“தவெகவினருக்கு எஸ்ஐஆர் படிவம் கிடைக்கவிடாமல் தடுக்கப்படுகிறது” – விஜய் குற்றச்சாட்டு

சென்னை: “எஸ்ஐஆர் படிவம், தவெகவினருக்கு கிடைப்பதில்லை, கொடுக்க மறுக்கிறார்கள் என்ற புகார் எழுந்துள்ளது. தற்போது ஆட்சியில் இருப்பவர்கள், அவர்களுக்கு கைப்பாவையாக இருக்கக் கூடியவர்கள்தான் இதைச் செய்கிறார்கள்” என்று விஜய் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியது: “இந்திய அரசியல் சாசனம், தமிழக மக்கள் அனைவருக்கும் கொடுத்துள்ள உரிமையில் மிகவும் முக்கியமானது வாக்குரிமை. ஒரு மனிதன் உயிரோடு இருக்கிறான் என்பதற்கு அடையாளமாக இருப்பதில் அவனது ஓட்டுரிமை மிகவும் முக்கியம். அதனால்தான், வாக்குரிமை … Read more

பாஜகவுக்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைக்க காங்கிரஸ் தவறிவிட்டது: சிபிஎம்

திருவனந்தபுரம்: பாஜகவுக்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைப்பதில் காங்கிரஸ் தவறிவிட்டதாக சிபிஎம் குற்றம் சாட்டியுள்ளது. பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மெகா கூட்டணியில் (இண்டியா கூட்டணி) இடதுசாரி கட்சிகள் இடம் பெற்றிருந்தன. சிபிஐ (எம்எல்) 20 தொகுதிகளிலும், சிபிஐ 9 தொகுதிகளிலும், சிபிஎம் 4 தொகுதிகளிலும் போட்டியிட்டன. மொத்தம் 33 தொகுதிகளில் போட்டியிட்ட போதிலும் 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றன. இந்த தேர்தல் முடிவு இடதுசாரிகளுக்கு பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பாஜகவின் தொடர் வெற்றியைத் தடுப்பதற்கு ஏற்ப … Read more

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு கழிப்பறை வசதியுடன் ஓய்வு அறைகள்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு 300 சதுர அடியில் கழிப்பறை வசதியுடன் ஓய்வு அறைகள் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு, குடியிருப்புகளுக்கான வீடுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கக்கூடிய நிகழ்ச்சி சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும், தூய்மைப் பணியாளர்களுக்காக பிரத்யேகமாக, 300 சதுர அடி அளவில் உடை மாற்றும் அறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் ஓய்வறைகள் கட்டப்பட்டு, … Read more

பிஹார் தேர்தல்: 23% வாக்குகளுடன் ஆர்ஜேடி முதலிடம்

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டாலும், வாக்கு சதவீதத்தில் ஆர்ஜேடி முதலிடம் பிடித்துள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், பாஜக 89 தொகுதிகளிலும், ஜேடியு 85 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 19 தொகுதிகளிலும், இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 5 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 4 இடங்களிலும் வெற்றி … Read more

நான்கு ஆண்டுகளாக எதையும் செய்யாத திமுகவை நம்பி கிறிஸ்தவர்கள் ஏமாறக்கூடாது: பாஜக

மதுரை: தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டு ஆட்சியில் எதையும் செய்யாத திமுகவை நம்பி கிறிஸ்தவர்கள் ஏமாறக்கூடாது என பாஜக கல்வியாளர் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது. தமிழக பாஜக கல்வியாளர் பிரிவு மாநிலச் செயலாளர் கல்வாரி என். தியாகராஜன் இது குறித்து கூறியதாவது: தமிழகத்தில் வாழும் கிறிஸ்தவர்களை திமுக வெறும் வாக்கு வங்கியாக மட்டும் பயன்படுத்தி வருகிறது. நான்கு ஆண்டு கால திமுக ஆட்சியில் கிறிஸ்தவர்களுக்கு எவ்விதமான நல திட்டங்களையும் கொண்டு வரவில்லை. சிறுபான்மையினர் நலத்திட்டங்களுக்கு மத்திய அரசு கொடுத்த … Read more

