள்ளார். அதன்படி, மியான்மர் சிறையில்அடைபட்டுள்ள 114 வெளிநாட்டவர்களுக்கும் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில்நாடு கடத்தப்படுவார்கள். இவ்வாறு … Read more

US school shooting: One dead | அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

பெர்ரி: மத்திய மேற்கு அமெரிக்காவின் லோவா மாகாணத்தில் உள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார். 5 மாணவர்கள் காயமுற்றனர். இந்த சம்பவத்தால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு குறித்த காரணம் ஏதும் வெளியாகவில்லை. மர்மநபர்களை பிடிக்க போலீஸ் சிறப்பு படை விசாரணை நடத்தி வருகிறது. அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு கலாசாரம் சமீபத்தில் அதிகரித்து வருவதாக ஒரு புள்ளிவிவர அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் 656 துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. பெர்ரி: மத்திய மேற்கு அமெரிக்காவின் லோவா மாகாணத்தில் … Read more

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் உலக சக்தியாக உருவெடுத்த இந்தியா: சீன நாளிதழ் குளோபல் டைம்ஸ் புகழாரம்

புதுடெல்லி: பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா உலக சக்தியாக உருவெடுத்துள்ளது என்று சீன அரசு நாளிதழான குளோபல் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. சீனாவில் உள்ள பியூடான் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வு மைய இயக்குநர் சாங் ஜியோடாங், சீன அரசு நாளிதழான குளோபல் டைம்ஸில் இந்தியாவின் அரசியல், பொருளாதார மாற்றம் குறித்து கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா உலக அரங்கில் அடைந்த முக்கியத்துவம் குறித்தும்,அரசியல் ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் இந்தியா தனக்கான சொந்த அடையாளத்தை உருவாக்கி … Read more

இரண்டு நாள் பயணமாக நேபாளம் சென்றார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

காத்மாண்டு: இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நேபாளம் சென்றுள்ளார். தனது நேபாளம் பயணம் குறித்து எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ஜெய்சங்கர், “2024ம் ஆண்டின் முதல் வெளிநாட்டுப் பயணமாக நேபாளம் வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அடுத்த இரண்டு நாட்கள் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்வுகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். தலைநகர் காத்மாண்டு சென்ற ஜெய்சங்கரை, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் என்.பி.சாத் விமான நிலையம் வந்து வரவேற்றார். இந்த பயணத்தின்போது இந்தியா … Read more

10,000 prisoners freed in Myanmar | மியான்மரில் 10,000 கைதிகள் விடுதலை

பாங்காக் :மியான்மரில் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 10,000 கைதிகளை பொது மன்னிப்பு வழங்கி அந்நாட்டு ராணுவ அரசு விடுவித்தது. நம் அண்டை நாடான மியான்மரில் ராணுவ ஆட்சி நடக்கிறது. அந்நாட்டின் பல்வேறு இடங்களில் ராணுவத்திற்கும், ராணுவ ஆட்சியை எதிர்க்கும் குழுக்களுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. குறிப்பாக, இந்தியா — மியான்மர் சர்வதேச எல்லையோர பகுதிகளில், ராணுவத்தினருக்கும், ஆயுதமேந்திய கும்பலுக்கும் இடையே கடும் மோதல் நீடித்து வருகிறது. இதனால், அங்கிருந்து தப்பி நம் நாட்டின் வடகிழக்கு … Read more

டெட்ரிஸ் வீடியோ கேமில் வெற்றி பெற்று 13 வயது அமெரிக்க சிறுவன் சாதனை!

வாஷிங்டன்: டெட்ரிஸ் வீடியோ கேமில் வெற்றி பெற்ற முதல் நபர் என்ற சாதனையை படைத்துள்ளார் 13 வயது அமெரிக்க சிறுவனான வில்லிஸ் கிப்ஸன். நிண்டெண்டோ என்டர்டெயின்மென்ட் சிஸ்டம் வெளியிட்ட டெட்ரிஸ் கேமில் அவர் வெற்றி பெற்றுள்ளார். இதற்கு முன்னர் இதனை ஏஐ மட்டுமே வீழ்த்தி உள்ளது. இதுகுறித்த வீடியோவை சமூக வலைதளத்தில் அவர் அப்லோட் செய்துள்ளார். இதற்காக சுமார் 157 லெவல்களை வெற்றிகரமாக அவர் கடந்துள்ளார். இதோடு ஹை ஸ்கோர், அதிக லெவல்கள் விளையாடியவர், அதிக லைன்களை … Read more