எம்பி, எம்எல்ஏ மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகும் தாமதிக்க கூடாது: தலைமை நீதிபதி அமர்வு கண்டிப்பு 

சென்னை: ‘எம்​.பி, எம்​எல்​ஏ-க்​களுக்கு எதி​ரான வழக்​கு​களில் குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​யப்​பட்ட பிறகும் குற்​றச்​சாட்​டுப்​ப​திவை மேற்​கொள்​ளாமல் காலம் தாழ்த்​து​வது ஏற்​புடையதல்ல’ என சிறப்பு நீதி​மன்​றங்​களை உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி அமர்வு கண்​டித்​துள்​ளது. உச்ச நீதி​மன்ற உத்​தர​வுப்​படி தமிழகம் முழு​வதும் சிறப்பு நீதி​மன்​றங்​களில் நிலு​வை​யில் உள்ள எம்​.பி,எம்​எல்​ஏ-க்​கள் மீதான வழக்கு விசா​ரணை​களைக் கண்​காணித்து வரும் சென்னை உயர் நீதி​மன்​றம் இது தொடர்​பாக கடந்த 2020-ம் ஆண்டு தாமாக முன்​வந்து வழக்​காக எடுத்து விசா​ரணை நடத்தி வரு​கிறது. இந்த வழக்கு … Read more

காரில் இருந்தது ராணுவத்தில் பயன்படுத்தும் வெடிமருந்தா?

புதுடெல்லி: டெல்லியில் கார் குண்டு வெடித்த இடத்தில், ஐ20 காரின் டயர்கள், காரின் உடைந்த பாகங்கள், 42 மாதிரிகளை தடயவியல் குழுக்கள் சேகரித்துள்ளன. பவுடர் போன்ற பொருளும் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் இன்னும் சில நாட்களில் வெளியாகும். அப்போது வெடிகுண்டில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் என்ன என்பது தெரிந்து விடும். அவை ராணுவத்தில் பயன்படுத்தப்படும் வெடிமருந்து பொருட்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது. பென்டாரித்ரிட்டோல் டெட்ரா நைட்ரேட் (பிஇடிஎன்) வெடிமருந்து பொருள் நைட்ரோகிளிசரின் வகையை சேர்ந்ததுதான். இதில் … Read more

எஸ்ஐஆர் திருத்தம்: ஆன்லைனில் கணக்கீட்டு படிவத்தை நிரப்ப வழிகாட்டு முறை – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

சென்னை: இணையதளம் மூலம் கணக்கீட்டு படிவம் பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்களை தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2002,2005 -ன் வாக்காளர் பட்டியலில் வாக்காளர் தங்களது விவரங்களை https://www.voters.eci.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம். இதுதவிர, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இணையதள மான https://voters.eci.gov.in- ல் கணக்கீட்டு படிவத்தை (Enum eration Form) நிரப்புவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் அல்லது … Read more

செங்கோட்டையில் ஜனவரி 26-ம் தேதியே தாக்குதல் நடத்த சதி?

புதுடெல்லி: டெல்லி செங்​கோட்​டை​யில் கடந்த ஜனவரி 26ம் தேதியே தாக்​குதல் நடத்த திட்​ட​மிட்​ட​தாக​வும் அந்த முயற்சி முறியடிக்​கப்​பட்​ட​தாக​வும் தகவல் வெளி​யாகி உள்​ளது. டெல்லி குண்டுவெடிப்பு வழக்கு தேசிய புல​னாய்வு முகமை (என்​ஐஏ) வசம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து காவல் துறை உயர் அதி​காரி ஒரு​வர் கூறிய​தாவது: ”கைது செய்​யப்​பட்​டுள்ள மருத்​து​வர் முஜம்​மிலிட​மிருந்து பறி​முதல் செய்​யப்​பட்ட செல்​போனை ஆய்வு செய்து வரு​கிறோம். குறிப்​பாக, அவர் தாக்​குதலுக்கு முன்பு யாருடன் தொடர்பு கொண்​டார் என்​பதை ஆய்வு செய்​தோம். அப்​போது அந்த செல்​போனில் … Read more

