திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக நடந்து சென்ற போது விபரீதம்… 5 வயது சிறுவனை அடித்து இழுத்து சென்ற சிறுத்தைப்புலி

திருப்பதியில் இருந்து திருமலைக்கு பெற்றோர்களுடன் பாதயாத்திரையாக நடந்து சென்று கொண்டிருந்த ஐந்து வயது சிறுவனை சிறுத்தைப்புலி அடித்து இழுத்து சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூலைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நேற்று முன்தினம் இரவு திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக நடந்து சென்று கொண்டிருந்தனர். மலைப்பாதையில் உள்ள ஏழாவது மைல் அருகே சென்ற போது அவர்களுடைய ஐந்து வயது மகன் கவுசிக் என்பவனை வனப்பகுதியில் பதுங்கி இருந்த சிறுத்தை புலி பாய்ந்து அடித்து இழுத்து சென்றது. … Read more

பேனா நினைவுச்சின்னத்துக்கு மத்திய அரசு அனுமதி… விரைவில் பணியை தொடங்குகிறது தமிழ்நாடு அரசு..!

வங்கக் கடலில் கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் இறுதி அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை அனுப்பி உள்ள கடிதத்தில், தமிழ்நாடு அரசின் விண்ணப்பத்தை ஏற்று சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு விதித்த அதே 15 நிபந்தனைகளுடன் கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.என்.எஸ். அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும், கட்டுமானத்திற்கு நிலத்தடி நீரை பயன்படுத்த கூடாது, ஆமைகள் முட்டையிட்டு … Read more

கர்ப்பிணி காதலியிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்ட நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர்!

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மர், தமது கர்ப்பிணி காதலியை ஏமாற்றியதற்கு சமூக வலைதளத்தில் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளார். அண்மையில், மாடல் அழகி ஒருவருடன் நெய்மர் நெருக்கமாக இருந்ததாக கிசுகிசு செய்திகள் வெளியானது. இதையடுத்து, புருனா பியான்கார்டி – நெய்மர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், காதலி புருனா பியான்கார்டியை தனது கனவுப்பெண் எனவும், வாழ்க்கையின் ஒரு பகுதியான அவள் தன்னுடன் வேண்டும் எனவும் இன்ஸ்டாகிராமில் நெய்மர் உருக்கமாக குறிப்பிட்டு உள்ளார். … Read more

திருவாரூரில் மாமுல் தராததால் ஓட்டல் சூறை: 2 பேர் கைது

மன்னார்குடியில் மாமூல் தராததால் ஓட்டலை சூறையாடிய வழக்கில் 2 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். வ.உ.சி தெருவில் வெங்கடேசன் என்பவர் நடத்தி வரும் சிங்கப்பூர் பரோட்டா என்ற கடையில் 19-ஆம் தேதியன்று 3 பேர் கும்பல் அரிவாளால் தாக்குதல் நடத்தி பொருட்களை சேதப்படுத்தியதுடன், ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவரையும் வெட்டி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, மன்னார்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியதாக கூறப்படும் 2 பேர் காவல் … Read more

டைட்டானிக் கப்பலை பார்க்க சென்ற நீர்மூழ்கி கப்பல் 5 கோடீஸ்வரர்களுடன் மாயம் … 4 நாட்கள் இரவு, பகலாக கடலுக்கடியில் தேடுதல் வேட்டை

டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்றபோது, 5 கோடீஸ்வரர்களுடன் அட்லாண்டிக் பெருங்கடலில் மாயமான நீர்மூழ்கியில் ஆக்ஸிஜன் இருப்புக்காக வரையறுக்கப்பட்டிருந்த 96 மணி நேரக்கெடு கடந்துவிட்டது. ஏற்கனவே மின்சாரம் தீர்ந்ததால் கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்றும் கருவிகள் செயலிழந்திருக்கக்கூடிய நிலையில், இனி நீர்மூழ்கியில் கார்பன் அளவு அதிகரித்து அதில் பயணிப்பவர்கள் ஆழ்ந்த மயக்க நிலைக்கு சென்று உயிரிழக்கக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, கட்டுப்பாடு அறையுடனான தொடர்பை இழந்து கடலுக்கடியில் மாயமான அந்த நீர்மூழ்கியை அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு கடலோர … Read more

வெள்ளை மாளிகையில் சைவ விருந்து.. அதிபர் மனைவிக்கு 7.5 கேரட் வைரம்… மோடி – பைடன் சந்திப்பில் ருசிகரம்..!

