ஓய்வுபெற்ற ஐஏஎஸ் சகாயம் பாதுகாப்புக் கோரிய வழக்கில் அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: விலக்கப்பட்ட பாதுகாப்பை மீண்டும் வழங்கக் கோரி, விருப்ப ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தாக்கல் செய்த மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தாக்கல் செய்த மனுவில், ”மதுரை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்தபோது, கிரானைட் முறைகேட்டை விசாரிக்க என்னை ஆணையராக உயர் நீதிமன்றம் நியமித்தது. உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில், சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததில் … Read more

வாக்காளர் பட்டியல் திருத்தத்தை ரத்து செய்யக் கோரி மார்க்சிஸ்ட், காங்., மதிமுக மனு தாக்கல்: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை 

புதுடெல்லி: வாக்​காளர் பட்​டியல் திருத்தத்தை ரத்து செய்​யக் கோரிமார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட், காங்கிரஸ், மதி​முக, மனிதநேயமக்​கள் கட்சி உள்​ளிட்டவை சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்ள ரிட் மனுக்​கள் இன்று விசா​ரணைக்கு வரு​கின்​றன. தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்தத்தைஅறி​வித்த தேர்​தல் ஆணை​யத்தின் அக். 27-ம் தேதி​யிட்ட அறிக்கை அரசமைப்​புச் சட்​டத்​தின் அடிப்​படை உரிமைகளை​யும், மக்​கள் பிர​தி​நி​தித்துவச்சட்​டத்​தை​யும் மீறு​வதாக உள்​ள​தால், திருத்த நடவடிக்​கைகளுக்கு தடை கோரி திமுக சார்​பில் ஏற்கெனவே மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், மார்க்​சிஸ்ட் … Read more

நவ.13-ம் தேதி தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

சென்னை: தே​மு​திக மாவட்​டச் செய​லா​ளர்​கள் கூட்​டம் நவ.13-ம்தேதி நடை​பெறவுள்ளது. இதுகுறித்து அக்கட்சி வெளி​யிட்ட அறிக்​கை: மாவட்​டச் செய​லா​ளர்​கள் ஆலோ​சனைக் கூட்​டம் பொதுச் செய​லா​ளர் பிரேமலதா தலை​மை​யில் நவ.13-ம் தேதி சென்னையில் கட்சித் தலைமை அலு​வல​கத்​தில் நடை​பெற உள்​ளது. இதில், பல்​வேறு முக்​கிய ஆலோ​சனை​கள் நடத்​தப்படஉள்​ளன. அனைத்து மாவட்​டச்செய​லா​ளர்​களும் தவறாமல் பங்கேற்க வேண்​டும். இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.கட்​சி​யின் கூட்​டணி நிலைப்​பாடு குறித்து இதில் முக்​கிய முடிவு எடுக்​கப்​படலாம் என்று தெரி​கிறது. Source link

குஜராத்தில் 3 ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு தீவிரவாதிகள் கைது எதிரொலி: தமிழகத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்திய போலீஸார்

சென்னை: ​நாட்​டின் பல்​வேறு பகு​திகளில் நிகழ்த்​தப்பட இருந்த ரசாயன தாக்​குதல் திட்​டம் முறியடிக்​கப்​பட்ட நிலையில், தமிழகத்தில் தீவிர​வாத தடுப்​புப் பிரிவுபோலீ​ஸார் கண்காணிப்பை முடுக்​கி​விட்டு உள்​ளனர். ஜம்மு – காஷ்மீரின் பெஹல்​காமில் கடந்த ஏப்​ரலில் தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதலில் 26 சுற்​றுலாப் பயணி​கள் உயி​ரிழந்​தனர். பின்​னர் இந்​தியா பாகிஸ்​தானுக்​குள் புகுந்து தீவிர​வா​தி​கள் முகாம்​கள் மீது தாக்​குதல் நடத்தி பதிலடி கொடுத்​தது. இதற்கு பதிலடி​யாக தீவிர​வா​தி​கள் மீண்​டும் இந்​தி​யா​வுக்​குள்புகுந்து நாச வேலைகளில் ஈடுபடவாய்ப்பு உள்​ள​தாக மத்திய புல​னாய்​வுத் துறை எச்​சரித்​தது. … Read more

