டாடா சன்ஸ் தலைவராக சந்திரசேகரன் பதவி காலம் நீட்டிப்பு| Dinamalar

புதுடில்லி: டாடா குழுமத்தின்,’ ஹோல்டிங்’ நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என். சந்திரசேகரின் பதவிக் காலம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டாடா குழுமத்தின்,’ஹோல்டிங்’ நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராகஎன். சந்திரசேகரன் இருந்து வருகிறார். இவரது தலைமையின் கீழ், டாடா குழுமத்தின் அனைத்து நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.

கடந்தாண்டு செப்டம்பரில் சந்திரசேகரின் பதவி காலம் மேலும் நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , டாடா குழுமத்தின் வாரிய கூட்டம் இன்று நடந்தது. இதில் தற்போது தலைவராக உள்ள என். சந்திரசேகரன் பதவி காலத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.