பொம்மை உற்பத்தி கொள்கை 2025 கொள்கையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டில் பொம்மை உற்பத்தியை ஊக்குவிக்கும் வiகயில்,  பொம்மை உற்பத்தி கொள்கை 2025யை வெளியிட்டுள்ளது.  அதன்படி, இந்தியாவுக்குள், பொம்மை உற்பத்தியாளர்கள் கட்டாயம் இந்திய தர நிர்ணய அமைப்பின் தர அடையாளத்தையும் சான்றிதழையும் பெற வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. பொம்மைகள் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் உற்பத்தியில் தமிழ்நாட்டை ஒரு உலகளாவிய மையமாக நிலைநிறுத்தும் நோக்குடன், தமிழ்நாடு அரசு பொம்மை உற்பத்தி கொள்கை 2025 என்ற ஐந்து ஆண்டு திட்டத்தை தமிழ்நாடு அரசு  வெளியிட்டுள்ளது. இந்தக் … Read more

சட்டமன்ற தேர்தல்: டிச. 10-ம் தேதி முதல் காங்கிரஸ் கட்சியில் விருப்பமனு! செல்வப்பெருந்தகை தகவல்…

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு,   தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்காக, காங்கிரஸ் கட்சி சார்பில்  விருப்பமனு டிச. 10-ம் தேதி முதல் வழங்கப்படும்  என மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்  செல்வப்பெருந்தகை அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது, “2026 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர், 234 தொகுதிகளுக்கும் தங்களது விருப்பமனுவை வரும் 10ம் தேதி முதல் டிச.15-ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்” என்று அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில்  … Read more

பிரிந்து கிடக்கின்ற அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்றே மக்கள் விரும்புகிறார்கள்! ஓபிஎஸ்

சென்னை: அதிமுக செயற்குழு, பொதுக்குழு இன்று நடைபெற்று வரும் நிலையில்,  பிரிந்து கிடக்கின்ற அதிமுக சக்திகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றுதான் மக்கள் விரும்புகிறார்கள் என முன்னாள் அதிமுக பொருளாளரும், முன்னாள் முதல்வருமான   கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ,  தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று  கூறினார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில்  இருந்து நீக்கப்பட்ட நிலையில், தனது ஆதரவாளர்களுடன் தனி … Read more

சாலையோர ஆக்கிரமிப்பு விவகாரம்: நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு

சென்னை: சென்னை பாரிமுனை ஜார்ஜ் டவுன் பகு​தி​யில் உள்ள சாலை​யோர ஆக்​கிரமிப்​பு​களை  அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், அதன்மீது  நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அரசு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவினை மதிக்காத போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பல முறை அரசுக்கு சுட்டிக்காட்டி உள்ளது. இருந்தாலும், நீதியை அவமதிக்கும்போக்கு அதிகரித்து வருகிறது. அரசு அதிகாரிகள் நீதிமன்ற தீர்ப்பினை செயல்படுத்துவதில் … Read more

‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ பரப்புரையை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை:  வாக்குச்சாவடிகளை பலப்படுத்தும் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரையை முதல்வர் மு.க.ஸ்டாலின்  இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். 2026ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்க சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துகெள்ள திமுக தலைமை  கடந்த ஓராண்டாக தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. அதன்தொடர்சசியாக வாக்குச்சாவடிகளை பலப்படுத்தும் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி  என்ற திட்டதின்படி மக்களை சந்திக்க திட்டமிட்டு உள்ளது. இந்த திட்டத்தின்படி, திமுகவினர், பூத் கமிட்டி அளவில் திமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் பணியாற்றும் … Read more

