விவசாயி மகன், குடியரசு துணைத் தலைவராகியுள்ளார்! சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி, கார்கே புகழாரம்…

டெல்லி: விவசாயி மகன், குடியரசு துணைத் தலைவராகியுள்ளார்  என புதிய துணை குடியரசு தலைவரும், மாநிலங்களை தலைவருமான  சி.பி. ராதாகிருஷ்ணனை வரவேற்று மோடி  அவையில் உரையாற்றினார். எதிர்க்கட்சி தலைவர் கார்கே பேசுகையில் ,சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் மரபில் சேர்ந்தவர் அல்லது அவரது பெயரையே கொண்டிருப்பவர். எனவே நீங்களும் அதே போன்று நடுநிலையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.  மேலும் திமுக எம்.பி. சிவா உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் வரவேற்று பேசினார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி … Read more

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: பிரதமர் மோடி உரையை ‘நாடகம்’ என விமர்சித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே….

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில்,  பிரதமர் மோடி உரையை ‘நாடகம்’ என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்தார். முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் பேசிய பிரதமர் மோடி எதிர்க்கட்சிகள், அவையை முழுமையாக நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும், “இந்தியா எப்போதும் ஜனநாயகத்தை காக்கும் நாடாக விளங்குகிறது. பீகார் தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்தின் வலிமையை பறைசாற்றுகிறது. பீகார் மாநில தேர்தல் தோல்வி எதிர்க்கட்சிகளை அமைதியற்றவர்களாக மாற்றியுள்ளது. வெற்றியின் ஆணவத்தையும் தோல்வியின் விரக்தியையும் அவையில் (“நாடகம் … Read more

சென்னை, திருவள்ளூருக்கு ‘ ஆரஞ்ச் அலர்ட்! வானிலை ஆய்வு மையம்

சென்னை: டிட்வா புயல் வலுவிழந்து விட்டதால், சென்னை, திருவள்ளூருக்கு  விடுக்கப்பட்ட  ரெட்  அலர்ட் எச்சரிக்கை நேற்று வாபஸ் பெறப்பட்ட நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால், தற்போது ஆரங்சு  அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. வங்கக்கடலில் உருவான டிட்வா புயல்,  இலங்கையில் பேரழிவை ஏற்படுத்தி விட்டு, தமிழ்நாடு நோக்கி வந்தது. இதற்கிடையில், அதன் வேகம் குறைவாக வானிலை ஆய்வுகள் தெரிவித்த நிலையில், நேற்று இரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக … Read more

2 வாரத்தில் 1000 பேர் வரை பலி… தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மழையின் கோரத்தாண்டவம்…

தீவிரமான வானிலை காரணமாக தெற்கு மற்றும் தென்-கிழக்கு ஆசியா முழுவதும் இதுவரை சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். சூறாவளிகளால் அதிகரித்த மழை மற்றும் வெள்ளம் பல நாடுகளில் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேஷியாவில் நிலைமை மிக மோசமாக உள்ளது. கடந்த வாரம் தொடங்கிய வெள்ள பாதிப்பில் இதுவரை 442 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 3 லட்சம் மக்கள் பாதுகாப்பு மையங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர், மேலும் 827 வீடுகள் முழுமையாக அழிந்துள்ளன. சுமாத்திரா தீவில், உணவு மற்றும் மருந்து கிடைக்காத … Read more

எதிர்க்கட்சிகள் கடும் அமளி காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு…

டெல்லி: பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், எஸ்ஐஆர் உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அவை முடங்கியது. இதையடுத்து, அவை பகல் 2மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கி வரும் 19ம் தேதி வரை 15 அமர்வுகளாக நடக்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்றி பல முக்கிய சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள ஒன்றிய அரசு … Read more

சிறுவர்களின் ஆபாச வீடியோ தொடர்பாக சிட்னியைச் சேர்ந்த 4 பேரை ஆஸ்திரேலிய போலீசார் கைது செய்துள்ளனர்.

