99 வயது மூதாட்டி மீது கைவைத்த வாலிபர்… பிரிட்டனி்ல் அதிர்ச்சி சம்பவம்

பிரிட்டனின் கடற்கரை நகரமான பிளாப்பூல் அருகே உள்ள லங்காஷயர் பகுதியில் 99 வயதான மூதாட்டி ஒருவர்
பாலியல் பலாத்காரம்
செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் போவீசில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், மூதாட்டியின் அறையில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் அந்த வீட்டின் பராமரிப்பாளரான பிலிப் கேரி (47) என்பவர்தான் மூதாட்டியின் அறைக்குள் நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்யும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனை அறிந்து மூதாட்டியின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து கேரியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

செக்ஸ் இணையதளங்களில் மூழ்கி இருப்பவர்களுக்கு வருகிறது செம செக்!

தடயவியல் சான்றுகள் மற்றும் கேமரா காட்சிகளை அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமனறதத்தில் சமர்ப்பித்தபோது கேரி தமது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவி்ட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.