லைகா – விஷால் வழக்கு: நீதிபதி விலகல்; மாற்று அமர்வில் பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவு

சென்னை: லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடி ரூபாய் கடனை 30 சதவீத வட்டியுடன் திருப்பிச் செலுத்த பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, நடிகர் விஷால் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கின் விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி ஜெயச்சந்திரன், மாற்று அமர்வில் பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா … Read more

டெல்லி கார் குண்டுவெடிப்பு: புல்வாமாவில் மருத்துவர் உமர் நபியின் வீடு இடிப்பு

புதுடெல்லி: டெல்லி செங்​கோட்டை அரு​கில் கார் குண்டு வெடிப்பை நிகழ்த்​திய மருத்​து​வர் உமர் நபி​யின் வீடு இடித்து தரை மட்​ட​மாக்​கப்​பட்​டது. டெல்லி செங்​கோட்டை அரு​கில் கடந்த திங்​கட்​கிழமை மாலை ஒரு கார் பயங்கர சத்​தத்​துடன் வெடித்து சிதறியது. இதில் அந்த காரை ஓட்டி வந்​தவர் உட்பட 13 பேர் உயி​ரிழந்​தனர். 20-க்​கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்​தனர். விசா​ரணை​யில், அந்த குண்டு வெடிப்பை நிகழ்த்​தி​ய​வர் ஜம்மு காஷ்மீரின் புல்​வாமா பகு​தியை சேர்ந்த மருத்​து​வர் உமர் முகமது நபி என்​பது … Read more

‘எஸ்ஐஆரை ஆதரித்து அதிமுக உச்ச நீதிமன்றம் சென்றது வெட்கக் கேடு’ – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “தங்களது கட்சியை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டு, தற்போது எஸ்ஐஆரை ஆதரித்து வருகிறது அதிமுக. இது வெட்கக் கேடு” என கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி பாக முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி” என்ற தலைப்பில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி பாக முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, “இன்றைக்கு நாம் எங்கு … Read more

‘பரகாமணி' திருட்டு வழக்கில் குற்றவாளியை பிடித்த தேவஸ்தான முன்னாள் பாதுகாப்பு அதிகாரி மர்ம சாவு: போலீஸார் விசாரணை

திருப்பதி: ​திருப்​பதி ஏழு​மலை​யானுக்கு பக்​தர்​கள் உண்​டியல் மூலம் செலுத்​தும் பணத்தை எண்​ணும் இடத்தை ‘பர​காமணி’ என்​றழைக்​கின்​றனர். தீவிர சோதனை, கண்​காணிப்பு கேம​ராக்​கள் போன்ற கெடு​பிடிகள் இருந்​தா​லும், தேவஸ்​தான சீனியர் அஸிஸ்​டெண்​டாக பணிபுரிந்து வந்த ரவிக்​ கு​மார் கடந்த 2023-ம் ஆண்டு ஏப்​ரல் மாதம் வெளி​நாட்டு கரன்​ஸிகளை எடுத்து ஒளித்து வைத்து கொண்​டிருந்​த​போது, அங்கு பாது​காப்பு பணியி​லிருந்த திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான உதவி பாது​காப்பு அதி​காரி (ஏவிஎஸ்ஓ) சதீஷ் குமார் கையும் களவு​மாக பிடித்​தார். அவரிடம் நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் … Read more

‘பிஹார் சதி தமிழகத்தில் எடுபடாது; மக்களுக்கு விழிப்புணர்வு அதிகம்’ – அமைச்சர் கோவி.செழியன்

தஞ்சாவூர்: பிஹாரின் சதி தமிழகத்தில் எடுபடாது. தமிழக வாக்காளர்கள் விழிப்புணர்வு மிக்கவர்கள் என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகள் பயிற்சி கூட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்.பி. ராமலிங்கம் வரவேற்றார். முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், நகர்புற மற்றும் நீர்வளங்கள் துறை அமைச்சர் கே.என். நேரு தலைமை வகித்து கூறியதாவது: வாக்காளர் தீவிர திருத்தப் பட்டியல் பணி நடைபெறுவதால், இந்த நேரம் மிகவும் கடுமையான நேரம். மக்களுக்கு … Read more

