நெட் தேர்வு முடிவு 2 நாளில் வெளியீடு

புதுடெல்லி: கடந்த 2020, 2021ம் ஆண்டு ஜூனில் நடக்க இருந்த யுஜிசி நெட் தேர்வுகள் கொரோனா காரணமாக நடக்கவில்லை. இந்த தேர்வுகள் ஒன்றாக  கடந்த ஆண்டு நவம்பர் 20ம் தேதி முதல் 2022 ஜனவரி 5ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 12 லட்சம் பேர் தேர்வு எழுதினர். கடந்த மாதமே தேர்வு முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை  வெளியிடப்படவில்லை. இந்நிலையில், தேசிய தேர்வு முகமை இன்னும் ஒன்று அல்லது 2 நாளில் முடிவுகளை வெளியிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.