நவ்காம் காவல் நிலைய குண்டுவெடிப்பு எதிர்பாராத நிகழ்வு: மத்திய அரசு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு எதிர்பாராத நிகழ்வு என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஜம்மு காஷ்மீர் பிரிவு இணை செயலாளர் பிரசாந்த் லோகண்டே தெரிவித்துள்ளார். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜம்மு காஷ்மீரில் சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒட்டப்பட்ட சுவரொட்டியில் இருந்து பெறப்பட்ட துப்புகளின் அடிப்படையில் நவ்காம் காவல்துறை, சமீபத்தில் மிகப் பெரிய வெடிகுண்டுகள் தொகுதியைக் கைப்பற்றியது. இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 162/2025 முதல் தகவல் … Read more

நான்கு ஆண்டுகளாக எதையும் செய்யாத திமுகவை நம்பி கிறிஸ்தவர்கள் ஏமாறக்கூடாது: பாஜக

மதுரை: தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டு ஆட்சியில் எதையும் செய்யாத திமுகவை நம்பி கிறிஸ்தவர்கள் ஏமாறக்கூடாது என பாஜக கல்வியாளர் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது. தமிழக பாஜக கல்வியாளர் பிரிவு மாநிலச் செயலாளர் கல்வாரி என். தியாகராஜன் இது குறித்து கூறியதாவது: தமிழகத்தில் வாழும் கிறிஸ்தவர்களை திமுக வெறும் வாக்கு வங்கியாக மட்டும் பயன்படுத்தி வருகிறது. நான்கு ஆண்டு கால திமுக ஆட்சியில் கிறிஸ்தவர்களுக்கு எவ்விதமான நல திட்டங்களையும் கொண்டு வரவில்லை. சிறுபான்மையினர் நலத்திட்டங்களுக்கு மத்திய அரசு கொடுத்த … Read more

ஜம்மு காஷ்மீர் நவ்காம் காவல்நிலையத்தில் குண்டுவெடிப்பு: 9 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல்நிலையத்தில், ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களை ஆய்வு செய்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் 32 பேர் படுகாயமடைந்துள்ளனர். கடந்த 10-ம் தேதி டெல்லியில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் ஏராளமான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. அந்த வெடிபொருட்கள் ஆய்வுக்காக ஜம்மு காஷ்மீர் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவை வெடித்துள்ளன. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோ் காவலர்கள் மற்றும் தடயவியல் அதிகாரிகள் என்றும் இருவர் ஸ்ரீநகர் நிர்வாகத்தைச் … Read more

பிஹார் தேர்தல் முடிவு அனைவருக்கும் பாடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அனைவருக்கும் பாடங்களை வழங்கியுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டுள்ளார். பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் கடந்த 6, 11 ஆகிய தேதி​களில் 2 கட்​ட​மாக நடை​பெற்​றது. வாக்கு எண்ணிக்கை நேற்று நடை​பெற்​று, முடிவு​கள் அறிவிக்​கப்​பட்​டன. மொத்​தம் உள்ள 243 தொகு​தி​களில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி 202 இடங்​களைக் கைப்​பற்றி அமோக வெற்றி பெற்​றுள்​ளது. மெகா கூட்ட​ணிக்கு 35 இடங்​கள் மட்​டுமே கிடைத்​தன. இந்நிலையில் பிஹார் தேர்தல் முடிவு … Read more

கடந்த 2004-2025 வரை 20 ஆண்டுகளில் 95 தேர்தலிகளில் தோல்வி அடைந்த ராகுல்: வரைபடம் வெளியிட்டு பாஜக விமர்சனம்

புதுடெல்லி: காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்​தி, கடந்த 20 ஆண்​டு​களில் 95 தேர்​தல்​களில் தோல்வி அடைந்​துள்​ளார் என்று பாஜக ஐ.டி. பிரிவு தலை​வர் அமித் மாள​வியா விமர்​சித்​துள்​ளார். பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பதி​வான வாக்​கு​கள் நேற்று எண்​ணப்​பட்​டது. ஆளும் ஐஜத – பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​டணி கடந்த 2020-ம் ஆண்டு தேர்​தலை விட அதிக தொகு​தி​களைக் கைப்​பற்​றியது. இதுகுறித்து பாஜக ஐ.டி. பிரிவு தலை​வர் அமித் மாள​வியா நேற்று சமூக வலை​தளத்​தில் ஒரு … Read more