எஸ்ஐஆர் பற்றி விவாதம்: ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

சென்னை: ஸ்டாலின் தலைமையில் நாளை (நவ. 9) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும். மாவட்டச் செயலாளர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் … Read more

‘பிஹார் முதல்கட்ட தேர்தலில் காட்டாட்சியை வழங்கியவர்களுக்கு 65 வோல்ட் மின் அதிர்ச்சி’ – பிரதமர் மோடி

சீதாமர்ஹி(பிஹார்): பிஹாரில் காட்டாட்சி வழங்கிய ஆர்ஜேடிக்கு முதற்கட்டத் தேர்தலில் மக்கள் 65 வோல்ட் மின் அதிர்ச்சியை அளித்துள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைக்கான முதற்கட்டத் தேர்தல் கடந்த 6-ம் தேதி நடந்து முடிந்தது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 121 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மீதமுள்ள 122 தொகுதிகளுக்கு வரும் 11-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பகவான் ராமரின் மனைவி சீதாதேவியின் பிறந்த ஊராகக் கருதப்படும் சீதாமர்ஹி-யில் நடைபெற்ற தேர்தல் … Read more

மாலியில் இந்தியர்கள் 5 பேர் கடத்தல்: ஆட்டிப்படைக்கும் ஆயுதக் குழுக்களின் கைவரிசை

பமாகோ: ஆப்பிரிக்க நாடான மாலியில் 5 இந்தியர்கள் கடத்தப்பட்டனர். அவர்கள் வேலை செய்துவந்த தனியார் மின்சார நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் இதனை உறுதி செய்துள்ளார். மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இது ஒருபுறம் இருக்க அங்கு அல்குவைதா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களின் அட்டாகசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மாலியின் கோர்பி எனும் பகுதியில் இந்தியர்கள் சிலர் கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. அது … Read more

பொய்யான தகவல்களைக் கூறி முதல்வர் ஸ்டாலினை விமர்சிப்பதா? – அன்புமணி, ஆதவ் அர்ஜுனாவுக்கு காசிமுத்து மாணிக்கம் கண்டனம்

சென்னை: திமுக வர்த்தக அணி செய​லா​ளர் காசி​முத்து மாணிக்​கம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: மேம்​பால வழக்​கில் பெங்​களூரு​வில் இருந்து நேராக நீதிபதி அசோக்​கு​மார் வீட்​டுக்கே காலை 11 மணிக்கு சென்று சரண்​டர் ஆனார் தற்போதைய முதல்​வர் மு.க.ஸ்​டா​லின். பின்​னர் சிறைக்​குச் சென்​று, விடு​தலை​யும் ஆனார். அந்த வழக்கு என்ன ஆனது? 2011 முதல் 2021 வரை அதி​முக​வினர் என்ன செய்​தார்​கள்? சிறை என்​றவுடன் ஓடிப்​போனவர் இல்லை ஸ்டா​லின். சிறை என்​றதும் ஓடோடி வந்​தவர் அவர். கரூரில் உங்​கள் … Read more

வந்தே மாதரம் பாடல்: ஆர்எஸ்எஸ், பாஜக மீது கார்கே குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்​கிரஸ் தலை​வர் கார்கே சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறியிருப்பதாவது: தேசி​ய​வாதத்​தின் பாது​காவலர்​கள் என்று அழைத்து கொள்​ளும் ஆர்​எஸ்​எஸ், பாஜக ஆகியவை வந்தே மாதரம் மற்​றும் தேசிய கீதத்தை புறக்​கணித்​தன. கடந்த 1925-ம் ஆண்​டில் ஆர்​எஸ்​எஸ் அமைப்பு தொடங்​கப்​பட்​டது. அப்​போது முதல் ஆர்​எஸ்​எஸ் நிகழ்ச்​சிகளில் வந்தே மாதரம் பாடலோ, தேசிய கீதமோ இசைக்​கப்​பட்​டது கிடை​யாது. ஆர்​எஸ்​எஸ் அலு​வல​கத்​தில் சுமார் 52 ஆண்​டு​கள் தேசிய கொடி​யும் ஏற்​றப்​பட​வில்​லை. இந்​திய அரசி​யலமைப்பு சட்​டத்தை ஆர்​எஸ்​எஸ் வசை பாடியது. மகாத்மா … Read more

