இளம்பெண்ணுக்கு கட்டாய தாலி கட்ட முயன்ற சகோதரர்கள்.. கைது செய்த போலீசார்.!

திருமணம் நிச்சயக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு வாலிபர் கட்டாய தாலி கட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை அம்பேத்கர் நகரில் அருண் என்ற இளைஞர் வசித்து வருகிறார். இந்த நிலையில் அருணும், அவரது சகோதரரும் இணைந்து ஒரு இளம்பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி கட்டாயப்படுத்தி உள்ளனர். மேலும், அந்தப் பெண்ணிற்கு கட்டாய தாலி கட்ட அருண் முயற்சித்துள்ளார்.

அந்தப் பெண்ணிற்கு ஏற்கனவே உறவுக்கார வாலிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற 10ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதனால் அந்த இளம் பெண் கத்திக் கூச்சல் இட்டதால் அருண் தனது சகோதரருடன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த தனது பெற்றோரிடம் இளம்பெண் நடந்தவற்றை கூறியுள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த சகோதரர்களை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதற்கிடையில் போலீசாரின் விசாரணைக்கு பயந்து அருண் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த அவரது சகோதரர் அருணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அதன் பிறகு காவல்துறையினர் அவரது சகோதரர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.