மீண்டும் முழு ஊரடங்கு – பிரதமர் எடுத்த திடீர் முடிவு?

கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவுக்கு எதிராக பொது மக்கள் போராட்டம் நடத்தி வருவதால், மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த பிரதமர் முடிவு செய்து உள்ளதாகக் கூறப்படுகிறது.

நியூசிலாந்து நாட்டில், கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவை, அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் பிறப்பித்தார். இந்த உத்தரவுக்கு எதிராக, கடந்த 10 நாட்களுக்கும் மேல் அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் வெலிங்டன் உட்பட பல இடங்களில், வாகனங்களை சாலைகளில் நிறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், காவல் துறையினர் திக்குமுக்காடி வருகின்றனர்.

இந்நிலையில், வெலிங்கடனில் உள்ள நாடாளுமன்ற வளாகம் முன்பு, ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சாலைகளில் தங்களது வாகனங்களை நிறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து கலைந்து செல்லும்படி போராட்டக்காரர்களுக்கு காவல் துறையினர் தெரிவித்தனர்.

ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீண்டும் எச்சரிக்கை!

இல்லை எனில், வாகனங்களை பறிமுதல் செய்து விடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர். கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்ற அறிவிப்புக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருவதால் நியூசிலாந்தில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. இதற்கிடையே, போராட்டத்தை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னதாக, கனடாவில் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவுக்கு எதிராக அந்நாட்டு லாரி டிரைவர்கள் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்தே நியூசிலாந்திலும் போராட்டம் நடத்தப்பட்ட வருகிறது. கனடாவில் போராட்டத்தை முடிவுக்கு வர அவசரநிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.