அ.தி.மு.க பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்… முழு விவரம்…

சென்னை: சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும்  அ.தி.மு.க பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், கூட்டணிக் கட்சிகள் குறித்து முடிவெடுக்க இபிஎஸ்சுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. பரபரப்பான  தமிழக அரசியல் சூழ்நிலையில், அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10 மணியளவில் சென்னை வானகரத்தில் உள்ள ஶ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் உடல்நலம் பாதிப்பு காரணமாக கலந்துகொள்ளாத நிலையில், மூத்த உறுப்பினர் கே.பி.முனுசாமி தற்காலிக … Read more

அரசுத் திட்டங்களை மோசடியாகப் பயன்படுத்தி பாஜக நிதி சேகரிப்பு – RTI-ல் வெளியான அதிர்ச்சித் தகவல்

2021–22ல், அரசு திட்டங்களின் பெயரை பயன்படுத்தி பாஜக ‘கட்சிநிதி’ வசூலித்தது ஆர்.டி.ஐ. மூலம் தெரியவந்துள்ளதாக தி வயர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சத்தியம் தொலைக்காட்சி செய்திவாசிப்பாளர் பி.ஆர். அரவிந்தக்ஷன் RTI மூலம் எழுப்பிய கேள்விகளுக்குக் கிடைத்த பதிலில் இது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அதில் மேற்கோள்காட்டியுள்ளது. பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் “மைக்ரோ டொனேஷன்” திட்டத்தில் பங்கேற்க தங்கள் சமூக வலைதள பதிவுகள் மூலம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து, Swachh Bharat, Beti … Read more

கடந்த 4 ஆண்டுகளில் ரூ.8,230.55 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த  4 ஆண்டுகளில்,  ரூ.8,230.55 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டு உள்ளதாக  இந்து சமய அறநிலையத்துறை  தெரிவித்து உள்ளது. கோவையில் டிசம்பர் 8ந்தேதி அன்று  ரூ.100 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடுஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வழிகாட்டுதலின்படி இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அந்த … Read more

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 42

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 42 பா. தேவிமயில் குமார் வேர்களின் வியர்வை வேர்கள் என ஒன்று இருப்பதையே மறந்த உலகமிது! பூக்களுக்கும் இலைகளுக்கும் மட்டுமே மரியாதை!! பழுத்த இலைகள், புதிய இலைகள், என பழமொழி நிரம்பியுள்ளது!! வியர்வை மிகுந்த வேரை விரும்புவதில்லை….. எவரும் வெட்டிவேராக இருந்தால் மட்டுமே எட்டிப் பார்ப்பார்கள்… மண்ணில் கிளை பரப்பும் வேருக்கு பரப்புரை தேவையில்லை!! உண(ர்)வூட்டும் அம்மையப்பர் வேர்களா??? இல்லை வேரறுக்கப்பட்டவர்களா?? இன்றைய தினத்தில் ….. முதியோர் இல்ல … Read more

திமுகவினர் நம்ப வைத்து ஏமாற்றி விடுவார்கள்! புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் ஆவேசம்…

சென்னை: திமுகவினர் நம்பவைத்து ஏமாற்றி விடுவார்கள். அவர்களை நம்பாதீர்கள்  என புதுச்சேரி உப்பளம் பகுதியில்  நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சி  தலைவர் விஜய்  கூறினார். மேலும், புதுச்சேரி அரசாங்கம்  திமுக அரசாங்கத்தை போன்றது கிடையாது,  பாரபட்சம் இல்லாமல் நடந்து கொள்கிறது என்றவர், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்க மத்தியஅரசு மறுத்து வருகிறது என்றும் கடுமையாக சாடினார். புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது.  ‘ஏற்கனவே ரோடு ஷோ … Read more

அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு பலன்! புதிய அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் ஈட்டிய விடுப்பு சரண் பணப்பலன் பெறுவது தொடர்பான  தமிழ்நாடு  அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அரசு கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ஈட்டி விடுப்பு பலன்  சலுகை அரசு ஊழியர்களுக்கு மீண்டும் கொடுக்கப்பட்ட நிலையில், அது தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இனி அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பு சரண் பணப்பலனை பெற முடியும். உலகம் முழுவதும் பரவிய கொரோனா பெருந்தொற்று பேரழிவை … Read more

120 எம்.பி.க்கள் ஆதரவு: மக்களவை சபாநாயகரிடம் நீதிபதி சுவாமிநாதன் பதவி நீக்கம் கோரி திமுக கூட்டணி தீர்மானம் வழங்கல்…

டெல்லி : திருப்பரங்குன்றம் வழக்கில், தமிழ்நாடு அரசை கடுமையாக சாடிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் (இம்பீச்மென்ட்) செய்ய வலியுறுத்தி மக்களவை சபாநாயகரிடம்  திமுக கூட்டணி எம்.பி.க்கள் தீர்மானம் வழங்கினர்.  அவர்களுடன் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா வத்ராவும் இருந்தார். இந்த தீர்மானத்துக்கு இண்டி கூட்டணிகளைச் சேர்ந்த 120 எம்.பி.க்கள் ஆதரவு அளித்துள்ளனர். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானம் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ஒப்படைக்கப்பட்டது. பதவி நீக்கக் கோரும் நோட்டீஸை மக்களவை … Read more

What Makes Modern Online Casinos So Popular

What Makes Modern Online Casinos So Popular Online casino sites have become one of the most vibrant corners of the digital home entertainment globe. Their appeal lies in the blend of excitement, convenience and constant technology. Gamers no longer need to visit physical venues to experience real-money video gaming. Rather, they can open a mobile … Read more

சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சி கலைவாணர் அரங்கில் நடைபெறும்! அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்…

சென்னை: சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சி! சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது  என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்  தெரிவித்துள்ளார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) சாா்பில் 49-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 7-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் புத்தககக் காட்சி நடைபெறும் என பபாசி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். நிகழாண்டில் 900-க்கும் மேற்பட்ட அரங்குகளை அமைக்க உள்ளதாகவும், பல்வேறு துறைசார் … Read more

5% விமான சேவை குறைப்பு இண்டிகோ நிறுவனத்திற்கு அதிர்ச்சியளித்த DGCA

இண்டிகோ விமான சேவை நாடு முழுவதும் தொடர்ந்து 8-வது நாளாகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, மும்பையில் 150-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 8-ஆம் தேதி, தங்களது விமான வலையமைப்பு “முழுமையாக சீரானது” என்றும், 90% விமான சேவைகள் வழங்கப்பட்டதாகவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. டிச 2 முதல் இன்றுவரை 4500க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் டிக்கெட் முன்பதிவு ரத்து செய்யப்பட்டதால் சுமார் ₹827 கோடி திரும்ப வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகள் … Read more