மதுபானக் கொள்கை முறைகேடு: சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகன் கைது

ராய்பூர்: மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகனும், தொழிலதிபருமான சைதன்யா பாகேலை அமலாக்கத் துறை இன்று கைது செய்தது. பிலாயில் உள்ள சைதன்யா பாகேலின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலையில் நடத்திய சோதனைக்குப் பிறகு, அவர் கைது செய்யப்பட்டார். பூபேஷ் பாகேலின் முந்தைய ஆட்சிக் காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் மதுபானக் கொள்கை முறைகேடுகள் தொடர்பான வழக்கின் அடிப்படையில் இந்த கைது நடந்துள்ளது. முந்தைய பூபேஷ் பாகேலின் ஆட்சியின்போது … Read more

75 வயது தலைவர்களுக்கு ஓய்வு: மோகன் பாகவத் கருத்தால் பிஹார் பாஜகவுக்கு சிக்கல்

பாட்னா: மூத்த தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் தலைவரின் கருத்தால் பிஹார் பாஜகவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிஹாரில் வரும் அக்டோபரில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுக்காக பாஜக நன்கு திட்டமிட்டு வருகிறது. இதற்கிடையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், “75 வயது முடிந்தவர்கள் அடுத்தவர்களுக்கு வழிவிடுவதுதான் இயற்கையானது” என்று அண்மையில் கூறினார். ஆர்எஸ்எஸ் தனது தாய் அமைப்பு என்பதால், அதன் கொள்கைகளை அமலாக்குவதை பாஜக தனது கடமையாக கொண்டுள்ளது. இந்நிலையில், பாகவத்தின் 75 … Read more

டெல்லியை அடுத்து பெங்களூருவிலும் 15 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பெங்களூரு: பெங்ளூருவில் உள்ள 15 தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள 15 தனியார் பள்ளிகளுக்கு “[email protected].” என்ற ஒற்றை மின்னஞ்சல் மூலம் இன்று காலை 7.31 மணிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டலை அடுத்து சில பள்ளிகள் விடுமுறை அறிவித்தன. சில பள்ளிகள் மாணவர்களை வெளிப்பகுதியில் காத்திருக்கும்படி அறிவுறுத்தின. பள்ளி நிர்வாகங்கள் சார்பில் அளிக்கப்பட்ட புகார்களின் பேரில், காவல்துறை, … Read more

பணமழை.. ரூ.1 கோடி வெல்லப்போவது யார்? இன்று கேரளா லாட்டரி சுவர்ண கேரளம் SK-12 முடிவுகள்

Kerala Lottery News In Tamil: கேரள மாநிலத்தின் சுவர்ண கேரளம் லாட்டரி எஸ்கே-12 குலுக்கல் முடிவுகள் இன்று 3 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளன. இன்றைய லாட்டாரி குலுக்கல் திருவனந்தபுரத்தின் கோர்கி பவனில் நடைபெறும்.

சித்தராமையா குறித்து ‘விவகாரமான’ மொழிபெயர்ப்பு: சர்ச்சையில் சிக்கிய மெட்டா

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா குறித்து பேஸ்புக்கில் மெட்டா வெளியிட்ட தானியங்கி மொழிபெயர்ப்பு சர்ச்சையை கிளப்பியுள்ளது. பழம்பெரும் நடிகை சரோஜா தேவி அண்மையில் பெங்களூருவில் காலமானார். அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் சரோஜா தேவியின் இல்லத்துக்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இது தொடர்பான பதிவை முதலமைச்சர் அலுவலகத்தின் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கம் வெளியிட்டிருந்தது. அதில் … Read more

டெல்லியில் இன்றும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பெற்றோர்கள், மாணவர்கள் அச்சம்

டெல்லியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இன்று (ஜூலை 18) மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. டெல்லியில் உள்ள 23 பள்ளிகளுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அந்த மிரட்டல் மின்னஞ்சலில், “வணக்கம். பள்ளி வகுப்பறைகளுக்குள் பல வெடிபொருட்கள் வைத்துள்ளேன் என்பதை உங்களுக்குத் தெரிவிக்கவே நான் எழுதுகிறேன். வெடிபொருட்கள் கருப்பு பிளாஸ்டிக் பைகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. உங்கள் அனைவரையும் இந்த உலகத்திலிருந்து அழித்துவிடுவேன். ஒரு ஆன்மா கூட உயிர் பிழைக்காது. பெற்றோர்கள் … Read more

1.67 கோடி குடும்பங்களுக்கு இலவச மின்சாரம்: தேர்தலுக்கு முன் மாநில அரசு அதிரடி அறிவிப்பு

State Government Latest News: ஆசிரியர்கள், பூத் லெவல் அதிகாரிகள், மூத்த குடிமக்கள், விதவைகள் என பலதரப்பட்ட மக்களுக்கு ஜாக்பாட் அறிவிப்புகளை வெளியிட்ட மாநில அரசு தற்போது மக்களுக்கு இலவச மின்சாரம் என்ற பெரிய பரிசை அளித்துள்ளது.

