திமுகவினர் பணம் சம்பாதிக்க மட்டுமே பயன்படுகிறது அறநிலையத் துறை: அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: இந்து சமய அறநிலை​யத் துறை முழுக்க முழுக்க திமுக​வினர் பணம் சம்​பா​திக்க மட்​டுமே பயன்​படுத்​தப்​படு​கிறது. ஆலய மேம்​பாட்​டுக்​குப் பயன்​படுத்​தப்​படு​வது இல்லை என்று தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை குற்​றம்​சாட்​டி​யுள்​ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலை​தளப் பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: ஈரோடு மாவட்​டம் பவானி சங்​கமேஸ்​வரர் கோயில் மேற்கு மதில்​சுவர் அருகே கோயில் நிர்​வாகத்​தால் அடை​யாளப்​படுத்​தப்​பட்ட 3,150 சதுரஅடி பரப்​பில், நவ.14-ம் தேதி முதல் 2026 ஜன.12-ம் தேதி வரை 60 நாட்​களுக்கு தற்​காலிக கடைகள் … Read more

பிஹார் துணை முதல்வர் கார் மீது தாக்குதல்

பாட்னா: பிஹார் துணை முதல்​வரும் பாஜக மூத்த தலை​வரு​மான விஜய் குமார் சின்​ஹா, லக்​கி​சா​ராய் தொகு​தி​யில் போட்​டி​யிடு​கிறார். அங்​குள்ள வாக்​குச் சாவடிக்கு அவர் நேற்று சென்​றார். அப்​போது ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) தொண்​டர்​கள் அவரது காரை சூழ்ந்து தாக்க முயன்​றனர். கற்​கள் மற்​றும் காலணி​களை கார் மீது வீசி எறிந்​தனர். அங்கு பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டிருந்த போலீ​ஸார், துணை முதல்​வர் விஜய் குமார் சின்​ஹாவை பாது​காப்​பாக அனுப்பி வைத்​தனர். இதுகுறித்து விஜய் குமார் சின்ஹா கூறும்​போது, … Read more

பெட்டிக் கடைகளில் விநியோகிக்கப்படும் எஸ்ஐஆர் படிவங்கள்: தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக எம்.பி. இன்பதுரை புகார் 

சென்னை: எஸ்​ஐஆர் படிவங்​களை வாக்​குச்​ சாவடி நிலை அலு​வலர்​கள் வீடு வீடாக வழங்​காமல் பெட்​டிக் கடைகளில் மொத்​த​மாக கொடுத்து விநி​யோகிப்​பதை தடுக்க வேண்​டும் என்று தலைமை தேர்​தல் அதி​காரி​யிடம் அதி​முக எம்​.பி. இன்​பதுரை புகார் மனு அளித்​துள்​ளார். இதுதொடர்பாக தலை​மைச் செல​கத்​தில் நேற்று தமிழக தலைமை தேர்​தல் அதி​காரி​யிடம் புகார் மனு ஒன்றை அவர் அளித்​தார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: வாக்​காளர் பட்​டியல் நேர்​மை​யாக இருந்​தால்​தான் தேர்​தலும் நேர்​மை​யாக நடக்​கும். அந்த வாக்​காளர் பட்​டியலில் இறந்து … Read more

ரொட்டியை திருப்ப வேண்டும்: லாலு கருத்து

பாட்னா: பிஹாரில் முதல்கட்ட தேர்தல் நேற்று நடந்தது. இதில் முன்​னாள் முதல்​வரும் ராஷ்டி​ரிய ஜனதா தளம் தலை​வரு​மான லாலு பிர​சாத் யாதவ் நேற்று பாட்​னா​வில் உள்ள ஒரு வாக்​குச்​சாவடி​யில் தனது மனைவி ராப்ரி தேவி, மகனும் முதல்​வர் வேட்​பாள​ரு​மான தேஜஸ்வி யாதவ் ஆகியோ​ருடன் சென்று வாக்​களித்​தார். இது தொடர்​பான புகைப்​படத்தை ‘எக்​ஸ்’ தளத்​தில் அவர் பகிர்ந்து கொண்​டுள்​ளார். இதில், “தவா​வில் உள்ள ரொட்​டியை புரட்​டிப்​போட வேண்​டும். இல்​லா​விடில் அது கரு​கி​விடும். 20 ஆண்​டு​கள் என்​பது (நி​திஷ் குமாரின் … Read more

பாஜகவுடன் கூட்டணியால் எஸ்ஐஆர் முறையை எதிர்க்க மறுக்கும் அதிமுக: கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் விமர்சனம் 

சென்னை: எஸ்​ஐஆர் ஆபத்து நிறைந்​தது என தெரிந்​திருந்​தும் பாஜக​வுட​னான கூட்​ட​ணி​யால் அதி​முக அதை எதிர்க்க முடி​யாமல் இருப்​ப​தாக இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சிகள் விமர்சித்​துள்​ளன. ரஷ்ய நவம்​பர் புரட்சி தின கொண்டாட்டத்தையொட்டி இந்​தியகம்​யூனிஸ்ட் மற்​றும் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சிகளின் சார்​பில் 108-வது நவம்பர் புரட்சி தின கொடியேற்ற நிகழ்ச்சி சென்னையில் இருகட்சிகளின் மாநிலக் குழு அலு​வல​கங்​களி​லும் நேற்று நடை​பெற்​றது. பாலன் இல்​லத்​தில் இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செயலா​ளர் மு.வீர​பாண்​டியன் கொடியேற்​றி​னார். பின்​னர் செய்​தி​யாளர்களிடம் அவர் கூறும்போது, … Read more