“சர்வதேச அளவில் செயல்படும் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் துஷ்பிரயோக வலையமைப்பு” குறித்து விசாரித்து வரும் நியூ சவுத் வேல்ஸ் போலீசார் சிட்னியைச் சேர்ந்த நான்கு பேரை கைது செய்துள்ளனர். வெளிநாடுகளில் இயங்கும் ஒரு இணையதளம் மூலமாக குழந்தை துஷ்பிரயோகப் படங்கள், வீடியோக்களை வைத்திருந்ததும், பகிர்ந்ததும், பரப்ப உதவியும் செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வியாழக்கிழமை நடந்த ரெய்டில், 26 வயது இளைஞர் உட்பட நான்கு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த 26 வயது நபர் … Read more

யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்தார் தேமுதிக தலைவர் பிரேமலதா…

சென்னை:  2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை வரும் ஜனவரி மாதம் 9ம் தேதி அறிவிக்கும் என்று தேமுதிக பொதுச்செயலாளர்  பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். கடந்த முறை அதிமுக கூட்டணியில் இருந்தவர்,   அதிமுக கொடுத்த வாக்குறுதியின்படி, தேமுதிகவுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்காததால், கடுப்பான பிரேமலதா, அதிமுகவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதேவேளையில் திமுகவுடன் நட்பு பாராட்டி வருகிறார். இதனால், தேமுதிக திமுக கூட்டணிக்கு செல்லும் வாய்ப்பு  இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர். இந்த … Read more

உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் புதிய நடைமுறைகள் அமல்….

டெல்லி:  உச்சநீதிமன்றத்தில்  வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தும் நோக்கில்  இன்று முதல் புதிய நடைமுறைகள் அமலுக்கு வருகிறது.  உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பொறுப்பேற்றதும், நீதிமன்ற நிர்வாகம் மற்றும் வழக்கு விசாரணைகளில் மிக முக்கிய மாற்றங்களை அறிவித்து உள்ளார். இந்த புதிய நடைமுறைகள் இன்றுமுதல் அமலுக்கு வருகின்றன. இதன்மூலம் நீதிமன்றங்களில்  வழக்குகள் தேங்குவதைத் தவிர்க்கவும்,  விரைவான நீதியை வழங்கும் வகையில்  புதிய சீர்திருத்தங்கள் டிசம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன. இதன்படி, புதிய வழக்குகளைப் … Read more

2026முதல் ரயிலில் 2ஆம் வகுப்பு படுக்கை வசதி பெறும் பயணிகளுக்கும் ‘போர்வை’! தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: 2026ம் ஆண்டு ஜனவரி முதல் ரயில் பெட்டியில் 2ஆம் வகுப்பு படுக்கை வசதி பெறும் பயணிகளுக்கு  ‘போர்வை’ வழங்கப்படும் என  தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. அதாவது,  தொலைதூரம் பயணம் செய்யும்,  NON-AC ஸ்லீப்பர் வகுப்பு பயணிகளுக்கு படுக்கை விரிப்புகள்  வழங்கப்படும் என  தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் நிர்வாகம்  அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே ஜனவரி 1, 2026 முதல் அதன் ஏசி அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணிகளுக்கு கிருமி நீக்கம் செய்யப்பட்ட, பயன்படுத்தத் தயாராக … Read more

சென்னைக்கு தெற்கே 250 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது ‘டிட்வா’… இன்று பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

சென்னை: இலங்கையில் பேரழிவை ஏற்படுத்திய டிட்வா புயல்,  சென்னைக்குதெற்கே 250 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.  இதன் காரணமாக, இன்று சென்னை, கடலூர் உள்ளிட்ட 13  மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.‘ டிட்வா புயலின் நகரும் வேகம் 7 கிலோ மீட்டரில் இருந்து 5 கிலோ மீட்டராக குறைந்துள்ளது. இது இன்று மாலை வலுவிழக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு … Read more