கால்நடை மருத்துவ படிப்பு! 24 ஆம் தேதி கலந்தாய்வு.!

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 24 ஆம் தேதி நடைபெறும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு தரவரிசை பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும் 24-ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டு பிரிவுக்கான கலந்தாய்வு நேரடியாகவே நடைபெறும் என்றும், 25-ஆம் தேதி சிறப்பு பிரிவினருக்கும், அதனை தொடர்ந்து பொதுப் பிதிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கலந்தாய்வுகளும் நெந்ரடியாகவே நடைபெறும் எனவும் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.