தமிழ்நாட்டிலும் வாக்கு திருட்டு: ஊட்டி அருகே ஒரே வீட்டில் 79 வாக்காளர்கள் – அதிகாரிகள் தீவிர ஆய்வு…

சென்னை; நாடு முழுவதும் வாக்கு திருட்டு அதகளப்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.  ஊட்டி அருகே ஒரே வீடு முகவரியில் 79 வாக்காளர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த வீட்டில் 4 பேர் மட்டுமே குடியிருந்து வரும் நிலையில், அந்த வீட்டின் முகவரியில் 79 வாக்காளர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற் றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது வாக்கு திருட்டை உறுதிப்படுத்தி உள்ளது. … Read more

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு…

டெல்லி: அதிமுக பொதுச்செயலாளர் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை  சந்தித்த நிலையில், அவரை சந்தித்தது. ஏன் தெரியுமா? எடப்பாடி பழனிசாமி  தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி இன்று (செப்டம்பர் 17) தமது எக்ஸ்  பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,   மாண்புமிகு இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவர்களை தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நேற்று சந்தித்து, தேச விடுதலைக்காக பாடுபட்ட தெய்வத் திருமகனார் பசும்பொன் ஐயா உ. முத்துராமலிங்கத் … Read more

கோவில் நிதியில் அரசு திருமண மண்டபம் கட்ட பக்தர்கள் நன்கொடை தரவில்லை! உச்சநீதிமன்றம் காட்டம்…

டெல்லி: திருமண மண்டபம் கட்ட பக்தர்கள் கோவில்களுடன் நன்கொடை தரவில்லை என்று  தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில்  கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், திருமணம் மண்டபம் கட்டுவதற்கு பதில் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகளை கட்டலாம் என தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு, கோவில் நிதிகளைக்கொண்டு, வருமானம் பார்க்கும் நோக்கில் திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது அறநிலையத்துறையின் சட்டத்துக்கு முரணானது என்று கூறப்படுவதுடன், பக்தர்கள் வழங்கும் நிதியை கொள்ளையடிக்வே இதுபோன்ற நடவடிக்கைகளை திமுக அரசு … Read more

திமுக முப்பெரும் விழாவில் பாட இருந்த பிரபல இசையமைப்பாளருக்கு திடீர் மூச்சுத்திணறல் – மருத்துவமனையில் அனுமதி…

சென்னை: கரூரில் இன்று மாலை திமுக முப்பெரும் விழாவில் கலந்துகொண்டு  பாட தயாராக இருந்த இருந்த பிரபல இசையமைப்பாளர் சங்கர் கஷேஷ் திடீர் மூச்சுத்திணறல் காரணமாக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுகவின் முப்பெரும் விழா இன்று கரூரில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு, இசையமைத்து பாடுவதற்காக பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவரான சங்கர்ல கணேஷ் தனது குழுவினருடன் கலந்துகொள்ள இருந்தார்.  இந்த நிலையில், இன்று அதிகாலை அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. … Read more

அன்புமணி பாமக தலைவரா? தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் தரப்பு புகார் கடிதம்…

டெல்லி: பாமக தலைவர் அன்புமணி என இந்திய தேர்தல் ஆணையம் அங்கீரித்துள்ளதை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாமகவில் தந்தை மகனுக்கு இடையே எழுந்துள்ள மோதல், கட்சியை இரண்டாக பிளவுபடுத்தி உள்ளது. தற்போது கட்சியை யார் கைப்பற்றுவது என்ற  நோக்கில் இரு தரப்பும் தங்களது பலத்தை காட்டி வருகிறது. ஒருவரை ஒருவர் கட்சியில் இருந்து நீக்கியும், சேர்த்தும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் … Read more

எடப்பாடியார் இன்றுமுதல் முகமூடியார்! டிடிவி தினகரன் கலாய்ப்பு… அதிமுக விளக்கம்…

சென்னை:  எடப்பாடி பழனிசாமி இன்றுமுதல் முகமூடி பழனிசாமி என அழைக்கப்படுவார் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலாய்த்து உள்ளார். இதற்கு அதிமுக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், இந்த நிலையில்,   எடப்பாடி பழனிசாமி  “முகத்தை துடைப்பதை, முகத்தை மூடிக்கொண்டு செல்வதாக தவறான கதையை பரப்பப்படுவதாக குற்றம் சாட்டி உள்ளது. அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, டெல்லியில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு திரும்பும்போது, முகத்தில் கர்ச்சிப் போட்டு மறைத்திருந்தார். இதுதொடர்பான படம், … Read more

இந்தியா – பாகிஸ்தான் மோதல்… 2025 ஆசிய கோப்பையை வென்றால் மோஷின் நக்வியிடமிருந்து கோப்பையை ஏற்க சூரியகுமார் யாதவ் மறுப்பு ?

ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை போட்டியில் ‘குரூப் ஏ’-வில் இடம்பெற்றுள்ள இந்திய அணி ஓமனுக்கு எதிரான தனது கடைசி லீக் ஆட்டத்தை செப்டம்பர் 19ம் தேதி அபுதாபியில் விளையாட உள்ளது. புள்ளிபட்டியலில் ‘குரூப் ஏ’-வில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி இதே குழுவில் உள்ள பாகிஸ்தான் அணியுடன் நடைபெற்ற போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான இந்த போட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவில்லை. இருந்தபோதும் போட்டி முடிந்த பின் … Read more

பாலாறு விவகாரம்: ஐஐடி பேராசிரியர்கள் தலைமையில் தணிக்கை குழு அமைத்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்

டெல்லி: பாலாறு மாசுபாடு விவகாரம் தொடர்பாக வழக்கில், மாசு தடுப்பு குறித்து சென்னை ஐஐடி பேராசிரியர்கள் தலைமையிலான  தணிக்கை குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த விசாரணையின்போது, இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த   3 மாவட்ட ஆட்சியா்கள் உச்சநீதிமன்ற விசாரணைக்கு  ஆஜரான நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில், ஆட்சியர்களின் நடவடிக்கை மீது கடும் அதிருப்தி தெரிவித்தனர். இந்த நிலையில், தற்போது, ஐஐடி சென்னை நிபுணர்கள் தலைமையில் ஒரு … Read more

திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு…

திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. செப்டம்பர் 17 இன்று திராவிடர் கழகத்தின் முன்னாள் தலைவரும், மூடநம்பிக்கை ஒழிப்பு, சமூகநீதி போராளியுமான தந்தை பெரியாரின் பிறந்தநாள். பல்வேறு அரசியல் தலைவர்களும் அவரது நினைவைப் போற்றி வருகின்றனர். முன்னதாக பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக தமிழக அரசு அறிவித்திருந்தது. அந்தவகையில் சுயமரியாதை, ஆளுமை திறன், பகுத்தறிவு பார்வை கொண்டதாக செயல்பாடுகள் அமையும் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.  திருச்சி ஆட்சியர் … Read more

சென்னைக்கு வெளியே மதுராந்தகம் பகுதியில் புதிய சர்வதேச நகரம்! டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு அரசு சென்னைக்கு வெளியே மதுராந்தகம் பகுதியில் புதிய சர்வதேச நகரம் அமைப்பதற்கான  டெண்டர் கோரி உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தாக்கல் செய்த  தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில்  பொதுமக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்திடும் வகையில் ஒருங்கிணைந்த புதிய நகரங்கள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மார்ச் (2025) மாதம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்திருந்தார். அதில்,  தமிழகத்திற்கு … Read more