இனிமே அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை: மகள் மீது கடும் கோபத்தில் ரஜினி..!

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான
தனுஷ்
, ஐஸ்வர்யா ஜோடி இருவரும் கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் இருவரும் திடீரென பிரிய போவதாக அறிவித்தனர். இவர்களின் இந்த முடிவு ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்திற்கு பேரதிர்ச்சியாக அமைந்தது.

இவர்கள் இருவரும் பிரிவிற்கான காரணம் என்ன என்பது குறித்து கோலிவுட் வட்டாரங்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர். ஆனாலும் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்யவில்லை. வழக்கமான குடும்ப தகராறுதான். அவர்கள் இருவருக்கும் அறிவுரை வழங்கியுள்ளதாக தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா தெரிவித்திருந்தார்.

மேலும் இவர்களின் விவாகரத்து முடிவை ரஜினி சிறிதும் விரும்பவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை மீண்டும் சேர்த்து வைக்கும் முயற்சியும் ஒரு புறம் மும்முரமாக நடந்து வருகிறது. குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஜிவி தற்கொலை… ரஜினி, மணிரத்னம் யாருமே உதவவில்லை: கே.டி. குஞ்சுமோன் வருத்தம் !

இந்நிலையில் விவாகரத்து அறிவிப்பிற்கு பின்னர் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் முதன்முறையாக பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டனராம். ஆனால் இருவரும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்து கூட பேசவில்லையாம். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. குழந்தைகளின் நலனுக்காக கூட இருவரும் சேர வாய்ப்பே இல்லை என்று கூறும் அளவிற்கு இப்படியொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதனிடையில் ஐஸ்வர்யா மீது ரஜினி கடும் கோபத்தில் இருக்கிறாராம். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி கவலைப்படாமல் இருப்பதை பார்த்து உன்னுடைய சந்தோசம் தான் உனக்கு முக்கியமா? என்று கடுமையாக மகளை திட்டியுள்ளராம். இதனால் மறுபடியும் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

சர்ச்சையில் சிக்கினாலும் அசராத ஐஸ்வர்யா!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.