விபத்துகளால் ரத்தாகும் சென்னை ரயில்கள்: சேலம் – விருத்தாசலம் வழித்தடத்தை பயன்படுத்த வலுக்கும் கோரிக்கை

சேலம்: ரயில் விபத்துகளின்போது சேலம் – அரக்கோணம் – சென்னை ரயில் தடத்தில் இயக்கப்படும் ரயில் ரத்து செய்யப்படுவதால், ரயில் பயணிகள் பாதிக்கப்படுவது தொடர் கதையாக இருக்கிறது. எனவே, சேலம் – சென்னை இடையிலான 2-வது ரயில் பாதையாக இருக்கும் சேலம் – விருத்தாசலம் வழித்தடத்தை முழுமையாக பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட வேண்டும் என்று ரயில்வே ஆர்வலர்களும், பயணிகளும் வலியுறுத்தி உள்ளனர். தெற்கு ரயில்வேயில், தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் பெரிதும் பயனடையும் வழித்தடங்களாக இருப்பது, … Read more

திருவள்ளூர் விபத்து எதிரொலி: ரயில் பயணிகளுக்காக சேலத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சேலம்: சேலம் வழியாக சென்னை செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், ரயில் பயணிகள் வசதிக்காக, சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சேலத்தில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையை அடுத்த திருவள்ளுர் அருகே சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய ரயில்கள், சேலம் – அரக்கோணம் வழித்தடத்தில் சென்னை செல்லக்கூடிய ரயில்கள் பலவும் ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக, சென்னையில் இருந்து சேலம் வழியாக, … Read more

‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ : 2-ம் கட்ட சுற்றுப்பயணத்தை அறிவித்தார் இபிஎஸ்

சென்னை: தமிழகத்​தில் 2026 சட்​டப்​பேரவை தேர்​தலை​யொட்டி ‘மக்​களை காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சார சுற்​றுப்​பயணத்தை மேட்​டுப்​பாளை​யத்​தில் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கடந்த 7-ம் தேதி தொடங்கினார். இந்நிலையில், 2-ம் கட்ட சுற்றுப்பயண அட்டவணையை அறிவித்துள்ளார். அதன்படி, ஜூலை 27 தொடங்கி ஆகஸ்ட் 8 வரை இரண்டாம் கட்டமாக அவர் பயனப்படவுள்ளார். இது குறித்து அதிமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், தமிழக … Read more

திருவள்ளூர் ரயில் தீ விபத்து எதிரொலி.. 8 முக்கிய ரயில்கள் ரத்து! முழு விவரம்

Tiruvallur Train Fire Accident: திருவள்ளூரில் சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அவ்வழியாக செல்லும் 8 முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

ஓராண்டுக்கு மேலாகியும் பி.எட். பட்டச் சான்றிதழ் வழங்கப்படவில்லை: அரசுக்கு அன்புமணி கண்டனம்

சென்னை: ஓராண்டுக்கு மேலாகியும் பி.எட். பட்டச் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றும் 60 ஆயிரம் பட்டதாரிகளின் எதிர்காலத்துடன் திமுக அரசு விளையாடுவதா? என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள 642 அரசு மற்றும் தனியார் கல்வியியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டு இளநிலை கல்வியியல் ( பி.எட்) பட்டம் பெற்ற 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ஓராண்டுக்கு மேலாகியும் தற்காலிகப் பட்டச்சான்றிழும், ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழும் வழங்கப்படவில்லை. இதனால் … Read more

60 ஆயிரம் பட்டதாரிகளின் எதிர்காலத்துடன் திமுக அரசு விளையாடுவதா? அன்புமணி கண்டனம்!

ஓராண்டுக்கு மேலாகியும்  பி.எட். பட்டச்சான்றிதழ் வழங்கப்படவில்லை: 60 ஆயிரம் பட்டதாரிகளின் எதிர்காலத்துடன் திமுக அரசு விளையாடுவதா? என அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

‘சாரி மா மாடல் சர்க்கார்’ – அஜித்குமாருக்கு நீதி கேட்கும் போராட்டத்தில் திமுக மீது விஜய் விமர்சனம்

சென்னை: “திமுக ஆட்சியில் 24 பேர் போலீஸ் காவலில் உயிரிழந்திருக்கின்றனர். அவர்கள் அனைவரின் குடும்பத்தாரிடமும் ‘சாரி’ சொல்லுங்கள். அவர்கள் அனைவரின் குடும்பத்துக்கும் நிதியுதவி வழங்குங்கள். அண்ணா பல்கலை மாணவி வழக்கு முதல் அஜித்குமார் வழக்கு வரை எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் தலையிட்டு கேள்வி கேட்கிறது. நீதிமன்றம்தான் கேள்விகேட்க வேண்டும் என்றால், நீங்க எதுக்கு சார்?” என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித்குமார் என்ற இளைஞர் போலீஸார் … Read more

தமிழகத்தில் தனி பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி: புதுச்சேரியில் பழனிசாமி உறுதி

கடலூர் / புதுச்சேரி: தமிழகத்​தில் தனிப்​பெரும்​பான்​மை​யுடன் அதி​முக வெற்றி பெற்​று, ஆட்சி அமைக்​கும் என்று அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். ‘மக்​களை காப்​போம் தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சா​ரப் பயணத்​தின் ஒரு பகு​தி​யாக நேற்று மாலை கடலூருக்கு வந்த பழனி​சாமிக்​கு, ரெட்​டிச்​சாவடி​யில் கடலூர் வடக்கு மாவட்​டச்செய​லா​ளர் எம்​.சி.சம்​பத்தலை​மை​யில் வரவேற்பு அளிக்​கப்​பட்​டது. பின்​னர், பொது​மக்​களிடையே பழனி​சாமி பேசி​ய​தாவது: கடலூர் மாவட்​டத்​தில் தானே புயலின்​போது நாங்​கள் ஓடிவந்து நிவாரண உதவி​களை செய்​தோம். கடந்த ஆட்​சி​யில் விவ​சா​யிகளுக்கு வழங்​கப்​பட்ட விலை​இல்லா … Read more

கூட்டணிக்கு அதிமுக வந்தால் ‘முதல்வர் வேட்பாளர்’ நிபந்தனையை தளர்த்திக் கொள்வாரா விஜய்? – சி.டி.ஆர். நிர்மல்குமார் நேர்காணல்

நடிகர் விஜய் தங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என அவரால் விமர்சிக்கப்படும் பாஜக-வினரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், கூட்டணி என்றால் அது தவெக தலைமையில் தான். விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர் என திடமாக தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது தவெக செயற்குழு. இந்த நிலையில், தவெக-வின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூகஊடகப் பிரிவு துணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமாரிடம் ‘இந்து தமிழ்திசை’க்காக பேசினோம். 2 கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை எட்டிவிட்டதா தவெக? மற்றகட்சிகளைப் போல் போலி கணக்குக் … Read more

திருவள்ளூரில் சரக்கு ரயிலில் தீ விபத்து.. என்ன காரணம்?

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், இந்த தீ விபத்து எப்படி எற்பட்டது என்பது குறித்து பார்க்கலாம்.