பதிவுத்துறை உதவி தலைவர், மாவட்ட பதிவாளர் பணிகளுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் : அன்புமணி

சென்னை: பதிவுத்துறை உதவித் தலைவர், மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பதிவுத்துறை உதவித் தலைவர் பணிக்கான பதவி உயர்வுப் பட்டியல் முறையாக தயாரிக்கப்படவில்லை; இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு பின்பற்றப்படவில்லை என்று நான் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அதை மறுத்துள்ள வணிகவரி மற்றும் பதிவுத்துறை, அனைத்து நடைமுறைகளும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படியும், விதிகளை பின்பற்றியும் தான் வெளியிடப்பட்டதாக … Read more

''நவ. 14-ல் புதிய அரசு அமையும்'' – பிஹார் தேர்தலில் வாக்களித்த பின் தேஜஸ்வி யாதவ் உறுதி

பாட்னா: “பிஹாரில் நவம்பர் 14 ஆம் தேதி ஒரு புதிய அரசாங்கம் அமைக்கப்படும். புதிய அரசாங்கத்தை அமைக்க மாற்றத்தை கொண்டு வாருங்கள்” என மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும், ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிஹார் சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 121 தொகு​தி​களில் இன்று முதல்​கட்ட தேர்​தல் நடை​பெறுகிறது. மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ், இன்று தேர்தல் நடைபெறும் ரகோபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த சூழலில், தேஜஸ்வி யாதவ் … Read more

திருச்சி, சேலம் உட்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: ​திருச்​சி, சேலம் உள்​ளிட்ட 9 மாவட்​டங்​களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்​ளது. இதுதொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழக உள் பகு​தி​களின்​மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நில​வு​கிறது. இதன் காரண​மாக இன்​றும், நாளை​யும் (நவ.6, 7) தமிழகத்​தில் ஒருசில இடங்​களில் இடி, மின்​னலுடன் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். 8 முதல் 11-ம் தேதி வரை தென் தமிழகத்​தில் ஒருசில இடங்​களி​லும், வட தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும் … Read more

பிஆர்எஸ் கட்சியை பாஜகவிடம் அடமானம் வைத்த கேசிஆர்: தெலங்கானா முதல்வர் ரேவந்த் குற்றச்சாட்டு

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைத​ரா​பாத் ஜூப்ளி ஹில்ஸ் சட்​டப்​பேரவை தொகு​திக்கு விரை​வில் இடைத்​தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதில் ஆளும் காங்​கிரஸ், பாஜக, பிஆர்​எஸ் கட்​சிகளுக்கு இடையே மும்​முனைப் போட்டி நில​வு​கிறது. இந்​நிலை​யில் ஜூப்ளி ஹில்ஸ் சிறு​பான்​மை​யினர் சங்​கத்​தினர் நேற்று முதல்​வர் ரேவந்த் ரெட்​டியை சந்​தித்து காங்​கிரஸ் கட்​சிக்கு ஆதரவு தெரி​வித்​தனர். அப்​போது ரேவந்த் ரெட்டி பேசி​ய​தாவது: ராகுல்​காந்தி பாத​ யாத்​திரை மேற்கொண்டபோது காங்​கிரஸ் மட்​டுமே சிறு​பான்​மை​யினர் நலனில் அக்​கறை செலுத்​தும் கட்சி என பெரு​மை​யுடன் கூறி​னார். அதை … Read more

சீக்கியர் அல்லாத 14 பேருக்கு பாகிஸ்தான் அனுமதி மறுப்பு

புதுடெல்லி: சீக்​கிய மதத்தை நிறு​விய குரு​நானக் தேவ் பிறந்த இடமான நான்​கானா சாகிப், பாகிஸ்​தானின் பஞ்​சாப் மாநிலத்​தில் உள்​ளது. குரு​நானக் ஜெயந்​தியை முன்​னிட்டு சுமார் 2,100 பக்​தர்​கள் பாகிஸ்​தான் செல்ல மத்​திய உள்​துறை அமைச்​சகம் அனு​மதி வழங்​கி​யிருந்​தது. இவர்​கள் அனை​வருக்​கும் பாகிஸ்​தான் அரசு பயண ஆவணங்​களை வழங்​கியது. இவர்​களில் 1,900 பேர் நேற்று வாகா எல்லை வழி​யாக பாகிஸ்​தான் சென்​றனர். கடந்த மே மாதம் ஆபரேஷன் சிந்​தூர், ராணுவ மோதலுக்கு பிறகு இரு நாடு​கள் இடையே முதல் … Read more

