பரபரப்பான கட்டத்தில் புரோ கபடி லீக் தொடர்: தமிழ் தலைவாஸ் அணி போராடி தோல்வி

பெங்களூரு,    
                
8-வது புரோ கபடி லீக் போட்டிகள் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. இப்போட்டியில், அரியானா ஸ்டீலர்ஸ் அணி 37-29 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி  வெற்றியை ருசித்தது. 

அரியானா ஸ்டீலர்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் ஆஷிஷ், தன் அணிக்காக 16 புள்ளிகள் பெற்று கொடுத்தார். அவருக்கு பக்கபலமாக அந்த அணியின் கேப்டன் விகாஷ் கண்டோலா 8 புள்ளிகள் பெற்று தந்தார். போட்டியின் இறுதியில், 29 புள்ளிகள் பெற்ற தமிழ் தலைவாஸ் அணி  போராடி தோற்றது.
தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள புரோ கபடி லீக் தொடரில், இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முக்கியமான 104வது லீக் சுற்று போட்டியில், தமிழ் தலைவாஸ் அணி – உ.பி யோதா அணியை எதிர்கொள்கிறது. தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 105வது லீக் போட்டியில், தெலுங்கு டைட்டன்ஸ் அணி – குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.