காற்றழுத்த தாழ்வுப் பகுதி: நவ.23, 24-ல் வட மாவட்டங்கள், டெல்டாவில் கனமழை

சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ள நிலையில், வரும் 23, 24-ம் தேதிகளில் வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று (நவ.17) மழை பெய்துள்ளது. குறிப்பாக, நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 17 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் ஊத்துவில் … Read more

நவ.19-ல் எம்எல்ஏக்கள் கூட்டம்; நவ.20-ல் பதவியேற்பு: பிஹார் பாஜக தலைவர் திலிப் ஜெய்ஸ்வால்

பாட்னா: பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நாளை நடைபெறும். பின்னர், தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெறும். இதையடுத்து நாளை மறுநாள் பதவியேற்பு விழா நடைபெறும் என்று பிஹார் மாநில பாஜக தலைவர் திலிப் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய திலிப் ஜெய்ஸ்வால், “நாளை காலை 10 மணிக்கு பாட்னாவில் உள்ள பாஜக தலைமையகமான அடல் சபஹாரில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறும். இதில், கட்சியின் சட்டப்பேரவைக் … Read more

எக்ஸ் தளம் முடக்கம் – தொழில்நுட்ப கோளாறு காரணமா?

அமெரிக்காவிலும், இந்தியாவிலும் பல்லாயிரக்கணக்கான பயனர்களுக்கு எக்ஸ் தளம் செயலிழந்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது. முன்பு ட்விட்டர் என அறியப்பட்ட பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளத்தை நாள்தோறும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த தளம் பயனர்களுக்கு செயலிழந்ததாகக் காட்டியது. இதையடுத்து, எக்ஸ் செயலிழந்துவிட்டதா என்ற கேள்வியை பிற சமூக வலைதள பக்கங்களில் பயனர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்தியாவில் செவ்வாய்க்கிழமை மாலை 5.03 மணி நேரப்படி எக்ஸ்-ல் சிக்கல் இருப்பதாக பலரும் புகார் அளித்தனர். அதேநேரத்தில், உலகின் … Read more

கோவையில் பிரதமர் மோடியை வரவேற்கும் பழனிசாமி – அரசியல் முக்கியத்துவம் என்ன?

கோவை: கோவைக்கு நாளை (நவ.19) வரும் பிரதமர் மோடியை, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வரவேற்கிறார். தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், இயற்கை விவசாயிகள் மாநாடு, கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நாளை (நவ.19) தொடங்கி மூன்று நாட்கள் நடக்கின்றன. இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை மதியம் 1.25 மணிக்கு புட்டபர்த்தியில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். கோவை விமான நிலையத்தில் பிரதமரை, ஆளுநர் … Read more

உடல்நிலை சரியில்லாத போதிலும் பிரதமர் கூட்டத்தில் பங்கேற்றது மகிழ்ச்சி: சசி தரூர்

புதுடெல்லி: கடுமையான சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்ட போதிலும், பிரதமர் மோடி உரையாற்றிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி என சசி தரூர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்பி சசி தரூர், பிரதமர் நரேந்திர மோடியை பல்வேறு தருணங்களில் புகழ்ந்து பேசி வருகிறார். இந்நிலையில், இன்று அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நாளிதழ் ஒன்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்றேன். அந்த நிகழ்ச்சியில், ஆக்கபூர்வமான பொறுமையின்மை என்ற தலைப்பில் பிரதமர் மோடி பேசினார். மேலும், காலனித்துவத்துக்குப் பிந்தைய மனநிலையை … Read more

ஒப்போ Find X9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: ஒப்போ நிறுவனம் ஒப்போ Find X9 ஸ்மார்ட்போன் சீரிஸை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. தற்போது ஒப்போ Find X9 புரோ மற்றும் Find X9 போன்கள் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு … Read more

வருவாய்த் துறையினர் போராட்டத்தை திமுக அரசு தூண்டுகிறது: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

திருநெல்வேலி: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளுக்கு எதிராக வருவாய்த் துறையினர் போராட்டம் நடத்த திமுக அரசு தூண்டுகிறது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார். திருநெல்வேலியில் வ.உ.சி-யின் நினைவு தினத்தை ஒட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வ.உ.சி-க்கு அஞ்சலி செலுத்துவதில் பெருமைப் படுகிறோம். சுதந்திரப் போராட்ட வீரர்களை கவுரவப்படுத்துவதில் முதல் ஆளாக இருப்பவர் பிரதமர் மோடி. திருநெல்வேலி மக்களுக்கு நான் என்றும் … Read more

‘மகளிர்க்கு ரூ.10,000 கொடுக்காமல் இருந்திருந்தால்…’ – ஜேடியு வெற்றியை விமர்சித்த பிகே

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, பெண்களுக்கு ரூ.10,000 கொடுக்காமல் இருந்திருந்தால் ஜேடியு 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றிருக்காது என்று ஜன சுராஜ் கட்சித் தலைவரும் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை அடுத்து பிரசாந்த் கிஷோர், பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். தேர்தலுக்கு முன்னதாக, ஜேடியு 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது என பிரசாந்த கிஷோர் கூறியது … Read more

‘பாஜகவுக்குச் சாமரம் வீசவே எஸ்ஐஆரை அதிமுக ஆதரித்தது’ – என்.ஆர்.இளங்கோ எம்.பி

சென்னை: பாஜகவுக்கு சாமரம் வீசுவதற்காகவே எஸ் ஐ ஆரை அதிமுக ஆதரித்தது என்றும் திமுகவினர் மீது அதிமுக விமர்சனம் வைப்பது இயலாமையின் வெளிப்பாடு என்றும் திமுக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, “ அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டான, திமுகவின் பிஎல்ஏ2-க்கள் மட்டும்தான் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு மட்டும்தான் கணக்கீட்டுப் படிவம் கொடுக்கப்படுகிறது என்பது உண்மைக்கு புறம்பான செய்தி. பிஎல்ஓ-க்கள் … Read more

‘தற்கொலை தாக்குதல் எனப்படுவது…’ – டெல்லி குண்டு வெடிப்பு குற்றவாளி உமர் நபியின் பழைய வீடியோ வெளியானது!

புதுடெல்லி: “தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இது ஒரு வகையான உயிர்த் தியாக நடவடிக்கை.” என டெல்லி கார் குண்டு வெடிப்பு நடத்திய மருத்துவர் உமர் நபி பேசியுள்ள வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. கடந்த 10-ம் தேதி டெல்லி – செங்கோட்டை பகுதியில் உமர் நபி இந்த தாக்குதலை நடத்தினார். அதற்கு முன்பாக இந்த வீடியோவை அவர் பதிவு செய்திருக்கலாம் எனத் தகவல். இந்த வீடியோவை ஆங்கில ஊடக நிறுவனம் ஒன்று … Read more