‘எஸ்ஐஆரை ஆதரித்து அதிமுக உச்ச நீதிமன்றம் சென்றது வெட்கக் கேடு’ – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “தங்களது கட்சியை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டு, தற்போது எஸ்ஐஆரை ஆதரித்து வருகிறது அதிமுக. இது வெட்கக் கேடு” என கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி பாக முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி” என்ற தலைப்பில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி பாக முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, “இன்றைக்கு நாம் எங்கு … Read more

காங்கிரஸ் பூத் அளவில் அமைப்பை வலுப்படுத்த வேண்டும்: திக்விஜய் சிங்

புதுடெல்லி: அமைப்பை வலுப்படுத்துவதில் காங்கிரஸ் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், பூத் அளவில் மக்கள் தொடர்பை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பிஹாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. இந்த தேர்தலில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணியில் இணைந்து 61 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி இக்கட்சி 3 தொகுதிகளில் … Read more

யார் முதல்வராக வரக்கூடாது என்பதில் பிஹார் மக்கள் தெளிவான தீர்ப்பை அளித்துள்ளனர்: தமிழக பாஜக

சென்னை: யார் முதல்வராக வர வேண்டும் என்பதைவிட யார் வரக்கூடாது என்பதை தீர்மானித்து பிஹார் மக்கள் வெற்றியை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளனர் என்று தமிழக பாஜக தெரிவித்துள்ளது. பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதன்மூலம், அக்கூட்டணியின் ஆட்சி பிஹாரில் தொடரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், பிஹார் தேர்தல் முடிவுகள் தொடர்பாக தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள … Read more

‘தலைமை தேர்தல் ஆணையருக்கும், பிஹார் மக்களுக்குமான நேரடிப் போட்டி’ – பவன் கேரா விமர்சனம்

புதுடெல்லி: “பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கும், பிஹார் மக்களுக்கும் இடையேயான நேரடிப் போட்டி” என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பெரும்பான்மைக்கு 122 இடங்கள் வெற்றி தேவை எனும் நிலையில், பாஜக – ஐக்கிய ஜனதா தளம் அடங்கிய என்டிஏ கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. அதேசமயம், ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸ் அடங்கிய மகா … Read more

அமெரிக்​கர்​களுக்கு பயிற்சி அளித்துவிட்டு நாடு திரும்பலாம்: எச்1பி விசா குறித்து அமெரிக்க அமைச்​சர் விளக்​கம்

வாஷிங்​டன்: எச்1பி விசா​வில் அமெரிக்கா​வுக்கு வரும் வெளி​நாட்டு நிபுணர்​கள் மூலம் அமெரிக்கர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்​கப்​படும். இதன்​பின் எச்1பி விசா​தா​ரர்​கள் அவர​வர் நாடு​களுக்கு திருப்பி அனுப்​பப்​படு​வார்​கள் என்று அமெரிக்க நிதி​யமைச்​சர் ஸ்காட் பெசன்ட் தெரி​வித்​துள்​ளார். அமெரிக்​கா​வில் தற்​காலிக​மாக பணி​யாற்​று​வோருக்கு எச்​1பி விசா வழங்​கப்​படு​கிறது. இதற்​கான கட்​ட​ணத்தை ரூ.1.32 லட்​சத்​தில் இருந்து ரூ.88 லட்​ச​மாக அமெரிக்க அரசு அண்​மை​யில் உயர்த்​தி​யது. இதன் மூலம் அமெரிக்க நிறு​வனங்​களில் வெளி​நாட்டு நிபுணர்​கள் பணி​யில் சேரு​வதை தடுக்க மறை​முக​மாக முயற்சி மேற்​கொள்​ளப்​பட்டு உள்​ளது. … Read more

விஜய் என்டிஏ கூட்டணிக்கு வர வாய்ப்பு: பாஜக அனைத்து பிரிவு மாநில இணை அமைப்பாளர் தகவல்

கும்பகோணம்: “என்டிஏ கூட்டணிக்கு தவெக தலைவர் விஜய் வருவாரா மாட்டாரா என்று இப்போது கூற முடியாது. போகப்போக விஜய், என்டிஏ கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்புள்ளது” என பாஜக அனைத்து பிரிவு மாநில இணை அமைப்பாளர் தெரிவித்துள்ளார். கும்பகோணம்-சென்னை நான்கு வழிச்சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் பாஜக அனைத்து பிரிவு மாநில, மாவட்ட நிர்வாகிகள் சங்கமம் 2025 மாநாடு நடைபெறுவதையொட்டி, பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநிலப் பிரிவு பொறுப்பாளர் கே.டி.ராகவன் தலைமை வகித்தார். இணை … Read more

காங்கிரஸ் ‘பேராசை’யால் கைநழுவிய வெற்றி? – பிஹார் தேர்தலில் ‘மகா’ சறுக்கல் கதை!