திமுக அரசின் சாதனைகளை விளம்பரப்படுத்த வேண்டும்: கட்சி நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: ​தி​முக அரசின் சாதனை​களை தொகுதி முழு​வதும் விளம்​பரப்​படுத்த வேண்​டும் என்று ‘உடன்​பிறப்பே வா’ நிகழ்ச்​சி​யில் நிர்​வாகி​களுக்கு முதல்​வர் ஸ்டா​லின் அறி​வுறுத்​தி​யுள்​ளார். தமிழக சட்​டப்​பேரவை பொதுத் தேர்​தல் 2026-ம் ஆண்டு நடை​பெற உள்​ளது. இதையொட்​டி, திமுக தலை​வரும், முதல்​வரு​மான ஸ்டா​லின், கட்சி நிர்​வாகி​களை நேரடி​யாக (ஒன் டு ஒன்) சந்​திக்​கும் ‘உடன்​பிறப்பே வா’ என்ற சந்​திப்பு நிகழ்ச்சி நடத்​தப்​பட்டு வரு​கிறது. சென்னை அண்ணா அறி​வால​யத்​தில் இது​வரை 81 தொகு​தி​களின் நிர்​வாகி​களை ஸ்டா​லின் நேரடி​யாக சந்​தித்து ஆலோ​சனை நடத்​தி​யுள்​ளார். … Read more

ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட் சரண்: ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டவர்

லதேகர்: மாவோயிஸ்ட்களை ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. தேடுல் வேட்டைகள் நடத்தப்படும் அதே நேரத்தில், சரணடையும் மாவோயிஸ்ட்களுக்கு மறுவாழ்வுக்கு தேவையான உதவிகளும் அளிக்கப்படுகின்றன. இதனால் சரணடையும் மாவோயிஸ்ட்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் லதேகர் மாவட்டத்தில் போலீஸார் முன்னிலையில், 2 மாவோயிஸ்ட்கள் சரணடைந்தனர். அவர்களில் ஒருவர் கும்லா மாவட்டத்தைச் சேர்ந்த ராகேஷ் ஜி என்ற பிரஜேஷ் யாதவ். இவர் மாவோயிஸ்ட் அமைப்பில் துணை மண்டல கமாண்டராக இருந்தார். இவரை பற்றி தகவல் தெரிவிப்போருக்கு … Read more

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு: முதல்வர் அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2025 ஜூலை 1-ம் தேதி முதல் முன்தேதியிட்டு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்படுகிறது. பெரும்பாலும், 3 அல்லது 4 சதவீத உயர்வு அறிவிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. அடிப்படை சம்பளம் அடிப்படையில் கணக்கிடப்படும் இந்த அகவிலைப்படியானது 100 சதவீதம் என்ற அளவுக்கு வரும்போது, அடிப்படை … Read more

டெல்லியில் வெடித்த காரை மருத்துவர் உமர் ஓட்டிச் சென்றது டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி!

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டையில் வெடித்த ஐ20 காரை ஓட்டிச் சென்ற மருத்துவர் உமர் நபியின் டிஎன்ஏ மாதிரிகள், அவரது தாயாரின் டிஎன்ஏ மாதிரிகளுடன் ஒத்துப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லி செங்கோட்டை அருகே கடந்த திங்கட்கிழமை கார் வெடிகுண்டு வெடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். இதில் டாக்டர் உமர் முகமது கார் வெடி குண்டை வெடிக்கச் செய்ததில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்தச் சூழலில், காரில் குண்டை வெடிக்கச் … Read more

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுமா? – அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரிய மனுவுக்கு, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை ஏழுமலையைச் சேர்ந்த ராம ரவிக்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு திருப்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலை வழக்கில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த … Read more

வீடு கட்டித் தருவதாக ரூ.14,599 கோடி மோசடி: நொய்டாவில் ரியல் எஸ்டேட் நிறுவனர் கைது

புதுடெல்லி: ஜேபி இன்ஃபராடெக் லிட். எனும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான மனோஜ் கவுரை, பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. டெல்லி அருகேயுள்ள நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2007 முதல் செயல்பட்டு வரும் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஜேபி இன்ஃபராடெக் லிட். குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களைக் கட்டும் இந்நிறுவனம், நொய்டாவில் இருந்து ஆக்ரா வரையிலான 165 கிலோ மீட்டர் தொலைவுள்ள ஆறு வழி எக்ஸ்பிரஸ் வழித்தட பரமாரிப்பையும் … Read more