ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விவாதம் ஒத்திவைப்பு!



இலங்கையின் மனித உரிமை நிலவரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மீதான விவாதம் மூன்றாம் திகதி இடம்பெறவிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் இராணுவநடவடிக்கையினால் உருவாக்கியுள்ள நிலைமை குறித்து மனித உரிமை பேரவை அவசரமாக விவாதிக்கவேண்;டிய நிலை காணப்படுவதாலேயே இலங்கை குறித்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கை தொடர்பான விசேட விவாதம் மூன்றாம் திகதி இடம்பெறும். இதுதொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவாக மனித உரிமை பேரவையின் 47 உறுப்புநாடுகளில் 29 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.