மின்சாரப் பேருந்துகளால் செலவு கணிசமாக குறைந்துள்ளது: மாநகர போக்குவரத்துக் கழகம் தகவல் 

சென்னை: காற்று மாசு​பாட்​டைக் குறைக்​க​வும், எரிபொருள் செல​வைக் கட்​டுப்​படுத்த​வும் தமிழகத்​தில் மின்​சா​ரப் பேருந்து இயக்​கும் திட்​டம் அறி​முகப்​படுத்​தப்​பட்​டது. சென்​னை​யில் கடந்த ஜூலை மாதம் முதல் மின்​சா​ரப்பேருந்​துகள் இயக்​கப்​பட்டு வருகின்​றன. தற்​போது 255 பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்​றன. மின்​சா​ரப் பேருந்​துகளை நேரடி​யாக கொள்​முதல் செய்து இயக்​காமல் மொத்த விலை ஒப்​பந்த அடிப்​படை​யில் இயக்​கு​வ​தால் வரு​வாயை விட செலவு பல மடங்கு அதி​க​மாக இருப்​ப​தாக குற்​றச்​சாட்​டு​கள் எழுந்​தன. இந்​நிலை​யில் மின்​சா​ரப் பேருந்​துகளால் போக்​கு​வரத்​துக் கழகத்​தின் மொத்த செலவு கணிச​மாக குறைவ​தாக மாநகர் … Read more

பின்தொடர்வோரை அதிகரிக்க இந்து கடவுள்களுக்கு எதிராக அவதூறு ‘ரீல்ஸ்' வெளியிட்ட சிறுமி: பெற்றோருக்கு சிறை 

லக்னோ: இன்​ஸ்​டாகி​ராமில் இந்து கடவுள்​களுக்கு எதி​ரான ஓர் அவதூறு வீடியோ கடந்த 27-ம் தேதி வெளி​யானது. மைனர் பெண் ஒரு​வர் வெளி​யிட்ட அந்த ஒரு நிமிட வீடியோவில் இடம்பெற்ற இந்து கடவுள்​களுக்கு எதி​ரான கருத்​துக்கு பலர் ஆட்​சேபம் தெரி​வித்​தனர். அந்த மைனர் பெண் மற்​றும் அவரது குடும்​பத்​துக்கு எதி​ராக இந்து அமைப்​பு​கள் போராட்​டம் நடத்​தின. காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தன. இதன் அடிப்​படை​யில் மைனர் பெண்ணை உ.பி. போலீ​ஸார் தடுப்பு காவல் இல்​லத்​தில் வைத்​தனர். அவரது பெற்​றோரை … Read more

ஆலங்குளமா… அம்பாசமுத்திரமா? – மனோஜ் பாண்டியன் வருகையால் திமுகவுக்குள் பரபர விவாதம்

ஓபிஎஸ்ஸை நம்பி இபிஎஸ்ஸை பகைத்​துக் கொண்ட மனோஜ் பாண்​டியன், ஓபிஎஸ்​ஸின் நிலைமை மதில் மேல் பூனை கணக்​காக இருப்​ப​தால் தனக்​கான வழியைத் தேடிப் புறப்​பட்டு திமுக​வில் கலந்​து​விட்​டார். மனோஜ் பாண்​டிய​னுக்கு தேர்​தலில் சீட் உறுதி என்று உத்​தர​வாதம் அளித்​துத்​தான் அவரை திமுக​வுக்கு அழைத்து வந்​தா​ராம் அமைச்​சர் சேகர் பாபு. இந்த நிலை​யில், ஏற்​கெனவே ஆலங்​குளத்​தில் வெற்​றி​பெற்ற மனோஜ் பாண்​டிய​னுக்கு இந்த முறை அந்​தத் தொகு​திக்​குப் பதிலாக அம்பாசமுத்திரத்தை ஒதுக்க திமுக தலைமை பேசி​வைத்​திருப்​ப​தாக வந்து விழும் செய்​தி​கள், … Read more

மும்பை மாநகராட்சி முடிவால் ஒரு லட்சம் புறாக்கள் இறந்ததாக புகார்: ஜெயின் துறவி சாகும்வரை உண்ணாவிரதம் 

புதுடெல்லி: ம​கா​ராஷ்டிர மாநிலம் மும்​பை​யின் பல பகு​தி​களில் புறாக்​கள் ஏராள​மாக உள்​ளன. இவற்​றுக்கு மும்பை நகர மக்​கள் தானி​யங்​கள் அளிப்​பதும் வழக்​கம். ஆனால், புறாக்​களால் மும்பை நகர் அசுத்​த​மாவ​தாக​வும் மனிதர்​களுக்கு நுரை​யீரல் பாதிப்​பு, சுவாச நோய் பரவுவ​தாகவும் புகார்​கள் எழுகின்​றன. இதற்கு தீர்வு காண மகா​ராஷ்டிர அரசு, கடந்த ஜுலை 3-ம் தேதி முதல் 51 புறா கூடு​களை அப்​புறப்​படுத்​தி​யது. தாதர் உள்​ளிட்ட பல முக்​கியப் பகு​தி​களில் இருந்த புறாக்​களின் கூடு​களை பிளாஸ்​டிக்​கால் மும்பை நகராட்சி மூடி​விட்​டது. … Read more

தமிழக முதல்வர் உயர் கல்வியை இருகண்களில் ஒன்றாக பார்க்கின்றார்: அமைச்சர் கோவி. செழியன்