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியால் தமிழக, கேரள மாநில பாஜகவுக்கு புது சக்தி: பிரதமர் மோடி கருத்து

புதுடெல்லி: டெல்​லி​யில் உள்ள பாஜக தலைமை அலு​வல​கத்​தில் நேற்று இரவு பிஹார் தேர்​தல் வெற்றி விழா கொண்​டாடப்​பட்​டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்​கேற்​றார். அவர் பேசி​ய​தாவது: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தேசிய ஜனநாயக கூட்​டணி மாபெரும் வெற்​றியை பெற்​றிருக்​கிறது. ஒட்​டுமொத்த தேசத்​தின் பார்​வை​யும் பிஹார் மக்​கள் மீது திரும்​பி​யிருக்​கிறது. பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பொது​மக்​கள் பெருந்​திரளாக திரண்டு வந்து வாக்​களித்​தனர். வளர்ச்​சிக்கு ஆதர​வாக பிஹார் மக்​கள் வாக்​களித்து உள்​ளனர். முந்​தைய தேர்​தல் வரலாற்று சாதனை​கள் தற்​போது … Read more

‘பகுத்தறிவால் தான் தமிழகம் இந்தியாவிலேயே சிறந்து விளங்குகிறது’ – உதயநிதி பெருமிதம்!

காரைக்குடி: பகுத்தறிவால் தான் தமிழகம் இந்தியாவிலேயே சிறந்து விளங்குகிறது என தமிழக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா மாதிரி பள்ளி வளாகத்தில் பிளஸ் 1 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்குதல், சிறந்த பள்ளிகளுக்கு விருதுகள் வழங்குதல், குழந்தைகள் தினம் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி வரவேற்றார். இதனையடுத்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: … Read more

பிஹாரில் அமோக வெற்றி: 243-ல் 202 தொகுதிகளை கைப்பற்றியது தேசிய ஜனநாயக கூட்டணி – முழு விவரம்

​பாட்னா: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் மொத்​தம் உள்ள 243 தொகு​தி​களில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி 202 இடங்​களைக் கைப்​பற்றி அமோக வெற்றி பெற்​றுள்​ளது. மெகா கூட்​ட​ணிக்கு 35 இடங்​கள் மட்​டுமே கிடைத்​தன. பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் கடந்த 6, 11 ஆகிய தேதி​களில் 2 கட்​ட​மாக நடை​பெற்​றது. வாக்கு எண்​ணிக்கை நேற்று நடை​பெற்​று, முடிவு​கள் அறிவிக்​கப்​பட்​டன. பிஹாரில் 243 தொகு​தி​கள் உள்​ளன. தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் பாஜக 101, ஐக்​கிய ஜனதா தளம் 101, சிராக் … Read more

“போடி தொகுதியை கைப்பற்ற நினைக்கும் முதல்வரின் கனவு பலிக்காது” – ஓபிஎஸ்

மதுரை: போடி சட்டமன்ற தொகுதியை திமுக கைப்பற்ற வேண்டும் என்ற முதல்வரின் கனவு பலிக்காது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று மதியம் மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “பிஹார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளே வெற்றி பெறும் என ஏற்கெனவே பல்வேறு கருத்து கணிப்புகளும் கணித்திருந்தன. தற்போது அது நடந்திருக்கிறது. மேகேதாட்டு … Read more

“அடுத்து மேற்கு வங்கத்திலும் காட்டாட்சியை அகற்றுவோம்” – பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் நடக்கும் காட்டாட்சியை பாஜக வேரோடு அகற்றும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் 200+ தொகுதிகளை வசப்படுத்திய ஐக்கிய ஜனதா தளம் – பாஜக இணைந்த என்டிஏ மகத்தான வெற்றியுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. பெரும்பான்மைக்கு 122 இடங்களின் வெற்றி தேவை எனும் நிலையில், என்டிஏ பதிவு செய்திருப்பது வரலாற்று வெற்றியாக கருதப்படுகிறது. அதேவேளையில், 35 இடங்களை வெல்லவே திக்குமுக்காடிய ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸின் மகா கூட்டணி … Read more