‘புலி வருது, புலி வருது’ என்பது போல – ஆந்திராவுக்கு மடைமாறிய முதலீடு: நயினார் நாகேந்திரன் கிண்டல்!

சென்னை: “தமிழக இளைஞர்களுக்குக் கிடைக்க வேண்டிய 20,000 நேரடி வேலைவாய்ப்புகள் இன்று பறிபோயுள்ளன. ‘புலி வருது, புலி வருது’ என்பது போல ஒவ்வொரு முறையும் தாங்கள் முதலீடு வருகிறது என்று விளம்பரம் வெளியிடுவதும், பின் அந்த முதலீடு அண்டை மாநிலத்திற்குச் சென்றுவிட்டதாய் செய்தி வருவதும் தொடர் கதையாகி வருகிறது.” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “முதலீடுகளைக் கோட்டை விடும் முதல்வரே, தமிழகத்தில் ரூ.1720 … Read more

மேயர் இல்லாததால் மதுரை மாநகராட்சியில் திமுக – மார்க்சிஸ்ட் இடையே அதிகார மோதல்!

மதுரை மாநகராட்சியில் திமுக 67 கவுன்சிலர்களை பெற்றிருந்தும், மேயர், மண்டலத் தலைவர்களை நியமனம் செய்யப்படாதது திமுக – மார்க்சிஸ்ட் கட்சிகளின் நிர்வாகிகள், கவுன்சிலர்கள் இடையே நிர்வாக ரீதியாக திரைமறைவு அதிகார மோதலை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேட்டில் கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டதால் மேயர் இந்திராணி பதவியை ராஜினாமா செய்தார். இந்த வழக்கில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட 5 மண்டலத் தலைவர்களும் ராஜினாமா செய்தனர். மேயர் இல்லாததால் இயல்பாகவே துணை மேயர் நாகராஜன், மேயர் (பொ) … Read more

அதிமுகவுடன் தவெக கூட்டணி வைக்க 1% கூட வாய்ப்பு இல்லை: சிடிஆர் நிர்மல்குமார்

சென்னை: “எங்கள் கொள்கை எதிரியான பாஜகவுடனும், அந்த கட்சியுடன் கூட்டணியில் உள்ள எந்த கட்சியோடும் கூட்டணி வைக்க 1% கூட வாய்ப்பு இல்லை.” என அதிமுகவுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு தவெக இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் பதிலளித்தார். மதுரையில் செய்தியாளர்களிடம் நிர்மல் குமார் பேசுகையில், “எஸ்ஐஆரால் தமிழகத்தில் கோடிக்கணக்கான மக்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் உள்ளது. இதனால்தான் இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக இன்று தவெக சார்பில் தமிழகம் முழுவதும் … Read more

நீர் நிலைகளில் குளிக்க தடை விதிக்க தமிழக அரசு அறிவுரை

சென்னை: தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்: தேங்கிய நீர், அசுத்தமான அல்லது மாசடைந்த நீரில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரும் குளிக்கக்கூடாது. குளம், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகள் அனைத்தும் தூய்மையான சூழலில் இருப்பதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும். தனியார் மற்றும் அரசு நீச்சல் குளங்கள் அனைத்தும் அரசு வழிகாட்டுதலின்படி தூய்மையாக பராமரிக்க வேண்டும். தண்ணீரில் குறிப்பிட்ட அளவு குளோரின் கலந்திருத்தல் வேண்டும். மூளையழற்சி அறிகுறிகளுடன் மருத்துவமனைகளுக்கு வருபவர்களை … Read more

தவெக கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் நாமக்கல் ஏஎஸ்பியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கரூர்: தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பாக நாமக்​கல் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் மற்​றும் சம்​பவத்​தில் காயமடைந்த தாய், மகளிடம் சிபிஐ அதி​காரி​கள் நேற்று விசா​ரணை நடத்​தினர். கரூர் வேலு​சாமிபுரத்​தில் செப். 27-ம் தேதி விஜய் பங்​கேற்ற தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கை விசா​ரித்து வரும் சிபிஐ அதி​காரி​கள், 300-க்​கும் மேற்​பட்​ட​வர்​களுக்கு சம்​மன் அனுப்பி விசா​ரணை … Read more

