2025ம் ஆண்டிற்கான “குழந்தைகள் நலன் சேவை விருதுகள், அறநிலையத்துறை சார்பில் 25 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின, 2025ம் ஆண்டிற்கான “குழந்தைகள் நலன் சேவை விருதுகள் வழங்கியதுடன்,  அறநிலையத்துறை சார்பில் 25 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின்… அறநிலையத்துறை சார்பில் ரூ.79.94 கோடி மதிப்பீட்டிலான 25 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 20 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். தொடர்ந்து,   சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் குழந்தைகளின் நலனை பேணிக்காக்க திறம்பட செயல்பட்ட நிறுவனங்கள் … Read more

தமிழக்தில் புதிதாக ஒருவர் வேண்டும்’ என மக்கள் நினைக்கிறார்கள்! செங்கோட்டையன் பேட்டி

சென்னை: தமிழக்தில் புதிய மாற்றம் வேண்டும்  என்றும்,  தமிழக்தில் புதிதாக ஒருவர் வேண்டும்’ என மக்கள் நினைக்கிறார்கள் என்று  தவெகவில் இணைந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து குறிப்பிட்டுள்ளார். 2026ல் தமிழ்நாட்டில் மக்களால் மாபெரும் புரட்சி உருவாகும் என்றும் இன்று தவெகவில் இணைந்த  முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். அதிமுக பொதுச்செயலளரான எடப்பாடி பழனிச்சாமி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து … Read more

விவசாயிகள் முதுகில் குத்தியவர் எடப்பாடி பழனிசாமி! அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம்

சென்னை: விவசாயிகள் முதுகில் குத்தியவர் எடப்பாடி பழனிசாமி, அவரது யோக்கியதையை நாடறியும் என  அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார். நெல் ஈரப்பத்துடன் கொள்முதல் செய்ய மத்தியஅரசு மறுத்த நிலையில், அதுகுறித்து அறிக்கை வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி, திமுக அரசை கடுமையாக சாடியிருந்தார். இதையடுத்து அவருக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ஈரோட்டில் பேசிய முதலமைச்சருக்குப் பதில் சொல்ல முடியாமல், எக்ஸ் தளத்தில் கிறுக்கிக் கொண்டிருக்கும் அடிமை பழனிசாமி, வழக்கம் போலவே உளறிக் … Read more

தவெகவில் செங்கோட்டையன்! எடப்பாடி பழனிசாமி ‘கடுப்பு’

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த நிலையில், அது பற்றிய  செய்தியாளரின்  கேள்விக்கு,  பதில் கூறிய எடப்பாடி பழனிச்சமி, அதை  அவரிடமே கேளுங்கள் என கடுப்படித்தார். அதேவேளையில், செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்திருப்பது தற்கொலைக்கு சமம்  முன்னாள் அதிமுக அமைச்சர்  செம்மலை விமர்சனம் செய்துள்ளார். அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தது தமிழக அரசியலில் இன்று பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது . பனையூரில் … Read more

ஒசூரில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான ஆலோசகர்களை தேர்ந்தெடுக்க டென்டர் கோரியது தமிழ்நாடு அரசு

சென்னை: ஒசூரில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக ஆலோசகர்களை தேர்ந்தெடுக்கும் வகையில்,  தமிழ்நாடு அரசு டென்டர் கோரி உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 27ந்தேதி  நடைபெற்ற பேரவை கூட்டத்தொடரில் விதி 110ன் கீழ்  ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் மற்றும்  திருச்சியில் ‘கலைஞர் நூலகம்’ அமைக்கப்படும் என்று  அறிவித்தார். அபபோது,  ஓசூர் நகரத்திற்கான பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டு அது நிறைவடையும் நிலையில் உள்ளது. பொருளாதார வளர்ச்சி மையமாக ஓசூரை உருவாக்க … Read more

இந்தியா அனைவருக்குமானது: இந்திய அரசியலமைப்பு நாளில் முதல்வர் ஸ்டாலின் பதிவு…

சென்னை: இன்று இந்திய அரசியலமைப்பு நாள். இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல என குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் அரசியலமைப்பு தினம், சம்விதன் திவாஸ் என்றும் குறிப்பிடப்படுகிறது, இது ஆண்டுதோறும் நவம்பர் 26 அன்று அனுசரிக்கப்படுகிறது. அதன்படி  நாடு முழுவதும் இன்று இந்திய அரசியலமைப்பு நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி முதல்வர் ஸ்டாலின்  தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியா அனைவருக்கும் சொந்தமானது, ஒரு குறிப்பிட்ட கலாசாரம், சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல. இந்த … Read more

ஜனவரி 6ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்! ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

சென்னை: ஜனவரி 6ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்பபோவதாக  அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான  ஜாக்டோ-ஜியோ அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.‘ பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, 2026 ஜன.6-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவ தாக ‘ஜாக்டோ-ஜியோ’ அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சென்னை ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்களின் உயர்நிலை குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாகரன், தியோடர் ராபின்சன் மற்றும் பாஸ்கரன் ஆகியோர்  … Read more

கரூர் துயர சம்பவத்திற்கு சதி செயலே காரணம்! சிபிஐ வசம் ஆதாரம் கொடுத்துள்ளதாக தவெக நிர்மல் குமார் தகவல்…

திருச்சி: கரூர் துயர சம்பவத்திற்கு சதி செயலே காரணம்  என குற்றம் சாட்டியுள்ள   தவெக  இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார். அதுதொடர்பான ஆதாரங்களை சிபிஐ வசம் ஆதாரம் கொடுத்துள்ளதாகவும் கூறினார். கரூரில் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணைக்கு ஆஜராகும்படி, தவெக நிர்வாகிகளுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. அதன்படி கடந்த இரு நாட்களாக ,  கரூர் சுற்றுலா மாளிகையில் … Read more

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்

சென்னை: அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட  மூத்த அதிமுக தலைவர் செங்கோட்டையன் இன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் . அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில காலமாக தனித்து செயல்பட்டு வந்த செங்கோட்டையன், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒபிஎஸ், சசிகலா, டிடிவியுடன் சேர்ந்து, எடப்பாடியை விமர்சித்த நிலையில், அவரது  கட்சி உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பதவிகளும் பறிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் திமுகவில் இணைவார் என கூறப்பட்டது. அதே வேளையில், அவரை தவெக … Read more

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையனுடன் அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு….

சென்னை:   எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையனுடன் அமைச்சர் சேகர்பாபு திடீரென சந்தித்து பேசியது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில்,  அவர் தவெகவில் இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவிய நிலையில், திமுக அமைச்சர் சேகர்பாபு அவரை சபாநாயகர் அறையிலேயே வைத்து ரகசியமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கோட்டையனை திமுகவுக்கு இழுக்கும் வகையில் பேரம் பேசியதாக கோட்டை வட்டார … Read more