கும்பகோணம்: வரும் டிச.20-ம் தேதி டிஆர்பி மூலம் 2700 பேருக்கு நிரந்தர பேராசிரியர் பணி நியமிப்பதற்கான உத்தரவு வழங்கப்படவுள்ளன என உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தகவல் தெரிவித்துள்ளார். கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மா.கோவிந்தராசு தலைமை வகித்து உரையாற்றினார். உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 2022-23 மற்றும் 2023-24-ம் கல்வியாண்டில், 17 துறைகளில் படித்து தேர்ச்சி பெற்ற 2787 இளநிலை மற்றும் … Read more

ரூ.60 ஆயிரத்தை தவறுதலாக குப்பைத் தொட்டியில் போட்ட பழ வியாபாரி: மீட்டுக் கொடுத்த தொழிலாளர்கள்

அகமதாபாத்: குஜ​ராத் மாநிலம் ராஜ்கோட் நகர் பஜ்ரங்​வாடி​யிலுள்ள ராஜீவ் நகரைச் சேர்ந்​தவர் அல்​டாப் காத்​ரி. இவர் பழ வி​யா​பாரம் செய்து வரு​கிறார். அண்​மை​யில் வியா​பாரம் மூலம் வந்த ரூ.60 ஆயிரம் ரொக்​கத்தை பிளாஸ்​டிக் பையில் சுற்றி தனது வீட்​டில் வைத்​து​விட்டு தொழுகை செய்து கொண்​டிருந்​தார். இதையறி​யாமல் அவரது வயதான அத்​தை, பழைய பிளாஸ்​டிக் பை வீட்​டில் இருப்​ப​தைப் பார்த்து அதை குப்​பைத் தொட்​டி​யில் வீசி​விட்​டார். திரும்பி வந்து பார்த்​த​போது பை இல்​லாததைக் கண்டு பதறிய அல்​டாப், தனது … Read more

வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டை விடுவிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வீரப்பன் தேடுதல் வேட்டையில், அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய பாக்கி இழப்பீட்டு தொகை 2 கோடியே 59 லட்சம் ரூபாயை உடனடியாக விடுவிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தனக்கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தமிழக – கர்நாடக சிறப்பு அதிரடிப்படையினர், விசாரணை என்ற பெயரில் மலை கிராம பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தும், ஆண்களை சித்ரவதை செய்தும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் … Read more

வாரிசு அரசியல் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்: ஜவஹர்லால் நேரு குடும்பம் மீது சசி தரூர் விமர்சனம்

புதுடெல்லி: ​வாரிசு அரசி​ய​லால் இந்​திய ஜனநாயகத்​துக்கு மிகப்​பெரிய அச்​சுறுத்​தல் ஏற்​பட்​டிருக்​கிறது என்று காங்​கிரஸ் மூத்த தலை​வர் சசி தரூர் தெரி​வித்​துள்​ளார். சர்​வ​தேச ஊடக​மான புராஜெக்ட் சிண்​டிகேட், செக் குடியரசை தலை​மை​யிட​மாகக் கொண்டு செயல்​படு​கிறது. இதில் காங்​கிரஸ் மூத்த தலை​வர் சசி தரூர் ‘இந்​திய அரசி​யல் – குடும்ப வணி​கம்’ என்ற தலைப்​பில் எழு​தி​யிருக்​கும் கட்​டுரை​யில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தி​யா​வில் கிராம பஞ்​சா​யத்து முதல் நாடாளு​மன்​றம் வரை குடும்ப அரசி​யல் வியாபித்து பரவி இருக்​கிறது. நாடு சுதந்​திரம் அடைந்​தது முதல் … Read more

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: 10-க்கும் மேற்பட்ட போலீஸாரிடம் சிபிஐ விசாரணை

கரூர்: கரூர் வேலுசாமிபுரம் தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்ட போலீஸாரிடம் சிபிஐ விசாரணை நடத்தினர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அக்.30-ம் தேதி கரூர் நகர இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், அக்.31-ம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தை சேர்ந்த வர்த்தகர்கள் 4 பேரிடம் விசாரணை … Read more

உனக்காகத்தான் என் மனைவியை கொன்றேன்: முன்னாள் காதலிக்கு குறுஞ்செய்தி அனுப்பிய பெங்களூரு மருத்துவர் 

பெங்களூரு: பெங்​களூரு​வில் உள்ள மாரத்தஹள்​ளியை சேர்ந்​தவர் மருத்துவர் மகேந்​திர ரெட்டி (34). இவருக்கும் பெல்​லாரியை சேர்ந்த மருத்துவ​ரான‌ கிருத்​திகா ரெட்​டிக்​கும் (28) கடந்த 2024-ம் ஆண்டு திரு​மண​மான‌து. கிருத்​திகா ரெட்டிக்கு கடந்த ஏப்​ரல் 12-ம் தேதி திடீரென உடல் நலக்​குறைவு ஏற்​பட்டு மயங்கி விழுந்​து உயிரிழந்தார். இதையடுத்து போலீ​ஸார் கிருத்​தி​கா​வின் பிரேதப் பரிசோதனையில் அவரது உடலில் சேகரிக்​கப்​பட்ட ரத்த மாதிரி,​உறுப்​புகள் சில​வற்றை தடய​வியல் சோதனைக்கு அனுப்​பினர். அதில் பிர​போல் எனப்​படும் அனஸ்​தீசியா மயக்க மருந்து அளவுக்கு அதி​க​மாக … Read more