Rajini:பிரச்சனை, ரொம்ப ரொம்ப பிரச்சனை: ரஜினியின் வைரல் வீடியோ

பிரிந்து வாழும் தன் மூத்த மகள் ஐஸ்வர்யாவையும், தனுஷையும் சேர்த்து வைக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த வயதில் தலைவருக்கு இப்படி ஒரு பிரச்சனையா என்று ரசிகர்கள் கவலையில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் பிரச்சனைகளை சமாளிப்பது குறித்து
ரஜினி
சொன்ன குட்டி கதை வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.

அந்த வீடியோவில் ரஜினி கூறியிருப்பதாவது,

ஒருத்தனுக்கு ரொம்ப பிரச்சனையாக இருந்ததாம். ரொம்ப ரொம்ப பிரச்சனை. அங்க ஒரு சாமியார் இருந்தார். அந்த சாமியார்கிட்ட போயி, ரொம்ப பிரச்சனை சாமி. இதை தீர்க்கவே முடியல, ஏதாவது ஒரு விடை சொல்லுங்கனு கேட்டார்.

சாமியாரின் மடத்தில் ஒரு மாட்டுக் கொட்டாய் இருந்தது. இந்தாப்பா, இங்கு 100 மாடுகள் இருக்கு, இந்த நைட்டுல வந்து மாடுகளை எல்லாம் படுக்க வச்சுட்டு, நாளைக்கு காலையில வா, நான் உனக்கு விடை கொடுக்கிறேன் என்றார்.

மார்னிங் ஆச்சு, அந்த ஆளு வந்தால் கண்ணெல்லாம் சிவப்பாக இருக்கு. நைட்டெல்லாம் தூங்கவே இல்ல. என்னப்பா தூங்கலையா என்று கேட்க, இல்ல சாமி எங்க தூங்குறது. ஒரு மாடை தூங்க வச்சா, இன்னொரு மாடு எந்திருக்குது. இன்னொரு மாடு நிக்குது, அதை உட்கார வைக்கவே முடியல. இதை தூங்க வச்சா அது நிக்குது, அது நின்னா இது தூங்குது.

அது தான்பா வாழ்க்கை, 100 பிரச்சனைங்க இருக்கும். சில பிரச்சனையை தீர்த்து வை, சில பிரச்சனையை தீர்த்து வைக்காத, ஆண்டவன்கிட்ட விட்டுடு. சில மாடுகளை உட்கார வைக்கவே முடியாது, படுக்க வைக்க முடியாது. சில பிரச்சனைகளை தீர்க்கவே முடியாது, விட்டுடு என்றார் என ரஜினி தெரிவித்தார்.

புது காதல்: ஆசி கேட்கும் ஐஸ்வர்யா ரஜினி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.