தனுஷை இப்படி பார்க்க கஷ்டமா இருக்கு: வைரல் போட்டோ

சுமார் 10 ஆண்டுகள் கழித்து அண்ணன்
செல்வராகவன்
இயக்கத்தில் நடித்து வருகிறார்
தனுஷ்
.
நானே வருவேன்
என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் அந்த படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் செட்டில் தன் தம்பியுடன் பேசிக் கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு நானே வருவேன் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார் செல்வராகவன்.

அந்த புகைப்படத்தில் தனுஷ் முகத்தில் ஒருவித கவலை இருந்தாலும் சந்தோஷமும் இருக்கிறது. எனக்கு தெரிந்தது எல்லாம் சினிமா மட்டுமே. சினிமாவை தாண்டி எனக்கு எதுவும் தெரியாது என்று பலமுறை கூறியிருக்கிறார் தனுஷ்.

அதனால் படப்பிடிப்பு தளத்தில் அவர் முகத்தில் சந்தோஷம் இருப்பதில் வியப்பு இல்லை. காதல் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்ததில் இருந்தே படப்பிடிப்புகளில் பிசியாக இருக்கிறார் தனுஷ்.

முன்னதாக வெங்கி அட்லுரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்து வந்தார். தற்போது நானே வருவேன் ஷூட்டிங்கில் கலந்து கொண்டிருக்கிறார்.

Dhansuh:தனுஷ், ஐஸ்வர்யா பற்றி அப்பா கஸ்தூரி ராஜா சொன்னது நிஜமா?
செல்வராகவன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

தனுஷ் அண்ணாவை இப்படி பார்க்க சங்கடமாக இருக்கிறது. அவர் முகத்தில் சிரிப்பு இருந்தாலும் அதில் கவலை தான் அதிகம் தெரிகிறது. அவர் வாழ்வில் விரைவில் எல்லாம் நல்லபடியாக இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.