18 வருடங்களுக்கு பிறகு கர்ப்பமான பெண்! ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்த அதிசய நிகழ்வு


இந்தியாவில் 18 வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்த பெண்மணிக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தை பிறந்துள்ளது.

கேரள மாநிலம் அதிரம்புழ பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ். இவருடைய மனைவி பிரசன்னா குமாரி. பெரியோர்கள் முன்னிலையில் இருவருக்கும் கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் திருமணமாகி 18 வருடங்கள் கடந்தும் இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் பிரசன்னா குமாரி திடீரென கடந்த ஆண்டு கர்ப்பம் தரித்துள்ளார்.

இதனையடுத்து மருத்துவரின் ஆலோசனைப்படி தங்கள் குழந்தையை இருவரும் சந்தோஷமாக வளர்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 8ஆம் திகதி பிரசன்னா குமாரிக்கு பிரசவவலி ஏற்பட்டதையடுத்து அவரது கணவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

பரிசோதனையில் பெண்ணின் வயிற்றில் நான்கு பெண் குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. பின்னர் அறுவை சிகிச்சை மூலம் 4 பெண் குழந்தைகளையும் பாதுக்காப்பாக மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்.

தற்போது 4 குழந்தைகள், குழந்தைகளை பெற்றெடுத்த தாய் மற்றும் மருத்துவர்களின்  புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.      



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.