கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் கட்டுப்பாடுகளை தளர்த்தி சிக்கிம் மாநில அரசு உத்தரவு.!

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது.  இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு 58,077 ஆக உறுதியாகி உள்ளது என தெரிவித்து உள்ளது. இது, நேற்றுடன் ஒப்பிடும்போது குறைவாகும். நேற்று 67,084 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், ஒரே நாளில் 58,077 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில்  சிக்கிம் மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வருவதால் கட்டுப்பாடுகளை தளர்த்தி மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.புதிய வழிகாட்டுதல்களின்படி,* அனைத்து கல்வி நிறுவனங்களும் வழிகாட்டு விதிமுறைகளுடன் செயல்பட அனுமதி.* சமூக, அரசியல், மத மற்றும் விளையாட்டு தொடர்பான கூட்டங்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்.* சந்தைகள், கடைகள்,வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும்.* மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி மத்திய அரசு அலுவலகங்கள் தொடர்ந்து செயல்படும்.*மாநில அரசின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், நிறுவனங்கள் உட்பட அனைத்து மாநில அரசு அலுவலகங்களும் 100 சதவீத வருகையுடன் கடுமையான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.