மாநிலத்தின் அமைதியை தொடர்ந்து காப்பாற்ற வேண்டும்! காவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை:  “மக்களுக்காக சேவையாற்ற வேண்டும்”, மாநிலத்தின் அமைதியை தொடர்ந்து காப்பாற்ற வேண்டும், சட்டம் ஒழுங்கை சமரசமில்லாமல் நிலைநாட்ட வேண்டும் என காவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி முதல்வர் ஸ்டாலின் அறிவுரை கூறினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  3.1.2026  சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் காவல்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 621 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 129 தீயணைப்புத்துறை நிலைய அலுவலர்கள், என … Read more

திருப்பரங்குன்றம் மலையில் பாதுகாப்பு பணியில் உள்ள போலீஸாரை திரும்ப பெறக் கோரி வழக்கு

மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் இந்துக்கள் மேலே ஏறாதவாறு தடுக்கும் பணியில்  போலீஸாரை திரும்ப பெறக் கோரி வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த  வழக்கில் மதுரை மாநகர் காவல் ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்றம்  மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலையில்  கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும்,  தமிழ்நாடு அரசு தீபம் ஏற்ற மறுத்து விட்டது. இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் மலைமீது ஏறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதற்கிடையில்,  மலையின் ஒரு பகுதில் உள்ள தர்காவில் … Read more

தவெகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகர்

சென்னை:  அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், ஓபிஎஸ் ஆதரவாளருமான  ஜே.சி.டி.பிரபாகர் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் தவெக கட்சியில் இணைந்தார். அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான ஜே.சி.டி. பிரபாகர், தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். 2011ஆம் ஆண்டு வில்லிவாக்கம் தொகுதியிலிருந்து எம்எல்ஏவாக தேர்வானவர் ஜே.சி.டி.பிரபாகர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அவர், ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட்டார். மேலும்,  அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவிலும் செயல்பட்டு வந்தார். ஏற்கெனவே ஓபிஎஸ் அணியிலிருந்து மனோஜ் பாண்டியன் விலகி திமுகவில் … Read more

கடற்கரையை ஷாப்பிங் மால்களாக மாற்ற முடியாது! சென்னை உயர்நீதி மன்றம்…

சென்னை: கடற்கரை மக்கள் ரசிக்கத் தானே தவிர, அதனை ஷாப்பிங் மால்களாக மாற்ற முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் புகழ்பெற்ற அழகிய கடற்கரைகளில் மெரினாவுக்கு தனி பங்குண்டு. உலகின் இரண்டாவது நீண்ட நகர்ப்புற கடற்கரை சென்னை மெரினா கடற்கரை ஆகும், இது இந்தியாவின் மிக நீளமான நகர்ப்புற கடற்கரையாகவும், உலகின் இரண்டாவது நீளமான நகர்ப்புற கடற்கரையாகவும் கருதப்படுகிறது. இது செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து ஃபோர்ஷோர் எஸ்டேட் வரை சுமார் 12 கி.மீ. நீளத்திற்கு … Read more

இலங்கை நெருக்கடியில் இருந்து வளர்ச்சி பெற பால்க் நீரிணை பாலம் அவசியம் – ஏன் ?

இலங்கையின் பொருளாதார மீட்பு என்பது எச்சரிக்கையுடன் நகர்வதன் மூலம் மட்டும் சாத்தியமாகாது. துணிச்சலான, நீண்டகால வளர்ச்சியை உருவாக்கும் பெரிய முடிவுகளை எடுப்பதில்தான் உண்மையான மீட்பு உள்ளது. அந்த வகையில், இந்தியா முன்மொழிந்துள்ள பால்க் நீரிணை பாலம் (Palk Strait Bridge) இலங்கையின் வர்த்தகம், சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சியை பல மடங்கு உயர்த்தக்கூடிய முக்கியமான திட்டமாகும் என்று இலங்கை அரசில் தூதராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற கணநாதன் தெரிவித்துள்ளார். கணநாதன், ஆப்பிரிக்காவில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமும், கென்யாவுக்கான … Read more