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் முன்பதிவு தொடக்கம்

சென்னை: ஜனவரி​யில் பொங்​கல் பண்​டிகை​யின்​போது ரயில்​களில் சொந்த ஊர் செல்​வதற்​கான டிக்​கெட் முன்​ப​திவு நேற்று தொடங்​கியது. வரும் 2026-ல் ஜன.13-ம் தேதி போகிப் பண்​டிகை, 14-ல் தைப்​பொங்​கல், 15-ல் மாட்​டுப்​ பொங்​கல், 16-ல் உழவர் திரு​நாள் கொண்​டாடப்பட உள்ளது. இதையொட்​டி, சென்னை உட்பட பல்​வேறு நகரங்​களில் இருந்​தும் பல லட்​சம் பேர் சொந்த ஊருக்​குச் செல்​வது வழக்​கம். ஜன.12-ம் தேதி திங்​கள்​கிழமை​யும் விடுப்பு கிடைக்​கும் சூழல் உள்​ளவர்​கள், 9-ம் தேதி வெள்​ளிக்​கிழமை புறப்பட திட்​ட​மிடு​வார்​கள். விரைவு ரயில்​களில் … Read more

டாஸ்மாக் முறைகேடு புகாரில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு தடை கோரிய அமலாக்கத் துறையின் மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி 

புதுடெல்லி: ​டாஸ்​மாக் முறை​கேடு புகாரில் திரைப்பட தயாரிப்​பாளர் ஆகாஷ் பாஸ்​கரனின் நீதி​மன்ற அவம​திப்பு வழக்​குக்கு தடை கோரிய அமலாக்​கத் துறை மனுவை உச்ச நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​துள்​ளது. ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்​மாக் முறை​கேடு புகார் தொடர்​பாக, திரைப்பட தயாரிப்​பாளர் ஆகாஷ் பாஸ்​கரன், தொழில​திபர் விக்​ரம் ரவீந்​திரன் ஆகியோரின் வீடு​கள் மற்​றும் அலு​வல​கங்​களில் அமலாக்​கத் துறை​யினர் சோதனை நடத்​தி வீடு​கள் மற்​றும் அலு​வல​கத்​துக்கு சீல் வைத்​தனர். அமலாக்​கத் துறை நடவடிக்​கைக்கு எதிராக ஆகாஷ்பாஸ்​கரன் மற்​றும் விக்​ரம்ரவீந்​திரன் ஆகியோர் … Read more

“சும்மா தட்டினால் கிழே விழும் அட்டை…” – விஜய்யின் தவெக மீது உதயநிதி மறைமுக தாக்கு

சென்னை: “இப்போது அரசியலில் சில பேர் அடித்தளமே இல்லாமல் உள்ளே வர முயற்சிக்கிறார்கள். வெறும் அட்டைக்கு எந்த விதமான அஸ்திவாரமோ, கொள்கையோ கிடையாது. சும்மா தட்டினால் கீழே விழுந்துவிடும்” என்று விஜய்யின் தவெகவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மறைமுகமாக விமர்சித்தார். திமுகவின் 75-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, கட்சியின் இளைஞர் அணி சார்பில் ‘திமுக – 75 அறிவுத் திருவிழா’ என்ற பெயரிலான மாநாடு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. இதன் நிறைவு … Read more

“அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்” – டெல்லி கார் வெடிப்பு சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: டெல்லி செங்கோட்டை அருகே ஏற்பட்ட கார் வெடிப்பு சம்பவத்துக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “டெல்லி செங்கோட்டை அருகே நடந்த வெடிப்பு சம்பவத்தில் பல அப்பாவிகள் பலியானதை அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் உண்மையிலேயே மனதை உடைக்கின்றன. துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயங்களுடன் போராடுபவர்கள் வலிமை பெறவும், விரைவில் குணமடையவும் விழைகிறேன்” என்று தெரிவித்துள்ளார். டெல்லி … Read more

50 தொகுதி லட்சியம்… 40 தொகுதி நிச்சயம்! – அதிமுகவை  அதிரவிடும் பாஜக?

தமிழகத்தில் சிறப்பு தீவர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கியிருக்கும் நிலையில், சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட பணிகளையும் அரசியல் கட்சிகள் ஆரம்பித்துவிட்டன. பிரதான எதிர்க்கட்சி கூட்டணியில், அதிமுகவிடம் பாஜக 50 தொகுதிகள் கேட்டு அழுத்தம் கொடுப்பதாக வரும் தகவல்கள் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் முதன்மை போட்டி திமுக – அதிமுக கூட்டணி இடையில்தான் என்பதே கள எதார்த்தம். இதில் திமுக கூட்டணி முழு வலிமையோடு நிற்கிறது. அதற்கு ஈடு கொடுக்கும் வகையிலான கூட்டணியை அமைக்க … Read more

டெல்லி கார் வெடிப்புச் சம்பவம்: நாடு முழுவதும் உஷார் நிலை

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் சாலையில் கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது விபத்தா அல்லது சதிச் செயலா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாக நாடு முழுவதும் … Read more