சங்கூர் பாபாவின் மதமாற்றத்தில் முறைகேடு: உத்தர பிரதேசம், மும்பையில் அமலாக்கத் துறை சோதனை

லக்னோ: சட்​ட​விரோத மதமாற்​றத்​தில் நடை​பெறும் நிதி​ முறை​கேடு தொடர்​பாக உத்தர பிரதேசம், மும்​பை​யில் 14 இடங்​களில் அமலாக்​கத்​துறை நேற்று சோதனை நடத்​தி​யது. உத்தர பிரதேசம் பல்​ராம்​பூர் மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் கரி​முல்லா ஷா. இவர் ஜலாலுதீன் என்கிற சங்​கூர் பாபா என அழைக்​கப்​படு​கிறார். இவரது தலை​மையி​லான குழு​வினர் பல்​ராம்​பூரில் உள்ள சந்த் அவுலியா தர்​காவை தலை​மை​யிட​மாக கொண்டு செயல்​படுகின்றனர். இவர்​கள் மிகப் பெரிய கூட்​டங்​களை அடிக்​கடி கூட்டி சட்​ட​விரோத மதமாற்ற பணி​களில் ஈடு​படு​கின்​றனர். இந்த கூட்டத்​தில் இந்​தி​யர்​கள் மற்​றும் … Read more

ரூ.12,200 கோடி வளர்ச்சி திட்​டங்​களை தொடங்கிவைக்க பிரதமர் மோடி இன்று பிஹார், மேற்கு வங்கம் செல்கிறார்

புதுடெல்லி: பிரதமர் நரேந்​திர மோடி இன்று பிஹார், மேற்​கு​வங்​கத்​துக்கு செல்​கிறார். அப்​போது ரூ.12,200 கோடி வளர்ச்சி திட்டங்களை அவர் தொடங்​கிவைக்​கிறார். பிஹார் மாநிலம் மோதிஹரி​யில் இன்று காலை அரசு நலத்​திட்ட விழா நடை​பெறுகிறது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி பங்கேற்கிறார். அப்​போது ரூ.7,200 கோடி மதிப்​புள்ள பல்​வேறு வளர்ச்​சித் திட்​டங்​களுக்கு அவர் அடிக்​கல் நாட்​டு​கிறார். சில திட்டங்களை அவர் தொடங்கி வைக்​கிறார். இதன்​படி பிஹாரின் தர்​பங்​கா​வில் புதிய மென்​பொருள் தொழில்​நுட்ப பூங்​காவை அவர் திறந்து வைக்​கிறார். 4 … Read more

5 ஆண்​டு​களில் வெளிநாடுகளில் பதுங்கி இருந்த 134 குற்றவாளிகள் இந்தியாவுக்கு நாடு கடத்தல்: சிபிஐ

புதுடெல்லி: இந்​தி​யா​வில் குற்​றச் செயல்​களில் ஈடு​படும் சமூக விரோ​தி​கள், பொருளா​தார குற்​ற​வாளி​கள் வெளி​நாடு​களுக்கு தப்​பிச் செல்​வது அதி​கரித்து வரு​கிறது. இன்​டர்​போல் உதவி​யுடன் அவர்​கள் இந்​தி​யா​வுக்கு நாடு கடத்​தப்​பட்டு நீதி​யின் முன்பு நிறுத்​தப்​படு​கின்​றனர். இதுகுறித்து சிபிஐ அதி​காரி​கள் கூறிய​தாவது: வெளி​நாடு​களுக்கு தப்​பிச் செல்​லும் குற்​ற​வாளி​கள் குறித்து இன்​டர்​போல் உதவி​யுடன் சிவப்பு நோட்​டீஸ் வெளி​யிடப்​படு​கிறது. இதன்​படி 195 நாடு​களில் குற்​ற​வாளி​கள் தீவிர​மாக தேடப்​படு​வார்​கள். எந்த நாட்​டில் குற்​ற​வாளி​கள் பதுங்கி உள்​ளனர் என்​பது இன்​டர்​போல் உதவி​யுடன் கண்​டு​பிடிக்​கப்​படும். இதன்​பிறகு சம்​பந்​தப்​பட்ட குற்​ற​வாளி​களை … Read more