நாடு முழுவதும் பொது இடங்களில் திரியும் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ​நாடு முழு​வதும் பொது இடங்​களில் திரி​யும் தெரு நாய்​களுக்கு முறையாக கருத்தடை செய்து, தடுப்பூசி போட்டு, காப்​பகங்​களில் அடைக்குமாறு உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. தெரு நாய் மேலாண்மை திட்​டங்களை செயல்​படுத்த 4 வாரங்​களுக்​குள்வழி​காட்டு செயல்​முறை​களை உரு​வாக்​கு​மாறு இந்​திய விலங்​கு​கள் நல வாரி​யத்​துக்​கும் உத்​தர​விடப்பட்​டுள்​ளது. டெல்​லி​யில் சிறு​வர்​களை தெரு நாய்​கள் கடித்து ரேபிஸ் தொற்று ஏற்​பட்​டது குறித்து ஊடகங்​களில் செய்​தி​கள் வெளி​யாகின. நாடு முழு​வதும் இந்த பிரச்​சினை இருப்​ப​தாக பலரும் சமூக வலை​தளங்​களில் கருத்​துகளை பதிவிட்​டனர். இதையடுத்து, … Read more

மநீம தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள்: வீட்டுக்குச் சென்று முதல்வர் வாழ்த்து

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் அவரது வீட்டுக்குச் சென்று வாழ்த்து தெரிவித்தனர். கமல்ஹாசனின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘பன்முகத் திறமையோடு தமிழ்த் திரையுலகை உலகத் தரத்துக்கு கொண்டுச் செல்லும் தீராத கலைதாகமும் தணியாத நாட்டுப்பற்றும் கொண்டு, என் மீது அளவற்ற அன்போடு தோழமை பாராட்டும் கலைஞானி … Read more

புதிய டிஜிபியை நியமிக்கும் விவகாரத்தில் 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு 

புதுடெல்லி: தமிழக டிஜிபி நியமனம் தொடர்​பாக தாக்​கல் செய்​யப்​பட்ட நீதி​மன்ற அவம​திப்பு வழக்​கில் 3 வாரங்​களுக்​குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. சென்​னையைச் சேர்ந்த கிஷோர் கிருஷ்ண​சாமி சார்​பில் வழக்​கறிஞர் எம்.வீர​ராகவன் தாக்​கல் செய்​துள்ள நீதி​மன்ற அவம​திப்பு வழக்​கில், தற்​போதுள்ள டிஜிபி பதவிக்​காலம் முடி​யும் முன்​னரே, அடுத்த டிஜிபிக்​கான பெயர் பட்​டியலை யுபிஎஸ்​சிக்கு குறைந்​த​பட்​சம் 3 மாதங்​களுக்கு முன் அனுப்பி வைக்க வேண்​டும். தற்​காலிக டிஜிபி என யாரை​யும் எந்த மாநில​மும் நியமிக்​கக் … Read more

திருச்செந்தூர் கோயிலில் தரிசன முன்பதிவு ஏற்படுத்த வழக்கு – உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை: திருச்செந்தூர் கோயிலில் தரிசன முன்பதிவு திட்டத்தை நிறைவேற்றக் கோரிய மனுவுக்கு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை புழுதிவாக்கத்தைச் சேர்ந்த ராஜேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் சிறப்பு தரிசன டிக்கெட் பெற 5 முதல் 7 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதுள்ளது. பக்தர்கள் வரிசையில் காத்திருக்கும் இடத்தில் மேற்கூரை, குடிநீர், … Read more

ராஷ்டிரிய ஜனதா தளமும், காங்கிரஸும் ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவு: பிஹார் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு

பாட்னா: ராஷ்டிரிய ஜனதா தளமும், காங்​கிரஸும் ஊடுரு​வல்​காரர்​களுக்கு ஆதர​வாக செயல்​படு​கின்றன என்று பிரதமர் நரேந்​திர மோடி குற்​றம் சாட்டி உள்​ளார். பிஹாரில் இரண்​டாம் கட்​ட​மாக வரும் 11-ம் தேதி 122 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்கு தேர்​தல் நடக்​கிறது. அரரியா சட்​டப்​பேர​வைத் தொகு​தி​யில் தேசிய ஜனநாயக கூட்​டணி வேட்​பாளர்​களுக்கு ஆதர​வாக பிரதமர் நரேந்​திர மோடி நேற்று வாக்கு சேகரித்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: பிஹாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் 15 ஆண்​டு​கள் ஆட்சி நடத்​தி​யது. அன்​றைய காட்​டாட்​சி​யில் பிஹாரின் வளர்ச்சி … Read more