மாநாடு கணக்கு வரவில்லை: தயாரிப்பாளர் வேதனை

மாநாடு கணக்கு வரவில்லை: தயாரிப்பாளர் வேதனை

மாநாடு கணக்கு வரவில்லை: தயாரிப்பாளர் வேதனை

2/8/2022 2:28:04 PM

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி, எஸ்.ஜே.சூர்யா நடித்த மாநாடு படம் வெளியாகி 75 நாட்கள் வரவில்லை. படம் பலகோடி வசூல் சாதனை என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் படத்தின் வசூல் கணக்கை கூட இன்னும் காட்டவில்லை. என்று அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இன்று 75வது நாள் ‘மாநாடு’.

ரோகிணியில் கோலாகலம் காண்கிறது. 75 நாட்கள் ஆகியும் இன்னமும் விநியோகஸ்தர்கள் கணக்கு ஒப்படைக்கவில்லை. ஒரு வெற்றிப் படத்திற்கே இந்த நிலைன்னா… மற்ற படங்களின் நிலையை என்ன சொல்ல??! இப்படி இருந்தால் எப்படி தொழில் செய்ய??! நடிகர்கள், தயாரிப்பாளர்கள் ஓடிடி பக்கம் போறதுல என்ன தப்பு இருக்குன்னு யோசிக்க வைக்குறாங்க…” என்று தெரிவித்திருக்கிறார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.