ஜெ ஜெயலலிதா இசை பல்கலைக்கழகத்தின் மூலம் நடிகர் சிவகுமார் மற்றும் 1846 மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: ஜெ ஜெயலலிதா இசை பல்கலைக்கழகத்தின் மூலம் நடிகர் சிவகுமார் மற்றும் 1846 மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பட்டம் வழங்கினார்.  நிகழ்ச்சியில் பேசும் போது,  பல்கலை. வேந்தராக மட்டுமல்ல கலைஞன் என்ற முறையில்  இந்த பட்டமளிப்பு விழாவுக்கு வந்துள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில் வேந்தரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பட்டங்களை வழங்கினார். மூத்த திரைக் கலைஞர், சிறந்த ஓவியர் சிவகுமாருக்கு மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கினார். 1846 … Read more

டிட்வா புயல்: எழிலகம் அவசர கால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மற்றும் ஆலோசனை

சென்னை: டிட்வா புயல்  மற்றும் கனமழை எச்சரிக்யையைத் தொடர்ந்துமுதல்வர் ஸ்டாலின் இன்று காலை சென்னை எழிலகத்தில் உள்ள  அவசர கால செயல்பாட்டு மையத்தில்  ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அதிகாரிகளுடன் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும்  ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை அப்புறப்படுத்துவதற் கான ஏற்பாடுகளும் செய்திருக்கிறோம். மாவட்டத்தில் உள்ள பொறுப்பு அமைச்சர்களும் இதனை கண்காணித்து வருகின்றனர்” என்றார்.  டிட்வா புயல் காரணமாக,  கன்னியாகுமரி, … Read more

டிட்வா புயலால் அதி கனமழை, அதி தீவிர கன மழை பெய்ய வாய்ப்பு இல்லை! வெதர்மேன் தகவல்…

சென்னை: டிட்வா புயலால் அதிக கனமழை, அதிக தீவிர மழை பெய்ய வாய்ப்பு இல்லை  என தனியார் வானிலை ஆய்வாளரான  வெதர்மேன்  பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இன்று  மாலை முதல் 6 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறி உள்ளார். இலங்கையில் இருந்து தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் டிட்வா புயலால் கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் இலங்கை அருகே நிலைகொண்டுள்ள … Read more

தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பா.ஜ.க.வின் ஸ்லீப்பர் செல்! அமைச்சர் ரகுபதி

சென்னை: தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பா.ஜ.க.வின் ‘ஸ்லீப்பர் செல்’  என திமு அமைச்சர் ரகுபதி  விமர்சித்துள்ளார்.  த.வெ.க.வை பா.ஜ.க.வுக்கு இழுத்து வர வேண்டும் என்பது தான் செங்கோட்டையனுக்கு  கொடுக்கப்பட்டுள்ள அசைன்மென்ட் என்றும் கூறியுள்ளார். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன், தனது கோபிசெட்டிப்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை நேற்று(புதன்கிழமை) ராஜிநாமா செய்தாா். இதனைத் தொடர்ந்து, சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் வீட்டுக்கு நேற்று மாலை நேரில் சென்ற செங்கோட்டையன், விஜய்யை சந்தித்துப் … Read more

பூண்டியில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் உபரி நீர் திறப்பு 1300 கன அடியாக அதிகரிப்பு – கரையோர கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

திருவள்ளுர்: பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு  திறக்கப்பட்டு வந்த உபரி நீர் திறப்பு 200 கன அடியில் இருந்து 1800 கன அடியாக அதிகரிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கொசஸ்தலை ஆற்றின்  கரையோர கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுஉள்ளது. முதற்கட்டமாக  30 கிராமங்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ளது. சென்னை குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரமாக உள்ள பூண்டி அணை முழு கொள்ளவை நெருங்கி உள்ளது. இந்த நிலையில், தற்போத  … Read more

நாளை திமுக எம்.பி.க்கள் கூட்டம்! திமுக தலைமை அறிவிப்பு

சென்னை: நாளை (நவ. 29ந்தேதி)  திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்  டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். குளிர்கால கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை  நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேவேளையில், தற்போது தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் நடைபெற்று  எஸ்.ஐ.ஆர் விவகாரம் உள்ளிட்ட … Read more

தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை – தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புப் படை…

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதை எதிர்கொள்ளும் வகையில்,  ராணிப்பேட்டை படைப்பிரிவு வளாகத்தில் 24 மணி நேரமும் அவசர கட்டுப்பாட்டு மையம் இயங்கி வருகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் டிட்வா புயல் காரணமாக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஒரு அணிக்கு 30 பேர் என 8 குழுக்களாக டெல்டா மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர். தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை – இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த … Read more

இருபெரும் தலைவர்களின் நம்பிக்கைக்குரியவர் – 50ஆண்டுகால அரசியல் அனுபவம் பெற்றவர்! செங்கோட்டையன் குறித்து விஜய் வீடியோ….

சென்னை: இருபெரும் தலைவர்களின் நம்பிக்கைக்குரியவர் அண்ணன் செங்கோட்டையன், அரசியலில் 50 ஆண்டுகாலம் அனுபவம் வாய்ந்தவர் என இன்று தவெகவில் இணைந்த செங்கோட்டையன் குறித்து தவெக தலைவர் வீடியோ வெளியிட்டு உள்ளார். தவெக தலைவர் விஜய் செங்கோட்டையனை கட்சிக்கு வரவேற்று விஜய் விடியோ  வெளியிட்டுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி  உடனான கருத்து வேறுபாடு காரணமாக,  அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன்,  நேற்று (நவம்பர் 26) தனது கோபிசெட்டிப்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்தாா். இதனைத் தொடர்ந்து, … Read more

திருட்டு வழக்கில் மீட்கப்படாத தங்கத்தின் மதிப்பில் 30% இழப்பீடாக வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தங்கம் திருட்டை கண்டுபிடிக்க முடியாத வழக்குகளில், திருடு போன நகையின் மதிப்பில் 30% தொகையை பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வீடு புகுந்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக தென் மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணையில் இந்த வரலாற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி. புகழேந்தி, “இது அரசின் நல்லெண்ண செயல் அல்ல, பொதுச் … Read more

தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகளில் 1 கிராம் தங்கத்திற்கு வழங்கப்படும் கடன் தொகை ரூ.7 ஆயிரமாக அதிகரிப்பு!

சென்னை: தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் பிரிவில், 1 கிராம் தங்கத்திற்கு வழங்கப்படும் கடன் தொகை ரூ.7 ஆயிரமாக அதிகரிப்பு செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், மாநில, மாவட்ட தலைமை கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்டவற்றில், தங்க நகை அடமானம் பேரில், நகைக்கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனை பெரும்பாலான பொதுமக்கள் முக்கியமாக கிராமப்புறங்களில் உள்ளவர்கள், இந்த … Read more