பா.ஜனதாவுக்கு கூடுவது காக்கா கூட்டம்- செல்லூர் ராஜூ கடும் தாக்கு

மதுரை: முன்னாள் அமைச்சரும், மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான செல்லூர் ராஜூ இன்று மதுரையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:- அ.தி.மு.க என்றும் தமிழக மக்களுக்காக சேவை செய்கின்ற இயக்கமாகும். தமிழகத்தைப் பொறுத்தவரை அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகள் தான் பிரதான இயக்கம். ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இளைஞராக இருக்கிறார். அவரும் அவரது கட்சி நிர்வாகிகளை ஊக்கப்படுத்துவதற்காக பல்வேறு வகைகளில் அரசியல் செய்கிறார். தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பாக பணியாற்றினார். … Read more

மதுரை, விழுப்புரம், திருவண்ணாமலை கலெக்டர்களுக்கு பசுமை விருது- மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.3.42 கோடி மதிப்பீட்டிலான 25 மின் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், உலக சுற்றுச்சூழல் தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு சிறப்பான பங்களிப்பு ஆற்றியதற்காக மதுரை, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்களுக்கு பசுமை விருதும் மற்றும் ஐந்து தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்களைப் … Read more

'இன்னும் 1028 நாட்கள் மட்டுமே இருக்கிறது' – பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் போராட்டம் நடத்திய பெண்

பாரிஸ்: பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் போட்டியின் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், குரோஷிய வீரர் மரின் சிலிச் மோதினர். இந்த போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பெண் ஒருவர் மைதானத்திற்குள் நுழைந்து தனது கழுத்தை, டென்னிஸ் வலையில் கட்டிக்கொண்டார். அவரது ஆடையில் ‘இன்னும் 1028 நாட்கள் மட்டுமே இருக்கிறது’ என ஐநா குறிப்பிட்ட காலநிலை குறித்த எச்சரிக்கை வாசகம் அதில் எழுதியிருந்தது. இதையடுத்து அவரை பாதுகாப்பு … Read more

தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்வதில் அ.தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க. 3 கட்சிகளும் முட்டி மோதுகின்றன

சென்னை: ஆளும் கட்சியை எதிர்த்தும், விமர்சித்தும் அரசியல் செய்வதுதான் எதிர்கட்சிகளின் வேலை. அந்த வகையில் தமிழ்நாட்டில் தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்வதில் பிரதான எதிர்கட்சியான அ.தி.மு.க. மட்டுமில்லாமல் பா.ஜனதா, பா.ம.க. ஆகிய கட்சிகளும் முட்டி மோதுகின்றன. கடந்த தேர்தலில் அ.தி.மு.க. 66 இடங்களில் வெற்றி பெற்று எதிர்கட்சியானது. அதே நேரம் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவால் டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. தனியாக போட்டியிட்டது. அந்த கட்சி பெற்ற வாக்குகளால் 15 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்தது. எனவே … Read more

அண்ணாமலைக்கு தி.மு.க. பதிலடி: மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம் இருக்கும்- அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆன்லைன் ரம்மி லாட்டரி உள்ளிட்டவற்றை ஒழிக்க வேண்டியதில் இபிஎஸ், ஓபிஎஸ்சை விட எங்களுக்கு அக்கறை அதிகம், ஆன்லைன் ரம்மி தொடர்பான சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு தற்போது அது நிலுவையில் உள்ளது, எனவேதான் புதிய சட்டம் கொண்டு வரவில்லை, ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட சட்டம் நீதி மன்றத்தில் உள்ளதால் அதிலேயே சிறந்த முறையில் வாதாடி நிச்சயமாக நிறைவேற்றி விட முடியும் … Read more

செஸ் ஒலிம்பியாட் போட்டி: சென்னை விமான நிலையத்தில் சிறப்பு கவுண்டர் அமைக்க முடிவு

சா்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகின்ற ஜுலை 27-ந் தேதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி வரை தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடக்க உள்ளது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 2,500 க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனா். இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் வெளி நாட்டு வீரா், வீராங்கனைகள் அனைவரும் தங்கள் நாடுகளிலிருந்து விமானங்களில் சென்னை விமானநிலையம் வந்து அவா்கள் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள நட்சத்திர ஓட்டல்களுக்கு செல்கின்றனா். அதைப்போல் … Read more

நெல்லை அருகே சோகம்- காருக்குள் சிக்கி 3 குழந்தைகள் மூச்சுத்திணறி பலி

நெல்லை பணகுடி அருகே லெப்பை குடியிருப்பில் நிறுத்திவைக்கப்பட்ட காருக்குள் விளையாடச்சென்ற 3 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் நித்திஷா (7), நித்திஷ் (4) மற்றும் கபிலன் (4) ஆகிய குழந்தைகள் விளையாடச் சென்றுள்ளனர். ஆனால் குழந்தைகளால் கார் கதவு உள்பக்கத்தில் இருந்து  திறக்க முடியவில்லை. இதனால் குழந்தைகள் காப்பாற்றும்படி கூச்சலிட்டுள்ளனர். ஆனால் அவர்களின் அலறல் சத்தம் வெளியில் யாருக்கும் கேட்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில், வெகு நேரமாகியும் குழந்தைகளை காணவில்லை … Read more

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை- துப்பாக்கிகள் பறிமுதல்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஆனந்தநாக் மாவட்டம் ராஜிப்புரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அங்கு விரைந்து சென்றனர், அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர். இதில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த நிஷார் காண்டே என்ற பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் அந்த அமைப்பின் தளபதியாக செயல்பட்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.இந்த துப்பாக்கி சூட்டில் 3 போலீசார் … Read more

சென்னையில் சொகுசு கப்பல் சுற்றுலா திட்டம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் முதல்முறையாக சுற்றுலா பயணிகளுக்காக சொகுசு கப்பல் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை துறைமுகத்தில் கார்டிலியா என்கிற கப்பல் நிறுவனத்துடன் இணைந்து புதிய திட்டத்தை தமிழக சுற்றுலாத்துறை செயல்படுத்துகிறது. சென்னையில் இருந்த புதுச்சேரி, விசாகப்பட்டினத்துக்கு சொகுசு கப்பலில் மக்கள் பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2 நாள், 3 நாள் மற்றும் 5 நாள் என்ற வகையில் சொகுசு கப்பலின் பயணத்திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. கட்டணங்களை பொறுத்தவரை தனியார் நிறுவனமே நிர்ணயம் செய்யும் எனவும், … Read more

சிவலிங்க வழிபாடு நடத்த ஞானவாபி மசூதி வளாகத்திற்கு செல்ல முயன்ற சாமியார் தடுத்து நிறுத்தம்

வாரணாசி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் சிவலிங்கம் உள்ளது. இங்கு பக்தர்களுடன் சென்று இன்று பூஜைகள் செய்யபோவதாக சுவாமி அவி முக்தேஷ்வரானந்த் என்ற சாமியார் அறிவித்து இருந்தார். ஆனால் இதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை. இருந்தாலும் அவர் பக்தர்களுடன் ஊர்வலமாக சென்றார். உடனே போலீசார் அவர்களை வித்யா மத் பகுதியில் தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் போலீசார் அவர்களை அங்கிருந்து திருப்பி அனுப்பினார்கள். இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.