சிலியில் எரிவாயுக் கிடங்கில் பயங்கர தீ விபத்து.! <!– சிலியில் எரிவாயுக் கிடங்கில் பயங்கர தீ விபத்து.! –>

சிலியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த எரிவாயு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

La Cisterna மாவட்டத்தில் உள்ள எரிவாயு கிடங்கில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது பற்றி தகவல் அறிந்த தும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து கொளுந்து விட்டெரியும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள இரண்டு சாலைகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மேலும் 3பேர் அந்த எரிவாயு கிடங்கில் சிக்கி இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.