தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை: முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது சிபிஐ

டெல்லி: தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்தது. இயற்கைக்கு மாறான உயிரிழப்பு என்று முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்த நிலையில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சையை அடுத்த மைக்கேல்பட்டி தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த அரியலூரைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டார். மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதால் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பான மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, மாணவி தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி கடந்த மாதம்  31-ம் தேதி உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம் இதை உறுதிப்படுத்தியது. மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. குழந்தைகளை தற்கொலைக்கு தூண்டுதல், குற்றம் முயற்சி செய்தல், சிறார் நீதி சட்டத்தின் கீழ்  சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.