மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு – அரசு திடீர் விளக்கத்தால் பரபரப்பு!

மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு, அரசு விளக்கம் அளித்துள்ளது.

சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கோவிட் – 19 எனப்படும்
கொரோனா
வைரஸ் தொற்று முதன் முதலில் பரவியது. கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும், அது பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து, சுகாதாரத் துறையை அச்சுறுத்தி வருகிறது. கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தொற்று, தற்போது உலக நாடுகளை ஆட்டிப் படைத்து வருகிறது.

மேற்கு ஐரோப்பியா நாடான ஆஸ்திரியாவில், ஒமைக்ரான் பரவல் காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரண்டு வாரங்களுக்கு
முழு ஊரடங்கு
அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு மட்டும் முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்தது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கும் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டது.

மீண்டும் முழு ஊரடங்கு – அதிகரிக்கும் கொரோனாவால் அரசு அதிரடி!

இந்நிலையில், கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை
ஆஸ்திரியா
அரசு அளித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, உணவகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்குள் செல்வதற்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்ற உத்தரவு திரும்பப் பெறப்பட்டு உள்ளது. எப்.எப்.பி.2 முகக் கவசம் அணிந்து கொண்டு மேற்கண்ட இடங்களுக்கு செல்லலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையே கொரோனா பரவல் அதிகரிக்கும் பட்சத்தில், ஊரடங்கில் கட்டுப்பாடுகள் கடுமையாகும் என ஆஸ்திரியா அரசு எச்சரித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.