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: நீதிமன்ற உத்தரவை மதிக்காத தலைமைச்செயலாளர், ஏ.டி.ஜி.பி ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை:  திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை மதிக்காத அதிகாரிகள் மீது,  தொடரபபட்ட  நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்  தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம், , ஏ.டி.ஜி.பி-க்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, அவர்கள் வரும்   17 ஆம் தேதி  விசாரணைக்கு காணொலி மூலம் ஆஜராக உத்தரவிட்டுள்ளார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை அமல்படுத்தாததாக கூறி தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தலைமைச்செயலாளர் மற்றும் கூடுதல் டி.ஜி.பி (ஏ.டி.ஜி.பி) … Read more

‘வந்தே மாதரம்’ சர்ச்சை : போஸ்-க்கு நேரு எழுதிய கடிதம் குறித்து நாடாளுமன்றத்தில் மோடி – பிரியங்கா இடையே காரசார விவாதம்…

‘வந்தே மாதரம்’ குறித்து நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது 1937ம் ஆண்டு அக்டோபர் மாதம் சுபாஷ் சந்திர போசுக்கு ஜவஹர்லால் நேரு எழுதிய கடிதம் ஒன்றை குறிப்பிட்ட பிரதமர் மோடி, அந்தக் கடிதத்தில் “இந்தப் பாடல் முஸ்லீம்களை கொதிப்படையச் செய்யும்” என்று நேரு கூறியுள்ளதாக எடுத்துரைத்தார். அதேவேளையில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, அதே கடிதத்தில் உள்ள மற்ற வரிகளைச் சுட்டிக்காட்டி மோடியின் கூற்றை எதிர்த்து பேசினார். மோடி கூறியது: காங்கிரஸ் மற்றும் நேரு, முஸ்லிம் லீக்கின் … Read more

அப்பா பிள்ளை உறவை பிரித்தது ஜி.கே மணி – தைலாபுரத்தை திமுக டேக் ஓவர் செய்துவிட்டது! அன்புமணி ஆவேசம்…

மாமல்லபுரம்: அப்பா பிள்ளை உறவை பிரித்தது ஜி.கே மணி தான். தைலாபுரத்தை தி.மு.க டேக் ஓவர் செய்துள்ளது. தி.மு.க-வில் இருப்பவர்கள் எதிரிகள்கள்; ஐயாவை சுற்றி இருப்பவர்கள் துரோகிகள்.” என்று அன்புமணி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தனக்கு எதிராக ஜி.கே. மணி  சூழ்ச்சி செய்து வருவதாகவும்,   வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக துரோகம் செய்தவர் ஜி.கே.மணி என்றும்,   அய்யாவிடம் தவறான தகவல்களை சொல்லி திசை திருப்பி விட்டார் என்றும்  குற்றம் சாட்டியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது … Read more

நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை! யுஜிசி உத்தரவு

டெல்லி: புதிய பாரதிய பாஷா சம்மான் திட்டத்தின் கீழ், பாடத்திட்டங்களில் மூன்று இந்திய மொழிகளை அறிமுகப்படுத்த அனைத்து கல்லூரிகளுக்கும் யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.  இந்த திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் செயல்படுத்தப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு (UGC), பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள், வளாகங்களில் பன்மொழி கற்றலை விரிவுபடுத்துவதற்காக Learn One More Bharathiya Bhasha (‘மற்றொரு இந்திய மொழியைக் கற்றுக்கொள்வோம்’) முயற்சியை தொடங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.  மாணவர்களிடையே பன்மொழிக் கற்றலை ஊக்குவிக்கும் … Read more

அ.தி.மு.க பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்… முழு விவரம்…

சென்னை: சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும்  அ.தி.மு.க பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், கூட்டணிக் கட்சிகள் குறித்து முடிவெடுக்க இபிஎஸ்சுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. பரபரப்பான  தமிழக அரசியல் சூழ்நிலையில், அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10 மணியளவில் சென்னை வானகரத்தில் உள்ள ஶ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் உடல்நலம் பாதிப்பு காரணமாக கலந்துகொள்ளாத நிலையில், மூத்த உறுப்பினர் கே.பி.முனுசாமி தற்காலிக … Read more