திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதியை எதிர்த்து அறநிலையத்துறை மேல்முறையீடு… மதுரையில் பரபரப்பு…

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து கோவில் நிர்வாக அதிகாரி சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.  இது மதுரை உள்பட தென்மாவட்ட மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக அரசின் நடவடிக்கைக்கு இந்து முன்னணி, பாஜக, முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பல அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனால் மதுரை யில் பரபரப்பு நிலவி வருகிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசு, … Read more

சட்டம் ஒழுங்கு மாநில பிரச்சினை: கரூர் சம்பவம் குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு எதிர்ப்பு!

சென்னை: கரூர் சம்பவம் குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சட்டம் ஒழுங்கு மாநில பிரச்சினை என சுட்டிக்காட்டி  பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 110 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரிக்க சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, கரூர் பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் தங்கி … Read more

41பேர் பலியான சோகம்: ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான ஐபிஎஸ் அதிகாரிகள் குழு கரூரில் நேரடி ஆய்வு…

கரூர்: தவெக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானது குறித்து  சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை கண்காணிக்க ஒய்வுபெற்ற  உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு அமைத்தனர். அதன்படி,  ஓய்வு பெற்ற  உச்ச நீதிமன்ற நீதிபதி   அஜய் ரஸ்தோக்கி  தலைமையலான குழுவினர் இன்று  கரூர் வருகை தந்துள்ளனர். அவர்கள் சம்பவம் நடைபெற்ற இடங்களை நேரடி ஆய்வு செய்து வருகின்றனர். விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பெர் … Read more

“நலம் காக்கும் ஸ்டாலின்” முகாம்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்! ஆய்வு கூட்டத்தில் முதல்வர் வலியுறுத்தல்

சென்னை :  “நலம் காக்கும் ஸ்டாலின்” முகாம்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என கோட்டையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து, , தண்டையார்பேட்டை காமராஜர் நகரில் ரூ.39.30 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு அச்சகப் பணியாளர்கள் குடியிருப்பு – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில், நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்  தலைமையில் … Read more

டிக்கெட் விலை ரூ.1,489: சென்னையை அடுத்த திருப்போரூரில் அமைந்துள்ள வொண்டர்லா பொழுதுப்போக்கு பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: சென்னையை அடுத்த திருப்போரூரில் அமைந்துள்ள வொண்டர்லா பொழுதுப்போக்கு பூங்காவை  முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து இன்று முதல் இது மக்கள் பயன்பாட்டுக்கு  வந்துள்ளது. இதன்மூலம் ; 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என முதல்வர் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே ரூ.611 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள ‘சென்னை வொண்டர்லா’ கேளிக்கை மற்றும் நீர் விளையாட்டுப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (டிச.1) வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். … Read more

எஸ்ஐஆ-ருக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்.. வீடியோ

டெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ,  கார்கே  மற்றும் டி.ஆர்.பாலு,  கனிமொழி எம்.பி.  உள்பட பலர் கலந்துகொண்டனர்.  நாடாளுமன்றம்  குளிர்கால கூட்டத் தொடரின் இரண்டாம் நாள் அமர்வு இன்று நடைபெற்று வருகிறது. முன்னதாக    நாடாளுமன்றத்தின் மகர் துவார் பகுதியில் இண்டியா கூட்டணி எம்பிக்கள், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர … Read more

சென்னைக்கு 35 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது டிட்வா தாழ்வு மண்டலம்! இன்று கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: சென்னைக்கு 35 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது டிட்வா புயல் வலவிழந்தது  தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது.  இதனால் சென்னை உள்பட அண்டைய மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது கடந்த 6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் நீடிக்கிறது. இன்று மாலை   கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டடுள்ளது. சென்னையில் இருந்து 50 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு … Read more

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலில் நிலை கொண்டிருக்கும் வரை மழை தொடரும்! வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல்…

சென்னை: டிட்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னைக்கு அருகே நிலை கொண்டிருக்கும் நிலையில், சென்னையில் மழை வேகமெடுக்க தொடங்கி உள்ளது என தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப ஜான் தெரிவித்து உள்ளார். காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடல் பரப்பில் நிலை கொண்டிருக்கும் வரை இப்படி மழை பெய்து கொண்டே இருக்கும்” என்று  தெரிவித்துள்ளார். வலுவிழந்த டிட்வா புயல், கடந்த 6 மணி நேரத்துக்கும் மேலாக சென்னை அருகே 35 கி.மீ தூரத்தில் நிலை … Read more

‘மக்கள் மாளிகை’ என பெயர்மாற்றம் செய்யப்பட்டது தமிழ்நாடு ஆளுநர் மாளிகை!

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் மாளிகை ராஜ்பவன் என அழைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, அது லோக் வன்  ‘மக்கள் மாளிகை’ என பெயர் மாற்றம் பெற்றது செய்யப்பட்டு உள்ளதாக  ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு ஆளுநர் மாளிகை, ‘மக்கள் மாளிகை தமிழ்நாடு’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது இந்த பெயர் மாற்றம்,  இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிக விழுமியங்கள் மற்றும் அரசியலமைப்பின் உணர்வை நிலைநிறுத்துவதற்கான தற்போதைய பயணத்தில் … Read more

தொடர் மழை: வெள்ளத்தில் மிதக்கும் சென்னை – பொதுமக்கள் அவதி – களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்!

சென்னை: சென்னையில் இன்று 3வது நாளாக மழை தொடரும் நிலையில், பல சாலைகள் வெள்ள நீரால் சூழப்பட்டு உள்ளதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர். வெள்ள நீரை அகற்றும் பணியில் 103 படகுகள் உடன்  22ஆயிரம் ஊழியர்களை சென்னை மாநகராட்சி  களமிறங்கி இருந்தாலும், ஒருபுறம் மழைநீர் வெளியேற்றப்பட மற்றொருபுரம் இருந்து மீண்டும் மழைநீர் வந்து சாலையில் தேங்கி வருகிறது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிஅடைந்து வருகின்றனர். இந்த நிலையில்,   தொடரும் மழை மற்றும் அதனால் மழைநீர் தேங்கி வருவதால்,  … Read more