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில், தொடக்கம் முதலே தேசிய ஜனநாயக கூட்டணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுடன் தேர்தலை சந்தித்த ஆர்ஜேடி – காங்கிரஸின் மகா கூட்டணிக்கு மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த சறுக்கல்களுக்கு காங்கிரஸ்தான் காரணம் என்ற பேச்சும் எழுந்துள்ளது. ‘பிஹாரில் 20 ஆண்டுகளாக நிதிஷ் குமார் கட்சி ஆட்சியில் இருந்தும் பிஹார் வளரவில்லை. மத்திய அரசு பல்வேறு நிதியுதவிகளை வாரி வழங்கியபோதும், பிஹார் இப்போதும்கூட மிகவும் பின் தங்கிய … Read more

போட்​ஸ்​வானா அதிபருடன் குடியரசுத் தலைவர் முர்மு சந்திப்பு: 8 சிவிங்​கிப்​ புலிகள் இந்தியாவிடம் ஒப்படைப்பு

புதுடெல்லி: குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு​விடம், போட்​ஸ்​வானா நாட்​டின் அதிபர் துமா கிடி​யான் போக்கோ 8 சிவிங்​கிப் புலிகளை ஒப்படைத்துள்ளார். குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு, ஆப்​பிரிக்க நாடான போட்​ஸ்​வானாவுக்கு 3 நாள் அரசு முறை சுற்​றுப்​பயணம் சென்​றுள்​ளார். இந்​நிலை​யில் நேற்று தலைநகர் கேபரோனிலிருந்து 10 கிலோ மீட்​டர் தொலை​விலுள்ள மோக்​கோலோடி தேசி​யப் பூங்கா​வுக்கு திர​வுபதி முர்​மு, அதிபர் துமா கிடியான் ஆகியோர் சென்​றனர். தேசி​யப் பூங்கா பகு​தி​யில் இரு​வரும், பாது​காப்பு வாக​னத்​தில் வலம் வந்​தனர். அப்​போது … Read more

நெல்லையில் சீமானின் ‘கடலம்மா மாநாடு’ நவ.21-ம் தேதி நடக்கிறது

சென்னை: நெல்லை மாவட்​டம் கூத்​தன்​குழி​யில், கடலம்மா மாநாடு நடத்த நாம் தமிழர் கட்சி முடிவு செய்​துள்​ளது. திரு​வை​யாறு தொகு​தி​யில் வரும் 15-ம் தேதி நடை​பெறும் நாம் தமிழர் கட்​சி​யின் தண்​ணீர் மாநாட்டை தொடர்ந்​து, ‘ஆதி நீயே, ஆழித் தாயே’ என்ற முழக்​கத்தை முன்​வைத்து திருநெல்​வேலி மாவட்​டம், கூத்​தன் குழி​யில், கட்​சி​யின் மீனவர் பாசறை சார்​பில் ‘கடலம்மா மாநாடு’ வரும் 21-ம் தேதி நடை​பெற உள்​ளது. இந்த மாநாட்​டுக்கு கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் தலைமை வகித்து உரை​யாற்ற … Read more

“மேற்கு வங்கமே பாஜகவின் அடுத்த வெற்றி இலக்கு” – பிஹார் முடிவுகளை சுட்டும் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்

புதுடெல்லி: பிஹார் தேர்தல் முடிவுகளில் பாஜக அங்கம் வகிக்கும் என்டிஏ கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், இதை மேற்கோள் காட்டி தனது கருத்தை பகிர்ந்துள்ளார் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங். “பிஹார் மாநிலத்தை பற்றி அறிந்தவர்களுக்கு நிச்சயம் இது தெரியும். பிஹார் மக்கள் அராஜகம் மற்றும் காட்டாட்சியை அறவே விரும்பவில்லை. அதனால் பிஹார் மக்கள் அவர்களை புறக்கணித்துள்ளனர். இப்போதைய இளைஞர்கள் காட்டாட்சி முறையை கண்டதில்லை. ஆனால் அவர்கள் வீட்டு பெரியவர்கள் அந்த ஆட்சியை கண்டுள்ளனர். ஊழல் தலைவர்களிடம் … Read more