எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு: தேர்தல் ஆணையத்துக்கு விடுக்கப்படும் மறைமுக மிரட்டல் – பாஜக சாடல்

சென்னை: தேர்தல் கமிஷனின் வாக்காளர் சிறப்பு தீவிர சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு எதிராக அரசு ஊழியர்களை மறைமுகமாக செயல்பட தமிழக அரசு நிர்வாகம் ஊக்குவிக்கக் கூடாது என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கடந்த 4-ம் தேதி முதல் எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் வாக்காளர் சிறப்பு … Read more

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்திவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கேரளா மனு

புதுடெல்லி: உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த இருப்பதால் தங்கள் மாநிலத்தில் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்திவைக்கக் கோரி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது. இது தொடர்பாக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், “அரசியல் சாசன பிரிவு 243-E, 243-U ஆகியவற்றின் படியும், கேரள பஞ்சாயத்து சட்டம் பிரிவு 94ன் படியும், கேரள நகராட்சி சட்டப்படியும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை ஐந்தாண்டுகளுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்பது கட்டாயம். இந்த … Read more

அண்ணா நகரில் ரூ.97 கோடியில் ‘ரெரா’ அலுவலக கட்டிடம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: கட்​டிடம் மற்​றும் மனை விற்​பனை ஒழுங்​கு​முறை குழு​மம் (ரெ​ரா) மற்​றும் மேல்​முறை​யீட்டு தீர்ப்​பா​யத்​துக்கு, அண்ணா நகரில் ரூ.97 கோடியில் கட்​டப்​பட்​டுள்ள புதிய அலு​வல​கக் கட்டிடத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று திறந்து வைத்​தார். இதுகுறித்து, தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழகத்​தில் கட்​டிடம் மற்​றும் மனை விற்​பனை துறையை ஒழுங்​குபடுத்​த​வும், மேம்​படுத்​த​வும், மனை, அடுக்​கு​மாடிக் குடி​யிருப்​பு​களுக்​கான விற்​பனையை வெளிப்​படை​யான முறை​யில் உறு​தி​ செய்​வதற்​கும், கட்​டிட மனை விற்​பனைத் துறை​யில் நுகர்​வோர் நலனைப் பாது​காப்​ப​தற்​கும், அவர்​களின் குறை​களுக்கு விரை​வாக … Read more

‘இது குடும்பப் பிரச்சினை; நான் பார்த்துக் கொள்கிறேன்’ – தேஜஸ்வி – ரோகிணி மோதல் குறித்து லாலு கருத்து!

பாட்னா: தேஜஸ்வி யாதவ் – ரோகிணி ஆச்சார்யா இடையேயான பிரச்சினை என்பது குடும்பத்தின் உள் விவகாரம் என்றும் அதை தான் பார்த்துக் கொள்வதாகவும் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களை வென்ற நிலையில், மகா கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது, அதில் ஆர்ஜேடி கட்சி 25 இடங்களில் வென்றது. எந்த சட்டப்பேரவையிலும் எதிர்க்கட்சியாக தேர்வாக மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 10 சதவீத இடங்களில் வென்றிருக்க … Read more

முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவர் வெள்ளையன் காலமானார்

சென்னை: முருகப்பா குழு​ம முன்​னாள் தலை​வர் அருணாசலம் வெள்​ளை​யன் நேற்று கால​மா​னார். அவருக்கு வயது 72. இதுகுறித்து முரு​கப்பா குழு​மம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “முரு​கப்பா குழு​மத்​தின் முன்​னாள் தலை​வர் வெள்​ளை​யன் நாள்​பட்ட உடல்​நலக்குறைவு காரண​மாக சிகிச்சை பெற்​று​வந்​தார். இந்த நிலை​யில் நேற்று அவர் கால​மா​னார்” என்று தெரிவிக்கப்பட்டுள்​ளது. திவான் பகதூர் முரு​கப்பா செட்​டி​யார் நிறு​விய முரு​கப்பா குழு​மம் 125 ஆண்டு பாரம்​பரி​யம் கொண்​டது. முரு​கப்பா குடும்​பத்​தின் நான்​காவது தலை​முறையைச் சேர்ந்​தவர் வெள்​ளை​யன். இவருக்கு மனைவி லலிதா மற்​றும் … Read more

மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவன் மீது வழக்கு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறும்போது, ‘‘மீரட்டில் கிவாய் கிராமத்தைச் சேர்ந்த டானிஷ் என்பவரை கடந்தாண்டு அக்டோபர் 24-ல் திருமணம் செய்து கொண்டேன். அப்போதே குடிபோதையில் என்னை வைத்து சூதாட ஆரம்பித்துவிட்டார். எதிர்த்து கேட்டதற்கு அவரும், என்னுடைய மாமியாரும் சேர்ந்து அடித்து உதைத்தனர். என் கணவர் சூதாட்டத்தில் தோற்றதால் எட்டு பேர் என்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி உள்ளனர். பலமுறை அபார்ஷன் … Read more

