நவ.19-ல் பிரதமர் மோடி கோவை வருகை: விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

கோவை: பிரதமர் நரேந்திர மோடி கோவை வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கோவையில் இயற்கை வேளாண் மாநாடு நவம்பர் 19,20-ம் தேதிகளில் நடக்கிறது. நவம்பர் 19-ம் தேதி நடைபெறும் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதையொட்டி விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கோவை விமான நிலைய நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாதுகாப்பு காரணங்களுக்காக பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு … Read more

தேஜஸ்வி மீது சகோதரி ரோகிணி பரபரப்பு குற்றச்சாட்டு: லாலு குடும்பத்தில் என்னதான் நடக்கிறது?

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் படுதோல்வியடைந்த நிலையில், லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா அரசியலை விட்டு விலகுவதாகவும், தனது குடும்பத்துடனான உறவுகளை துண்டித்துக் கொள்வதாகவும் அறிவித்தார். இதுபற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றி ரோகிணி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நேற்று, ஒரு மகளாக, ஒரு சகோதரியாக, ஒரு திருமணமான பெண்ணாக, ஒரு தாயாக நான் அவமானப்படுத்தப்பட்டேன். என்னை அவதூறான வார்த்தைகளில் வசைபாடினர். என்னை அடிக்க செருப்பு எடுத்துக்கொண்டு பாய்ந்தனர். நான் … Read more

எஸ்ஐஆர் விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம் நவ.20-க்கு ஒத்திவைப்பு!

சென்னை: சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளில் முறைகேடுகளுக்குக் காரணமான திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் நாளை (நவ. 17) நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் நவம்பர் 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியான அறிக்கையில், “சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளில், ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி திமுக-வினரால் நிகழ்த்தப்படும் பல்வேறு முறைகேடுகளுக்குக் காரணமான திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த சென்னை மாவட்டங்களின் … Read more

கடந்த 30 ஆண்டுகளில் முதல்முறை மாநிலங்களவை எம்.பி.க்களை இழக்கும் ஆர்ஜேடி

புதுடெல்லி: பிஹார் தேர்​தல் தோல்​வியை அடுத்​து, வரும் 2030-ம் ஆண்​டுக்​குள் மாநிலங்​களவை​யில் ஒரு எம்​.பி. கூட இல்​லாத கட்​சி​யாக ராஷ்டிரிய ஜனதா தளம் மாறப் போகிறது. பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் என்​டிஏ (ஐஜத – பாஜக) கூட்​டணி அமோக வெற்றி பெற்​றது. மெகா கூட்​டணி (ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்​கிரஸ்) படு​தோல்வி அடைந்​தது. இதில் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்​ஜேடி) 25 இடங்​களில் மட்​டுமே வெற்றி பெற்​றது. இந்த தோல்வி மாநிலங்​களவை தேர்​தலில் ஆர்​ஜேடிக்கு கடுமை​யான … Read more

திருப்போரூர் அருகே வெடித்து சிதறிய பயிற்சி விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

திருப்போரூரை அடுத்த நெம் மேலியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக உப்பு தொழிற்சாலை வளாகத்தில் விழுந்துவெடித்துசிதறியபயிற்சி விமானத்தின் கருப்பு பெட்டி மற் றும் சிதறிய விமான பாகங்களை, விமானப்படைத் துறையினர் மீட்டு தாம்பரம் விமானப்படை தளத்துக்கு கொண்டு சென்றனர். சென்னையை அடுத்த தாம் பரம் விமானப்படை பயிற்சி தளத்திலிருந்து நேற்று முன் தினம் பிற்பகல் புறப்பட்ட பயிற்சி விமானம், திருப்போரூர் அருகே வானில் பறந்து கொண் டிருந்தபோது, விமானத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. … Read more

டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கு: அல் பலா பல்கலை.யின் 2 மருத்துவர்கள் உட்பட 3 பேரிடம் போலீஸார் தீவிர விசாரணை