தமிழக அரசியலில் சில வாரங்களில் பெரிய மாற்றம் – அன்புமணி நம்பிக்கை

தமிழக அரசியலில் அடுத்த சில வாரங்களில் பெரிய மாற்றங்கள் ஏற்பட உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி தருமபுரியில் தெரிவித்தார். தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் ஈச்சம்பாடி பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஈச்சம்பாடி அணையில் இருந்து உபரிநீர் நீரேற்றும் திட்டத்தை செயல் படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி தலைமையில் நேற்று ஈச்சம்பாடி அணை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின்போது, ‘விவசாயிகளுக்கு பயனளிக்கும் எந்த திட்டத்தையும் திமுக அரசு செயல்படுத்தவில்லை. மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் நீர்ப்பாசன … Read more

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தாய், ஆண் நண்பருக்கு 180 ஆண்டு சிறை தண்டனை: கேரள போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

மலப்புரம்: கேரளா​வில் 12 வயது சிறுமி பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்ட வழக்​கில், தாய், அவரது ஆண் நண்​பருக்கு 180 ஆண்டு சிறை தண்​டனை விதிக்​கப்​பட்​டுள்​ளது. கேரள மாநிலம் திரு​வனந்​த​புரத்​தைச் சேர்ந்த ஒரு பெண் தன் கணவர் மற்​றும் ஒரு பெண் குழந்​தை​யுடன் வசித்து வந்​துள்​ளார். அப்​போது, வேறு ஒரு ஆணுடன் பழக்​கம் ஏற்​பட்​டுள்​ளது. இதையடுத்​து, அந்​தப் பெண் கணவரை விட்​டுப் பிரிந்து ஆண் நண்​பருடன் மலப்​புரம் மற்​றும் பாலக்​காடு மாவட்​டங்​களில் வசித்து வந்​துள்​ளார். தனது பெண் குழந்​தையை​யும் … Read more

அமெரிக்காவின் நியூயார்க் மேயராக இந்திய வம்சாவளி மம்தானி தேர்வு: அதிபர் ட்ரம்ப் கட்சி வேட்பாளர் தோல்வி

நியூயார்க்: அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகர மேயர் தேர்​தலில் ஜனநாயக கட்சி வேட்​பாள​ரும், இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்​தவரு​மான ஜோரான் மம்​தானி வெற்றி பெற்​றார். அமெரிக்​கா​வின் மிக முக்​கிய​மான நகரங்​களில் நியூ​யார்க் நகர​மும் ஒன்​று. இங்கு நடை​பெற்ற மேயர் தேர்​தலில் இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்த ஜோரான் மம்​தானி போட்​டி​யிட்​டார். இவரது தாய் மீரா நாயர் இந்​தி​யா​வைச் சேர்ந்த சினிமா தயாரிப்​பாளர். தந்தை மகமூத் மம்​தானி உகாண்​டாவைச் சேர்ந்​தவர். ஜோரான் மம்​தானிக்கு 7 வயது இருக்​கும்​போதே அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் குடியேறி​விட்​டார். … Read more

நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத டாஸ்மாக் மேலாண் இயக்குநர், மேலாளர் ஆஜராக உத்தரவு

மதுரை: திண்​டுக்​கல்​லைச் சேர்ந்த முத்​து, கல்​யாணி, சிவ​சாமி, காளி​முத்து உள்​ளிட்ட 30 பேர், தங்​களுக்கு சொந்​த​மான இடத்தை அரசு கையகப்​படுத்​தி​யதற்​கான இழப்​பீட்டு தொகை கேட்டு தொடர்ந்த வழக்​கில் ரூ.4,37,42,783 இழப்​பீடு வழங்​கு​மாறு மாவட்ட நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து அரசுத் தரப்​பில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. இதை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், இழப்​பீட்​டு தொகையை 8 வாரத்​தில் வழங்க உத்​தர​விட்​டது. ஆனால், இழப்​பீடு வழங்​கப்​பட​வில்​லை. மேல்​முறையீட்டு மனுவை விசாரித்த நீதிப​தி​கள் வேல்​முரு​கன், ராமகிருஷ்ணன், “நிலம் கையகப்​படுத்​தியது தொடர்​பான நிலுவை … Read more

உ.பி.யில் ரயில் மோதி 6 பெண்கள் உயிரிழப்பு

லக்னோ: உ.பி.யின் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சனூர் ஜங்ஷன் ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில் நேற்று காலை 9.15 மணிக்கு சோபன் – பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது. இதில் இருந்து இறங்கிய பயணிகள் சிலர், எதிரில் உள்ள 3-வது நடைமேடைக்கு செல்ல படிக்கட்டுகளை பயன்படுத்தாமல் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றனர். அப்போது 3-வது லைனில் வேகமாக வந்த நேதாஜி எக்ஸ்பிரஸ் அவர்கள் மீது மோதியது. இதில் 6 பெண்கள் உயிரிழந்தனர். இவர்கள் கார்த்திகை பவுர்ணமியை … Read more