70 வயது முதியவர் டிரைவிங் பயிற்சி; கார் மோதி மூதாட்டி பலி; இருவர் காயம்| Dinamalar

காரைக்கால் : காரைக்காலில் முதியவர் டிரைவிங் பயிற்சியில் ஈடுபட்டபோது கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் பெண் உயிரிழந்தார்; மேலும் இரு பெண்கள் படுகாயம் அடைந்தனர்.காரைக்கால், திருநள்ளாறு செல்லூர் அகலங்கண்ணு பகுதியை சேர்ந்தவர் முருகையன் (70); விவசாயி.

இவர் நேற்று காலை தனக்கு சொந்தமான ஹூண்டாய் காரில் டிரைவிங் பயிற்சியில் ஈடுபட்டார்.அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரமாக சென்ற அதே பகுதியை சேர்ந்த செல்லம்மாள் (76), புனிதா (35), முத்துலட்சுமி (46) ஆகிய மூவர் மீது மோதியது.இதில் பலத்த காயம் அடைந்த மூவரும் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு செல்லம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.விபத்து ஏற்படுத்திய முருகையன் மீது, நகர போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.