புதுடெல்லி: டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்​கில் அல் பலா பல்​கலைக்​கழகத்​தின் 2 மருத்​து​வர்​கள் உள்​ளிட்ட மேலும் 3 பேரை பிடித்து போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர். டெல்லி செங்​கோட்டை அரு​கில் கடந்த 10-ம் தேதி மாலை ஒரு கார் வெடித்து சிதறிய சம்​பவம் நாடு முழு​வதும் அதிர்​வலைகளை ஏற்​படுத்​தி​யது. இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்​தி​ய மருத்​து​வர் உமர் நபி ஹரி​யானா மாநிலம் பரி​தா​பாத்​தில் உள்ள அல் பலா பல்​கலைக்​கழக மருத்​து​வக் கல்​லூரி​யில் பணி​யாற்றி வந்தவர். இது தொடர்​பாக … Read more

மெக்சிகோவில் வன்முறையில் முடிந்த அரசுக்கு எதிரான ஜென்ஸீ இளைஞர்கள் போராட்டம்

மெக்சிகோ நாட்டில் அரசுக்கு, அதிபருக்கு எதிராக நடந்த ஜென்ஸீ இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. வட அமெரிக்கா கண்டத்தில் உள்ள மெக்சிகோ நாட்டில் சனிக்கிழமையன்று அதிபரைக் கண்டித்து, அரசை எதிர்த்து ஆயிரக்கணக்கான ஜென்ஸீ இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர். மெக்சிகோவில் கடந்த அக்டோபர் 2024 முதக் க்ளாடியா ஷீன்பாம் என்பவர் அதிபராக இருக்கிறார். மெக்சிகோவில் ஊழலும், வன்முறையும் ஷீன்பாம் ஆட்சியில் பெருகிவிட்டது என்பது இளைஞர்களின் குற்றச்சாட்டு. இந்நிலையில் நேற்று மெக்சிகோ தலைநகரில் ஜென்ஸீ இளைஞர்கள் திரண்டனர். ஆரம்பத்தில் … Read more

ஜனநாயக முறையில் தேர்தல் நடப்பதை தேர்தல் ஆணையம்தான் உறுதி செய்ய வேண்டும்: பிரேமலதா

மதுரை: எஸ்ஐஆர் மீது தேர்தல் ஆணையம் தான் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறினார் மதுரையில் நடைபெறும் பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விமானம் மூலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதுரை வந்தார் விமான நிலையத்தில் அவர் செய்தியாளரிடம் கூறுகையில், “இன்று மூன்றாம் கட்ட சுற்றுப்பயணம் மதுரையிலிருந்து ஆரம்பித்து.. டிசம்பர் 2-ம் தேதி ஈரோட்டில் நிறைவு பெறுகிறது. … Read more

‘ஊடகம்தான் மக்களாட்சியை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஆற்றல்’ – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “ஊடகம்தான் மக்களாட்சியை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஆற்றலாக விளங்க வேண்டும்.” என்று தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “எந்த ஒரு மக்களாட்சியிலும், தன்னாட்சி அமைப்புகள் அதிகாரத்தில் உள்ளவர்களால் கைப்பற்றப்பட்டாலும், ஊடகம்தான் மக்களாட்சியை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஆற்றலாக விளங்க வேண்டும். ஒன்றிய பாஜக அரசின் எதேச்சாதிகாரத்துக்கு அடிபணியாமல் துணிவுடன் அவர்களது தோல்விகளையும் ஊழல்களையும் மோசடிகளையும் தோலுரிக்கும் ஊடகவியலாளர்கள் அனைவரையும் தேசிய பத்திரிகையாளர் நாளில் … Read more

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட்!

புதுச்சேரி: புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் மிக பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்கும் படி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். கோடை காலத்தை தாண்டி ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கடும் வெயில் புதுச்சேரியில் சுட்டெரித்தது. இச்சூழலில் கடந்த அக்டோபர் 15-ம் தேதி முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது, அவ்வப்போது மழையும் பெய்தது. இதனிடேயே வங்கக் கடலில் அக்டோபர் 27-ம் தேதி மோந்தா புயல் உருவானது. இந்தப் புயல் புதுவையை தாக்கும் என வானிலை மையம் … Read more