எஸ்ஐஆரில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது – தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தவெக வலியுறுத்தல்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் தவெகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமை தாங்கினார். தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, மாவட்டச் செயலாளர்கள் அப்புனு,பாலமுருகன், குமார், சரவணன், தாமு, திலீப் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள் பேசியதாவது: தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்: எஸ்ஐஆர் … Read more

தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகேதாட்டுவில் அணை ​கட்ட முடியாது: அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்

காட்​பாடி: வேலூர் மாவட்​டம் காட்​பாடி காந்தி நகர்ப் பகு​தி​யில் உள்ள இல்​லத்​தில் நீர்​வளத் துறை அமைச்​சர் துரை​முரு​கன் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: மேகே​தாட்டு அணை விவ​காரத்​தில் தமிழகத்​தின் உரிமை​யைத் தமிழக அரசு விட்​டுக்​கொடுப்​ப​தாக அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி மற்​றும் எதிர்க்​கட்​சிகள் விமர்​சனம் செய்​கின்​றனர். அவர்​களின் இது​போன்ற குற்​றச்​சாட்​டு​களுக்​குப் பதில் அளிக்க முடி​யாது. யார் முயற்சி செய்​தா​லும், உச்ச நீதி​மன்​றமோ அல்​லது காவிரி ஒழுங்​காற்று ஆணை​ய​மாகக்​கூட இருந்​தா​லும் தமிழக அரசின் ஒப்​புதல் இல்​லாமல் மேகே​தாட்​டு​வில் கர்​நாடக அரசால் … Read more

2026 அமைச்சரவையில் தேமுதிக இடம்பெறும்! –  பிரேமலதா நம்பிக்கை

வரும் 2026 தமிழக அமைச்சரவையில் தேமுதிக இடம்பெறும் வாய்ப்பு உருவாகும் என்று பிரேமலதா தெரிவித்தார். தேமுதிகவின் ‘இல்லம் தேடி, உள்ளம் நாடி’ சுற்றுப் பயணத்தின் 3-ம் கட்ட பிரச்சாரத்தை மதுரையில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று தொடங்கினார். முன்னதாக, மாநகர் தெற்கு மாவட்டம் சார்பில் கூடல்நகரில் நடந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசியதாவது: டிச. 28-ல் விஜயகாந்த் குருபூஜையும், ஜன. 9-ல் கடலூரில் கட்சி மாநாடும் நடக்கிறது. தமிழகம் முழுவதும் மற்ற … Read more

பாமக யாருடன் கூட்டணி? – விரைவில் அறிவிப்பதாக ராமதாஸ் தகவல்

சட்டப்பேரவை தேர்தலுக்கு யாருடன் கூட்டணி அமைக்கப்படும் என்று விரைவில் அறிவிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை பாமக கிழக்கு மாவட்டம் சார்பில் நெமிலியில் நேற்று பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: மதுப் பழக்கத்தை ஒழித்தால்தான் சமுதாயமும், நாடும் முன்னேறும். விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு சரியான விலை கிடைக்க வேண்டும். ஏழைக்கு ஒரு கல்வி, நடுத்தர மக்களுக்கு ஒரு கல்வி, பணக்காரர்களுக்கு ஒரு கல்வி என்பதுபோல கல்வியின் நிலைமை உள்ளது.வன்னியர்களுக்கு மட்டுமின்றி … Read more

தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சா? – இல்லவே இல்லை என்கிறார் செல்வப்பெருந்தகை

தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியான நிலையில், அதை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திட்டவட்டமாக மறுத்துள்ளார். பிஹார் தேர்தல் வெற்றியால் பாஜக மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளா மாநில தொண்டர்களுக்கு இந்த வெற்றியால் புது சக்தி கிடைத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பார்வை அடுத்ததாக தமிழகம் நோக்கி திரும்பியுள்ளது. Source link