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்… அரசு ஊழியர்களின் 20 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியது… முழு விவரம்

தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய புதிய திட்டமான தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தைச் (Tamil Nadu Assured Pension Scheme – TAPS) செயல்படுத்திட தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின்படி, குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் கடைசி சம்பளத்தில் 40 முதல் 50 சதவீதம் வரை ஓய்வூதியமாக கிடைக்கும் என அறிவிப்பு. அரசு ஊழியராக 10 … Read more

‘தலைவர் 173’ : ரஜினிகாந்த் – கமல்ஹாசன் படத்தை இயக்குகிறார் சிபி சக்கரவர்த்தி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘தலைவர் 173’ படத்தின் இயக்குநராக சிபி சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், 2026 ஜனவரி 3ஆம் தேதி, சமூக வலைதளங்களில் வெளியிட்டது. அறிவிப்புடன் வெளியிடப்பட்ட போஸ்டரில் “Every family has a hero” (ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நாயகன் இருப்பான்) என்ற வரி இடம் பெற்றுள்ளது. … Read more

பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட உள்ளது பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்!

சென்னை:  முதலமைச்சர் ஸ்டாலின்  பொங்கல் பரிசு தொகுப்பை வரும் 8ந்தேதி தொடங்கி வைக்கும் நிலையில், அதற்கான டோக்கன் இன்னும் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த தொகுப்பில்,  பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட பரிசு தொகுப்புடன்  ரொக்க பணமும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக 2021ல் பதவி ஏற்றம்,  … Read more

ஆபாசங்களை உடனடியாக நீக்க வேண்டும்! X நிறுவனத்துக்கு மத்தியஅரசு 72 மணி நேரம் கெடு..

டெல்லி: பிரபல  சமூக ஊடக தளமான எக்ஸ்  தளத்தில்  உள்ள ஆபாசமான, பாலியல் ரீதியாக வெளிப்படையான மற்றும் சட்டவிரோத உள்ளடக்கத்தை தாமதமின்றி நீக்க வேண்டும் என்று  மத்திய அரசாங்கம் எலான் மஸ்க் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. சமீப காலமாக சமூக வலைதளங்களில் ஆபாச படங்கள், வீடியோக்கள், ஏஐ தொழில்நுட்பத்திலான பாலியல் சீண்டல்கள் போன்றவை மீண்டும் அதிகரித்து வருகிறது. இது, இளைய தலைமுறையினரின் வாழ்வியலை சீர்குலைத்துவிடும் நோக்கி உள்ளது. இதனால், இதை அகற்ற வேண்டும் என பொதுமக்கள், … Read more

மெட்ராஜ் ஐஐடியில் சாஸ்த்ரா, சாரங் 2026 திருவிழாவையும், குளோபல் மையத்தையும் தொடங்கி வைத்தார் மத்தியஅமைச்சர் ஜெய்சங்கர்…

சென்னை: நாட்டின் நம்பர்1 தொழில்நுட்ப  நிறுவனமான ஐஐடி மெட்ராஸ் நிகழ்ச்சியில்,  சாஸ்த்ரா, சாரங் 2026 திருவிழாவையும், குளோபல் மையத்தை[யம் மத்தியஅமைச்சர் ஜெய்சங்கர்  தொடங்கி வைத்தார். மத்தியவெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், ஐஐடி மெட்ராசில் நடைபெறும் இருவார நிகழ்வுகளான சாஸ்த்ரா மற்றும் சாரங் 2026-ஐத் தொடங்கி வைத்ததுடன், உலகளாவிய தொலைநோக்கு, யோசனைகள் மற்றும் புத்தாக்கங்களைக் கொண்டாடும் ஐஐடிஎம் குளோபல் ரிசர்ச் ஃபவுண்டேஷனையும்  ( குளோபல் மையம்) தொடங்கி வைத்தார். சென்னை ஐஐடியின் தொழில்நுட்ப பயணத்தில் மற்றொரு … Read more