‘பெண்கள் பாதுகாப்பு குறித்த எடப்பாடியின் அற்பத்தனம் அம்பலமானது’ – ஆர்.எஸ்.பாரதி

சென்னை: “தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என பழனிசாமி விஷமப் பிரச்சாரம் செய்ததற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும். இபிஎஸ் வழியில் அன்புமணி ராமதாஸ், நயினார் நாகேந்திரன் போன்றவர்களும் உண்மை அறியாமல் தங்களது அரசியல் சுயலாபத்திற்காகப் பெண்களின் பாதுகாப்பை அரசியல் பகடைக்காயாக உருட்டிக் கொண்டிருப்பதை அற்பத்தனமான அறிக்கைகள் அம்பலப்படுத்தி இருக்கின்றன.” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்கிற செய்தி எப்படியாவது செவியில் … Read more

ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி: இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

குப்வாரா: ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைப்பகுதிக்கு அருகே நடந்த ஊடுருவல் முயற்சியின்போது, ராணுவம் நடத்திய தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஊடுருவல் முயற்சி தொடர்பாக கிடைத்த உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், குப்வாராவின் கெரான் செக்டாரில் நேற்று (நவம்பர் 07) தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது. சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளைக் கண்டறிந்தபோது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதால், பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். இந்த நடவடிக்கையின்போது இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டு … Read more

ரஷ்யாவில் மருத்துவம் படித்துவந்த இந்திய மாணவர் சடலமாக கண்டெடுப்பு

புதுடெல்லி: ராஜஸ்​தான் மாநிலம் ஆல்​வார் மாவட்​டம் லக்​ஷ்மன்​கர்​கில் உள்ள கபன்​வாடா கிராமத்​தைச் சேர்ந்​தவர் அஜித் சிங் சவுத்​ரி. 22 வயதான இவர் ரஷ்​யா​வின் உபா நகரத்​தில் உள்ள பாஷ்கிர் ஸ்டேட் மெடிக்​கல் யுனிவர்​சிட்​டி​யில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் எம்​பிபிஎஸ் படித்து வரு​கிறார். பல்​கலைக்​கழக விடு​தி​யில் தங்​கி​யிருந்த இவர் கடந்த அக்​டோபர் 19-ம் தேதி காலை 11 மணி அளவில் பால் வாங்​கு​வதற்​காக வெளி​யில் சென்​றார். அதன் பின் விடு​திக்கு திரும்​ப​வில்லை என்று கூறப்​படு​கிறது. இந்த நிலை​யில், … Read more

எஸ்ஐஆர் பணிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்க திமுக தலைமை அலுவலகத்தில் சிறப்பு உதவி மையம்

சென்னை: எஸ்​ஐஆர் திருத்​தப் பணி​கள் குறித்த பொது​மக்​களின் சந்​தேகங்​களை தீர்ப்​ப​தற்கு தேர்​தல் ஆணை​யத்தை வலி​யுறுத்த வேண்​டுமென திமுக சட்​டத்​துறைக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வுறுத்​தி​னார். தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தத்தை (எஸ்​ஐஆர்) தேர்​தல் ஆணை​யம் அமல்​படுத்​தி​யுள்​ளது. இதை எதிர்த்து வரும் திமுக, தனது கூட்​டணி கட்​சிகளு​டன் இணைந்து போராட்​டம், உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு என பல்​வேறு செயல்​பாடு​களை முன்​னெடுத்து வரு​கிறது. அதனுடன் எஸ்​ஐஆர் திருத்​தப் பணி​களுக்கு வழி​காட்​டு​தல்​கள் வழங்க திமுக தலைமை அலு​வல​கத்​தில் சிறப்பு உதவி … Read more

கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் அமைச்சரின் கார் மீது காலணி வீசியதால் பரபரப்பு

பெங்களூரு: கர்​நாட​கா​வில் கரும்​புக்கு வழங்​கப்​படும் ஆதரவு விலையை ரூ.3,500 ஆக உயர்த்​தக்​கோரி கடந்த 8 நாட்​களாக விவ​சா​யிகள் தொடர் போராட்​டம் நடத்தி வரு​கின்​ற‌னர். பெல​காவி மாவட்​டத்​தில் நேற்று ஆயிரக்​கணக்​கான விவ​சா​யிகள் தேசிய நெடுஞ்​சாலையை மறித்து போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அப்​போது போலீ​ஸார் அவர்​களை கலைந்து செல்​லு​மாறு கூறிய​தால் இரு தரப்​புக்​கும் இடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது. இதனிடையே விவ​சா​யிகளில் சிலர் அங்​கிருந்த போலீ​ஸாரின் மீதும், வாக​னங்​களின் மீதும் கல்​வீசி தாக்​குதல் நடத்​தினர். இதையடுத்து போலீ​ஸார் தடியடி நடத்தி கூட்​டத்தை கலைத்​தனர். … Read more