சாதி சான்றிதழ் வழங்காததால் கல்லூரி கனவு கேள்விக்குறியான விரக்கிதியில் மாணவி தற்கொலை!

திருவண்ணாமலை அருகே சாதிச் சான்றிதழ் வழங்கப்படாததால், கல்லூரிப் படிப்பு தடைப்பட்டதை தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலைக்கு முயன்ற பன்னியாண்டி சமுதாயத்தைச் சேர்ந்த மாணவி, சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார். திருவண்ணாமலை அடுத்த எடப்பாளையம் கிராமம் எம்ஜிஆர் நகரில் வசித்தவர் முருகன். இவரது மகள் ராஜேஸ்வரி,தனது தந்தையின் மறைவுக்கு பிறகு தாய் சரோஜாவின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். பன்னியாண்டி சமுதாயத்தை சேர்ந்த இவர், பிளஸ் 2 பொதுத் தேர்வில் 375 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று, உயர்கல்வி கனவுகளுடன், கல்லூரிக்கு … Read more

மருத்துவ சிகிச்சையின் போது உயிரிழப்பு ஏற்பட்டால் மருத்துவரைக் கைது செய்ய தடை – அதிரடி உத்தரவிட்ட டிஜிபி.!

மருத்துவ சிகிச்சையின் போது உயிரிழப்பு ஏற்பட்டால் மருத்துவரைக் கைது செய்ய தடை – அதிரடி உத்தரவிட்ட டிஜிபி.! தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு மருத்துவ சிகிச்சையின் போது நோயாளி உயிரிழந்தால் மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யும் வழக்கமான நடைமுறைக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “சிகிச்சையின் போது நோயாளிக்கு மரணம் ஏற்பட்டால் அது மருத்துவரின் கவனக்குறைவு அல்லது அலட்சியத்தின் காரணமாக ஏற்பட்டது என்றும், அவர்கள் மீது வழக்கு பதிவு … Read more

தென்காசியில் முகம் சிதைந்த நிலையில் பெண் சடலம் மீட்பு.!

தென்காசியில் முகம் சிதைந்த நிலையில் பெண் சடலம் மீட்பு.! தென்காசி மாவட்டத்தில் உள்ள நடுமாதாகோயில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது வீட்டில் சந்திரன்-சித்ரா என்ற தம்பதியினர் கடந்த 10 ஆண்டுகளாக வாடகைக்கு வசித்து வந்தனர். இந்த நிலையில், அந்த வீட்டிலிருந்து இன்று துர்நாற்றம் வீசியுள்ளது. இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து துர்நாற்றம் வீசிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். … Read more

சென்னை மக்களே தயாரா.. செம்மொழி பூங்காவில் 2 நாட்கள் உணவு திருவிழா.!

சென்னை செம்மொழிப் பூங்காவில் 2 நாட்கள் உணவுத் திருவிழா நடைபெறவுள்ளது.  சென்னை செம்மொழி பூங்காவில் வரும் ஜூன் 24, 25 ஆகிய 2 நாட்கள் உணவுத் திருவிழா நடைபெறவுள்ளதாக திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் “தமிழ்நாடு அரசு மற்றும் UNHCR & OfERR அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் சென்னை செம்மொழிப் பூங்காவில், வருகின்ற ஜூன் 24 மற்றும் 25 அன்று நடைபெறவிருக்கும் புலம்பெயர்ந்தவர்களின் உணவுத் திருவிழாவில் அனைவரும் தவறாமல் … Read more

கன்னியாகுமரி : பள்ளியில் 8ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி – நடந்தது என்ன?

கன்னியாகுமரி : பள்ளியில் 8ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி – நடந்தது என்ன? கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொட்டாரம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் படித்து வருகிறார்.  இந்த நிலையில், இந்த மாணவி இன்று வழக்கம் போல் பள்ளிக்கு வந்துள்ளார். அங்கு திடீரென தான் வைத்திருந்த தூக்க மாத்திரைகளை அதிக அளவுச் சாப்பிட்டு சில நேரத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்த பள்ளி … Read more

மழலையர் பள்ளி குழந்தையை கொடுமைப்படுத்திய பாஜக பெண் நிர்வாகி கைது..!!

