மன் கி பாத்; கருத்து தெரிவிக்க மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

புதுடெல்லி: 2022 பிப்ரவரி 27-ல் ஒளிபரப்பாகவுள்ள மன் கி பாத் நிகழ்ச்சிக்கு கருத்துக்களை தெரிவிக்குமாறு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

2022 பிப்ரவரி மாதம் 27-ந்தேதி ஒளிபரப்பாகவுள்ள மனதின் குரல் நிகழ்ச்சிக்கு ஆலோசனைகளையும், கருத்துக்களையும் வழங்குமாறு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

‘‘இந்த மாதம் மனதின் குரல் நிகழ்ச்சி 27-ந்தேதி ஒளிபரப்பாகவுள்ளது. எப்போதும் போல, அதற்கு உங்களது ஆலோசனைகளைப் பெறுவதற்கு ஆவலாக உள்ளேன். மைகவ், நமோ செயலியில் எழுதுங்கள் அல்லது 1800-11-7800 என்ற எண்ணில் அழைத்து உங்கள் செய்தியை பதிவு செய்யுங்கள்.’’ எனத் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.