கரூர் நெரிசல்: சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழக அதிகாரிகள் ஆஜர்

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு கரூர் தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழக அதிகாரிகள் ஆஜராகினர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிஐ இதுதொடர்பாக 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி அக். 30-ம் தேதி முதல் கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. அக். … Read more

சித்தராமையா முதல்வராக தொடர்ந்தால் என்ன தவறு? – தலைமை மாற்ற சர்ச்சைக்கு டி.கே. சிவகுமார் பதில்

பெங்களூரு: “நானும் முதல்வர் சித்தராமையாவும் இணைந்து பணியாற்றி வருகிறோம். சித்தராமையா முதல்வராக தொடர்ந்தால் என்ன தவறு” என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கேள்வி எழுப்பினார். 2028 ஆம் ஆண்டில் சித்தராமையா தனது ஐந்தாண்டு பதவிக் காலத்தை முடித்தவுடன் டி.கே.சிவகுமார் மீண்டும் முதல்வராவார் என்று கர்நாடக அமைச்சர் ஜமீர் அகமது கான் கூறியது சலசலப்பை உருவாக்கியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த டி.கே.சிவகுமார், “தற்போது உள்ள நிலையில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமை ஒற்றுமையாக … Read more

அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டதாக ஆவேசம்: நீதிபதி மீது காலணி வீச கருக்கா வினோத் முயற்சி

சென்னை: ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தனக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக கூறி ரவுடி கருக்கா வினோத் சென்னை 6-வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி மீது காலணியை வீச முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிண்டி ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ரவுடி கருக்கா வினோத்துக்கு பத்தாண்டுகள் சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்த நிலையில் தி.நகரில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் அடிதடியில் … Read more

மேகேதாட்டு அணை திட்ட வரைவு அறிக்கைக்கு எதிரான தமிழக அரசின் மனு: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு

புதுடெல்லி: காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் திட்ட வரைவு அறிக்கைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனு, முன்கூட்டிய நடவடிக்கை என்று கூறி விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஒப்புதல் வழங்க உத்தரவிடக் கோரி கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில், கர்நாடகாவின் இந்த கோரிக்கையை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் … Read more

சாலையில் தரையிறங்கிய சிறிய ரக போர் விமானம்: புதுக்கோட்டையில் பரபரப்பு

புதுக்கோட்டை: திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் நார்த்தாமலை அருகே வானத்தில் பறந்து கொண்டிருந்த சிறிய ரக போர் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று சாலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. திருச்சியில் இருந்து புதுக்கோட்டை வழியாக காரைக்குடி, சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய முக்கியமான தேசிய நெடுஞ்சாலை ஆக உள்ளது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே இன்று சாலையில் பிற்பகல் அவசரமாக சிறிய ரக போர் விமானம் தரை இறக்கப்பட்டது. சாலையில் தரையிறக்கப்பட்ட நேரத்தில் … Read more

“வாக்கு எண்ணிக்கையில் விதிமீறல் நடந்தால்…” – தேஜஸ்வி யாதவ் எச்சரிக்கை!

பாட்னா: வாக்கு எண்ணிக்கையின்போது அரசியலமைப்புக்கு விரோதமான நடவடிக்கைகள் நிகழ்ந்தால் அதை உறுதியுடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்ள தாங்கள் தயாராக இருப்பதாக தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பிஹார் சட்டப்பேரவையின் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் ஆர்ஜேடி கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ், வாக்கு எண்ணிக்கையின்போது எத்தகைய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் … Read more

‘அமெரிக்காவுக்கு வந்து பயிற்சி அளித்துவிட்டு சொந்த நாட்டுக்கு சென்றுவிடுங்கள்’ – ட்ரம்ப்பின் எச்-1பி விசா பிளான்!

வாஷிங்டன்: அமெரிக்க வேலைகளுக்கு வெளிநாட்டு தொழிலாளர்களை எப்போதும் சார்ந்திருப்பதை விட, அதிகளவில் திறன் தேவைப்படும் வேலைகளுக்கு அமெரிக்கர்களுக்கு பயிற்சி அளிக்க, தற்காலிகமாக திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களை அமெரிக்காவுக்குக் கொண்டுவருவதே அதிபர் ட்ரம்ப்பின் எச்1பி விசாவுக்கான புதிய அணுகுமுறை என்று அந்நாட்டின் கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறினார். H-1B விசாவுக்கான கட்டுப்பாடுகளை அதிகரித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், திடீர் திருப்பமாக உலகம் முழுவதிலும் இருந்து திறமையாளர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து … Read more

கீழ் கோத்தகிரி தனியார் டீ எஸ்டேட்டில் அழுகிய நிலையில் புலியின் சடலம் மீட்பு: வனத்துறை விசாரணை

கோத்தகிரி: கீழ் கோத்தகிரி தனியார் டீ எஸ்டேட் கிணற்றில் அழுகிய நிலையில் புலியின் சடலத்தை கைப்பற்றி வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மாவட்டத்தில் வனக்குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. வனவிலங்குகளின் இயற்கைக்கு மாறான இறப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள புலி, சிறுத்தை, யானை உட்பட்ட வனவிலங்குகளின் இறப்புகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. நீலகிரி வனக்கோட்டத்துக்கு உட்பட்ட கீழ் கோத்தகிரி வனச்சரக பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் … Read more

டெல்லி குண்டுவெடிப்பு எதிரொலி: காஷ்மீரில் 13 இடங்களில் உளவுப்பிரிவு போலீஸார் சோதனை

ஸ்ரீநகர்: டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பாக காஷ்மீரில் 13 இடங்களில் பயங்கரவாத தடுப்பு உளவுப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தியுள்ளனர். கடந்த 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக முதலில் டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)-க்கு மாற்றி மத்திய … Read more

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் கணக்காளர் பணியிட மாற்றம்

மாமல்லபுரம்: திருக்கழுக்குன்றம் நகரில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் கோயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரவு, செலவு கணக்குகள் குறித்து தணிக்கை நடைபெற்ற நிலையில், கோயிலின் கணக்கர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு, அப்பகுதியில் ஏராளமான நிலங்கள், வணிக கட்டிடங்கள் உள்பட பல்வேறு சொத்துகள் உள்ளன. இதன்மூலம், கோயிலுக்கு பல்வேறு வரியினங்கள் மூலம் வருவாய் கிடைத்து வருகிறது. இந்நிலையில், கோயிலில் கடந்த சில … Read more