கரூர் நெரிசல் வழக்கு: திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றம்

திருச்சி: கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த வழக்கு, கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஒரு காரை கரூர் நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் சிபிஐ அதிகாரிகள் நவ.12-ம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரச்சார கூட்டம் கடந்த செப்.27-ம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்றது. அப்போது … Read more

ரகோபூர் தொகுதியில் தேஜஸ்வி யாதவ் வெற்றி

பாட்னா: ரகோபூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட பிஹார் முதல்வர் வேட்பாளரும் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ் வெற்றி பெற்றுள்ளார். லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தின் கோட்டை என கருதப்படும் தொகுதி ரகோபூர். லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி ஆகியோர் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தேஜஸ்வி யாதவும் 2015 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மிகவும் பாதுகாப்பான தொகுதி என்பதால், அதே … Read more

தமிழகத்தில் நவ.16 முதல் 3 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் நவ.16 முதல் 3 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பாவது: தெற்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (நவ.15) கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 16 முதல் 19-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும் இடி, … Read more

பிஹாரின் மிக இளம் எம்எல்ஏ ஆகும் நாடடுப்புற பாடகி: யார் இந்த மைதிலி தாக்கூர்?

பாட்னா: தேர்தலை ஒட்டி பாஜகவில் இணைந்து அலிநகர் தொகுதியில் போட்டியிட்ட இளம் நாட்டுப்புற பாடகி மைதலி தாக்கூர், பிஹாரின் மிக இளம் வயது சட்டமன்ற உறுப்பினர் என்ற பெயரைப் பெற இருக்கிறார். பிரபல நாட்டுப்புற பாடகியான மைதிலி தாக்கூர், கடந்த மாதம் 14-ம் தேதி பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, 15-ம் தேதி தர்பங்கா மாவட்டத்தின் அலிநகர் தொகுதி பாஜக வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டார். பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து அவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து தீவிர பிரச்சாரத்தை … Read more

‘எஸ்ஐஆரை ஆதரித்து அதிமுக உச்ச நீதிமன்றம் சென்றது வெட்கக் கேடு’ – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “தங்களது கட்சியை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டு, தற்போது எஸ்ஐஆரை ஆதரித்து வருகிறது அதிமுக. இது வெட்கக் கேடு” என கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி பாக முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி” என்ற தலைப்பில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி பாக முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, “இன்றைக்கு நாம் எங்கு … Read more

காங்கிரஸ் பூத் அளவில் அமைப்பை வலுப்படுத்த வேண்டும்: திக்விஜய் சிங்

புதுடெல்லி: அமைப்பை வலுப்படுத்துவதில் காங்கிரஸ் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், பூத் அளவில் மக்கள் தொடர்பை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பிஹாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. இந்த தேர்தலில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணியில் இணைந்து 61 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி இக்கட்சி 3 தொகுதிகளில் … Read more

யார் முதல்வராக வரக்கூடாது என்பதில் பிஹார் மக்கள் தெளிவான தீர்ப்பை அளித்துள்ளனர்: தமிழக பாஜக

சென்னை: யார் முதல்வராக வர வேண்டும் என்பதைவிட யார் வரக்கூடாது என்பதை தீர்மானித்து பிஹார் மக்கள் வெற்றியை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளனர் என்று தமிழக பாஜக தெரிவித்துள்ளது. பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதன்மூலம், அக்கூட்டணியின் ஆட்சி பிஹாரில் தொடரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், பிஹார் தேர்தல் முடிவுகள் தொடர்பாக தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள … Read more

‘தலைமை தேர்தல் ஆணையருக்கும், பிஹார் மக்களுக்குமான நேரடிப் போட்டி’ – பவன் கேரா விமர்சனம்

புதுடெல்லி: “பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கும், பிஹார் மக்களுக்கும் இடையேயான நேரடிப் போட்டி” என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பெரும்பான்மைக்கு 122 இடங்கள் வெற்றி தேவை எனும் நிலையில், பாஜக – ஐக்கிய ஜனதா தளம் அடங்கிய என்டிஏ கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. அதேசமயம், ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸ் அடங்கிய மகா … Read more

அமெரிக்​கர்​களுக்கு பயிற்சி அளித்துவிட்டு நாடு திரும்பலாம்: எச்1பி விசா குறித்து அமெரிக்க அமைச்​சர் விளக்​கம்

வாஷிங்​டன்: எச்1பி விசா​வில் அமெரிக்கா​வுக்கு வரும் வெளி​நாட்டு நிபுணர்​கள் மூலம் அமெரிக்கர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்​கப்​படும். இதன்​பின் எச்1பி விசா​தா​ரர்​கள் அவர​வர் நாடு​களுக்கு திருப்பி அனுப்​பப்​படு​வார்​கள் என்று அமெரிக்க நிதி​யமைச்​சர் ஸ்காட் பெசன்ட் தெரி​வித்​துள்​ளார். அமெரிக்​கா​வில் தற்​காலிக​மாக பணி​யாற்​று​வோருக்கு எச்​1பி விசா வழங்​கப்​படு​கிறது. இதற்​கான கட்​ட​ணத்தை ரூ.1.32 லட்​சத்​தில் இருந்து ரூ.88 லட்​ச​மாக அமெரிக்க அரசு அண்​மை​யில் உயர்த்​தி​யது. இதன் மூலம் அமெரிக்க நிறு​வனங்​களில் வெளி​நாட்டு நிபுணர்​கள் பணி​யில் சேரு​வதை தடுக்க மறை​முக​மாக முயற்சி மேற்​கொள்​ளப்​பட்டு உள்​ளது. … Read more

விஜய் என்டிஏ கூட்டணிக்கு வர வாய்ப்பு: பாஜக அனைத்து பிரிவு மாநில இணை அமைப்பாளர் தகவல்

கும்பகோணம்: “என்டிஏ கூட்டணிக்கு தவெக தலைவர் விஜய் வருவாரா மாட்டாரா என்று இப்போது கூற முடியாது. போகப்போக விஜய், என்டிஏ கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்புள்ளது” என பாஜக அனைத்து பிரிவு மாநில இணை அமைப்பாளர் தெரிவித்துள்ளார். கும்பகோணம்-சென்னை நான்கு வழிச்சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் பாஜக அனைத்து பிரிவு மாநில, மாவட்ட நிர்வாகிகள் சங்கமம் 2025 மாநாடு நடைபெறுவதையொட்டி, பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநிலப் பிரிவு பொறுப்பாளர் கே.டி.ராகவன் தலைமை வகித்தார். இணை … Read more