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு தமிழ்நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட வெள்ளை எள்ளை வெள்ளிப் பெட்டியில் வைத்து பரிசளித்துள்ளார். வெள்ளை மாளிகையில் இரு தலைவர்களும் விரிவாக கலந்துரையாடினர். கின்னஸ் சாதனை யோகா நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு நியூயார்க்கிலிருந்து வாஷிங்டன் டி.சி. சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு விமான நிலைய வாயிலில் இருந்தே அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வெள்ளை மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடியை அதிபர் ஜோ பைடனும், … Read more

மக்கள் வாழ உகந்த நகரங்களின் தரவரிசை பட்டியலில் இடம்பிடித்த சென்னை

மக்கள் வாழ்வதற்கு உகந்த நகரங்களின் உலகளாவிய தர வரிசைப் பட்டியலில் சென்னை இடம் பிடித்துள்ளது. எகானமிஸ்ட் இண்டலிஜென்ஸ் யூனிட் என்ற அமைப்பு உலகளவில் 173 நகரங்களைத் தேர்வு செய்து சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் ஆகியவை குறித்து ஆய்வு நடத்தியது. இதனடிப்படையில் அந்த அமைப்பு வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில், இந்தியாவிலிருந்து ஆய்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி, மும்பை நகரங்கள் 60வது இடத்தை பிடித்துள்ளன. அதற்கடுத்த இடங்களை சென்னை, பெங்களூரு, அகமதாபாத் நகரங்கள் பிடித்தன. ஆஸ்திரியா தலைநகர் வியன்னா முதலிடத்தையும், … Read more

தமிழ்நாடு முழுவதும் நடிகர் விஜய் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்

நடிகர் விஜய் 49-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதை முன்னிட்டு மதுரை திருப்பரங்குன்றத்தில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் 49 பேருக்கு உணவு மற்றும் அவர்களின் இருசக்கர வாகனங்களுக்கு விஜய் ரசிகர்கள் பெட்ரோல் வழங்கினர். கோவை மதுக்கரை அரசு மருத்துவமனையில் விஜய் பிறந்த நாளன்று பிறந்த 5 குழந்தைகளுக்கு தங்க மோதிரமும், பொதுமக்களுக்கு காலை உணவும் வழங்கி ரசிகர்கள் கொண்டாடினர். கரூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 18 ஆலயங்களில் சிறப்பு பூஜை நடத்திய விஜய் மக்கள் இயக்கத்தினர், … Read more

சாதி சான்று இல்லாததால் கல்லூயில் சேர இயலவில்லை.. உயிரை மாய்த்த மாணவி..! சாதிக்க துடித்தவர் சாதி சான்றால் பலி

பன்றிகள் வளர்த்து மகளை 12 ஆம் வகுப்பு வரை படிக்க வைத்த நிலையில் , சாதி சான்றிதழ் இல்லை என்று எந்த கல்லூரியிலும் சேர்க்க மறுத்ததால் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறி தாய் உறவினர்களுடன் போராட்டம் நடத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்வாகி முதல் தலைமுறை பட்டதாரியாக சாதிக்க துடித்த தனது மகளுக்கு , உரிய நேரத்தில் ஜாதி சான்று கிடைக்காததால் உயிரை மாய்த்ததாக கூறி அவரது தாய் … Read more

இந்திய விமானப்படை ஜெட் விமானங்களுக்கு அமெரிக்க என்ஜின் – கையெழுத்தானது முக்கிய ஒப்பந்தம்

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தையொட்டி இரு நாடுகள் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாக முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்திய விமானப்படையின் ஜெட் போர் விமானங்களுக்கான என்ஜின்களை தயாரிக்க இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் ஏரோஸ்பேஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதையடுத்து இந்தியவின் உள்நாட்டு தயாரிப்பான தேஜாஸ்-Mk2 போர் விமானங்களுக்கு அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் F414 என்ஜின்கள் இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளன. இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் பொருளாதாரம் மற்றும் தேசிய … Read more