சென்னையில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று​முதல் நவ.25 வரை வாக்காளர் உதவி மையம் செயல்படும்: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: சென்னை மாவட்​டத்​தில் அனைத்து வாக்​குச்​சாவடிகளி​லும் இன்​று​முதல் நவ.25-ம் தேதி வரை வாக்​காளர் உதவி மையங்​கள் செயல்​படும் என்று மாவட்ட தேர்​தல் அதி​காரி ஜெ.குமரகுருபரன் தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட 16 சட்​டப்​பேரவை தொகு​தி​களி​லும் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இதில் அனைத்து தொகு​தி​களி​லும் பிஎல்​ஓ-க்​கள் வீடு வீடாகச் சென்று வாக்​காளர்​களுக்கு எஸ்​ஐஆர் படிவங்​களை வழங்​கி, நிரப்​பப்​பட்ட படிவங்​களை மீண்​டும் பெற்று வரு​கின்​றனர். … Read more

டெல்லி குண்டு வெடிப்பை நிகழ்த்த நேபாளத்தில் செல்போன், கான்போரில் சிம் வாங்கினர்

புதுடெல்லி: டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கின் விசா​ரணை​யில் கிடைத்த தகவல்​கள் குறித்து அதி​கார வட்​டாரங்​கள் கூறிய​தாவது: டெல்லி குண்​டு​வெடிப்​புக்​காக நேபாளத்​தில் இருந்து ஏழு பழைய செல்போன்​களை சதி​காரர்​கள் வாங்​கி​யுள்​ளனர். மேலும் 17 சிம் கார்​டு​கள் வாங்​கப்​பட்​டுள்​ளன. இதில் 6 சிம் கார்​டு​களை உ.பி.​யின் கான்​பூரில் வாங்​கி​யுள்​ளனர். குண்டு வெடிப்பை நிகழ்த்​திய உமர் நபி​யுடன் குண்டு வெடிப்​புக்கு ஒரு மணி நேரம் முன்பு வரை பர்​வேஸ், முகமது ஆரிப், பரூக் அகமது தார் ஆகிய 3 மருத்​து​வர்​கள் … Read more

நவ.19, 20-ல் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க திருச்சியில் இருந்து டெல்லிக்கு 200 விவசாயிகள் பயணம்

திருச்சி: டெல்​லி​யில் நாளை தொடங்கி 2 நாட்​கள் நடை​பெறும் போராட்​டத்​தில் பங்​கேற்​ப​தற்​காக திருச்​சி​யில் இருந்து 200-க்​கும் மேற்​பட்ட விவ​சா​யிகள் நேற்று ரயி​லில் புறப்​பட்​டுச் சென்​றனர். தேசிய மயமாக்​கப்​பட்ட வங்​கி​களில் விவ​சா​யிகள் பெற்ற கடனை தள்​ளு​படி செய்ய வேண்​டும். விவ​சாயக் குடும்​பத்​தைச் சேர்ந்த மாணவர்​களுக்கு கல்விக் கடன்​களை தள்​ளு​படி செய்ய வேண்​டும். மேகே​தாட்​டு​வில் அணை கட்​டும் முயற்​சியை உடனடி​யாக நிறுத்த வேண்​டும். இரு​மடங்கு லாபம் தரும் வகை​யில் வேளாண் விளை பொருட்​களுக்கு விலை அறிவிக்க வேண்​டும். 60 வயது … Read more

டெல்லி கார் குண்டு தற்கொலை தாக்குதல் வழக்கில் மருத்துவர் ஷாகின் சயீத் செல்போன் ஆய்வு

புதுடெல்லி: காஷ்மீரைச் சேர்ந்த மருத்​து​வர் உமர் முகமது கடந்த வாரம் காரை வெடிபொருட்​களு​டன் ஓட்​டிச் சென்று டெல்லி செங்​கோட்டை பகு​தி​யில் வெடிக்​கச் செய்து தற்​கொலைத் தாக்​குதல் நடத்​தி​னார். இதில், 13 பேர் உயி​ரிழந்​தனர். இந்த தாக்​குதலின் பின்​னணி​யில் முக்​கிய குற்​ற​வாளி​யாக சந்​தேகிக்​கப்​பட்ட மருத்​து​வர் ஷாகின் சயீத் கைது செய்​யப்​பட்​டார். அவரிடம் நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் பாகிஸ்​தானைச் சேர்ந்த ஜெய்​ஷ்-இ-​முகமது தீவிர​வாத அமைப்​பின் பெண்​கள் பிரி​வின் தலை​வ​ராக இந்​தி​யா​வில் செயல்​பட்​டது தெரிய​வந்​தது. இதையடுத்​து, அவரது செல்​போனை ஆராய்ந்​த​தில் வாட்​ஸ்​அப் மெசேஜ்கள் … Read more