சென்னை வில்லிவாக்கம் ராஜாஜி நகரை சேர்ந்த சரண்யா தனது 7 வயது மகனுக்கு ஆட்டிசம் பாதிப்பால் பேச்சு குறைபாடு உள்ள நிலையில் வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் உள்ள மை பாட்டி வீடு என்ற தனியார் மழலையர் பள்ளியில் சேர்த்துள்ளார். இந்த பள்ளியில் பணியாற்ற வந்த இன்டர்ன்ஷிப் கல்லூரி மாணவர்கள் சிறுவன் பள்ளியில் சித்தரவதை செய்யப்படுவதாகவும், கை, கால்கள் கட்டப்படுவதாகவும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.    இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தாய் சரண்யா உடனே மழலையர் பள்ளி … Read more

கர்ப்பமாக்கிவிட்டு எஸ்கேப் ஆக நினைத்த காதலன்.. காவல் நிலைய வளாகத்தில் அரங்கேறிய சம்பவம்.!

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ரோஜா. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பாண்டித்துரை என்பவரை கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 5ம் தேதி இருவீட்டார் சம்பந்தத்துடன் திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளனர்.  அதனை தொடர்ந்து ரோஜாவின் வீட்டிற்கு அடிக்கடி வந்த பாண்டித்துரை அவரிடம் பலமுறை உடலுறவு கொண்டுள்ளார். இதில் ரோஜா மூன்று மாத கர்ப்பமாகியுள்ளார். இந்த நிலையில் பாண்டித்துரை எனது குடும்பத்தினருக்கு உன்னை பிடிக்கவில்லை என்று ரோஜாவை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.  இதனையடுத்து … Read more

நள்ளிரவில் இளம்பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு..! கணவரின் வெறிச்செயல்..! போலீசார் விசாரணை…!

கன்னியாகுமரி மாவட்டத்தில் குடும்ப தகராறில் இளம் பெண்ணை கணவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கட்டையன்விளை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (42). இவரது மனைவி ஏஞ்சலின் டயா (34). இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து நேற்று நள்ளிரவும் இவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த செல்வராஜ் அரிவாளால் மனைவியின் கை, தலை, கருத்து, உட்பட … Read more

தென்காசி : மகனைத் திருத்த தற்கொலை நாடகம் ஆடிய தாய் – விபரீதத்தில் முடிந்த சம்பவம்.!!

தென்காசி : மகனைத் திருத்த தற்கொலை நாடகம் ஆடிய தாய் – விபரீதத்தில் முடிந்த சம்பவம்.!! தென்காசி மாவட்டமத்தில் உள்ள செங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. ஆசிரியையான இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து  கடந்த 15 வருடங்களாக மகனுடன் தனியாக வசித்து வந்தார்.  இந்த நிலையில், ஆசிரியை கிருஷ்ணவேணியின் மகன் சரியாக பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இதையறிந்த, அவர் தனது மகனை பலமுறை கண்டித்துள்ளார். இருப்பினும், பள்ளிக்கு சரியாக செல்லாமல் இருந்தார். … Read more

ஓடிடியில் வெளியாகும் குட்நைட் திரைப்படம் – எப்போது தெரியுமா?

ஓடிடியில் வெளியாகும் குட்நைட் திரைப்படம் – எப்போது தெரியுமா? இயக்குனர் சந்திரசேகரன் இயக்கத்தில் ‘ஜெய் பீம்’ படத்தின் கதாநாயகன் நடிகர் மணிகண்டன் நடித்துள்ள திரைப்படம் ‘குட் நைட்’.  இந்த படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக நடிகை மீதா ரகுநாத் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ரமேஷ் திலக், இயக்குனர் பாலாஜி சக்திவேல், பக்ஸ் பகுவதி பெருமாள், ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மில்லியன் டாலர் ஸ்டியோஸ் மற்றும் எம்.ஆர்.பி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு … Read more