உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் சூர்யா காந்த்….

டெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி  சூர்யா காந்த்  பதவி ஏற்றார். அவருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.  முன்னதாக அவர் இந்திய தலைமை நீதிபதியாக அக்டோபர் 30-ம் தேதி நியமிக்கப்பட்டார். முன்னதாக, இந்தியாவின் 52வது தலைமை நீதிபதியாக இருந்த பி.ஆர். காவாய்  நவம்பர் 23 அன்று ஓய்வுபெற்ற நிலையில், நாட்டின் 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யா காந்த்  இன்று பதவி ஏற்றார். இவர் சுமார்  … Read more

சென்னைக்கு புல்லட் ரயில்: தமிழக அரசிடம் திட்ட அறிக்கை சமர்பித்தது மத்திய தெற்கு ரயில்வே

சென்னை: சென்னைக்கு புல்லட் ரயில்  அமைப்பது தொடர்பாக, தமிழக அரசிடம் மத்திய தெற்கு ரயில்வே திட்ட அறிக்கை சமர்பித்துள்ளது. சென்னை ஹைதராபாத் இடையே 780 கி.மீ. தொலைவிற்கு புல்லட் ரயில் வழித்தடம் அமைக்கும் திட்ட அறிக்கையை மத்திய தெற்கு ரயில்வேதமிழ்நாடு அரசிடம் சமர்பித்தது. புல்லட்  ரயில் திட்டம் செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில் 12 மணி நேர பயணம் 2.30 மணி நேரம் வரை குறையும் என்று கூறப்படுகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  2026- — … Read more

தென்மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை – 15 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை: தென்மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை  காரணமாக  15 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல  புதுச்சேரியிலும் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையின் ஒரு பகுதியாக, வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை நாளை மறுநாள் புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந் நிலையில் நெல்லை, தூத்துக்குடி உள்பட … Read more

தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை… சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு…

வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் நிலையில், தமிழகத்தின் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று மாநிலத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை–காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. நாளை (23-ம் … Read more

உக்ரைன் – ரஷ்ய போர் முடிவுக்கு வர வாய்ப்பு… டிரம்பின் அமைதித் திட்டத்திற்கு புடின் ஆதரவு…

அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ள அமைதித் திட்டத்திற்கு ரஷ்ய அதிபர் புடின் ஆதரவு தெரிவித்துள்ளார். அதேவேளையில், இந்த திட்டத்தை உக்ரைன் ஏற்க மறுத்தால் மேலும் பல பிரதேசங்களை அது இழக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார். உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க முன்மொழிவை மாஸ்கோ பெற்றுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தினார். இந்த திட்டம் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அடித்தளமாக செயல்படக்கூடும் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் இதுவே அமைதிக்கான இறுதித் … Read more

திருவண்ணாமலை தீபத் திருவிழா விவரம்! மலை மீது மகாதீபம் ஏற்ற 4,500 கிலோ நெய் கொள்முதல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபத் திருவிழா  நிகழ்ச்சிகள் விவரங்களை கோவில் நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. அத்துடன் இறுதிநாளன்று அண்ணாமலையார்  மலை மீது  மகா தீபம் ஏற்ற 4,500 கிலோ நெய், ஆவினில்  கொள்முதல் செய்யப்பட்டு லாரி மூலம் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளது. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்த உடனேயே முக்தியை அருளும் ஆன்மீக தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை. இங்குள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் மிக முக்கியமான விழாக்களில் முதன்மையானது கார்த்திகை மாதத்தில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் … Read more

ஆறே நாளில் 6000 கி. மீ. – கண்டங்களைத் தாண்டி எல்லையை விரிவுபடுத்திய அமூர்

அமூர் ஃபால்கன் என்றழைக்கப்படும் அமூர் பருந்து என்பது ரஷ்யாவின் அமூர் பிராந்தியத்திலிருந்து ஆப்பிரிக்கா வரை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் இடம் பெயர்ந்து பறக்கும் சிறிய பருந்தினம். ஓய்வின்றி பல ஆயிரம் கிலோ மீட்டர்களை கடந்து செல்லும் திறன் கொண்ட இந்தப் பருந்து பறவை ஆராய்ச்சியாளர்களை வெகுவாகக் கவர்ந்த ஒன்று. அந்த வகையில், இந்திய ஆய்வாளர்கள் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையில் 6100 கி.மீ. வரை ஓய்வின்றி பறப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மணிப்பூர் காடுகளில் பிடிபட்ட மூன்று அமூர் பறவைகளின் … Read more

சேலத்தில் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு! காவல்துறை விளக்கம்…

சேலம்: சேலத்தில் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது குறித்து மாவட்ட காவல்துறை விளக்கம் வெளியிட்டு உள்ளது. கரூர் சம்பத்தினால் இரு மாதங்களாக தனது மக்கள் சந்திப்பு பயணத்தை ஒத்தி வைத்திருந்த தவெக தலைவர் விஜய், மீண்டும் தனது தேர்தல் பிரசார பயணங்களை மேற்கொள்ள உள்ளார். அவரது அடுத்த மக்கள் சந்திபப்பு கூட்டம் சேலத்தில் நடைபெறும் வகையில், சேலத்தில்  சீலநாயக்கன்பட்டி, போஸ் மைதானம், கோட்டை மைதானம் ஆகிய 3 இடங்களில் தவெகவினர் அனுமதி கோரியிருந்த நிலையில் காவல்துறை  … Read more

நெல் ஈரப்பத அளவை அதிகரிக்க வலியுறுத்தி மத்தியஅரசுக்கு எதிராக திமுக கூட்டணி ஆர்பாட்டம் அறிவிப்பு

சென்னை: நெல் ஈரப்பத அளவை அதிகரிக்க மறுத்த  மத்தியஅரசை கண்டித்தும், ஈரப்பத அளவை உயர்த்த வலியுறுத்தியும் திமுக கூட்டணி சார்பில் டெல்டா மாவட்டங்களில் ஆர்பாட்டம்  நடைபெறும்  அறிவிக்கப்பட்டுள்ளது. நெல் ஈரப்பத அளவை அதிகரிக்க தமிழ்நாடு விடுத்த கோரிக்கையை மத்திய அரசு மறுத்ததாக குற்றஞ்சாட்டி தஞ்சாவூர், திருவாரூரில் திமுக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.   அதன்படி, நவ.23ம் தேதி தஞ்சையிலும் 24ம் தேதி திருவாரூரிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நெல் ஈரப்பத … Read more

போலி ஆவணங்கள் மூலம் அமைச்சர் மனோதங்கராஜ் தங்கை ரூ.100 கோடி சொத்து பதிவு! உயர்நீதிமன்றம் விமர்சனம்…

சென்னை: போலி ஆவணங்கள் மூலம் அமைச்சர் மனோதங்கராஜ் தங்கை ரூ.100 கோடி சொத்து பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து, சென்னை உயர்நீதிமன்றம்  திமுக அரசை கடுமையாக சாடி உள்ளது. இதுவரை, சம்பந்தப்பட்டவர்கள், அவர்களுக்கு உதவிய அதிகாரிகள்மீது  ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. திமுக அமைச்சர் அமைச்சர் மனோ தங்கராஜ் மீது குவிந்த புகார்கள் காரணமாக கடந்த 2024ம் ஆண்டு முதல்வர் ஸடாலின் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார்.  அவர்மீது, ஆவின் பால் … Read more