சகோதரியை துடிதுடிக்க ஆணவப் படுகொலை செய்த அண்ணன்! நீதிமன்றத்தின் சர்ச்சைக்குரிய தீர்ப்பு


பாகிஸ்தான் சகோதரியை ஆணவப் படுகொலை செய்த வழக்கிலிருந்து சகோதரனை விடுவித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்தவர் பௌசியா அசீம்(வயது 26), காண்டீல் பலூச் என்ற பெயரில் சமூகவலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமடைந்தார்.

இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு அவரது சகோதரரான முகமது வாசிம் என்பவர் மயக்க மருந்து கொடுத்து கொலை செய்தார்.

தன்னுடைய இனத்துக்கு எதிராக வீடியோக்களை வெளியிட்டதாக கூறி முகமது வாசிம், சகோதரியை ஆணவப் படுகொலை செய்ததாக தெரிவித்தார்.

இதுதொடர்பாக நடந்த வழக்கில் கடந்த 2019ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து வாசிமின் பெற்றோர், லாகூர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர், இதுதொடர்பான வழக்கில் தன்னுடைய மகனுக்கு மன்னிப்பு வழங்கியதாக பௌசியா அசீமின் பெற்றோர் தெரிவித்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், முகமது வாசிமை வழக்கிலிருந்து விடுவித்தாக அறிவித்துவிட்டது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.