பூஜையுடன் தொடங்கிய புத்தம் புதிய

விஜய் டிவியின் சீரியல்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் கூட்டம் உண்டு. கமர்ஷியல் கண்டண்ட் இருந்தாலுமே கதை சொல்லும் விதம் குவாலிட்டியாக இருப்பதால், பேமிலி ஆடியன்ஸ் தாண்டி, பல இளைஞர்கள் விஜய் டிவி சீரியல்களுக்கு ரசிகர்களாக உள்ளனர்.

இந்நிலையில் விஜய் டிவி புதிய சீரியலின் படப்பிடிப்பை சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. 'சிப்பிக்குள் முத்து' என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் யார் நடிக்கிறார்? கதைக்களம் என்ன என்பது குறித்த தகவல்களை விஜய் டிவி சீக்ரெட்டாக வைத்துள்ளது. அதிக எதிர்பார்ப்புடன் வெளியான 'வைதேகி காத்திருந்தாள்' தொடர் எதிர்பாரதவிதமாக முடித்து வைக்கப்பட்டது. எனவே, அந்த ஸ்லாட்டில் இந்த புதிய தொடர் ஒளிபரப்பாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மிக விரைவில் இந்த தொடர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தொலைக்காட்சி நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.